Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வடக்கு – கிழக்கில் ஹர்த்தால் : வழமை போல் இயங்கும் பாடசலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு – கிழக்கில் ஹர்த்தால் : வழமை போல் இயங்கும் பாடசலை

வடக்கு – கிழக்கில் ஹர்த்தால் : வழமை போல் இயங்கும் பாடசலை

இன்று ஹர்த்தால் அறிவிக்கப்பட்ட போதிலும் பாடசாலைகள் வழமை போன்று இடம்பெறுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

 

2ம் தவணை பரீட்சைகள் இடம்பெற்று வரும் நிலையில் மாணவர்கள் பாடசாலைக்கு செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

வழமை போல பேருந்துகளும் சேவையில் ஈடுபட்டு வருகின்றதை அவதானிக்க முடிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

IMG_20231020_072805-600x338.jpg

IMG_20231020_072727-600x338.jpg

IMG_20231020_071631-600x338.jpg

IMG_20231020_071848-600x338.jpg

IMG_20231020_071751-600x338.jpg

https://athavannews.com/2023/1354900

  • கருத்துக்கள உறவுகள்

ஹர்த்தால் போராட்டத்தால் வடக்கு – கிழக்கு முடங்கின!

அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகளின் ஏற்பாட்டில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று ஹர்த்தால் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா பதவி விலகிய விவகாரம் தொடர்பில் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் மற்றும் வடக்கு, கிழக்கில் நில அபகரிப்புக்கு எதிராகவும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை, குருந்தூர்மலை உள்ளிட்ட விவகாரங்களில் தீர்ப்பை மாற்றியெழுதுமாறு அழுத்தம் வழங்கப்பட்டமை ஆகியவற்றைக் கண்டித்தும், நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியும், கிழக்கில் தமிழர்களின் வாழ்விடங்கள், பொருளாதார வளங்கள், மேய்ச்சல் தரைகள் சிங்களக் குழுக்களால் அபகரிக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுமே இந்த போராட்டத்தை முன்னெடுப்பதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த போராட்டத்திற்கு வடமாகாண தனியார் ஊழியர்கள், சந்தை வியாபாரிகள், சிறு வர்த்தகர்கள், வணிக நிறுவனங்கள், போக்குவரத்துத் துறையினர் எனப் பல தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும் தவணைப் பரீட்சைகள் நடைபெற்று வருவதால் வடக்கு, கிழக்கில் பாடசாலைகள் வழமை போன்று இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

http://www.samakalam.com/ஹர்த்தால்-போராட்டத்தால்/

  • கருத்துக்கள உறவுகள்
வடகிழக்கில் மழை பெய்து
ஊரெங்கும் ஈரலிப்பு
ஈரலிப்புக் கூடி
பலருக்கும் மூக்கடைப்பு
மூக்கடைப்பு அவதிக்குள்
அங்கு வேறு கடையடைப்பு.
  • கருத்துக்கள உறவுகள்

அம்பாறையில் ஹர்த்தால் : மக்கள் அன்றாட நடவடிக்கையில்...

வடக்கு - கிழக்கில் எதிர்வரும் ஒக்டோபர் 20ஆம் திகதி பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு தமிழ் கட்சிகள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளதுடன் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு இராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு வெளியிட்டு வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் அம்பாறை மாவட்ட மக்கள் அதனை நிராகரித்து வழமையான செயற்பாட்டில் வெள்ளிக்கிழமை (20)  ஈடுபட்டுள்ளனர்.

qw__44_.jpg

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, சவளக்கடை, சம்மாந்துறை, மத்தியமுகாம், பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (20) உணவகங்கள், புடவைக்கடைகள், வீதியோர வியாபாரங்கள் போன்றவைகள் வழமை போன்று இயங்கியது.

qw__42_.jpg

இப்பகுதியில் உள்ள சில பாடசாலைகளில் மாணவர் வரவு குறைந்துள்ள போதிலும் கற்றல் செயற்பாடு இடம்பெற்றதை அவதானிக்க முடிந்தது.

qw__38_.jpg

இம்மாவட்டத்தில் வழமை போன்று அதிகளவிலான பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு பொருட் கொள்வனவில் ஈடுபட்டு வந்ததை அவதானிக்க முடிந்தது. இம்மாவட்டத்தின் பெரிய நீலாவணை, ஓந்தாச்சிமடம், காரைதீவு ,சாய்ந்தமருது, மாளிகைக்காடு,  நிந்தவூர், அட்டப்பளம், சம்மாந்துறை மாவடிப்பள்ளி ,சவளக்கடை, மத்தியமுகாம் ,உள்ளிட்ட  முக்கிய இடங்களில் பிரதேசங்களில் மக்களின் நடமாட்டம்  அதிகரித்து வழமை போன்று செயற்பாட்டில் ஈடுபட்டனர்.

qw__32_.jpg

அத்தோடு பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்களுக்குச் சென்று பொலிஸாருடன் இணைந்து இராணுவம் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டனர்.

qw__37_.jpg

அத்துடன் கல்முனை பொது சந்தை  உட்பட அதனை சூழ உள்ள பாதையோரங்களில் மரக்கறி வியாபாரம், நிலையங்கள், சுப்பர்மார்க்கெட்டுகள், பாடசாலைகள், பாமசிகள்,  வங்கிகள், எரிபொருள் நிலையங்கள் வழமை போன்று திறக்கபட்டு வியாபாரம் இடம்பெற்றன.

அம்பாறையில் ஹர்த்தால் : மக்கள் அன்றாட நடவடிக்கையில்... | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

இன்று ஹர்த்தால்

IMG-4930.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.