Jump to content

இலங்கைக்கும் இந்தியாவிற்கு இடையில் விரிசலை ஏற்படுத்துவதே சீனாவின் நோக்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கும் இந்தியாவிற்கு இடையில் விரிசலை ஏற்படுத்துவதே சீனாவின் நோக்கம்

இலங்கைக்கும் இந்தியாவிற்கு இடையில் விரிசலை ஏற்படுத்துவதே சீனாவின் நோக்கம்.

ஆசியாவில் சீனா தனது அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காகவே இலங்கையில், ஆதிக்கத்தை அதிகரித்துக் கொண்டு இருப்பதான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

சீன ஆய்வுக் கப்பலான Shi Yan 6 இன் வருகையை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்; கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அத்துடன் இந்தியா தமிழர்களை எதிரியாகவும் சிங்களவர்களை நண்பனாகவும் கொண்டு செயற்படுவது போல இலங்கை தமிழர்களையும் இந்தியாவையும் எதிரியாகவும் சீனாவை நண்பனாகவும் கொண்டு செயற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் விரிசலை ஏற்படுத்தும் நோக்கத்துடனேயே சீனா செயற்பட்டு வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

சீனாவின் செயற்பாடுகளை இந்தியா தெளிவாக புரிந்துக் கொள்ளாவிடின் இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக் குறியாகிவிடும் என்றும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2023/1356129

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

 

இலங்கைக்கும் இந்தியாவிற்கு இடையில் விரிசலை ஏற்படுத்துவதே சீனாவின் நோக்கம்.

இவருக்கு ஒரு இழவு அரசியலும் விளங்காம இந்தியா எண்டு கொண்டு நிக்கிறார்.

சீனா, முழு சிங்கள எம்பிமாரையும் காசை அடிச்சு வாங்கிப் போட்டார்கள். மாலைதீவிலும் இதுதான் நிலை.

இவரும் சீனா தான் எல்லாம் என்றால், வடிவேலு பேக்கரி டீலிங் மாதிரி காசு பார்க்கலாம். 

சும்மா, தனக்கே உதவாத இந்தியா என்று கொண்டு நிண்டால், வேலைக்காவாது கண்டியளே... 

இந்தியா, தானும் தின்னாது, தள்ளியும் இராது, எம்மையும் தின்ன விடாது எண்டதை 80 களில் இருந்து பார்த்துவருகிறோம். இதுக்கு பிறகும், அதை பத்தி கதைப்பதே நேரவிரயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

இவருக்கு ஒரு இழவு அரசியலும் விளங்காம இந்தியா எண்டு கொண்டு நிக்கிறார்.

சீனா, முழு சிங்கள எம்பிமாரையும் காசை அடிச்சு வாங்கிப் போட்டார்கள். மாலைதீவிலும் இதுதான் நிலை.

இவரும் சீனா தான் எல்லாம் என்றால், வடிவேலு பேக்கரி டீலிங் மாதிரி காசு பார்க்கலாம். 

சும்மா, தனக்கே உதவாத இந்தியா என்று கொண்டு நிண்டால், வேலைக்காவாது கண்டியளே... 

இந்தியா, தானும் தின்னாது, தள்ளியும் இராது, எம்மையும் தின்ன விடாது எண்டதை 80 களில் இருந்து பார்த்துவருகிறோம். இதுக்கு பிறகும், அதை பத்தி கதைப்பதே நேரவிரயம்.

இவர்களுக்கு... இந்தியா காசு கொடுத்திருக்கலாம் என்பது எனது ஊகம்.
ஏற்கெனவே.. சிலருக்கு, 2009´ம் ஆண்டளவில்  இந்தியாவில் பங்களாக்கள் 
கொடுத்து இருந்ததாக ஒரு கதை அப்போது வெளிவந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தமிழ் சிறி said:

இவர்களுக்கு... இந்தியா காசு கொடுத்திருக்கலாம் என்பது எனது ஊகம்.
ஏற்கெனவே.. சிலருக்கு, 2009´ம் ஆண்டளவில்  இந்தியாவில் பங்களாக்கள் 
கொடுத்து இருந்ததாக ஒரு கதை அப்போது வெளிவந்தது.

என்ன பிச்சைக்கார காசு கொடுத்தியிருப்பினம்...

சீனா மாதிரி டொலரில அள்ளி எறிந்திருப்பினமே?

சீனா எண்டோன்ன, எள் எண்டால் எண்ணெய் மாதிரி உருகி நிக்கினமே, மகிந்தா முதல், ரணில் வரை. ரணில் போனகிழமை தான் சீனா போய் வந்தார். அந்த துணிவிலை தன உங்கண்ட ஊர்ல, டீவில பேசினாரே பார்க்கவில்லையா?

இவையள் மோடிக்கு கடிதம் எழுதவே யோசிக்கினம். சந்திக்க முடியாதே.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Nathamuni said:

என்ன பிச்சைக்கார காசு கொடுத்தியிருப்பினம்...

சீனா மாதிரி டொலரில அள்ளி எறிந்திருப்பினமே?

சீனா எண்டோன்ன, எள் எண்டால் எண்ணெய் மாதிரி உருகி நிக்கினமே, மகிந்தா முதல், ரணில் வரை. ரணில் போனகிழமை தான் சீனா போய் வந்தார். அந்த துணிவிலை தன உங்கண்ட ஊர்ல, டீவில பேசினாரே பார்க்கவில்லையா?

இவையள் மோடிக்கு கடிதம் எழுதவே யோசிக்கினம். சந்திக்க முடியாதே.

சீனத் தூதுவர்... யாழ்ப்பாணம் வந்தால், 
இவை எல்லாரும் ஓடிப் போய் பங்கருக்குள்ளை ஒழிக்கினம். 
இவையை  தெரிவு செய்து போட்டு, நாங்கள் படுகிற பாடு கொஞ்ச நஞ்சம் இல்லை.
அநியாயத்துக்கு... பிரஷரை ஏத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
அடுத்த முறை வோட்டு கேட்டு வரட்டும், அப்ப இருக்கு கச்சேரி. 

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, தமிழ் சிறி said:

சீனத் தூதுவர்... யாழ்ப்பாணம் வந்தால், 
இவை எல்லாரும் ஓடிப் போய் பங்கருக்குள்ளை ஒழிக்கினம். 
இவையை  தெரிவு செய்து போட்டு, நாங்கள் படுகிற பாடு கொஞ்ச நஞ்சம் இல்லை.
அநியாயத்துக்கு... பிரஷரை ஏத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
அடுத்த முறை வோட்டு கேட்டு வரட்டும், அப்ப இருக்கு கச்சேரி. 

நம்ம, சைவ சமய கதைகளில் ஒன்று.

ஒருவர், காசு படைத்தவர். எச்சில் கையால் காகத்தினைக்கூட துரத்த மாட்டார்.

அவருக்கு ஏத்த மணைவி. வெள்ளிக்கிழமை, நல்ல அறுசுவை சமையல், சாப்பிட வீடு வருகிறார். கணவர்.

அந்த நேரம் பார்த்து சிவனடியார் ஒருவரும் வருகிறார் பசியில். மூக்கில் அடித்த சமையல் வாசனையை பிடித்து, வந்து நிக்கிறார் சாப்பாடு கேட்டு.

கணவன், மனைவிக்கோ கொடுக்க விரும்பவில்லை. அடியேய், ஏண்டி சமைக்கவில்லை. பாரு, அடியார் வந்திருக்கிறார். கொடுக்க முடியவில்லையே என்று பெரிய தடியை எடுத்து வந்து அடிக்கிறார்.

மாணவியும், அழுது, குய்யோ, முறையோ என்று அழுகிறார்.

சிறிதுநேரத்தில், வெளியே வந்து பார்த்தால், அடியாரை காணோம்.

உள்ளே போய், போடு இலையை என்று அமர்கிறார்.

ஓயாமல், நானும், அடித்தேனே என்கிறார், சிரித்தபடி....
ஓயாமல் நானும் அழுதேனே என்று மணைவியும் சொல்லி சிரிக்கிறார்.
ஓடாமல் நானும் இருந்தேனே அய்யா என்று, உள்ளே வந்து பக்கத்தில் அமர்கிறார் சிவனடியார்.

வேறென்ன, சோறு போட வேண்டிய நிலைமை தான்.

அந்த சிவனடியார் தான், சீனா. கணவன், மனைவி தான் சிங்களவர்கள், அவர்களும், ஆளும், எதிர்க்கட்சிகளும், அதாவது இந்தியாவுக்கு சீனர்கள் மேல் கஞ்சத்தனம் காட்டுவது போல நடிப்பவர்கள்..

இதில இந்தியா எங்க எண்டு கேட்க்கிறேல்ல.
 

Edited by Nathamuni
  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

நம்ம, சைவ சமய கதைகளில் ஒன்று.

ஒருவர், காசு படைத்தவர். எச்சில் கையால் காகத்தினைக்கூட துரத்த மாட்டார்.

அவருக்கு ஏத்த மணைவி. வெள்ளிக்கிழமை, நல்ல அறுசுவை சமையல், சாப்பிட வீடு வருகிறார். கணவர்.

அந்த நேரம் பார்த்து சிவனடியார் ஒருவரும் வருகிறார் பசியில். மூக்கில் அடித்த சமையல் வாசனையை பிடித்து, வந்து நிக்கிறார் சாப்பாடு கேட்டு.

கணவன், மனைவிக்கோ கொடுக்க விரும்பவில்லை. அடியேய், ஏண்டி சமைக்கவில்லை. பாரு, அடியார் வந்திருக்கிறார். கொடுக்க முடியவில்லையே என்று பெரிய தடியை எடுத்து வந்து அடிக்கிறார்.

மாணவியும், அழுது, குய்யோ, முறையோ என்று அழுகிறார்.

சிறிதுநேரத்தில், வெளியே வந்து பார்த்தால், அடியாரை காணோம்.

உள்ளே போய், போடு இலையை என்று அமர்கிறார்.

ஓயாமல், நானும், அடித்தேனே என்கிறார், சிரித்தபடி....
ஓயாமல் நானும் அழுதேனே என்று மணைவியும் சொல்லி சிரிக்கிறார்.
ஓடாமல் நானும் இருந்தேனே அய்யா என்று, உள்ளே வந்து பக்கத்தில் அமர்கிறார் சிவனடியார்.

வேறென்ன, சோறு போட வேண்டிய நிலைமை தான்.

அந்த சிவனடியார் தான், சீனா. கணவன், மனைவி தான் சிங்களவர்கள், அவர்களும், ஆளும், எதிர்க்கட்சிகளும், அதாவது இந்தியாவுக்கு சீனர்கள் மேல் கஞ்சத்தனம் காட்டுவது போல நடிப்பவர்கள்..

இதில இந்தியா எங்க எண்டு கேட்க்கிறேல்ல.
 

 

இந்த விதமான கதைகளை / உவமைகளை எல்லா விடயங்களிலும் பரவலாகத் தூவிவிடுவதுதானே...ஏன் கஞ்சத்தனம?

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காஸா பிரச்சனையில்.. ஹமாஸ் ரஷ்சிய உதவியை நாடி இருக்கிறது. அரபு நாடுகள் இயல்பாக பலஸ்தீன மக்களுக்கு உதவி செய்கின்றனர். ஆனால் எகிப்த்.. ஜோடான் போன்ற அயல்நாடுகள் மெளனம் காக்கின்றன.

நாம் எனியும் ஹிந்தியாவின் வாயை பார்த்துக் கொண்டிருந்தால்.. மீண்டும் ஹிந்தியாவே கதி என்று கிடந்தோமானால்.. எமக்கு விடிவே இல்லை.

நாமும்.. எனி சீனாவை அணுக வேண்டும். சிங்களத்து நிகராக சீனாவோடு ராஜீக உறவுகளை வளர்க்க வேண்டும். இதனை வைச்சு ஹிந்தியாவை நம் சொல்லைக் கேட்க வற்புறுத்தலாம். ஹிந்தியா எம்மை தொடர்ந்து ஏமாற்றுமானால்.. சீனாவை நாம் அதிகம் சாருவோம் என்ற பயம் ஹிந்தியாவுக்கு வராத பட்சத்தில்.. ஹிந்தியா நம்மை தொடர்ந்து துரும்புச் சீட்டாகப் பயன்படுத்துமே தவிர ஹிந்தியாவால் நமக்கு எந்த விமோசனமும் வராது.

சீன அச்சுறுத்தல்.. ஹிந்தியாவின் வடக்கு.. வடகிழக்கு.. வடமேற்கு போல்.. தெற்கிலும் வந்தால் தான் சீனாவை விட இராணுவ பலம் குன்றிய ஹிந்தியாவுக்கு.. தமிழர்களின் அரவணைப்பின் அவசியம் புரியவும் அதனை நோக்கி தமிழர்களை திருப்திப்படுத்தவும் வேண்டிய நிலை ஏற்படும். இந்த நிலை அமெரிக்க.. மேற்குலக ஜாம்பவான்களுக்கும் அவசியம் ஏற்படும்.

ஆகவே தமிழர்கள் சீனச் சார்பு அணுகுமுறைகளையும்.. கையில் எடுத்து.. பூகோள அரசியல் இராணுவ பொருண்மிய மாற்றங்களை உன்னிப்பாக அவதானித்து காய் நகர்த்தினால் அன்றி.. ஹிந்தியாவை தொடர்ந்து நம்பிக் கொண்டிருந்தால்.. ஹிந்தியாவால்.. ஏமாற்றப்பட்டு நிர்கதியாவதை தவிர படுதோல்விகளை இனப்படுகொலைகளை சந்திப்பதை தவிர வேறு தீர்வு கிடைக்காது. 

Edited by nedukkalapoovan
  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என்னாப்பா   இது கூட தெரியாத ??????????????    அது வந்து   பெருவாரியா,.......அதிகமான  சிங்களமக்கள்  ஒரு தமிழருக்கு வாக்கு போட்டு  தமிழ் ஐனதிபதி ஒருவரை  தெரிவுசெய்கிறார்களா.  என்று பரிசோதித்து பார்ப்பதற்கு 🤣🤣😂😂. இதன் மூலம் இலங்கை சிங்கப்பூரை பின்பற்றுகிறாதா. ???  இலங்கை வரும் காலத்தில் சிங்கப்பூர் போல் மாறும் வாய்ப்புகள் உண்டா??  என்பதை உறுதி படுத்துவதற்காக  
    • உடலுறவை மட்டுமே அடிப்படையாக வைத்து இந்தவிடயம் ஆராயப்படுவதால் வரும் மயக்கமேயன்றி வேறில்லை இது. இயற்கையாக ஆணும் பெண்ணும் மட்டுமே ஒரு குழந்தையை உருவாக்கமுடியும் என்கிற நியதி இருப்பது உண்மைதான். ஆனால், இரு பெண்கள் இணைந்தும் குழந்தையை உருவாக்க முடியும் என்றும், ஆண்களும் கருத்தரிக்கலாம் என்று நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. இவை இயற்கைக்கு முரணானவையா? ஆம், ஏனென்றால் இயற்கையாக இவை நடக்கச் சாத்தியமில்லை இப்போதுவரைக்கும். ஆனால், இருவர் உறவில் இணைவதற்கு உடலுறவு மட்டுமே இருந்தால்ப் போதுமானதா? இதைத்தவிரவும் வேறு என்ன விடயங்கள் இருவர் இணையும் உறவில் இருக்கின்றன? புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்பு, பிடித்தவிடயங்களில் ஈடுபாடு, ஆறுதல், துணை....இப்படிப் பல விடயங்கள் இருக்கின்றனவே? ஆணும் பெண்ணும் இருக்கும் உறவில் இப்பிரச்சினைகள் எவ்வளவு தூரத்திற்குத் தீர்க்கப்பட்டிருக்கின்றன? எத்தனை ஆண்கள் அல்லது பெண்கள் தமது எதிர்ப்பால் துணையினைக் கைவிட்டு விட்டு ஓரினத் துணையினைத் தேடியிருக்கின்றனர்? ஒருவர் தன்னை ஆணாகவோ பெண்ணாகவோ நினைப்பதற்கு உணர்வதற்கு அவரில் காணப்படும் ஹோர்மோன்களே காரணமாவதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். எவருமே வேண்டுமென்று தமது பிறப்பில் இருந்த பாலினை விட்டு எதிர்ப்பாலிற்கு மாறுவதில்லை என்று நினைக்கிறேன். அது இயற்கையாக அவர்களில் நடக்கும் உளவியல், ஹோர்மோன் மாற்றங்களால் ஏற்படுகின்றது என்றுதான் தான் நினைக்கிறேன்.  பாப்பாணடவர் ஓரினச் சேர்க்கையாளர் குறித்து அவதூறாகப் பேசுவதற்குக் காரணம் இருக்கிறது. தனது சபையில் இவர்கள் சேர்ந்துவிட்டால், தாம் இற்றைவரை போதித்துவரும் ஓரினச் சேர்க்கைக்கெதிரான பிரச்சாரத்தை அது பாதித்துவிடும் என்று அவர் பயந்திருக்கலாம். ஆனால், ஓரினச் சேர்க்கையென்பது கிறிஸ்த்துவிற்கு முன்னைய காலத்திலிருந்து இருப்பதாக வேதாகமத்தில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. அதைவிட,  கத்தோலிக்க மதகுருக்களில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம், ஓரினச் சேர்க்கை போன்றவை பல நூற்றாண்டுகளாக பழக்கத்தில் இருப்பவை. அவைகுறித்துப் பேசுவதைத் தவிர்த்து ஓரினச் சேர்க்கையாளர்கள் குறித்து பாப்பாணடவர் பேசுவது தவறு. முதலில் உள்ளுக்குள் இருக்கும் பிரச்சினைகள் குறித்து அவர் வெளிப்படையாகப் பேசட்டும். பின்னர் ஓரினச் சேர்க்கையாளர்கள் குறித்து கருத்துக் கூறலாம்.  ஒருவர் தன்னை ஆணாகவோ, பெண்ணாகவோ அல்லது இவை இரண்டிற்கு இடையில் இன்னொரு இனமாகவோ நினைப்பதும், உணர்வதும், அதற்கேற்றாற்போல் நடந்துகொள்வதும் அவரது விருப்பம். இதில் மற்றையவர்கள் கருத்துக் கூறவோ, கட்டுப்பாடுகள் விதிக்கவோ முடியாது. 
    • தமிழ் சனாதிபதி வேட்பாளர் வேண்டும் என்று கூறுபவர்கள் எவரும் Just Married வாகனங்களின் பின்னர் கட்டித் தொங்கவிடப்படும் வெற்று Tin கள் போன்று சத்தமிடுகின்றனரே தவிர, கனதியான காரணங்களைக் கூறுகிறார்கள் இல்லை.  ☹️
    • அவருக்கு மட்டுமே புள்ளி கிடைக்கும் 
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.