Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

லலித்கொத்தலாவல சிலரால் பணயக்கைதியாக பிடிக்கப்பட்டிருந்தார் - இருட்டறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார் – நீதிமன்றத்தில் குடும்பத்தவர்கள் தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN    07 NOV, 2023 | 06:14 AM

image

சிலிங்கோ குழுமத்தின் முன்னாள் தலைவர் லலித்கொத்தலாவலை சிலரால் பணயக்கைதியாக வைக்கப்பட்டிருந்தார் என  அவர் சுதந்திரமாக நடமாடுவதற்கு அனுமதிக்கப்படவில்லை என அவரது குடும்பத்தினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

லலித்கொத்தலாவலையை  பணயக்கைதியாக வைத்திருந்த சட்டத்தரணிகள் உட்பட்ட குழுவினர் அவரை அச்சத்தின்பிடியில் சிக்கவைத்தனர் என  அவரது உறவினரான சிறீனி விஜயரட்ண நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் லலித்கொத்தலாவலையில் மரணவிசாரணை இடம்பெற்றபோதே குடும்பத்தவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.

லலித்கொத்தலாவலையை சுற்றியிருந்தவர்கள் அவரின் சொத்துக்களை தங்கள் பெயருக்கு எழுதிவாங்கிக்கொண்டனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொத்தலாவல இருட்டறையில் அடைத்துவைக்கப்பட்டிருந்தார் அவரது படுக்கை அறையிலிருந்து தனது அலுவலக அதிகாரிகள் கூட்டத்திற்கு செல்வதற்கு மாத்திரம் அனுமதிக்கப்பட்டார் என அவர் தெரிவித்துள்ளார்.

அவரைவீட்டிலிருந்து வெளியேறச்செய்து அலுவலகத்திலேயே இருண்ட அறையொன்றிற்குள் அவர்கள் தங்கவைத்தனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/168694

  • கருத்துக்கள உறவுகள்

கோட்டாபய,.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லலித் கொத்தலாவலவின் மரண விசாரணையின் தீர்ப்பு 14ஆம் திகதி!

Published By: DIGITAL DESK 3    08 NOV, 2023 | 10:50 AM

image

சிலிங்கோ குழுமத்தின் முன்னாள் தலைவர் லலித் கொத்தலாவலவின் மரண விசாரணையின் தீர்ப்பு இம்மாதம் 14ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மேலதிக நீதிவான் பஸன் அமரசிங்க தெரிவித்துள்ளார்.

கொத்தலாவலவின் மரண விசாரணை தொடர்பான அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு சட்ட வைத்திய அதிகாரிக்கு  அறிவுக்கவும் நீதிவான் உத்தரவிட்டதார். 

லலித் கொத்தலாவல மரண விசாரணை தொடர்பான சாட்சியங்கள் நிறைவடைந்துள்ளதுடன், இதுவரை 8 சாட்சியாளர்கள் மரண விசாரணை தொடர்பான சாட்சியங்களை வழங்கியுள்ளனர்.

உயிரிழந்த கொத்தலாவலவின் மனைவியின் சகோதரியான ஷெரின் பேஷான் விஜேரத்ன, பம்பலப்பிட்டி பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் கொத்தலாவலவின் கீழ் பணியாற்றிய பல பணியாளர்களும் சாட்சியமளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/168788

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு திறமையான முதலாளி இவர். இவரைப்போன்றவர்களுக்கு இந்த நிலமை வர‌க்கூடாது.
இவரது கடசிக்காலம் மிகவும் வருந்தத்தக்கது

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ லைக்கா தமிழ்நாட்டில் படம் எடுக்கிறது 
வெறும் ஆறு ஏழு கோடி தமிழர்கள் வாழும் உலகில் 
300 - 400 கோடி லாபம் என்று கூறுகிறது 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.