Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மீனவர்கள் 17 பேர் கைது

தமிழக மீனவர்கள் 17 பேர் கைது

நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 17 பேரை அங்கு வந்த இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

மீனவர்களையும் காங்கேசந்துறை கடற்படை முகாமில் வைத்து இலங்கை கடற்படையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்படுவது மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

https://tamil.adaderana.lk/news.php?nid=193710

  • 4 weeks later...
  • Replies 91
  • Views 4.7k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • இனி என்ன, அடுத்த செய்தி அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள் என்பதுதான். இவர்கள் மீன் பிடித்து விட்டு போனால் பரவாயில்லை. கடலில் உள்ள மீன் உட்பத்தியாகும் அடித்தட்டுகளையெல்லாம் பெயர்த்து எறிகிறார்

  • ஏராளன்
    ஏராளன்

    எல்லை தாண்டி மீன் பிடித்த 18 இந்திய மீனவர்களுக்கு விடுதலை; ஒருவருக்கு சிறை Published By: DIGITAL DESK 3   22 FEB, 2024 | 12:11 PM இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்ட

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

16 இந்திய மீனவர்கள் கைது 

image

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 16 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

யாழ். நெடுந்தீவு கடற்பரப்பினுள் புதன்கிழமை (23) இரவு  கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த போதே அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் 2 படகையும் அதிலிருந்த 16 கடற்தொழிலாளர்களையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை மயிலிட்டிக்கு அழைத்து வந்துள்ள கடற்படையினர் விசாரணைகளுக்கு பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். 

இந்திய மீனவர் நலச் சங்கத் தலைவர் வி.பி.சேசுராஜா மீனவர்கள் கைது செய்யப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில்  தெரிவித்துள்ளதாவது, 

கைது செய்யப்பட்ட மீனவர்கள் இந்திய மீன்வளத் துறையிடம் அனுமதி டோக்கன்களைப் பெற்று, இரண்டு இயந்திரப் படகுகள் மூலம் ராமேஸ்வரம் கடலுக்கு புதன்கிழமை சென்றனர்.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருவது கவலை அளிக்கிறது. மீனவர்களை இலங்கையில் இருந்து விடுவிக்க மாநில மற்றும் மத்திய அரசு அதிகாரிகளின் தலையிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/196965

கண்டனங்களைப் பார்க்கும்போது இலங்கைக் கடற்படை அத்துமீறி இந்தியக் கடலில் போய் கைது செய்துவிட்டதோ?!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கைதான 16 இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியல்

image

யாழ்ப்பாணம் நெடுந்தீவுக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 16 இந்திய மீனவர்களும் அடுத்த மாதம் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த 16 தமிழக மீனவர்களும் கடந்த புதன்கிழமை இரவு நெடுந்தீவுக் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டிருந்தனர். 

கைதான மீனவர்கள்  விசாரணைகளின் பின்னர் வியாழக்கிழமை (24) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதிபதி நளினி சுபாஸ்கரன் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர். இதன்போதே மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/197140

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாக் கொள்ளையடிச்சுப் பழகீட்டானுகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த 12 இந்திய மீனவர்கள் கைது 

image

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 12 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

படகொன்றில் 12 பேரும் பருத்தித்துறை கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்துக்கொண்டிருந்த வேளை, அப்பகுதியில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் அந்த மீனவர்களை கைது செய்ததுடன், அவர்களது படகினையும் கைப்பற்றினர். 

அதனையடுத்து, கைது செய்யப்பட்டவர்களையும் படகினையும் மயிலிட்டி கரைக்கு கொண்டுசென்ற கடற்படையினர், கைதான மீனவர்களை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். 

https://www.virakesari.lk/article/197219

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குஞ்சு மீன்கள் எல்லாம் அள்ளிக்கொண்டு வாறது இதுதானோ?!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய கடற்றொழிலாளர்கள் 23 பேர் இலங்கையில் கைது

 இலங்கை (Sri Lanka) கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்ததாக கூறப்பட்டு, 23 இந்திய கடற்றொழிலாளர்கள் நெடுந்தீவு கடலில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செயயப்பட்டுள்ளனர்.

இதில் இந்திய கடற்றொழிலாளர்களின் மூன்று படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள், காங்கேசன்துறையில் உள்ள கடற்றொழில் பணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படை 

இதேவேளை, தமிழ்நாட்டிலிருந்து சட்டவிரோதமாக படகில் வந்த நான்கு சிறுவர்கள் உட்பட ஒன்பது இலங்கையர்களும் நெடுந்தீவு  கடலில் வைத்து கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இந்திய கடற்றொழிலாளர்கள் 23 பேர் இலங்கையில் கைது | 23 Indian Fishermen Arrested In Sri Lanka

கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் அண்மையில் தமிழகத்திற்கு சட்டவிரோதமாகச் சென்ற இரண்டு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. 

https://tamilwin.com/article/23-indian-fishermen-arrested-in-sri-lanka-1731294860?itm_source=parsely-api

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

இந்திய கடற்றொழிலாளர்கள் 23 பேர் இலங்கையில் கைது

 இலங்கை (Sri Lanka) கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்ததாக கூறப்பட்டு, 23 இந்திய கடற்றொழிலாளர்கள் நெடுந்தீவு கடலில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செயயப்பட்டுள்ளனர்.

இதில் இந்திய கடற்றொழிலாளர்களின் மூன்று படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள், காங்கேசன்துறையில் உள்ள கடற்றொழில் பணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படை 

இதேவேளை, தமிழ்நாட்டிலிருந்து சட்டவிரோதமாக படகில் வந்த நான்கு சிறுவர்கள் உட்பட ஒன்பது இலங்கையர்களும் நெடுந்தீவு  கடலில் வைத்து கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இந்திய கடற்றொழிலாளர்கள் 23 பேர் இலங்கையில் கைது | 23 Indian Fishermen Arrested In Sri Lanka

கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் அண்மையில் தமிழகத்திற்கு சட்டவிரோதமாகச் சென்ற இரண்டு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. 

https://tamilwin.com/article/23-indian-fishermen-arrested-in-sri-lanka-1731294860?itm_source=parsely-api

அரம்பத்தில் இருந்தே சொல்கிறோம் ஒரே தீர்வு உலகளவில் தடை செய்யப்பட்ட  ரோலர்களை அந்த பிடிபட்ட அந்த  இடங்களிலே தாட்டு விடுவது நல்லது இங்கு தொழிலாளர்கள் மாறிக்கொண்டு இருப்பார்கள் ரோலர் உரிமையாளர்களே உண்மையான குற்றவாளிகள் அவர்களின் ஏவலில் தான் மீன்கள் விளையும் இலங்கை கடல் பகுதி சூறையாட படுகிறது .

இலங்கையின் வடகிழக்கு  கடல்பகுதி ஆழம் குறைந்த சூரிய ஒளி மிக இலகுவாக உடுருவி மீன்கள் இனப்பெருக்கம் அடையும் கண்டமேடைகளை கொண்ட வளமான பகுதிகளை கொண்டது அந்த கருவறைகளை கருவறுக்க என்றே இந்திய ரோலர் உரிமையாளர்கள் தொழிலாளர்களை மாற்றி மாற்றி அனுப்புகிறார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

Sri Lanka) கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்ததாக கூறப்பட்டு, 23 இந்திய கடற்றொழிலாளர்கள் நெடுந்தீவு கடலில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செயயப்பட்டுள்ளனர்.

இதில் இந்திய கடற்றொழிலாளர்களின் மூன்று படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

large.IMG_7491.jpeg.17d6ffa4e521628191f2

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு கடலில் வைத்து 12 இந்திய மீனவர்கள் கைது!

image

யாழ்ப்பாணம் - பருத்தித்துறையை அண்மித்த கடற்பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படைப் பேச்சாளர் தெரிவித்தார்.

இன்று செவ்வாய்க்கிழமை (12) அதிகாலை பருத்தித்துறையை அண்மித்த கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட போது குறித்த 12 இந்திய மீனவர்களும் கைதுசெய்யப்பட்டதுடன் அவர்கள் பயணித்த படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/198493

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்களுக்கும் 20ம் திகதி வரை விளக்கமறியல்!

image
 

எல்லை தாண்டிய கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள். 12 பேரையும்  எதிர்வரும் இருபதாம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு பருத்தித்துறை  நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

இன்று அதிகாலை பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டு மயிலிட்டி கடற்படை முகாமில் வைத்து விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் யாழ்ப்பாண நீரியல் வளத்துறை மற்றும் கடத்றொழில் அமைச்சு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு அவர்கள் ஊடாக சற்று முன்னர் பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையிலேயே அவர்களை எதிர்வரும் இருபதாம்  திகதி  வரை விளக்கமறியலில்  வைக்குமாறு நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/198545

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா சிறையில் இருந்தால் நல்ல சாப்பாடு கிடைக்கும் அத்துடன் இர்ண்டு மாதம் ஒய்வும் கிடைக்கும் என இந்த் மீனவர்கள் நினைக்கின்றனர் போல இருக்கின்றது ...தற்பொழுது அதிக இந்திய மீனவர்கள் வருவது இதனால் தானோ?

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த 17 இந்திய மீனவர்கள் கைது

24 DEC, 2024 | 12:02 PM
image
 

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த 17 இந்திய மீனவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (24) அதிகாலை  கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில்  ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் இரண்டு படகுகளுடன் இவர்களை கைது செய்தனர்.  

கைது செய்யப்பட்ட மீனவர்கள்  தலைமன்னார் கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

விசாரணைகளின் பின்னர் குறித்த மீனவர்கள் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளனர்.

https://www.virakesari.lk/article/202026

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சி இரணைதீவுக்கு அன்மித்த கடற்பகுதியில் மூன்று படகுகளுடன் 33 இந்திய மீனவர்கள் கைது

Published By: VISHNU   27 JAN, 2025 | 04:34 AM

image

கிளிநொச்சி இரணைதீவுக்கு அன்மித்த கடற்பகுதியில் மூன்று படகுகளுடன் கைது செய்யப்பட்ட  33 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 05ஆம் திகதி வரை விளக்கமறையில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இரணைதீவிற்கு அன்மித்த கடற்பரப்பில் அத்துமீறிய மீன் பிடியில் ஈடுபட்ட மூன்று இந்திய இழுவைப்படகுகளையும் அதிலிருந்த 33 இந்திய மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்திருந்தனர் 

இவ்வாறு கைது செய்யப்பட்ட 33இந்திய மீனவர்களும் கிளிநொச்சி மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களத்திடம் ஞாயிற்றுக்கிழமை (26) மாலை ஒப்படைக்கப்பட்டதையடுத்து  குறித்த 33 பேருக்கும் எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

கிளிநொச்சி மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் குறித்த 33 பேரையும் இரவு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற வாசல் தலத்தில் நீதிமன்ற பதில் நீதிவான் எஸ். சிவபாலசுப்பிரமணியம் முன்னிலையில் ஆஜர் படுத்தியதையடுத்து குறித்த 33 பேரையும் எதிர்வரும் 05திகதி வரை விளக்கமறையில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/204979

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரில் கைதான 10 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

Published By: DIGITAL DESK 3    03 FEB, 2025 | 04:45 PM

image

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (3) உத்தரவிட்டது.

அத்துமீறி நுழைந்து மன்னார் கடற்பரப்பில் இழுவைப் படகு ஒன்றில் மீன் மிடித்துக்கொண்டிந்த 10 இந்திய மீனவர்களை இன்று திங்கட்கிழமை (3) அதிகாலை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் தாழ்வுபாடு கடற்படை முகாமில் ஒப்படைக்கப்பட்டு, விசாரணைகளின் பின்னர் மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் இன்றைய தினம் மதியம் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் பதில் நீதவான் குறித்த மீனவர்களை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

https://www.virakesari.lk/article/205718

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய கடற்றொழிலாளர்களில் ஒருவருக்கு 40 இலட்சம் தண்டம்!

கடந்த 8 ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் 1 படகுடன் கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் 10 பேரினது வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கடந்த மாதம் 23 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இன்றையதினம் வரை இவர்களை விளக்கமறையில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்றையதினம் சிறைச்சாலை அதிகாரிகளால் 10 கடற்றொழிலாளர்களும் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர்.

வழக்கினை ஆராய்ந்த நீதவான் 10 பேரில் இருவர் சிறுவர்கள் என்பதால் அவர்களை வழக்கிலிருந்து முழுமையாக விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

நிபந்தனையுடன் விடுதலை

அத்துடன், ஏனைய 8 பேருக்கம் ஆறு வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட சிறை தண்டனை வழங்கி நிபந்தனையுடன் விடுதலை செய்தார். இந்த எட்டு பேரில் ஒருவர் படகோட்டி என்பதால் அவருக்கு ஆறுமாத கடூழிய சிறைத்தண்டனை வழங்க உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்திய கடற்றொழிலாளர்களில் ஒருவருக்கு 40 இலட்சம் தண்டம்! | Indian Fishermen Arrested In Nedunthivu 2 Released

அத்துடன் படகோட்டிக்கு நான்கு இலட்சம் ரூபா அபராத தொகையும் விதிக்கப்பட்டது. இதனை செலுத்த தவறின் மேலும் 3 மாத சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதவான் நளினி சுவாஸ்கரன் உத்தரவிட்டிருந்தார்.

கடந்த மாதம் பத்தாம் திகதி நெடுந்தீவு கடலில் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த வேளை ஒரு படகுடன் கடற் படையினர் இவர்களை கைது செய்திருந்தனர். 

 https://tamilwin.com/article/indian-fishermen-arrested-in-nedunthivu-2-released-1738586363

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தலைமன்னாரில் கைதான 13 இந்திய மீனவர்களுக்கு விடுதலை; நால்வருக்கு  விளக்கமறியல் 

Published By: DIGITAL DESK 3   07 FEB, 2025 | 04:35 PM

image
 

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 17 இந்திய மீனவர்களில் 13  பேர் விடுதலை செய்யப் பட்டதோடு, ஏனைய நால்வரையும்  விளக்கமறியலில் வைக்க  நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

17 இந்திய மீனவர்கள் கடந்த டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி அதிகாலை தலை மன்னார் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 17 மீனவர்களும் தலைமன்னார் கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டு முதற்கட்ட விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தில் ஒப்படைக்கபட்டிருந்தனர்.

கடற்றொழில் திணைக்கள  அதிகாரிகளின் விசாரணையின் பின்னர் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் 17 சந்தேக நபர்களையும் ஆஜர்படுத்திய நிலையில் சம்பந்தப்பட்ட 17 மீனவர்களையும்  விளக்கமறியலில் வைக்குமாறு  உத்தரவிட்டிருந்தார்.

தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில் குறித்த மீனவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (7) மீண்டும் வழக்கு விசாரணைகளுக்கு  அழைத்து வரப்பட்டனர்.

விசாரணை முடிவில் குறித்த 17 இந்திய மீனவர்களில் இரு மீனவர்களுக்கு கைவிரல் அடையாளங்கள் பெறப்படாத காரணங்களினால் இரண்டு மீனவர்களையும் எதிர்வரும் 13 ஆம் திகதி வரைக்கும் விளக்கமறியலில் வைக்குமாறும்,மேலும் இரண்டு மீனவர்களுக்கு இரண்டாவது தடவையாகவும் எல்லை தாண்டி சட்டவிரோத இழுவை மடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்த குற்றத்திற்காக  இரண்டு வருட கடூழிய சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

ஏனைய  13 பேருக்கும் தளா 50 ஆயிரம் ரூபாய் தண்ட பணத்துடன் கூடிய   இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 10 வருட சிறை தண்டனையும் விதிக்கப்பட்டு 13 பேரையும் மன்னார் நீதிமன்றம் விடுதலை செய்தது.

https://www.virakesari.lk/article/206080

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மீனவர்கள் 14 பேர் இரண்டு மீன்பிடி படகுடன் கைது

February 9, 2025  11:43 am

தமிழக மீனவர்கள் 14 பேர் இரண்டு மீன்பிடி படகுடன் கைது

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்று  இலங்கை வடக்கு மன்னார் கடற்பரப்பில் மீன்பிடித்து  கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இரண்டு மீன்பிடி விசைப்படகையும் அதிலிருந்த 14 மீனவர்களையும் கைது செய்து இரணைத்தீவு கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

மீனவர்களிடம் முதற்கட்ட விசாரணை முடித்துக் கொண்டு மீனவர்கள் 14 பேரும் விசைப்படகுடன் கிளிநொச்சி மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என இலங்கை கடற்படை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

-கிளிநொச்சி நிருபர் சப்தன்-

https://tamil.adaderana.lk/news.php?nid=199890

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கைதான 14 இந்திய மீனவர்களுக்கும் தலா ஐம்பதாயிரம் ரூபா தண்டப்பணம்; ஒருவருக்கு சிறைத்தண்டனை

Published By: DIGITAL DESK 7

19 FEB, 2025 | 04:33 PM

image

கிளிநொச்சி இரணைதீவுக்கு அண்மித்த  கடற்பகுதியில் இரண்டு  படகுகளுடன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 14 இந்திய மீனவர்களுக்கும் தலா ஐம்பதாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன், இதில் முதல்குற்றமுள்ள உள்ள ஒருவருக்கு 18 மாதகால கட்டாயச் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 09 ஆம் திகதி  அதிகாலை இரணைதீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்ட இரண்டு இந்திய இழுவைப்படகுகளையும் அதிலிருந்த 14 இந்திய   மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்திருந்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களும் 09 ஆம் திகதி மாலை  கிளிநொச்சி மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து,  குறித்த 14 பேருக்கும் எதிராக வழக்குப்பதிவு செய்து அன்றைய தினம் இரவு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு  இன்று புதன்கிழமை  (19) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

குறித்த வழக்கானது இன்றையதினம் பகல் விளக்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதில் ஒரு இழுவைப்படகுடன் தொடர்புபட்ட  பதினொரு பேருக்கு முதலாவது குற்றச்சாட்டுக்கு பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட  பன்னிரெண்டு மாத சிறையும்  இரண்டாவது குற்றச் சாட்டுக்கும் 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஆறு மாத சிறைத்தண்டனையும் தலா ஐம்பதாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன், செலுத்த தவறின் ஆறுமாத சிறைத் தண்டனையும் படகை செலுத்தியமை மற்றும் படகு உரிமை  ஆகிய இரண்டு குற்றச் சாட்டுக்கும்  தலா ஆறு மில்லியன் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் தண்டம் செலுத்த தவறின் தலா ஆறு மாத சிறைத்தண்டனையும்  விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று மற்றைய படகுடன் தொடர்பட்ட மூன்று பேருக்கும் முதலாவது குற்றச்சாட்டுக்கு பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட  பன்னிரெண்டு மாத சிறையும்  இரண்டாவது குற்றச் சாட்டுக்கும் 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஆறு மாத சிறைத்தண்டனையும் தலா ஐம்பதாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன், செலுத்த தவறின் ஆறுமாத சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. 

இதில்  ஏற்கனவே யாழ்ப்பாண நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்டு முதல் குற்றச்சாட்டு உள்ள ஒருவருக்கு பதினெட்டு மாதகால கட்டாய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

கைதான 14 இந்திய மீனவர்களுக்கும் தலா ஐம்பதாயிரம் ரூபா தண்டப்பணம் ; ஒருவருக்கு சிறைத்தண்டனை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து 10 இந்திய மீனவர்கள் கைது

Published By: DIGITAL DESK 2

20 FEB, 2025 | 11:22 AM

image

வடக்கு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள்  நேற்று புதன்கிழமை (19) இரவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மன்னார் மற்றும் நெடுந்தீவு கடற்பரப்பினுள் 03 படகுகளில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டிருந்த வேளை கடல் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், அவர்களை கைது செய்துள்ளதுடன், மூன்று படகுகளையும் கைப்பற்றியுள்ளனர்.

மன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 04 மீனவர்களையும், அவர்களின் ஒரு படகினையும் தலைமன்னார் துறைமுகத்திற்கு கொண்டு சென்ற கடற்படையினர், அவர்களை மன்னார் கடற்தொழில் நீரியல் வளத்துறையினர் ஊடாக மன்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். 

அதேவேளை, நெடுந்தீவு கடற்பரப்பில் 2 படகுகளுடன் கைது செய்யப்பட்ட 06 மீனவர்களையும், காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு சென்ற கடற்படையினர், அவர்களை யாழ்ப்பாண நீரியல் வளத்துறையினர் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளனர். 

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றத்தில் கடந்த 50 நாட்களில் 99 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 13 படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

வடக்கு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து 10 இந்திய மீனவர்கள் கைது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் கடற்பரப்பில் கைதான இந்திய மீனவர்கள் நால்வருக்கும் விளக்கமறியல்!  

20 FEB, 2025 | 05:36 PM

image

மன்னார் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் இன்று (20) கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் நால்வரையும் எதிர்வரும் மார்ச் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் உத்தரவிட்டார்.

தமிழ்நாடு, ராமேஸ்வரம், காந்திநகர் பகுதியைச் சேர்ந்த 4 மீனவர்கள் படகொன்றில் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடி தொழிலில் ஈடுபட்டபோது மன்னார் கடற்பரப்பில் வைத்து இன்று அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

வடமத்திய மாகாண கடற்படையினரின் கூட்டு நடவடிக்கையின்போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

கைதான நான்கு இந்திய மீனவர்களும் விசாரணைகளின் பின்னர் மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். 

அதனையடுத்து, மேலதிக விசாரணைகளின் பின்னர், அவர்கள் நால்வரும் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் அந்த மீனவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

மன்னார் கடற்பரப்பில் கைதான இந்திய மீனவர்கள் நால்வருக்கும் விளக்கமறியல்!  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சட்டவிரோதமாக மீன்பிடித்த 32 இந்திய மீனவர்கள் கைது

Published By: DIGITAL DESK 7

23 FEB, 2025 | 03:07 PM

image

(எம்.மனோசித்ரா)

கடற்படையினர் நாட்டின் வடக்கே மன்னார் கடற்பரப்பில் நேற்று சனிக்கிழமை  (22) மற்றும் இன்று  ஞாயிற்றுக்கிழமை (23)  அதிகாலை மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, இந்நாட்டு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஐந்து இந்திய மீன்பிடி படகுகளுடன் முப்பத்திரண்டு இந்திய மீனவர்கள் கைது  செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டின் கடற்பரப்பை மீறி வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கவும், இந்நாட்டு மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் கடற்படை வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பின் போது கைப்பற்றப்பட்ட குறித்த இந்திய மீனவர்கள் தலைமன்னார் துறைமுகத்துக்கு அழைத்து  வரப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் கடற்றொழில் பரிசோதகர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

இந்த நடவடிக்கையின் மூலம், இந்நாட்டு கடற்பரப்பிற்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட பதினெட்டு (18) இந்திய மீன்பிடி படகுகள் மற்றும் நூற்று முப்பத்தொரு (131) இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

4__7_.jpg

5.jpg

1__5_.jpg

https://www.virakesari.lk/article/207452

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய மீனவர்களை பிடித்து வைத்திருப்பதற்காகவே தனிஒரு சிறை வேண்டும் போல.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லை தாண்டிய 14 தமிழக மீனவர்கள் கைது

மன்னார் தெற்கு கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இந்திய மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

மேலும் அம்மீனவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

முதல்கட்ட விசாரணைக்கு பின் மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் சக மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/315782

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

17 இந்திய மீனவர்களுக்கு 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைதண்டனை !

08 Mar, 2025 | 02:17 PM

image

இலங்கை கடல் எல்லை பகுதியில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 17 பேருக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனையும்  மேலும் ஒரு மீனவருக்கு இரண்டரை இலட்சம் ரூபா தண்டப் பணமும் விதித்து விடுதலை செய்யுமாறு மன்னார் நீதவான் வெள்ளிக்கிழமை (07) மாலை தீர்ப்பு வழங்கியுள்ளது.  

அதே நேரம் நபர் ஒருவர் அனுமதிப்பத்திரம் இன்றி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் இரண்டாவது தடவையாக ஈடுபட்டமை கண்டறியப்பட்ட நிலையில் குறித்த நபருக்கு 24 மாத சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கடந்த  மாதம் (23) தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 32 மீனவர்களில் நான்கு மீனவர்கள் முதல் குற்றத்துக்காக 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையுடன் நபருக்கு தலா இரண்டு இலட்சத்து 50 ஆயிரம்    ரூபாய் வீதம் தண்டப்பணம் விதிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டதுடன் ஏனைய மீனவர்களை எதிர்வரும் 14ம் திகதி வரை விளக்கமறியல் வைக்க நீதவான் உத்தரவிட்டார்

அதே நேரம் கடந்த மாதம் (02) கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களில் 9 பேர்   முதல் குற்றத்துக்காக 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையுடன் நபருக்கு தலா இரண்டு இலட்சத்து 50 ஆயிரம்   ரூபாய் வீதம் தண்டப்பணம் விதிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டதுடன் ஒருவர் இரண்டாவது தடவை இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டமைக்காக 2 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த மாதம்  (20) கைது செய்யப்பட்ட  நான்கு மீனவர்களும் முதல் குற்றத்துக்காக 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையுடன் நபருக்கு தலா இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் இலட்சம் ரூபா வீதம் தண்டப்பணம் விதிக்கப் பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன மன்னார் தாழ்வுபாடு பகுதியில் கைது செய்யப்பட்ட 14 மீனவர்களையும் எதிர்வரும் 14 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

https://www.virakesari.lk/article/208624

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.