Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையில் பாரிய போராட்டம் வெடிக்கும் அபாயம்! IMF எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் பாரிய அளவில் போராட்டம் ஒன்று வெடிக்கக்கூடிய சாத்தியம் அதிகரித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கைக்கு கடன் வழங்குவது தொடர்பிலான மீளாய்வின் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு தேர்தல்கள் காரணமாக சர்வதேச நாணய நிதியத்தின் மறுசீரமைப்புகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

 

 

சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சவால்கள் ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இலங்கையில் மீண்டும் சமூக அமைதியின்மை மற்றும் போராட்டங்கள் வெடிக்க கூடிய சாத்தியங்கள் அதிக அளவில் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் பாரிய போராட்டம் வெடிக்கும் அபாயம்! IMF எச்சரிக்கை | Lanka Risks Have Increased Social Unrest

வரி அறவீடு சக்தி வளத்துறையில் விலை அதிகரிப்பு, ஊழல் மோசடிகளை தடுப்பதற்காக போதிய அளவு நடவடிக்கை எடுக்கப்படாமை, உள்ளூர் தேர்தல் நடத்தப்படாமை உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இவ்வாறு சமூக முரண்பாடுகள் அல்லது போராட்டங்கள் வெடிக்கும் சாத்தியங்கள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

 

 

மேலும் கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் காலம் தாழ்த்தப்படும் நிலையானது நிதி துறையில் நம்பிக்கையீனத்தை உருவாக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டில் அந்நிய செலாவணி தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் வீதியில் இறங்கி போராட்டங்களை நடத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://tamilwin.com/article/lanka-risks-have-increased-social-unrest-1702442690?itm_source=parsely-detail

  • கருத்துக்கள உறவுகள்

வரி மூலம் கொள்ளையடிக்கலாம் எண்டு அரசாங்கம் எண்ணுகிறது. மற்றப்படி வெளிநாட்டு நேரடி முதல் மூலமோ , உள்ளூர் உட்பதிகளை அதிகரிப்பதன் மூலமோ , ஏற்றுமதி செய்வதன்மூலமோ நாடடை அபிவிருத்தி செய்யும் எண்ணம் இல்லை.

எப்படியாவது மக்கள்மீது வரியை விதித்து IMF குறிப்பிடட இலக்கை அடைய முயட்சிக்கிறார்கள். IMF   கூட இவர்களது மொக்குத்தனமான செய்கைகளுக்கு பணம் கொடுக்கிறது.  இவர்கள் முறையாக இறுக்கி பிடித்தால் கொள்ளையடித்த பணம், வங்கிகளை கடன் எடுத்ததன் மூலம் கொள்ளையடித்த பெரிய வியாபாரிகள் எல்லாவற்றையும் வெளிக்கொணரலாம். அதன் மூலம் ஒரு பெரிய இடைவெளியை நிரப்பலாம். ஏனோ IMF கூட அதை வலியுறுத்தாமல்  இருக்கிறது.  

நிச்சயமாக பெரிய ஒரு போராட்டத்தை விரைவில் எதிர்பார்க்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப..ரணிலு நேற்று தூக்கி அடிச்சாரே..400 மில்லியன் வந்திட்டுது என்று...இதெல்லாம் பொய்யா கோபால்?

  • கருத்துக்கள உறவுகள்
Just now, alvayan said:

அப்ப..ரணிலு நேற்று தூக்கி அடிச்சாரே..400 மில்லியன் வந்திட்டுது என்று...இதெல்லாம் பொய்யா கோபால்?

ஓம் ஓம் அதெல்லாம் வந்திட்டுது. அதாவது இலங்கைஇப்போது வங்குரோத்து என்ற பாலத்தை கடந்திட்டுதாம். இந்த கடன்  கிடைத்ததால் மூலம் வேறு நிதி நிறுவனங்கள் கடன் வழங்கலாம் எண்ட சமிக்ஞய் வழங்கப்பட்டுள்ளது.

அதாவது ADB , உலக வங்கி, JICA போன்றவை கடன் வழங்கும். அதாவது இனியும் கடனில்தான் நாடு ஓடப்போகுது.

அதைத்தான் நேற்று அலரி மாளிகையில் ஒரு கொண்டாடடமாகவே நடத்தினார்கள். தலை எழுத்து. 😭

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

இலங்கையில் பாரிய அளவில் போராட்டம் ஒன்று வெடிக்கக்கூடிய சாத்தியம் அதிகரித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

பிள்ளையை நுள்ளிவிட்டு

தொட்டிலையும் ஆட்டுகிறது.

மக்கள் தாங்க மாட்டார்கள் என்று தெரிந்தும் இவ்வளவு வரிச்சுமையை அவர்கள் தலையில் சுமத்தும் போதே இப்படி பிரச்சனை வரும் என்று தெரிந்தும் நாட்டை ஒரு கொதி நிலைக்கு தள்ளிவிட்டார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.