Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைத் தமிழர்களுக்காக புதிய தமிழகம் பேரணி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத் தமிழர்களுக்காக புதிய தமிழகம் பேரணி!

மதுரை- செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 25, 2007 : இலங்கையில் உணவு, மருந்துப் பொருட்களின் பற்றாக்குறையால் பரிதவித்து வரும் தமிழர்களுக்கு உதவக்கோரி புதிய தமிழகம் சார்பில் கோட்டை நோக்கி அக் 6ம் தேதி பேரணி நடத்தப் போவதாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.

மதுரையில் புதிய தமிழகம் கட்சி சார்பில் 9 தென் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. பின்பு செய்தியாளர்களிடம் டாக்டர் கிருஷ்ணசாமி பேசுகையில், புதிய தமிழகம் தொடங்கி 10 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு டிசம்பர் 15ல் மதுரையில் மண்டல மாநாடு நடத்தப்படும். அடுத்த ஆண்டு சென்னையில் மாநில மாநாடு நடத்தப்படும்.

இலங்கை ராணுவத்தின் தொடர் தாக்குதல் மற்றும் கெடுபிடிகளால், தமிழர்கள் உணவு, மருந்து, இன்றி பெறும் அவதிப்படுகின்றனர். இலங்கைப் பிரச்சனையில் தமிழக கட்சிகள் சுய லாபம் கருதி செயல்படுகின்றன.

இதைக் கைவிட்டு விட்டு இலங்கைத் தமிழர்களுக்கு அரசு உதவக்கோரி, புதிய தமிழகம் சார்பில் சென்னையில் வருகிற அக்டோபர் 6ம் தேதி கோட்டை நோக்கி பேரணி நடத்தவுள்ளோம். பேரணியின் இறுதியில் முதல்வர் கருணாநிதியிடம் கோரிக்கை மனு அளிக்கப்படும் என்றார்.

-தற்ஸ் தமிழ்

ஈழத் தமிழர்களின் சுய நிர்ண உரிமையை மீட்க வலியுறுத்தி சென்னையில் 6 ஆம் நாள் பேரணி நடத்தப்படும் என்று புதிய தமிழகம் தலைவர் மருத்துவர் கிருட்டிணசாமி அறிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர்களுக்காக நாளை மறுதினம் சென்னையில் ஆர்ப்பாட்டம் மரு. கிருட்டிணசாமி

Written by Seran - Oct 04, 2007 at 10:21 AM

சென்னையில் ஈழத் தமிழர்களின் சுய நிர்ண உரிமையை மீட்க வலியுறுத்தி நளை மறுதினம் சென்னையில் பேரணி நடத்தப்படவுள்ளதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் மருத்துவர் கிருட்டிணசாமி அறிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று புதன்கிழமை ஊடகவியலாளர்களிடம் அவர் கூறியதாவது:

30 ஆண்டுகளாக நடந்து வரும் ஈழத் தமிழர் விடுதலைப் போர் ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. சிறிலங்காவில் ஆட்சிக்கு வரும் ஆட்சியாளர்களும் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப் போரை அங்கீகரித்து பேசுவதும் பிறகு தமிழர்கள் மீது போர் தொடுப்பதும் என தொடர்ந்து இரட்டை வேடதாரிகளாக பவனி வருகிறார்கள்.

அண்மைக்காலமாக ஈழத்தமிழர் போராட்டத்தில் மிக மோசமான சூழ்நிலை உருவாகி உள்ளது. தினமும் 10 முதல் 15 தமிழ் இளைஞர்கள் மாண்டு வருகிறார்கள். இதில் மத்திய, மாநில அரசுகள் மவுனம் சாதிப்பது முறையல்ல.

ஈழத் தமிழர்களின் சுயநிர்ண உரிமையை மீட்டுத்தர வேண்டும்.

மருந்து மற்றும் உணவு பொருட்களை செஞ்சிலுவைச் சங்கம் மூலம் அனுப்புவதற்கு தடை விதிக்கக்கூடாது

ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 6 ஆம் நாள் சென்னையில் புதிய தமிழகம் கட்சி சார்பாக பேரணி நடத்தப்படுகிறது.

மன்றோ சிலையில் தொடங்கி கோட்டை நோக்கி புறப்படும். பேரணியின் முடிவில் முதலமைச்சரிடம் மனு அளிக்கப்படும். எனது தலைமையில் நடக்கும் பேரணியை தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் தொடங்கி வைக்கிறார் என்றார் அவர்.

- சங்கதி -

ஈழத் தமிழர் சுயநிர்ணய உரிமையை மீட்க சென்னையில் புதிய தமிழகம் சார்பில் பேரணி

ஈழத்தமிழர் சுயநிர்ணய உரிமையை மீட்க வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பில் சென்னையில் இன்று பேரணி நடைபெற்றது.

சென்னை அண்ணாசாலை மன்றோ சிலையில் இருந்து இன்று சனிக்கிழமை முற்பகல் கோட்டை நோக்கி புறப்பட்ட இப்பேரணி சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் முடிவடைந்தது.

விபரங்களுக்கு

Edited by Iraivan

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புதிய தமிழகம் கட்சியின் ஏற்பாட்டில் டெல்லியில் ஆர்ப்பாட்டம்

ஈழத் தமிழர்களை காப்பாற்றுமாறு மத்திய அரசை வலியுறுத்தி, டெல்லியிலுள்ள இந்திய நாடாளுமன்றம். மற்றும் பிரதமர் இல்லம் என்பவற்றுக்கு முன்பாக புதிய தமிழகம் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது.

எதிர்வரும் 6ஆம் திகதி நடைபெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏனைய கட்சிகளையும், பொதுமக்களையும் கலந்துகொள்ளுமாறு புதிய தமிழகம் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

ஈழத் தமிழர்களின் பிரச்சினை தொடர்பாக அண்மையில் கருத்து வெளியிட்ட புதிய தமிழகம் கட்சியின் நிறுவனரும், தலைவருமான கே. கிருஸ்ணசாமி இந்திய மத்திய அரசும், தமிழநாடு அரசும் ஈழத் தமிழர்கள் சிறீலங்கா அரசினால் படுகொலை செய்யப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

அத்துடன், தமிழ்நாடு அரசு நாடாளுமன்ற உறுப்பினர்களையும், எம்.எல்.ஏ களையும் ஈழத்திற்கு அனுப்பி அங்கு தமிழ் மக்களிற்கு எதிராக இழைக்கப்படும் மனித உரிமை மீறல்களைக் கண்டறிந்து பிரதமருக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கிருஸ்ணசாமி கேட்டிருந்தார்.

ஈழத் தமிழர்களைக் காப்பாற்றுமாறு கோரி புதிய தமிழகம் கட்சி அண்மையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தது.

- பதிவு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.