Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்த ஆண்டு வீதி விபத்துகளில் இதுவரை 2163 உயிர்ப் பலிகள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வருடத்தில் 21,953 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதுடன், அந்த விபத்துக்களில் 2,163 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விபத்துக்களில் 5,206 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், காயமடைந்தவர்களில் பெரும்பாலோர் நிரந்தரமாகவோ அல்லது பகுதியாகவோ ஊனமுற்றுள்ளார்கள் எனவும் பணிப்பாளர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை மருத்துவ சங்கத்தின் வீதி பாதுகாப்பு நிபுணர் குழுவின் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

மேலும் கருத்து தெரிவித்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்,
டிசம்பர் மற்றும் ஜனவரி முதல் வாரங்களில் அதிகளவு வீதி விபத்துக்கள் பதிவாகி வருவதாகவும், இதற்கு குடிபோதையில் வாகனம் செலுத்துவதே பிரதான காரணம் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கண்டறியும் விசேட நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், பெரும்பாலும் மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்கள் போக்குவரத்து குற்றங்களில் ஈடுபடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவதும் போக்குவரத்து விபத்துகளுக்கு மற்றொரு முக்கிய காரணமாகச் சுட்டிக்காட்ட முடியும் என்றார்.

இந்த பண்டிகை காலங்களில் பார்ட்டிகளில் கலந்து கொள்வதாக இருந்தால், சொந்தமாக கார் ஓட்டுவதை தவிர்த்துவிட்டு வேறு டிரைவரை அழைத்துச் செல்வது அல்லது டாக்ஸியில் செல்வது நல்லது என்றும் இயக்குனர் கூறியுள்ளார்.

https://thinakkural.lk/article/285848

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் வாகனங்களில் பயணம் செய்பவர்கள் பின் இருக்கையில் உட்கார்ந்தால் பாதுகாப்பு பட்டி அணிய மாட்டார்கள். பின் இருக்கைக்கு பாதுகாப்பு பட்டி தேவை இல்லை என்று கூறுவார்கள். இவர்களுக்கு விளக்கம் கொடுக்க முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயம் said:

இலங்கையில் வாகனங்களில் பயணம் செய்பவர்கள் பின் இருக்கையில் உட்கார்ந்தால் பாதுகாப்பு பட்டி அணிய மாட்டார்கள். பின் இருக்கைக்கு பாதுகாப்பு பட்டி தேவை இல்லை என்று கூறுவார்கள். இவர்களுக்கு விளக்கம் கொடுக்க முடியுமா?

பாதுகாப்பு பட்டி என்று தலைகவசத்தை தானே சொல்கிறீர்கள்.நேரில் பார்த்ததில் எல்லோரும் அணிந்திருந்தார்களே. இந்தியா தமிழ்நாட்டில் தான் தலைகவசம் அணிய மாட்டார்கள் என்று அறிந்தேன். இலங்கையில்  அதிகம் விபத்துக்கள் நடைபெறுவதற்கு வீதி சட்டங்களை மதியாமை குடிபோதை தான் என்று கவலைபட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விளங்க நினைப்பவன் said:

பாதுகாப்பு பட்டி என்று தலைகவசத்தை தானே சொல்கிறீர்கள்.நேரில் பார்த்ததில் எல்லோரும் அணிந்திருந்தார்களே. இந்தியா தமிழ்நாட்டில் தான் தலைகவசம் அணிய மாட்டார்கள் என்று அறிந்தேன். இலங்கையில்  அதிகம் விபத்துக்கள் நடைபெறுவதற்கு வீதி சட்டங்களை மதியாமை குடிபோதை தான் என்று கவலைபட்டார்கள்.

இல்லை Seat belt .

அங்கு சில வாகனங்களுக்கு Seat belt ஏ கிடையாது. 

5 பேர் பயணிக்கும் வாகனத்தில் 15 பேர் பயணம் செய்தால் எப்படி ஐயா பாதுகாப்பு பட்டியை பங்கிடுவது?

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நியாயம் said:

இலங்கையில் வாகனங்களில் பயணம் செய்பவர்கள் பின் இருக்கையில் உட்கார்ந்தால் பாதுகாப்பு பட்டி அணிய மாட்டார்கள். பின் இருக்கைக்கு பாதுகாப்பு பட்டி தேவை இல்லை என்று கூறுவார்கள். இவர்களுக்கு விளக்கம் கொடுக்க முடியுமா?

நீங்கள் நான்கு சக்கர வாகனத்தை குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். முன் ஆசனத்தில் இருப்பவர்கள் கூட அணிய மாடடார்கள் போலீசார் இல்லாதிருந்தால். போலீசுக்கு பயந்துதான் முன் ஆசன படி அணிகிறார்கள். அதுவும் ஆங்கில எழுத்து கொண்ட வாகனங்களில் மட்டும் தான் அணிய வேண்டுமென்று சடடமிருக்கின்றது. அதட்கு முந்திய வாகனங்களில் அணிய வேண்டிய அவசியமும் இல்லை அத்துடன் ஆசன பட்டியும் இல்லை என்று நினைக்கிறேன்.

பின் ஆசனத்தில் அமர்பவர்கள் அணிய தேவை இல்லை என்று சொல்வதன் அர்த்தம், போலீசார் பிடிக்க மாடடார்கள் என்பதுதான். இங்கு ஆசன பட்டி அணிவது பொலிஸாருக்கு பயந்தே தவிர தங்களது பாதுகாப்புக்கு என்பதை அநேகர் அறிவதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

இதில் எவ்வளவு பேர் முன்னாள் போராளிகள் என்று தெரிந்தால் சரி ?

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, MEERA said:

இல்லை Seat belt .

விளங்கியது நன்றி.

-------------

11 hours ago, நியாயம் said:

இலங்கையில் வாகனங்களில் பயணம் செய்பவர்கள் பின் இருக்கையில் உட்கார்ந்தால் பாதுகாப்பு பட்டி அணிய மாட்டார்கள். பின் இருக்கைக்கு பாதுகாப்பு பட்டி தேவை இல்லை என்று கூறுவார்கள். இவர்களுக்கு விளக்கம் கொடுக்க முடியுமா?

உங்கள்  கருத்து சரி

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, MEERA said:

இல்லை Seat belt .

அங்கு சில வாகனங்களுக்கு Seat belt ஏ கிடையாது. 

5 பேர் பயணிக்கும் வாகனத்தில் 15 பேர் பயணம் செய்தால் எப்படி ஐயா பாதுகாப்பு பட்டியை பங்கிடுவது?

குறிப்பிட்ட வருடத்துக்கு மேற்பட்ட வாகனங்களுக்கு முன் இருக்கைகளுக்கே போடத் தேவையில்லையாம்.

யாழில் நான் ஒரு தடவை பயணம் செய்த வானில் போடப்போட கழன்று வருகிறது.

சாரதியிடம் கேட்க இந்த மொடல் வாகனத்துக்கு போடத் தேவையில்லை என்றார்.

பயணம் முடியும் மட்டும் பெரும் அந்தரமாகவே இருந்தது.

15 hours ago, நியாயம் said:

இலங்கையில் வாகனங்களில் பயணம் செய்பவர்கள் பின் இருக்கையில் உட்கார்ந்தால் பாதுகாப்பு பட்டி அணிய மாட்டார்கள். பின் இருக்கைக்கு பாதுகாப்பு பட்டி தேவை இல்லை என்று கூறுவார்கள். இவர்களுக்கு விளக்கம் கொடுக்க முடியுமா?

நான் இதுவரை பின் இருக்கையில் இருந்து பாதுகாப்பு பட்டி அணியவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாதுகாப்புப்பட்டி இல்லாத வாகனத்தில் நான் ஏறவே மாட்டேன், ஒரு பிறேக் அடிக்க என் மூஞ்சில தக்காளிச் சட்னி வந்திடும்🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.