Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பாகிஸ்தான் மீது இரான் ஏவுகணை தாக்குதல்: இரண்டு குழந்தைகள் பலி - என்ன நடந்தது?

பட மூலாதாரம்,REUTERS

17 ஜனவரி 2024, 03:31 GMT
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

செவ்வாய்க்கிழமை அன்று, அண்டை நாடான இரான் நடத்திய தாக்குதலில் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும் மேலும் மூன்று பேர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் கூறியுள்ளது.

ஜெய்ஷ் அல்-அட்ல் என்ற தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய இரண்டு தளங்களைக் குறி வைத்ததாக இரான் கூறியதாக அந்நாட்டு ராணுவத்துடன் தொடர்புடைய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால், பாகிஸ்தான் இதை நிராகரித்துள்ளது. இது “கடுமையான விளைவுகளுக்கு” வழிவகுக்கும் “சட்டவிரோத செயல்” என்று கூறியது.

இராக் மற்றும் சிரியாவுக்கு அடுத்தபடியாக கடந்த சில நாட்களில் இரானின் தாக்குதலுக்கு உள்ளான மூன்றாவது நாடு பாகிஸ்தான்.

பாகிஸ்தான் மீது இரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல் முன்னெப்போதும் இல்லாதது. செவ்வாய்க்கிழமை தாக்குதல் இரு நாடுகளின் எல்லையான பலுசிஸ்தானின் பரந்த தென்மேற்கு மாகாணத்தில் இருக்கும் ஒரு கிராமத்தைத் தாக்கியது.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம், “இரான் தனது வான்வெளியில் தூண்டுதலின்றி அத்துமீறி நுழைந்ததை” கடுமையாகக் கண்டித்துள்ளது.

 
பாகிஸ்தான் மீது இரான் ஏவுகணை தாக்குதல்: இரண்டு குழந்தைகள் பலி - என்ன நடந்தது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தச் சம்பவத்தை “முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்றும் கூறியது. “பாகிஸ்தானுக்கும் இரானுக்கு இடையே பல தகவல்தொடர்பு சேனல்கள் இருந்தபோதிலும் இந்த சட்டவிரோத செயல் நடந்துள்ளது நிலைமையை மேலும் தீவிரமாக்குவதாகவும்” கூறியுள்ளது.

இரானின் தலைநகரான தெஹ்ரானில் உள்ள இரான் வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவரிடம் பாகிஸ்தான் தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. மேலும், “பாகிஸ்தானின் இறையாண்மை மீதான இந்த அப்பட்டமான மீறல் மற்றும் அதன் விளைவுகளுக்கு இரானே பொறுப்பு,” என்றும் கூறியுள்ளது.

 
பாகிஸ்தான் மீது இரான் ஏவுகணை தாக்குதல்: இரண்டு குழந்தைகள் பலி - என்ன நடந்தது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இரான் திங்கட்கிழமை இரவு, வடக்கு இராக்கில் உள்ள நகரமான இர்பிலில் உள்ள இலக்குகளை குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடங்கியது. இதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்தது.

காஸா நிலப்பகுதியில் இஸ்ரேலுக்கும் இரான் ஆதரவு பெற்றா பாலத்தீனிய குழுவான ஹமாஸ் இடையே அக்டோபர் 7ம் தேதி போர் தொடங்கியதில் இருந்து, மத்திய கிழக்கு முழுவதும் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இரானின் தாக்குதல்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மோதல்களை பெரிதாக்குவதில் ஈடுபட விரும்பவில்லை என்று இரான் அறிவித்திருந்தாலும், அதன் "எதிர்ப்பு அச்சு" என்று அழைக்கப்படும் குழுக்கள் பாலத்தீனியர்களுடன் ஒற்றுமை காட்ட இஸ்ரேலுக்கும் அதன் கூட்டணி நாடுகளுக்கும் எதிராக தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன.

லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கம் இஸ்ரேலிய படைகளுடன் எல்லை தாண்டிய தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது, ஷியா போராளிகள் இராக் மற்றும் சிரியாவில் உள்ள அமெரிக்கப் படைகளுக்கு எதிராக ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் தாக்குதல்கள் நடத்தியுள்ளனர். ஏமனின் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் உள்ள கப்பல்களைத் தாக்கியுள்ளனர்.

ஹமாஸ் தலைவரை லெபனானில் நடத்திய தாக்குதலில் கொன்றுள்ளது இஸ்ரேல். புரட்சிகர காவலர் தளபதி சிரியாவில் நடத்தப்பட்ட இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் இராக் மீதான விமானத் தாக்குதலில் இராக் போராளிகள் தலைவரை அமெரிக்கா கொன்றுள்ளது. மேலும், ஏமனில் ஹூத்தி இலக்குகள் மீதும் அமெரிக்கா குண்டுவீசியுள்ளது.

 
பாகிஸ்தான் மீது இரான் ஏவுகணை தாக்குதல்: இரண்டு குழந்தைகள் பலி - என்ன நடந்தது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

சித்தரிப்புப் படம்

பல காலமாகவே, பாகிஸ்தானும் இரானும், ஜெய்ஷ்-அல்-அத்ல் உள்ளிட்ட ஆயுதம் தாங்கிய பிரிவினைவாத குழுக்களை எதிர்த்து, மக்கள் தொகை குறைவான இந்த எல்லைப் பகுதியில் போராடி வருகின்றன.

இரு நாடுகளுக்கும் இடையே சுமார் 900 கி.மீ நீளமுள்ள எல்லைப் பகுதியில் பாதுகாப்பு என்பது இரு அரசுகளுக்கும் நீண்ட காலமாக கவலையாகவே இருந்து வருகிறது.

கடந்த மாதம் எல்லைக்கு அருகே நடந்த தாக்குதல்களுக்கு ஜெய்ஷ்-அல்-அத்ல் குழுவை காரணமாக இரான் கூறுகிறது. இந்த தாக்குதல்களில் பல இரானிய காவல் அதிகாரிகள் உயிரிழந்தனர்.

அப்போது, இரானின் உள்துறை அமைச்சர் அஹ்மத் வஹீடி, இந்த தாக்குதல்களுக்கு காரணமான போராளிகள் பாகிஸ்தானில் இருந்துதான் தங்கள் நாட்டிற்குள் நுழைந்ததாகக் கூறினார்.

அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குநரின் அலுவலகத்தின் தகவலின்படி, ஜெய்ஷ்-அல்-அத்ல் சிஸ்தான்-பலுசிஸ்தானில் இயங்கும் "மிகவும் தீவிரமான மற்றும் செல்வாக்குமிக்க" சுன்னி போராளி குழு ஆகும்.

https://www.bbc.com/tamil/articles/c3gy513p9xwo

  • கருத்துக்கள உறவுகள்

"Reko Diq is a small town in Chagai District, Balochistan, Pakistan. It is located in a desert area, 70 kilometres north-west of Naukundi, close to Pakistan's border with Iran and Afghanistan. The area is located in Tethyan belt that stretches all the way from Turkey and Iran into Pakistan https://en.wikipedia.org/wiki/Reko_Diq."

இதுக்கும் ஆப்பா🤣

 

Edited by உடையார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரான் எல்லைக்குள் ஏவுகணை தாக்குதல்: பாகிஸ்தான் கூறும் காரணம் என்ன?

இரான் எல்லைக்குள் ஏவுகணை தாக்குதல்: பாகிஸ்தான் கூறும் காரணம் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

18 ஜனவரி 2024, 06:17 GMT
புதுப்பிக்கப்பட்டது 3 நிமிடங்களுக்கு முன்னர்

இரான் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்திய இரண்டு நாட்கள் கழித்து, இன்று காலை, பாகிஸ்தான் இரான் மீது ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதனால் அணு ஆயுதங்கள் கொண்ட இரு நாடுகளுக்கு இடையிலான உறவு சிக்கலாகி வருகிறது. இரானில் ஆயுதக்குழுவினர் பதுங்கியிருக்கும் இடங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் கூறுகிறது.

பாகிஸ்தான் இரானில் நடத்திய தாக்குதல் குறித்து, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் மூன்று பெண்கள் மற்றும் நான்கு குழந்தைகள் உயிரிழந்ததாக இரான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எல்லைப் பகுதியில், பயங்கரவாதிகள் தஞ்சமடைய இடம் கொடுத்திருப்பதாக இரு நாடுகளுமே ஒருவரையொருவர் பல காலமாக குற்றம் சாட்டிவருகின்றனர். பாகிஸ்தானுடனான எல்லையில் சரவன் நகரில் பல குண்டு வெடிப்புகளின் சத்தம் கேட்டதாக புதன்கிழமை மாலை இரான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தாக்குதல்களை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

“இன்று காலை, பாகிஸ்தான் இரானின் சிஸ்தான்-பலுச்சிஸ்தான் மாகாணத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கும் இடங்கள் மீது திட்டமிடப்பட்ட மற்றும் குறிப்பிட்ட துல்லியமான ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டது.

'மர்க் பார் சர்மாச்சார்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் தாக்குதல் புலனாய்வு தகவல்கள் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. இதில் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்,” என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
Iran- Pakistan

பட மூலாதாரம்,EPA

இரான் நடத்திய தாக்குதல்களை மிகக் கடுமையாக பாகிஸ்தான் விமர்சித்திருந்தது. அதன் பிறகு இந்தத் தாக்குதல்கள் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானில் உள்ள ஆயுதக்குழுகளை இலக்காகக் கொண்டே தனது தாக்குதல் நடத்தப்பட்டதாக இரான் கூறியது.

ஆனால் அதை மறுத்த பாகிஸ்தான், இரண்டு குழந்தைகள் உட்பட தனது குடிமக்கள் இந்தத் தாக்குதலில் பலியானதாகக் கூறியது.

இரானில் தீவிரவாதிகளின் இருப்பு மற்றும் நடவடிக்கைகள் குறித்து பாகிஸ்தான் இரானிடம் பல முறை தனது கவலைகளை வெளிப்படுத்தியதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த சில ஆண்டுகளாக, இரானுடனான உரையாடல்களில், தீவிரவாதிகள் குறித்த தனது கவலைகளை பாகிஸ்தான் வெளிப்படுத்தி வந்தது. தங்களை சர்மாச்சார்கள் என்று அழைக்கும் பாகிஸ்தான் வம்சாவழி தீவிரவாதிகளுக்கு இரானுக்குள் கண்காணிக்கப்படாத இடங்கள் பாதுகாப்பான தங்குமிடங்களாக மாறியுள்ளன என்பதை பாஸ்கிஸ்தான் இரானுக்கு சுட்டிக்காட்டியுள்ளது. இந்த தீவிரவாதிகளின் இருப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து உறுதியான ஆதாரங்கள் கொண்ட பல ஆவணங்களையும் பாகிஸ்தான் பகிர்ந்துள்ளது,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கூறிய தகவல்கள் அடிப்படையில், இரான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டும் பாகிஸ்தான் அதன் காரணமாகவே, இந்த சர்மாச்சார்கள் என்று அழைக்கப்படுபவர்கள், எந்த தண்டனையும் இல்லாமல் அப்பாவிகளான பாகிஸ்தான் மக்களை தாக்கிக் கொண்டே இருந்தனர் என்றும் கூறுகிறது.

 
Iran- Pakistan

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலுm, “இன்று காலை எடுக்கப்பட்ட நடவடிக்கை, இந்த சர்மாச்சார்கள் என்று அழைக்கப்படுபவர்களால் நடத்தப்படவிருந்த பெரிய அளவிலான பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்த நம்பகமான புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டது.

இந்த நடவடிக்கை, அனைத்து அச்சுறுத்தல்களுக்கும் எதிராகத் தனது தேசிய பாதுகாப்பைப் உறுதி செய்வதற்கான பாகிஸ்தானின் உறுதியான தீர்மானத்தை வெளிப்படுத்துவதாகும்.

இந்த மிகவும் சிக்கலான நடவடிக்கையின் வெற்றி, பாகிஸ்தான் ஆயுதப் படைகளின் திறனுக்கு ஒரு சான்று. தனது மக்களின் பாதுகாப்பையும், அவர்களின் உயிரையும் எந்த நேரத்திலும் விட்டுக் கொடுக்காத பாகிஸ்தான் அதைப் புனிதமான மற்றும் மதிப்பிற்குரிய ஒன்றாகக் கருதுகிறது.

பாகிஸ்தான் இரான் இஸ்லாமிய குடியரசின் இறையாண்மை மற்றும் பிரதேச ஒருமைப்பாட்டை முழுமையாக மதிக்கிறது. இன்றைய நடவடிக்கையின் ஒரே நோக்கம், பாகிஸ்தானின் சொந்த பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களைப் பாதுகாப்பதே ஆகும். அது மிக முக்கியமானது மற்றும் சமரசம் செய்ய முடியாதது ஆகும்," என்று குறிப்பிட்டுள்ளது.

 
இரான் எல்லைக்குள் ஏவுகணை தாக்குதல்: பாகிஸ்தான் கூறும் காரணம் என்ன?

பட மூலாதாரம்,REUTERS

அதோடு, பொறுப்புமிக்க சர்வதேச சமூக உறுப்பினராக, பாகிஸ்தான் ஐநா சாசனத்தின் கொள்கைகள் மற்றும் நோக்கங்களை உயர்த்திப் பிடிப்பதாகவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

"உறுப்பு நாடுகளின் பிரதேச ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை பாகிஸ்தான் மதிக்கிறது. அதேநேரம் பாகிஸ்தான் தனது இறையாண்மை மற்றும் பிரதேச ஒருமைப்பாட்டுக்கு சவால் விடுக்கும் செயல்களை அனுமதிக்காது.

ஐக்கிய நாடுகளின் கொள்கைகளால் வழிநடத்தப்பட்டு, சர்வதேச சட்டத்திற்கு உட்பட்டு எங்கள் நியாயமான உரிமைகளைப் பயன்படுத்தி இதைச் செய்வோம்.

இரான் ஒரு சகோதர நாடு. பாகிஸ்தான் மக்கள் இரான் மக்கள் மீது மிகுந்த மதிப்பும், பாசமும் கொண்டுள்ளனர். தீவிரவாதம் போன்ற பொதுவான சவால்களை எதிர்கொள்வதில் உரையாடல் மற்றும் ஒத்துழைப்பை நாங்கள் எப்போதும் வலியுறுத்தியுள்ளோம். மேலும் கூட்டு தீர்வுகளைத் தேட தொடர்ந்து முயல்வோம்,” என்று கூறப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/articles/c3gygwzz3v4o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தற்காப்பு நடவடிக்கை - பாகிஸ்தான் மீதான ஈரான் தாக்குதலை ஆதரித்து இந்தியா கருத்து

18 JAN, 2024 | 11:25 AM
image

புதுடெல்லி: பாகிஸ்தான் மீதான ஈரான் தாக்குதல் தற்காப்பு நடவடிக்கை என்பதைப் புரிந்து கொள்ள முடிவதாக இந்தியா கருத்து தெரிவித்துள்ளது. ஈரான் - பாகிஸ்தான் எல்லையில் பலுசிஸ்தான் பகுதியில் உள்ள சன்னி தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ் அல்-தும் முகாம்கள் மீது ஈரான் ராணுவம் நேற்று முன்தினம் இரவு ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் 2 குழந்தைகள் உயிரிழந்தனர் 3 பேர் காயம் அடைந்தனர். இந்நிலையில், ஈரான் தற்காப்பு நடவடிக்கையாகவே பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது என்று இந்தியா தெரிவித்துள்ளது.

நேற்று (ஜன.17) வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடந்த சம்பவம் ஈரான் - பாகிஸ்தான் என்ற இருநாடுகளுக்கு இடையேயான பிரச்சினையின் விளைவு என்றாலும் இந்தியா தீவிரவாதத்துக்கு எதிராக சமரசமற்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. அந்த வகையில், ஈரானின் தாக்குதல் ஒரு தற்காப்பு நடவடிக்கை என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது” எனத் தெரிவித்துள்ளது.

ஈராக், சிரியா, பாகிஸ்தான்.. அடுத்தடுத்த தாக்குதல் ஏன்? 24 மணி நேரத்தில் ஈராக், சிரியா, பாகிஸ்தான் என மூன்று நாடுகள் மீது அடுத்தடுத்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது ஈரான். இதன் மூலம் சன்னி தீவிரவாத அமைப்புகளுக்கு ஓர் எச்சரிக்கையை அழுத்தமாக ஈரான் கடத்த விரும்புவதாக சர்வதேச விவகாரங்கள் தொடர்பான வல்லுநர்கள் கருதுகின்றனர். மேலும், தன்னைச் சுற்றியுள்ள பலவீனமான, அரசியல் ரீதியாக ஸ்திரத்தன்மையற்ற நாடுகளில் இருந்து தனது இறையான்மைக்கு, பாதுகாப்புக்கு எதிராக செயல்படும் அமைப்புகளைத் துவம்சம் செய்ய தயங்காது என்ற செய்தியை ஈரான் வலுவாகக் கடத்தும் விதமாகவே மூன்று நாடுகள் மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தியுள்ளது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

பாகிஸ்தான் காட்டம்; ஈரான் மவுனம்: ஈரான் நடத்திய தாக்குதல் சட்டவிரோத செயல் என்றும், பிரச்சினையை பேசி தீர்க்காமல் தாக்குதல் நடத்தியது கவலை அளிக்கக்கூடிய செயல் என்றும், இது இரு நாட்டு உறவை வெகுவாக பாதிக்கும் எனவும் பாகிஸ்தான் கூறியுள்ளது.

ஆனால் இந்த தாக்குதல் தொடர்பாக ஈரான் எந்த பதிலும் அளிக்கவில்லை. இரு நாடுகளும் சுமார் 959 கி.மீ தூரத்துக்கு எல் லையை பகிர்ந்துள்ளன. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியை ஒட்டியுள்ள ஈரானின் சிஸ்தான் பகுதியில் ஈரானின் சிறுபான்மையினராக இருக்கும் சன்னி முஸ்லிம்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு ஆதரவாக பலுசிஸ்தான் பகுதியில் உள்ள ஜெய்ஷ் அல்-தும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஈரானுக்கு எதிராக செயல்படும் தீவிரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுப்பதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. அணு ஆயுதங்களை அதிகளவில் வைத்திருக்கும் பாகிஸ்தான் மீது ஈரான் தாக்குதல் நடத்தியிருப்பது இரு நாடுகள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல், ஹமாஸ், ஹவுதி, அமெரிக்க தலைமையிலான படைகள், ஈரான் ஆகியவை மேற்கொள்ளும் தாக்குதல் நடவடிக்கைகளால், பெர்சியன் வளைகுடா, ஓமன் வளைகுடா பகுதிகள் அமைந்துள்ள மண்டலத்தில் பதற்றம் நிலவுகிறது.

https://www.virakesari.lk/article/174216

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ஏராளன் said:

இஸ்ரேல், ஹமாஸ், ஹவுதி, அமெரிக்க தலைமையிலான படைகள், ஈரான் ஆகியவை மேற்கொள்ளும் தாக்குதல் நடவடிக்கைகளால், பெர்சியன் வளைகுடா, ஓமன் வளைகுடா பகுதிகள் அமைந்துள்ள மண்டலத்தில் பதற்றம் நிலவுகிறது.

அமைதி மார்க்கம் எங்கிருந்தாலும் மற்றவர்களை அமைதியாக இருக்கவிடவே மாட்டார்கள் 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.