Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"சிறகு விரித்த புலிகள்"- பாடல் குறுவட்டு வெளியீடு: கடற்புலிகளின் சிறப்புத்தளபதி கேணல் சூசை பங்கேற்பு

Featured Replies

தளபதி சூசை அவர்களின் பேச்சு( குரலில்)

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=23385

சிறகு விரித்த புலிகள்"- பாடல் குறுவட்டு வெளியீடு: கடற்புலிகளின் சிறப்புத்தளபதி கேணல் சூசை பங்கேற்பு

[புதன்கிழமை, 26 செப்ரெம்பர் 2007, 21:44 ஈழம்] [தாயக செய்தியாளர்]

சிறகு விரித்த புலிகள் பாடல் குறுவட்டினை தமிழீழ கடற்புலிகளின் சிறப்புத்தளபதி கேணல் சூசை இன்று வெளியிட்டார்.

260907soosai0364180200sa0.jpg

260907soosai0364180200sa0.b55480012e.jpg

புதுக்குடியிருப்பில் மாவீரர் மண்டபத்தில் இன்று புதன்கிழமை மாலை தொடங்கிய நிகழ்விற்கு புதுக்குடியிருப்பு கோட்ட அரசியல் பொறுப்பாளர் இளம்பருதி தலைமை தாங்கினர்.

பொதுச்சுடரை லெப்டினன்ட் கேணல் கிட்ட அவர்களின் துணைவியார் ஏற்ற ஈகச்சுடர் திலீபனின் திருவுருவப்படத்துக்கு லெப்.கேணல் குஞ்சனின் துணைவி ஈகச்சுடரேற்றி மாலை சூட்டினார்.

கேணல் சங்கரின் திருவுருவப்படத்துக்கு அவரின் துணைவியார் குகா ஈகச்சுடரேற்றி மாலை சூட்டினார்.

[url=http://imageshack.us]260907soosai0464184435jl0.jpg[/

விடுதலைப்புலிகளின் சிறப்பு உறுப்பினர் க.வே.பாலகுமாரன் வணக்க உரைகளை நிகழ்த்தினார்.

சிறகு விரித்த புலிகள் பாடல் குறுவட்டை கடற்புலிகளின் சிறப்புத்தளபதி கேணல் சூசை வெளியிட கேணல் சங்கரின் துணைவியார் குகா பெற்றுக்கொண்டார்.

[url=http://imageshack.us]260907soosai0164172200pi7.jpg[/

கேணல் சூசை சிறப்புரை நிகழ்த்தினார்.

வெளியீட்டுரையை திரைப்பட வெளியீட்டுப்பிரிவுப்பொறுப்

Edited by yarlpaadi

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவ நடவடிக்கை மூலம் தான் எங்களுடைய விடுதலையைப் பெறமுடியும் - கேணல் சூசை

எங்களுடைய இனத்தின் விடுதலைக்காக, இனத்தினுடைய துபீட்சத்திற்காக, இந்த 30 ஆண்டு கால போராட்ட வரலாற்றில் பல வெற்றிகளையும், பல திருப்பு முனைகளையும் ஏற்படுத்தியவர் எங்களுடைய தலைவர் என கடற்புலிகளின் சிறப்புத் தளபதி கேணல் சூசை அவர்கள் தெரிவித்துள்ளார்.

நேற்று புதன்கிழமை புதுக்குடியிருப்பு கோட்டத்தில் நடைபெற்ற தியாக தீபம் லெப்.கேணல் திலீபன், கேணல் சங்கள் நினைவு வணங்க நிகழ்வு மற்றும் '' சிறகு விரித்த புலிகள் '' இறுவட்டு வெளியீட்டு நிகழ்விலும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய பலத்தின் ஊடாகத்தான் எங்களுடைய இனத்தை தலைநிமிர வைத்திருக்க முடியும். 1995ம் ஆண்டு 6 இலட்சம் மக்கள் யாழ்ப்பாணத்திருந்து ஒரேயடியாக வெளியேற்றப்பட்ட போது உலகம் எந்தவொரு கருத்துக்களையும் சொல்லவில்லை.

நாங்கள் யாழ்ப்பாணத்தை நோக்கி 2000ம் ஆண்டு போனபோது இந்த உலகம் எல்லா இடங்களிலிருந்தும் வாரி இறக்கிக் கொடுத்தது.

அந்த மமதையில் மீண்டும் ஒரு இராணுவ நடவடிக்கையை சிறீலங்கா அரசாங்கம் முன்னெடுத்த போது முதுகெலும்பு உடைக்கப்பட்டது. அவர்களுடையை முதுகெலும்பை ஒட்ட வைப்பதற்காகத்தான் இவர்கள் இந்தப் பேச்சுக்களுக்கு ஊடாக சர்வதேசத் தலையீடு, பேச்சுவார்த்தை என்ற வலைக்குள் இழுத்துச் சென்றார்கள்.

நாங்கள் ஒன்றை மட்டும் இறுக்கமாகவும் தெளிவாகவும் சொல்லுகிறோம். நாங்கள் எந்தக் காலத்திலும் இராணுவ ரீதியில் எங்களுடைய மண்ணை அடிபணிய வைக்கிறதோ? அல்லது தோல்வியுனுடைய விழிம்புக்கு இட்டுச் செல்வதோ?. ஆயுத முனையில் இராணுவ ரீதியாக வென்றுகொண்டு எங்களுடைய பிரச்சினைக்கு தீர்வு காணலாம், பேச்சு நடத்தலாம் என்ற கருத்தை முன்வைப்பார்கள் என்றால்? அதை ஒரு காலமும் விடுதலைப் புலிகள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

திலீபனுக்கும் எங்களுடைய தளபதிகளுக்கும் தலைவர் ஊட்டிய ஓர்மம் அதுதான் நீர் அருந்தாமல் கூட 12 நாட்கள் நோன்பிருந்து தன்னுடைய உடலைத் தீயாக திலீபன் உருக்கியளித்தான்.

எங்களுடைய இனத்தின் விடுதலைக்காக இனத்தினுடைய, துபீட்சத்திற்காக, தலைவர் இந்த 30 ஆண்டுகால போராட்ட வரலாற்றில் பல வெற்றிகளையும், பல திருப்பு முனைகளையும் ஏற்படுத்தியவர்.

1999ம் ஆண்டு காலப் பகுதியில் புதுக்குடியிருப்பில் அருகில் இருக்கிற ஒட்டிசுட்டான் பகுதியில் படைகள் வந்து நின்ற போது, எல்லாரிடமும் ஒரு அச்சம் இருந்தது.

புதுக்குடியிருப்பா? அல்லது வட்டக்கச்சியா? அல்லது ஏ 9 நெடுஞ்சாலையால் இடங்களைப் பிடித்துக்கொண்டு போனால் எங்களுடைய நிலைமை என்ன? அந்த நிலைமையைத் தலை கீழாக மாற்றியமைத்தவர் எங்களுடைய தலைவர்.

தலைவருடைய கரங்களைப் வலுப்படுத்தி, இந்த விடுதலைப் போராட்டத்தை வீச்சாக்க வேண்டியது எல்லோருடைய கடமையும். எங்களுடைய தலைவர் தீர்க்க தரிசனமும், மதிநுட்பமும் நிறைந்த ஒரு தலைவர்.

அவருடைய நாட்களினுள் எங்களுடைய விடுதலைப் போராட்டத்தை எங்களுடைய விடுதலையை நாங்கள் வென்றெடுக்க வேண்டும். அதற்காகத்தான் வீட்டுக்கு ஒருவர் நாட்டுக்கு என்ற கருத்தோடு படை திரட்டல் நடவடிக்கையை மும்முரமாக செய்து கொண்டிருக்கிறோம்.

தீர்க்க தரிசம் மதிநுட்பம் என்பதற்கு ஒரு சான்று 1988ம் ஆண்டு தலைவரைச் சந்திக்கச் சென்ற போது, மணலாற்றுக் காட்டில் ''ஒப்பிரேச் செக் மேட்'' நடவடிக்கை நடந்துகொண்டிருந்தது.

அந்த நேரத்தில் கையில் குண்டு அடிபட்டு தலைவருடை இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டேன். தலைவர் இருந்த இடத்திற்கு பக்கத்திலேயே தலைவருக்கு அருகாமையில் இருந்து கொண்டிருந்து தலைவர் சிகிற்சைக்காக அனுப்பி வைத்தவர்.

ஆனால் அந்த சிகிற்சையை அண்டை நாட்டில தான் பெற்றுக்கொண்டோம். ஆனால் இன்றைக்கு அதைவிட மிக மோசமான நிலையில் கடலில் விபத்தைச் சந்தித்த போதும் கூட, குறிப்பிட்ட நாட்களில் உங்களிடம் கருத்துக்களைச் சொல்லக்கூடிய அளவுக்கு வந்திருக்கிறேன் என்று சொன்னால் தலைவர் தீர்க்க தரிசனத்தோடு உருவாக்கிய மருத்துவத்துறை தான்.

1988ம் ஆண்டு ஒரே ஒரு மருத்துவ துணையோடு மணலாற்றுக் காட்டுக்குள்ளே நிலை கொண்டிருந்த தலைவருடைய மையப் பணிமனை, இன்றைக்கு தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எவ்வளவு விபத்துக்களை, எவ்வளவு போராளிகளின் விழுப் புண்களை அடைந்தாலும் அவர்களை களமுனையில் அனுப்பக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தித் தந்தது என்றால் அது தலைவரின் தீர்க்க தரிசனத்தால் உருவாக்கப்பட்ட மருத்துவத்துறைதான்.

சிறீலங்கா அரசு விசமத்தனமான பிரச்சாரத்தை இன்று நேற்று மேற்கொள்ளவில்லை. அது காலம் காலமாக உளவியல் ரீதியாக சிங்கள தேசத்தையும் உலகத்தையும் ஏதோ ஒரு புரட்டுப் புரட்டி, அப்படியாவது ஆத்ம திருத்தியை காணலாம் எனப் பிரச்சாரத்தை செய்துவருகின்றது.

சிறீலங்கா அரசாங்கத்தின் பிரச்சாரங்கள் எல்லாவற்றுக்கும் நாங்கள் பதில் அளித்துக்கொண்டு இருப்போம் என்றால், நாளாந்தம் ஒரு மறுதலிப்பை விடுத்துக்கொண்டிருக்க வேண்டும்.

உங்களைவிட புலம்பெயர்ந்து வாழுகின்ற எங்களுடைய உறவுகள் தான் குழம்பியிருக்கிறார்கள். வீதியில் எங்களுடைய வாகனம் 100 மீற்றர் வேகத்தில் போகும் போது ''கியரை'' மாற்றாமல் வெட்டினால் வாகனம் பிரட்டும் அதே மாதிரித்தான் கடலிலும் அது பொருந்தும்.

வேகப் படகுகள் பரீட்சார்த்தமாக ஓடிப்பார்த்த போது, வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் படகு ஒன்று வந்து மோதியது. என்னுடைய மகன் இறந்தது உண்மை. அவரோடு கூட நின்ற என்றுடைய போராளி ஒருவர் இறந்தது உண்மை. இரண்டு மூன்று போராளிகள் விழுப்புண் அடைந்தது உண்மை இதுதான் நடந்தது.

ஆனால் ஒன்றை மட்டும் மிகத் தெளிவாகவும் இறுக்கமாகவும் சொல்லுகிறோம். தலைவருடை நாட்களினுள் எங்களுடைய இனத்தினுடைய விடுதலையை பேச்சு நடத்தித் பெறமுடியாது. இராணுவ நடவடிக்கை மூலம் தான் எங்களுடைய விடுதலையைப் பெறமுடியும். அதற்காகத்தான் வீட்டுக்கு ஒருவர் நாட்டுக்கு கண்டிப்பாக உங்களுடைய பிள்ளைகளை பங்களிப்பு மிக விரைவாக இராணுவ ரீதியான வெற்றிகளைத் தேடித்தரும் என கேணல் சூசை தனது உரையில் மேலும் தெரிவித்தார்.

-பதிவு

யாழ்கள மெம்பர்ஸ் எல்லாரும் வடிவா பாருங்கோ சூசை அண்ணா வந்திட்டார் என்னவோ கதைத்த மாதிரி இருக்கு........... :P

"சிறகு விரித்த புலிகள்" பாடல் குறுவட்டினை தமிழீழ கடற்புலிகளின் சிறப்புத்தளபதி கேணல் சூசை இன்று வெளியிட்டார்.

மேலும் வாசிக்க

பலரின் வாயை இந்த செய்தி அடைத்திருக்குமே!!

சூசை அண்ணா பழைய அதே கம்பீரத்துடன் வந்து இனவாதிகளின் வாயை மூடிவிட்டார்.

சிங்கள ஊடகங்களின் உண்மைத் தன்மையை அவர்கள் அறியட்டும்.

உலகத் தமிழின வரலாற்றில் வான்படை கண்ட முதல் தமிழன்தான் எமது தேசியத் தலைவர் பிரபாகரன் என்று தமிழீழ கடற்புலிகளின் சிறப்புத் தலைவர் கேணல் சூசை பெருமிதத்துடன் கூறினார்.

மேலும் வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

வேகத்தை கட்டுப்படுத்தமுடியாது படகு வந்து மோதியமையால் விபத்து சம்பவித்தது விபத்தில் மகன் இறந்தமை உண்மை என்கிறார் சூசை

வீரகேசரி நாளேடு

ஒட்டிசுட்டான் பகுதியில் 1999ஆம் ஆண்டு படைகள் வந்து நின்றபோது எல்லோரிடமும் ஓர் அச்சம் இருந்தது. ஆனால் அந்த நிலைமையை தலைகீழாக எங்கள் தலைவர் மாற்றியமைத்தார். எங்களுடைய பலத்தின் மூலம்தான் எங்கள் இனத்தை தலைநிமிரச் செய்ய முடியும் என்று கடற்புலிகளின் தளபதி கேணல் சூசை தெரிவித்தார்.கடலில் விபத்தினை நான் சந்தித்தேன். அந்த விபத்தில் எனது மகன் இறந்தமை உண்மை. அத்துடன் போராளி ஒருவர் பலியானதுடன் மூன்று பேர் காயமடைந்தனர். வேகப் படகுகளை பரீட்சார்த்தமாக ஓடிப் பார்த்தபோது வேகத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் படகு ஒன்று வந்து மோதியமையினாலேயே விபத்து சம்பவித்தது என்றும் அவர் மேலும் கூறினார்.

நேற்று முன்தினம் புதன்கிழமை முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் லெப்.கேணல் திலீபன், கேணல் சங்கர் ஆகியோரின் நினைவுதின நிகழ்வு இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே கடற்புலிகளின் தளபதி சூசை இவ்வாறு கூறினார்.

எங்களுடைய இனத்தின் விடுதலைக்காக இனத்தினுடைய சுபீட்சத்துக்காக 30 ஆண்டு கால போராட்ட வரலாற்றில் பல வெற்றிகளையும், திருப்பு முனைகளையும் தலைவர் ஏற்படுத்தியுள்ளார்.

எங்களுடைய பலத்தின் ஊடாகத்தான் எங்களுடைய இனத்தை தலைநிமிர வைத்திருக்க முடியும். 1995 ஆம் ஆண்டு 6 இலட்சம் மக்கள் யாழ்ப்பாணத்திலிருந்து ஒரேயடியாக வெளியேற்றப்பட்டபோது உலகம் எந்தவொரு கருத்துக்களையும் சொல்லவில்லை. நாங்கள் யாழ்ப்பாணத்தை நோக்கி 2000ஆம் ஆண்டு போனபோது இந்த உலகம் எல்லா இடங்களிலிருந்தும் குரல் கொடுத்தது.

அந்த மமதையில் மீண்டும் ஒரு இராணுவ நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுத்தபோது முதுகெலும்பு உடைக்கப்பட்டது. அவர்களுடைய முதுகெலும்பை ஒட்ட வைப்பதற்காகத்தான் இவர்கள் இந்தப் பேச்சுக்களுக்கு ஊடாக சர்வதேசத் தலையீடு பேச்சுவார்த்தை என்ற வலைக்குள் இழுத்துச் சென்றார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.