Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தனின் இறுதி நிகழ்வு இன்று!

Published By: DIGITAL DESK 3  04 MAR, 2024 | 10:44 AM

image

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 33 ஆண்டுகள் சிறைத்  தண்டனை அனுபவித்து அதிலிருந்து விடுதலையாகி ஒன்றரை ஆண்டுகள் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த சாந்தன் அவர்களுடைய உடலைச் சுமந்த ஊர்தி நேற்று ஞாயிற்றுக்கிழமை (03)வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய இடங்களில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று பிற்பகல் யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்ட நிலையில் மக்கள் அஞ்சலிக்காக குமரப்பா நினைவு சதுக்கத்தில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு அரசியல் தலைவர்கள், பொது அமைப்பு பிரதிநிதிகள் உட்பட நூற்றுக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினர். 

அஞ்சலி  நிகழ்வுகளில் அவருடன் கூட இருந்து அவரது வழக்குகள் உட்பட பல்வேறு உதவிகளை புரிந்த தமிழக சட்டத்தரணி புகழேந்தி, மக்கள் அஞ்சலி நிகழ்வுகளை ஒருங்கிணைத்து குரலற்றோர் குரல் அமைப்பு தலைவர் கோமகன், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்க பிரதிநிதி, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரியக்க ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள், உட்பட பலரும் அஞ்சலி உரைகளை நிகழ்த்தினர்.

இதில் நூற்றுக்கணக்கான மக்கள் சாந்தனின் புகழுடலுக்கு மலரஞ்சலி செலுத்தினர்.

இதனை தொடர்ந்து சாந்தனின் இல்லத்தில் சடலம் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று திங்கட்கிழமை (04) காலை 10 மணியளவில் இறுதி கிரிகைகள் மேற்கொள்ளப்பட்டு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

இதேவேளை சாந்தனின் புகழுடல் நீர்கொழும்பிலிருந்து எடுத்துவரும் போது வவுனியாவிலிருந்து மக்கள் வீதி எங்கும் அவரது உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.

யாழ்ப்பாணத்தில் மாலிசந்தி, நெல்லியடி, உடுப்பிட்டி ஊடாக தீருவில் வரை சென்ற புகழுடலுக்கு மக்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தியதுடன் வீதி எங்கும் அவரது நினைவு பதாதைகளை கட்டியுள்ளனர்.

மேலும் வல்வெட்டியில் இடம் பெற்ற அஞ்சலி நிகழ்வில் ஜேவீபி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் சாந்தனின் புகளுடலிற்கு அஞ்சலி செலுத்தியதோடு முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் சாந்தனின் புகழுடலிற்க்கு சிவப்பு மஞ்சள் கொடி போர்த்தி மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

உண்மையில் வடமராட்சி ஒரு சோகமான நிலையிலேயே சாந்தன் அவர்களது மறைவிற்கு பின்னர் காட்சியளிக்கிறது.

https://www.virakesari.lk/article/177841

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

சாந்தனின் இறுதிக் கிரியைகள் ஆரம்பம்!

சாந்தனின் உடல் யாழ்ப்பாணத்தில் உள்ள அன்னாரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இறுதி கிரியைகள் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 10 மணியளவில் இறுதி கிரிகைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில்  அன்னாரின் பூதவுடலுக்கு நூற்றுக்கணக்கான மக்கள்  மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேவை இறுதிக் கிரியைகள் நிறைவு பெற்ற பின்னர் வல்வெட்டித்துறை, பொலிகண்டி ஊடாக எள்ளங்குளம் இந்து மயானத்திற்கு அன்னாரது பூதவுடல் எடுத்துச் செல்லப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் நாட்டுக்கு திரும்புவார் என அவரது குடும்பத்தினர் நீண்டகாலமாக எதிர்ப்பார்த்திருந்த நிலையில் கடந்த 28 ஆம் திகதி உடல் நலக்குறைவினால் சென்னையில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1372086

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாந்தனின் உடலுக்கு இறுதிக்கிரியை நடைபெற்று இறுதி ஊர்வலம் ஆரம்பம்

Published By: DIGITAL DESK 3    04 MAR, 2024 | 03:33 PM

image

உடுப்பிட்டி - இலக்கணாவத்தையில் உள்ள சாந்தனின் சகோதரியின் இல்லத்தில் சமய சடங்குகளுடன் இறுதிக்கிரியை நடைபெற்றது.

சாந்தனின் தாய் மற்றும் சகோதரி உள்ளிட்ட நெருங்கிய உறவுகளால் புகழுடலுக்கு வாய்க்கரிசி போடப்பட்டு ஊர்மக்களால் அருகில் உள்ள சனசமூக நிலையமொன்றுக்கு புகழுடல் தாங்கிச் செல்லப்பட்டது. அங்கு பொதுமக்களால் அஞ்சலி செலுத்தப்பட்டு நினைவஞ்சலி உரைகள் இடம்பெற்று வருகிறது.

இறுதி ஊர்வலம் அறிவகம் சனசமுக நிலையம், தர்மகுலசிங்கம் சனசமுக நிலையம், வீரகத்தி விநாயகர் சனசமூக நிலையம் ஊடாக நாவலடி, உடுப்பிட்டி, வல்வெட்டித்துறை, பொலிகண்டி ஊடாக பயணித்து எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நிறைவு பெற்று மாலை புகழுடல் தகனம் செய்யப்படும்.

இறுதி அஞ்சலியில் சமயத் தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்திய முன்னாள் பிரதமா் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுவிக்கப்பட்ட சாந்தன், திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த 28ம் திகதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

IMG-20240304-WA0014.jpg

IMG-20240304-WA0016.jpg

IMG-20240304-WA0017.jpg

IMG-20240304-WA0018.jpg

IMG-20240304-WA0014.jpg

IMG-20240304-WA0019.jpg

https://www.virakesari.lk/article/177884

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் மாற்றான் தாய் மனப்பாங்குடன் பலியிடப்பட்ட ஈழத்தமிழர் சாந்தனுக்கு கண்ணீரஞ்சலி.

அன்று பார்வதி அம்மா.. கட்டுமரம் கருணாநிதி ஆட்சியில்.

இன்று சாந்தன்.. கட்டுமரம் மகன்.. ஸ்ராலின் ஆட்சியில்.

  • கருத்துக்கள உறவுகள்

IMG-5966.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாந்தனின் உடல் எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்ல மயானத்தில் நல்லடக்கம்!

04 MAR, 2024 | 09:19 PM
image

சாந்தனின் உடல் வடமராட்சி எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்ல மயான வளாகத்தில் பெருமளவிலான மக்களின் கண்ணீர் கதறலுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு முப்பது வருடங்களுக்கு மேலாக சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட போதும் தொடர்ந்து சிறப்புமுகாமில் தடுத்து வைக்கப்பட்டு தாயகம் திரும்ப இருந்த நிலையில் சாந்தன் திடீரென உயிரிழந்திருந்தார்.

சாந்தன் உயிரோடு இலங்கைக்கு வருவாரென எதிர்பார்த்திருந்த நிலையில் திடீரென உயிரிழந்த நிலையில் அவரது உடல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது. மக்கள் பல்வேறு இடங்களிலும் அலைகடலெனத் திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து பெருமளவிலான மக்கள் புடைசூழ நல்லடக்கத்திற்காக உடல் தூயிலுமில்லத்திற்கு எடுத்துவரப்பட்ட போது வீதிகளில் திரண்டு மக்கள் தமது அஞ்சலியை செலுத்தினர்.

இறுதியாக எள்ளங்குளம் மாவீர்ர் துயிலுமில்லத்தில் உற்றார் உறவினர் நண்பர்கள் போராளிகள் எனப் பெருமளவிலானோரின் கண்ணீர் கதறலுடன் விபூதி போடப்பட்டு சாந்தனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

IMG-20240304-WA0042.jpg

IMG-20240304-WA0038.jpg

IMG-20240304-WA0040.jpg

IMG-20240304-WA0041.jpg

IMG-20240304-WA0049.jpg

IMG-20240304-WA0034.jpgIMG-20240304-WA0036.jpg

IMG-20240304-WA0037.jpg

https://www.virakesari.lk/article/177911

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.