Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3   06 MAR, 2024 | 09:10 AM

image

சுழிபுரத்திலே புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டதாக எங்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து நாங்கள் இங்கே வந்திருக்கின்றோம். அந்த தகவல் உண்மையானது. சவுக்கடி பிள்ளையார் கோவிலுக்கு பின்பாகவும் இராணுவ முகாமிற்கு முன்பாகவும் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இது திட்டமிட்ட ஒரு ஆக்கிரமிப்பு என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை (05) இரவு குறித்த பகுதிக்கு சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

கோயிலை ஆக்கிரமிக்கின்ற வகையிலே இந்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இதை நாங்கள் அனுமதிக்க முடியாது. ஏனென்றால் தமிழர் தாயகம் எங்கும் தற்சமயம், அதுவும் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஜனாதிபதியாக வந்ததன் பின்னர் ஆக்கிரமிப்புகள் மிகத் தீவிரம் பெற்றுள்ளது. அதனுடைய அடுத்தகட்ட பரிமாணம் தான் இந்த புத்தர் சிலை.

இந்த புத்தர் சிலையை உடனடியாக அகற்றும்படி நாங்கள் இராணுவத்தினரிடம் கூறுகின்றோம். நீங்கள் அதனை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க விட்டால் நாங்கள் வெகு விரைவில் இந்தப் பிரதேசம் மக்களோடும், இராணுவ முகாமை சுற்றியுள்ள அமைப்புகளுடனும் கதைத்து விட்டு, விசேடமாக மீனவர் அமைப்புகளுடன் கதைத்து விட்டு இதற்கு எதிராக பாரிய போராட்டங்களை முன்னெடுக்க இருக்கின்றோம். அப்போது அந்தப் போராட்டங்கள் என நாங்கள் மக்களுக்கு அறிவிப்போம்.

மக்கள் அனைவரும் இந்த இடத்திற்கு வர வேண்டும். இல்லையேல் தமிழர் தாயகம் பறிபோகும் இதை எவராலும் தடுக்க முடியாது. நாங்கள் கதைப்பதை கூட இராணுவம் அச்சுறுத்தி படம் எடுக்கின்றார்கள். தங்களைக் கதைக்க வேண்டாம், படம் எடுக்க வேண்டாம் என அச்சுறுத்தல் செய்கின்றார்கள். அச்சுறுத்தலை தாண்டித்தான் நாங்கள் இந்த இடத்தில் நிற்கின்றோம். ஏனென்றால் இது நமது மக்களின் எதிர்கால இருப்புடன் சம்பந்தப்பட்ட விடயம். மக்களே வெளிப்படையுங்கள் அல்லது இந்த நாட்டில் தமிழர்கள் வாழ முடியாத நிலை ஏற்படப் போகின்றது - என்றார்.

https://www.virakesari.lk/article/178027

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன் இப்படியே அடர்த்தியான..  சிங்கள இராணுவ இருப்பை நாம் சகித்துக் கொண்டிருப்போமானால்..  வலிவடக்கு முழுவதும்.. வன்னியும்.. புங்குடுதீவு போன்ற பகுதிகளும்..  சிங்கள பெளத்த மயமாகும் காலம் மறறைய இடங்களை விட விரைவாக நிகழ்ந்தேறும்.

ஏனெனில்.. இந்த புத்தர் சிலை வரவு என்பது சகட்டுமேனிக்கு அரசமரம் உள்ள இடமெல்லாம் வருகுது. அது சிங்கள பெளத்த ஆக்கிரமிப்பு இராணுவத்தின் வேலிக்குள் இருந்தால் என்ன வெளியில் இருந்தால் என்ன. 

மக்கள் சுகாஷிற்கு ஆதரவு வழங்காலும் விட்டாலும் பரவாயில்லை.. அவரின் இந்த வேண்டுகோளை அதிதீவிரமாகக் கொள்ளாவிட்டால்.. மாதகலை.. அழுத்து சுழிபுரம்..

சிங்களத்தின் முன்னேறிப்பாய்தலை.. புலிப்பாய்ச்சல் மூலம் முறியடித்து.. புக்காரா (1) வீழ்த்தி.. எம் மறவர்கள் உயிர் கொடுத்து மீட்ட நிலங்கள் எல்லாம் இப்போ எம் கண் முன்னாலேயே பறிபோகிறது. நவாலி தேவாலய மக்களின் உயிர்பலிகளையும் இந்த நில ஆக்கிரமிப்பை மையப்படுத்தியே சிங்களம் மேற்கொண்டிருந்தது. குறிப்பாக சந்திரிக்கா- ரத்வத்தை கூட்டு இனப்படுகொலைக் கும்பல். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கட்சி பேதமின்றி போராடுதல் தான் ஒரே வழி. ரனிலுக்கு ஒரு வாக்கும் போகாமல் செய்ய வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழ் மக்களின் அதிகாரபூர்வமான கட்சியான தமிழரசு கட்சி களத்தில் இறங்க வேண்டும். சும்மா  அறிக்கைகளை  மட்டும் விட்டுக்கொண்டிருக்காமல்.....😎

ஏய் மீசைக்கார நண்பா கவனிப்பாயா? 🤣

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

ஏய் மீசைக்கார நண்பா கவனிப்பாயா? 🤣

மீசைகார நண்பன்.. கவனிச்சா.. மீசை இல்லா நண்பன்.. இராணுவ முகாம் வாசலில்.. இராணுவத்துக்கு பைல் காவிக்கிட்டு நிற்பாரே. அந்தளவுக்கு நெருக்கம்.. இருவரும். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

ரணில் சுமந்திரனை வைத்து ஆடும் நாடகத்தை எங்கள் மக்கள் இந்த தேர்தலில் தூக்கி எறியவேண்டும் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுழிபுரத்தில் புத்தர் சிலை அகற்றப்பட்டதால் போராட்டம் கைவிடப்படுகின்றது - சுகாஷ் அறிவிப்பு

Published By: DIGITAL DESK 3   08 MAR, 2024 | 10:38 AM

image

சுழிபுரத்தில் புத்தர் சிலை அகற்றப்பட்டதால் போராட்டம் கைவிடப்படுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் அறிவித்துள்ளார்.

குறித்த பகுதியில் புத்தர் சிலை வைத்ததால் அதனை அகற்றுமாறு கோரி இன்று வெள்ளிக்கிழமை போராட்டம் ஒன்றினை நடாத்துவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சுழிபுரத்தில் புத்தர் சிலை அகற்றப்பட்டதால் போராட்டம் கைவிடப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

போராடினால் மட்டுமே இனம் வாழும். போராட்டங்களால் எதையும் சாதிக்க முடியாதென்பவர்கள், இனியாவது எம்மோடு கைகோர்ப்பார்கள் என்று நம்புகின்றோம். இனத்துக்காக இறுதிவரை விடிவுவரை போராடுவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/178230

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.