Jump to content

புலம் பெயர்ந்த புகை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
நாங்கள் புலம் பெயர்ந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. ஊரில் வாழ்ந்த காலத்தை விட, வெளியில் வாழ்ந்த காலமே அதிகம் என்றாகிவிட்டது.  தெரிந்தவர்கள் பலர் வாழ்க்கை முடிந்து போகவும் ஆரம்பித்துவிட்டார்கள். 
 
என்னதான் வெளிநாடுகளில் எத்தனை வருடங்கள் வாழ்ந்தாலும், மனங்கள் என்றும் ஊரையும், அந்த நினைவுகளையுமே அசை போட்டுக் கொண்டிருக்கின்றன. நாங்கள் என்றும் புலம் பெயரவே இல்லை என்னும் அளவிற்கு ஊர் நினைவுகள் அப்படியே ஒட்டியிருக்கின்றன.
 
சில வேளைகளில் பார்த்தால், உண்மையில் கடைசிப் புகை மட்டும் தான் புலம் பெயர்ந்தது, அந்தந்த நாடுகளில் கலந்து விடுகிறதோ என்று தோன்றுகின்றது. 
 
********************
 
புலம் பெயர்ந்த புகை
----------------------------------
இங்கு வந்த நாங்கள்
இப்பொழுது
இறக்க தொடங்கி விட்டோம்
 
கடைசியில்
ஒரு இடு வீட்டில் 
ஒரு வாரம் விறைப்பாக கிடந்து
அங்கிருக்கும் புகை போக்கியால்
எரிந்த மெய் 
புகையாக போகின்றது
 
நாளை வாழ்வோம்
நாளை வாழ்வோம்
இன்று ஓடுவோம்
இன்றே தேடுவோம் என்றிருக்க
 
வாழ்க்கை ஓடியே போக
காலம் முடிந்து விடுகின்றது
 
இன்றே ஏன் வாழக்கூடாது
எவருக்கும் சொல்லத் தெரியவில்லை
 
இன்று அவர் ஓடுகின்றார்
ஆகவே இவரும் ஓடுகின்றார்
இன்று அவர் வாங்குகின்றார்
ஆகவே இவரும் வாங்குகின்றார்
 
பின்னர் ஒரு நாளில்
ஊர் மண்ணை போய் சேர
மீண்டு வரும் சொர்க்கம் என்று
எண்ணி எண்ணி இருக்க
 
அந்த நாள் என்றும் வருவதில்லை
 
திடீரென பெய்த மழையில்
கொத்தாக குருவிகள் ஒதுங்கின
வீட்டுக் கூரைக்குள்
 
கிச் கிச் கீச்சென்று
ஒன்றையொன்று தள்ளி இடம் பிடித்தன
 
துளி விழுந்து
துள்ளி ஓடி வந்தது
வெளியே போன குஞ்சு ஒன்று
 
அகமும் விழியும்  இருந்தால்
இந்த வாழ்க்கை சமமே
இங்கும் அங்கும். 
Edited by ரசோதரன்
  • Like 10
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, ரசோதரன் said:
இன்று அவர் ஓடுகின்றார்
ஆகவே இவரும் ஓடுகின்றார்
இன்று அவர் வாங்குகின்றார்
ஆகவே இவரும் வாங்குகின்றார்

என்னைப் பற்றி சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kavi arunasalam said:

என்னைப் பற்றி சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்

😀...

உங்களின் நிலை தான் எங்கள் எல்லோருடையதும்.

Peer Pressure என்று சொல்வது போல. இதில் இருந்து வெளியில் வருவதற்கே நிறைய சக்தி தேவைப்படுகின்றது...........🤣

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பின்னர் ஒரு நாளில்
ஊர் மண்ணை போய் சேர
மீண்டு வரும் சொர்க்கம் என்று
எண்ணி எண்ணி இருக்க
அந்த நாள் என்றும் வருவதில்லை
 

இது தான் உண்மை .

 ( வந்தவர் எல்லாம் தங்கி விடடால்   இந்த 
மண்ணில் இடம் எது ....
வாழ்கை என்பது வியாபாரம் 
வருவதும் போவதும் செலவாகும்.
.....போனால் போகட்டும் போடா........... )

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நாளை வாழ்வோம்
நாளை வாழ்வோம்
இன்று ஓடுவோம்
இன்றே தேடுவோம் என்றிருக்க
 
வாழ்க்கை ஓடியே போக
காலம் முடிந்து விடுகின்றது.....!
 
இவைதான் நிதர்சனமான உண்மைகள்........!   👍
நன்றி ரசோதரன்.......!
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரசோதரன் said:
இன்று ஓடுவோம்
இன்றே தேடுவோம்

ஓடி தேடி முடிந்துவிட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஈழப்பிரியன் said:

ஓடி தேடி முடிந்துவிட்டது.

👍....

நீங்கள் ஓய்வெடுக்கும் பருவத்திற்கு வந்து விட்டீர்கள். ஓய்வெடுக்கும் பருவத்தில் ஓய்வெடுக்கக் கூடியதாக இருப்பது சிறப்பு. நான் இன்னும் ஒரு பத்து அல்லது பன்னிரண்டு வருடங்கள் வேலை செய்ய வேண்டும். இங்கு மருத்துவ காப்புறுதிக்காக என்றாலும் வேலை செய்து தானே ஆக வேண்டும்....🤣

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.