Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உண்ணாவிரத்தைத் தொடங்கினார் கருணாநிதி-உடன் ராமதாஸ், டி.ஆர். பாலுவும் உண்ணாவிரதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உண்ணாவிரத்தைத் தொடங்கினார் கருணாநிதி-உடன் ராமதாஸ், டி.ஆர். பாலுவும் உண்ணாவிரதம்

திங்கள்கிழமை, அக்டோபர் 1, 2007

சென்னை:

சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றக் கோரி சென்னையில் முதல்வர் கருணாநிதி இன்று காலை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். தமிழகம் முழுவதும் திமுக கூட்டணியினர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றக் கோரி திமுக கூட்டணி அறிவித்திருந்த பந்த்துக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து விட்டதால் அதற்குப் பதிலாக உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதி அறிவித்தார்.

அதன்படி இன்று காலை உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது. வாலாஜா சாலையில் உள்ள, சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை அருகே அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மேடையில் முதல்வர் கருணாநிதி தனது உண்ணாவிரதத்தைத் தொடங்கினர்.

கருணாநிதியுடன் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர். அவர்களுடன் நூற்றுக்கணக்கான தொண்டர்களும் உண்ணாவிரத்தில் பங்கேற்றுள்ளனர்.

கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் உண்ணாவிரதம் இருக்கும் பகுதியில் போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை. பெரும் அளவில் போலீஸார் குவிக்கப்பட்டு தீவிரப் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது.

இதேபோல தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் திமுக கூட்டணியினர் பல்லாயிரக்கணக்கான பேர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

ராமதாசும் உண்ணாவிரதம்:

முதல்வர் கருணாநிதியுடன், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் வரதராஜன், இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் தா.பாண்டியன், திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி,

விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன், மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், இந்திய கம்யூனிஸ்ட் தேசியச் செயலாளர் ராஜா, எம்.ஜி.ஆர். கழக நிறுவனர் ஆர்.எம்.வீரப்பன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காஜா மொஹைதீன் ஆகியோரும் உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளனர்.

டி.ஆர். பாலு, ஸ்டாலின் உண்ணாவிரதம்:

மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் ஸ்டாலின், பரிதி இளம் வழுதி, வீரபாண்டி ஆறுமுகம், கோ.சி.மணி, பாமக தலைவர் ஜி.கே.மணி, சட்டசபை காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் சுதர்சனம், எம்எல்ஏ பீட்டர் அல்போன்ஸ் ஆகியோரும் உண்ணாவிரத்தில் பங்கேற்றுள்ளனர்.

பந்தலின் எதிரே ஆயிரக்கணக்கான திமுக மற்றும் கூட்டணிக் கட்சித் தொண்டர்களும் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

கனிமொழி:

ராஜ்யசபா எம்பியான கனிமொழி தொண்டர்கள் கூட்டத்தில் அமர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

மேலும் சென்னை மேயர் சுப்பிரமணியன், துணை மேயர் சத்யபாமா, தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் இராம.நாராயணன், முன்னாள் அமைச்சர்கள் சற்குண பாண்டியன், இந்திர குமாரி, பாமக முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி,

உண்ணாவிரதப் போராட்டத்தையொட்டி சேப்பாக்கம் விருந்தனர் மாளிகை அருகில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னை போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன், கூடுதல் கமிஷனர் ஜாங்கிட் தலைமையிலான அதிகாரிகள் உண்ணாவிரத பந்தல் அருகே முகாமிட்டுள்ளனர்.

http://thatstamil.oneindia.in/news/2007/10...-for-sethu.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்ணாவிரதத்தை நிறுத்தினார் கருணாநிதி: சோனியா தலையீடு?-பஸ்கள் ஓட தொடங்கின

திங்கள்கிழமை, அக்டோபர் 1, 2007

சென்னை:

முதல்வர் கருணாநிதி இன்று திடீரென உண்ணாவிரதத்தை நிறுத்தி விட்டு கிளம்பிச் சென்றார். அவருக்குப் பின்னால் டாக்டர் ராமதாஸும் கிளம்பிச் சென்றார். ஆனால் மற்றவர்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

அங்கிருந்து நேராக தலைமை செயலகத்துக்கு சென்று வழக்கமான பணிகளை துவங்கினார் கருணாநிதி.

உச்சநீதிமன்றத்தின் கடும் கண்டனத்தைத் தொடர்ந்து மத்திய அரசு இதில் தலையிட்டிருக்கக் கூடும் என கூறப்படுகிறது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் மீறி தமிழகத்தில் கடைகள் அடைக்கப்பட்டு, பேருந்தகுள் நிறுத்தப்பட்டு பந்த் நடப்பது குறித்து இன்று அதிமுக தொடர்ந்த அவசர வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.

திமுக அரசை டிஸ்மிஸ் செய்வது குறித்து பரிசீலிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு அது அறிவுறுத்தியது. மேலும், கருணாநிதி மற்றும் தமிழக அரசின் தலைமைச் செயலாளரை நேரில் அழைத்து விசாரிக்க நேரிடும் எனவும் எச்சரித்தது.

இந்த நிலையில் இன்று காலை முதல் உண்ணாவிரதம் இருந்து வந்த முதல்வர் கருணாநிதி திடீரென அங்கிருந்து கிளம்பிச் சென்றார். அவர் சென்ற சில நிமிடங்களில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும் புறப்பட்டுச் சென்றார்.

கருணாநிதி கிளம்பிச் சென்றதற்கான காரணம் என்ன என்பது குறித்துத் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் மேலும் பல சிக்கல்கள் ஏற்பட்டு விடக் கூடாது என்பற்காக மத்திய அரசோ அல்லது சோனியா காந்தியோ தலையிட்டிருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.

கருணாநிதி, ராமதாஸ் சென்று விட்டாலும் கூட திமுக கூட்டணியின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. மற்ற தலைவர்கள் அனைவரும் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அதே நேரத்தில் உண்ணாவிரதத்தில் பங்கேற்ற அன்பழகன், ஆற்காடு வீராசாமி, ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் தலைமைச் செயலகம் திரும்பினர்.

முன்னதாக தமிழகத்தில் நடந்து வரும் போராட்டத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கருணாநிதியிடம் கேட்டனர். அதற்குப் பதிலளிக்க மறுத்த கருணாநிதி, உச்சநீதிமன்றம், பந்த் நடத்த தடை விதித்ததால் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறோம். நாங்கள் பந்த் நடத்தவில்லை என்று பதிலளித்தார்.

தலைமைச் செயலாளர் பேட்டி:

அதே போல பஸ்கள் ஓடாததற்கும் உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததையடுத்து தமிழகம் முழுவதும் பஸ்கைள உடனடியாக இயக்குமாறு தலைமை செயலாளர் திரிபாதி உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பஸ்கள் ஓடத் தொடங்கின. நிருபர்களிடம் திரிபாதி கூறுகையில்,

உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு அவமதிக்கவில்லை. உச்சநீதிமன்ற உத்தரவை நாங்கள் முழுமையாக கடைப்பிடிக்கிறோம்.

தமிழகத்தில் இன்று பேருந்துகள் ஓடத் தயாராகவே இருக்கின்றன. ஊழியர்கள் வராததால் பேருந்துகளை முழுமையாக இயக்க முடியவில்லை. மாநிலம் முழுவதும் 51 பேருந்துகள் மட்டுமே ஓடியுள்ளன. நிலைமை இன்னும் சில மணி நேரங்களில் படிப்படியாக சீரடையும் என்றார்.

முன்னதாக, உண்ணாவிரதம் நடக்கும் இடத்திற்கு அருகே இன்று காலை திறந்திருந்த ஒரு ஹோட்டல் மீது திடீரென சிலர் கல்வீச்சில் இறங்கினர். சரமாரியாக கற்களை வீசி அந்த ஹோட்டலை மூடுமாறு வற்புறுத்தினர். இதையடுத்து அந்த ஹோட்டல் மூடப்பட்டது.

http://thatstamil.oneindia.in/news/2007/10...-ends-fast.html

நெடுமாறன் ஜயா உங்களுக்கு நன்றி. உணவு பொருட்கள் அனுப்பும் உண்ணாவிரத போராட்டத்தை நடத்த விடாமல் கொச்சை படுத்தியவர்கள் இன்று பந்தல் போட்டு அமர்ந்துள்ளார்கள்........

தனக்கு ஒரு நீதி மற்றையவர்களுக்கு இன்னொரு நீதியா கலைஞரே.........

உச்ச நீதி மன்றம் புறக்கணிப்பு போராட்டம் நடத்த அனுமதி தரவில்லை என்ற கோபத்துடன் உண்ணாவிரதத்தில் வந்து அமர்ந்துள்ளீர்கள். இருங்கள் . இதைதான் நெடுமாறன் ஜயாவும் செய்தார்.

உச்ச நீதிமன்றத்தின் மிரட்டலையடுத்தே கருணாநிதி உண்ணாவிரதப் போராட்டத்தை அவரசரமாகக் கைவிட்டதாகத் தெரிகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.