Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
24 APR, 2024 | 08:05 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

தலைமன்னாரில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த சம்பவத்தில் கைதான சந்தேக நபரான அப்துல் ரகுமான் என்ற நபர் வவுனியா வைத்தியசாலையிலிருந்து தப்பித்து இந்தியாவுக்கு சென்றுள்ளார். பொலிஸாரின்  பொறுப்பற்ற செயற்பாடுகள் அதிருப்திக்குரியன  என தமிழ் தேசிய கூட்டமைப்பின்  பாராளுமன்ற உறுப்பினர்  சார்ள்ஸ் நிர்மலநாதன் நீதி அமைச்சர்  விஜேதாச ராஜபக்ஸவிடம் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (24) இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

கடந்த பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி தலைமன்னாரில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டார். குச்சவெளிப்பகுதியை சேர்ந்த அப்துல் ரகுமான்  என்ற 52 வயதான நபர் முழுமையான சாட்சியங்களோடு கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவர் ஏப்ரல் 3ஆம் திகதி வவுனியா வைத்தியசாலையிலிருந்து தப்பித்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை, படுகொலை ஆகிய குற்றங்களை செய்த இந்த நபரை எப்படி பொலிஸார் வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தார்கள்? இதில்தான் மர்மம் உள்ளது. இந்நபர் அந்த கிராமத்திலுள்ள தென்னந் தோட்டத்தில் வேலை செய்துள்ளார். தொழிலை பெற்றுக்கொள்ள வரும்போது தனது பெயர் விஜேந்திரன் என்று அந்த தென்னம் தோட்ட உரிமையாளரிடம் தெரிவித்து அந்த கிராமத்தில் வாழ்ந்துள்ளார்.

அவர் கைது செய்யப்பட்டதன் பின்னர் தான் தெரியும் அவரின் பெயர் அப்துல் ரகுமான் என்பது. இவ்வாறு பெயர் மாறாட்டம் செய்தது தெரிய வந்துள்ளது. சிறுமியை பாலியல்  வன்கொடுமை செய்து படுகொலை  செய்ய ஒரு நபரை பொலிஸார் எவ்வளவு அலட்சியமாக தப்ப விட்டுள்ளனர். நாளை அவரின் வழக்கு மன்னார் நீதிமன்றத்தில் உள்ளது. இவ்வாறான ஒருவர் வவுனியா சிறையிலிருந்து வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு தப்பிக்க விடப்பட்டுள்ளார். இது தொடர்பில் நீதி அமைச்சரின் பதில் என்ன?

இதேவேளை நேற்று முன்தினம் கூட இரு பெரியவர்களும் ஒரு வயது குறைந்துவரும் இந்தியாவின் ராமேஸ்வரத்துக்கு இலங்கையிலிருந்து சென்றுள்ளனர். இது தொடர்பில் தலைமன்னார் பிரதேச  மக்கள் எனக்கு தொலைபேசியில் கூறுகையில், சிறுமியை வன்கொடுமை செய்து  கொன்ற கொலையாளிதான் ராமேஸ்வரம்  சென்று  வேறு பெயரில் தஞ்சமடைந்துள்ளார் என்று கூறினார்கள்.   

எனவே இந்த அப்துல் ரகுமான் என்ற குற்றவாளி இந்தியாவின் மண்டபம் முகாமில் தஞ்சமடைந்துள்ளாரா என்ற கேள்வியை தலைமன்னார் மக்கள் இந்த அரசிடம் கேட்க விரும்புகின்றார்கள். 

எனவே இவரை கைது செய்ய நீதி அமைச்சு   என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதனை கேட்பதுடன் அவரை உடனடியாக கைது செய்ய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/181883

  • கருத்துக்கள உறவுகள்

சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட நியமிக்கப்பட்டவர்களே காவற்துறையினர். அவர்களோ, சட்டத்தை மீறுகின்றனர், நீதிமன்ற கட்டளைகளை அவமதித்து கேள்விக்குள்ளாக்குகின்றனர், வன்முறைகளை தூண்டுகின்றனர், குற்றவாளிகளை பாதுகாத்து தப்ப விடுகின்றனர், சமூக விரோதிகளை காக்கின்றனர், போதைப்பொருளை கடத்துகின்றனர், தங்களுக்கு பிடிக்காதவர்களை பழிவாங்குகின்றனர், லஞ்சம் வாங்குகின்றனர்.  இவர்களுக்கு சட்ட அறிவுமில்லை பொது அறிவுமில்லை, சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டத்தெரியாதவர்கள், தேவையற்ற, தமக்கு அதிகாரத்துக்கு  அப்பாற்பட்ட பிரச்சனைகளில் மூக்கை நுழைத்து அமைதியை குழப்பி பிரச்சனைகளை சிக்கலாக்கி மக்களை பிழையாக  வழி நடத்துகின்றனர், அதிகாரங்களை துஸ்ப்பிரயோகம் செய்கின்றனர். நீதிமுறை தெரியாத, ஒழுக்கமற்ற இவர்கள் எதற்காக இங்கு நிலைநிறுத்தப்பட்டுளார்கள்? இவற்றை எங்கள் பிரதேசங்களில் ஊக்குவிக்கப்பதற்காக சம்பளம் கொடுத்து அரசாங்கம் வளர்க்கிறது. இவர்களை காவற்படை என அழைப்பதை விடுத்து காவாலிப்படை என விளிப்பதே பொருத்தமானது!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.