Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

"நிம்மதியைத் தேடுகிறேன்" 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
"நிம்மதியைத் தேடுகிறேன்" 
 
 
 
"நிரந்தரம் இல்லாத ஒன்றிற்காக எனோ  
நிம்மதி இல்லாமல் தினம் அலைகிறோமே!        
நித்திரை கூட வர மறுக்குதே  
நினைத்து நினைத்து மனம் புலம்புதே!" 
 
 
நான் திருமணமான, ஆஸ்திக்கொரு ஆணும் ஆசைக்கு ஒரு பொண்ணும் என, இரு குழந்தையின் தந்தை. கொழும்பில் மனைவி பிள்ளைகளுடன் மகிழ்வாக இருந்த காலம் அது. நல்ல உத்தியோகம், வசதியான வீடு, அழகான மனைவி, புத்திசாலி பிள்ளைகள்! ஆனால் யாரும் எதிர்பாராத, திடீரென ஆனால் திட்டமிட்டு தோன்றிய இனக்கலவரம், எம்மை உள்நாட்டிலேயே ஏதிலியாக [அகதியாக] கப்பலில் யாழ்ப்பாணம் இடம் பெயரவைத்தது. அன்று தொலைந்த நிம்மதியை இன்றும் தேடிக் கொண்டே இருக்கிறேன்!
 
 
"வாழ்க்கைக்கு நிம்மதி தேவை என்றால் 
வாளால் அறுத்து ஏறி ஞாபகத்தை!
வாயில்கள் பல எமக்கு உண்டு 
வாட்டம் கொள்ளாமல் தெரிந்து எடு!" 
 
 
திரும்பவும் கொழும்பு வர மனமில்லாமல், பிள்ளைகளின் பாதுகாப்பும், படிப்பையும் முன்னிறுத்தி மனைவி ' ஏன் நாங்கள் குடும்பத்துடன் வெளிநாடு போகக் கூடாது?' என்று கேட்டார். 'உங்களுக்கு நல்ல படிப்பு உண்டுதானே. நானும் எதோ படித்துள்ளேன்.  அங்கு ஏதாவது ஒரு வேலை இருவரும் எடுத்து சமாளிக்கலாம் தானே !' என்று மேலும் கூறினார். கொழும்பை  விட்டு, வேலையை விட்டு வெளியே வந்து ஆறு மாதம் கடந்துவிட்டது. யாழ்ப்பாணமும் ஒரு போர் சூழல் நிலமையாக நாளுக்கு நாள் மாறிக்கொண்டே போய்க்கொண்டு இருந்தது. ஆனால் இது முழுமையாக தமிழர் சமுதாயத்தின் இடம் என்பதால், ராணுவத்தின் எடுபிடிகளைத் தவிர, வேறு பிரச்சனைகள் அங்கு இல்லை என்பது கொஞ்சம் நிம்மதி. பாடசாலைகளும் நல்ல தரமான பாடசாலைகள். என்றாலும் எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்பது ஒருவருக்கும் தெரியாது?
 
 
"சந்தோசம் நம்பிக்கை நிம்மதி மூன்றும் 
சறுக்கி போய் விடும் எளிதிலே! 
சமரசம் செய்து தொலைக்காமல் இரு 
சக்கரம் போல என்றும் மீளவராதே!" 
 
 
நாம் ஆறு மாதத்துக்கு முன் தொலைத்த நிம்மதி முழுதாக இன்னும் வந்த பாடில்லை. பாடசாலைகளும், படிப்பு நல்லதாக இருந்தாலும், அடிக்கடி ஏற்படும் குண்டு, ஷெல் தாக்குதல்களால்  ஒழுங்காக நடைபெறுவதில்லை. இப்படியான நிலைமைகளால் மரணங்களும், காயப்படுபவர்களும் அங்கொன்று  இங்கொன்றாக நிகழ்ந்த வண்ணமே இருந்தன. ஆகவே நாம் குடும்பமாக வெளிநாடு போக தீர்மானித்து, கொழும்பு சர்வதேச விமான நிலையம் ஊடாக இங்கிலாந்து போய் சேர்ந்தோம். எம்மை இங்கிலாந்து வரவேற்று விசாவும் தந்தார்கள். என்றாலும் எம் பிரச்சனை தீரவில்லை, பாடசாலை எடுப்பது பெரும் பிரச்சனையாக இருக்கவில்லை. ஆனால், நாம் இருவரும் உத்தியோகம் எடுக்கவேண்டும், பிள்ளைகள் பாடசாலைக்கு போக வசதியான இடத்தில் வீடு எடுக்கவேண்டும். இந்த இரண்டும் விரைவாக செய்யவேண்டும். அப்ப தான் நாம் எதிர்பார்க்கும் நிம்மதி மீண்டும் வரும்?  
 
 
"மகிழ்ச்சி உண்டேல்  சிறு நிகழ்வுமே 
மகிமை ஆகி இன்பம் தருமே!
மனதில் நிம்மதி இல்லை என்றால் 
மணம் வீசும் ரோசாவும் வெறுக்குமே!"  
 
 
எங்கள் படிப்பு, அனுபவம் எல்லாம் எங்கள் நாட்டில் என்பதால், நான் சென்ற நேர்முகப் பரீடசையில் வெற்றி கிடைக்கவில்லை. எல்லோரும் இங்கு ஒரு அதிகாரபூர்வமான ஒரு பயிற்சிநெறி கற்று, மீண்டும் வேலைக்கு மனு போடுவது நல்லது என்றனர். இதற்கு ஒன்றில் இருந்து குறைந்தது மூன்று ஆண்டுகள் ஆகலாம்? அது மட்டும் குடும்பத்தை ஓரளவு நல்ல நிலையில் வைத்திருப்பது இயலாதகாரியமாக இருந்தது. எனவே நான் அதை கைவிட்டு, ஓரளவு நல்ல சம்பளம் உள்ள மாற்று வேலைகளுக்கு முயற்சி செய்தேன். அது உடனடியாக, பல கடைகளை நடத்தும் நிறுவனம் ஒன்றில் பொது மேலாளராக பதவி பெற்றேன். தொடக்கத்தில் பயிற்சி மேலாளராக , எனக்கு ஆறு மாத பயிற்சியும் அதனுடன் சம்பந்தபட்ட பாடமும் போதித்தார்கள். சம்பளம் - வீடு வாங்க, குடும்பத்தை நடத்த, மற்ற முக்கிய அன்றாட செலவுகளுக்கும் போதுமாக, கொஞ்சம் சேமிக்கக் கூடியதாகவும்  இருந்தது. ஆனால் அப்பவும் நிம்மதி வரவில்லை. காரணம் கையில் கிடைத்த வாழ்வை மகிழ்வாக கொண்டு செல்லாமல், ' நீங்க என்ன இலங்கையில் படித்தீர்கள் ? என்ன வேலை செய்தீர்கள் ?, ஒன்றும் இங்கு சரிவரவில்லையே? உங்களை நம்பி நானும் திருமணம் செய்தேனே?' என்று மனைவி நச்சரிக்க தொடங்கியதே!   
 
 
"அடுத்தவர் பற்றி எண்ண நினைத்தால்  
அழகான வாழ்வும் அமைதி குலையுமே!
அடுப்பு ஊதி நெருப்பு கொழுத்த 
அக்கம் பக்கம் பலர் உண்டே!"
 
 
மனைவி தமிழ் பாடசாலை, ஆலயம் என இங்கு போகத் தொடங்க, மற்ற  பெண் கூட்டாளிகளுடன் பழகத் தொடங்க, அவர்களின் நிலைகளுடன் எம்மை ஒப்பிட தொடங்கி விட்டார். ஆனால், அவர்கள் எப்ப இந்த நாட்டுக்கு வந்தவர்கள், என்ன படிப்பு இங்கு வந்து படித்தவர்கள், எப்படி பணம் சேர்க்கிறார்கள் / உழைக்கிறார்கள் .. இவை போன்றவற்றை அவர் கவனத்தில் எடுக்கவில்லை? அவரின் எண்ணம் எல்லாம் நாமும் அவர்கள் போல் இரண்டு மூன்று வீடு வாங்க வேண்டும், ஆளுக்கொரு மோட்டார் வண்டி வைத்திருக்கவேண்டும் .. இப்படி நீண்டு கொண்டே போனது. 
 
 
"இவர்கள் போல வாழ கலங்காதே 
இருப்பதை வைத்து உயரப் பார்!
இன்பம் எல்லாம் உன்னில் தான் 
இருந்த நிம்மதியையும் விலக்கி விடாதே!"
 
 
பாடசாலையில் பிள்ளைகள் மிகவும் திறமையாக படிப்பிலும் விளையாட்டிலும் மற்றும்  கூடுதல் பாடத்திட்ட நடவடிக்கைகளிலும் முன்னுக்கு நின்றார்கள். அது எனக்கு உண்மையில் நிம்மதி தந்தது. அது மட்டும் அல்ல, அவர்களுக்கு படிப்பிற்க்கான எல்லா வசதிகளும் குறைவின்றி நான் கொடுக்கக் கூடியதாகவும் இருந்தது. இதை விட என்ன வேண்டும்.? சொந்த வீடு, சொந்த மோட்டார் வண்டி,  இப்படி தேவைக்கு அளவாக எல்லாம் உண்டு. ஆனால் ஆடம்பரம் இல்லை. எனக்கு அதில் கவலையும் இல்லை 
 
 
"நிம்மதி தேடுவதை சற்று நிறுத்தினேன் 
நிமிர்ந்து என்னைக்  கொஞ்சம் பார்த்தேன்!
நில்லாமல் உழைத்த வேர்வையை கண்டேன் 
நிம்மதி கொண்டு பெருமை கொண்டேன்!" 
 
 
குடும்பம் என்பது இருவரும் ஒருவரை ஒருவர் அனுசரித்து மகிழ்வாக போவதே!. அதைத்தான் நான் இப்ப தொலைத்துவிட்டேன்!  மற்றும் படி ஒரு பிரச்சனையும் இல்லை. குண்டு ஷெல் இங்கு இல்லை. ஆனால் வாயால் செயல்களால் வரும் இந்து குண்டுகள், ஷெல்களில் இருந்து தப்ப பலவேளை நிம்மதியைத் தேடுகிறேன்! அது என் வாழ்நாள் வரை தொடரும்! ஒருவேளை அதை அவள் உணர்ந்தால், நிலைமை மாறலாம்? அப்படி வந்தால், மீண்டு என் கதையை உங்களுடன் தொடர்கிறேன் ! 
 
 
"எனக் கென யாரு மில்லை
என்று நிம்மதி இழக்கும் போது
உனக்காக என்றும் நான் என 
மனதார கூறும் உறவு வரமே!"
 
 
அப்படி அவள் கட்டாயம் வருவாள் என்ற நம்பிக்கையுடன் தான் என் கதையை இத்துடன் தற்காலிகமாக முடிக்கிறேன்!  இது அவளில் சூழ்நிலையால் ஏற்பட்ட சிறு மாற்றமே!! ஆனால் என்றுமே அவளின்  அன்பு, பாசம் என் மேலோ, பிள்ளைகள் மேலோ என்றும் குறையவில்லை, ஆக இப்படி - நான் அல்ல - நாமும்  வாழவேண்டும் என்ற ஆசை! அவ்வளவுதான் !! 
 
 
"தேடினது கிடைக்காதோ என்ற ஆசை
ஆசை நிறைவேறாதோ என்ற எதிர்பார்ப்பு
எதிர்பார்ப்பு சற்று தந்த ஏமாற்றம்
ஏமாற்றம் தந்த மன வலி
வலியை சுமந்தபடி வாழுற மனசு 
இதுலே எங்க இருந்து இனி 
நிம்மதி வரப் போகுதோ நானறியேன்!"
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்] 
May be an illustration of 1 person  May be an image of 4 people, child, people sitting, people standing and indoor  சுஹைதாவின் பகிர்வுத்தளம்: 2012 312611511_10221875538500394_5824855494569408837_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=100&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=zgfKfQ021ywAb7YVdUf&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfC_gXxtTTKlnBe3Cj2LDtV2PPhWIJBxDpikGbrYWcLKfQ&oe=6631694E
 
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கை என்பது அவ்வளவு இலகுவானதல்ல. நாங்கள் இருவர் தான். எந்த மூன்றாவது நபருடைய உட்புகுதலும் கருத்துக்களும் வாழ்வை திரிபு படுத்திவிடும். அடுத்த வீட்டை பார்த்து எப்பொழுது நாம் எம் வாழ்வை அமைத்துக் கொள்ள முயல்கிறோமோ அத்துடன் எம் வாழ்வு கலைந்து விடும். அவனவன் கவலைகளை அவரவர் தலையணைகளே அறியும். நன்றி. 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றி, உங்கள் ஆழமான கருத்துக்கு 

"அறை வாங்கினேன் மறு கன்னத்திலும்
ஏசுவே இனி என்ன செய்ய?


குறை கூறும் சமூகத்தில் இருக்கும் வரை 
ஏசுவே இனி என்ன செய்ய?


கறை பிடித்த வம்பு பேசு பவர்களால் 
ஏசுவே  நிம்மதி இழந்தாளே என்னவள்?


சிறை வாழ்வு கொண்டு நான் இங்கு 
ஏசுவே நிம்மதியைத் தேடுகிறேன்?" 
  

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து." அது கிடைக்கவில்லையே என ஏங்குவதை விட்டு எத்தனையோ பேருக்கு கிடைக்காத இந்த சுகம் எனக்கு கிடைத்திருக்கிறதே என  இருப்பதைநினைத்து மகிழ்வடைந்தால் எல்லாமே நிறைவாகும். "உனக்கு கீழே இருப்பவர் கோடி நினைத்துப்பார்த்து நிம்மதி தேடு."

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஸ்லோவாக்கியா பிரதமரை துப்பாக்கியால் சுட்டது யார்? - என்ன நடந்தது? பட மூலாதாரம்,GETTY IMAGES 15 மே 2024 புதுப்பிக்கப்பட்டது 50 நிமிடங்களுக்கு முன்னர் ஸ்லோவாக்கியாவின் பிரதமர் ராபர்ட் ஃபிகோ மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. என்ன நடந்தது? உள்ளூர் செய்தி தொலைக்காட்சி நிறுவனமான TA3 வெளியிட்டுள்ள செய்தியின்படி, "ஸ்லோவாக்கியாவின் தலைநகரான பிராட்டிஸ்லாவாவிலிருந்து வட கிழக்கே 180 கிமீ தொலைவில் உள்ள ஹன்ட்லோவா நகரில் இந்த துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. ஹன்ட்லோவா நகரில் உள்ள கலாசார சமூக மையத்தில் நடந்த அரசு நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் ராபர்ட் அங்கிருந்து கிளம்புவதற்காக வெளியே வந்தபோது மீது துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. இதை ஸ்லோவாக்கியாவின் உள்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளரும் உறுதிப்படுத்தியுள்ளார். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,ஸ்லோவாக்கியா பிரதமர் சுடப்பட்ட இடம் அந்நாட்டு ஊடகங்களிடம் பேசிய சாட்சிகள், "துப்பாக்கி சூட்டுக்கு பிறகு பிரதமர் தரையில் வீழ்ந்ததாகவும், பாதுகாவலர்கள் அவரை காரில் ஏற்றி உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்" என்றும் தெரிவித்துள்ளனர். பின்னர், ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,ராபர்ட் ஃபிகோ படக்குறிப்பு,பான்ஸ்கா பைஸ்ட்ரிகா நகரில் உள்ள மருத்துவமனைக்கு பிரதமர் ராபர்ட் ஃபிகோ கொண்டுவரப்பட்ட காட்சி உயிருக்கு ஆபத்தான நிலையில் பிரதமர்? பிரதமரின் கை, கால் மற்றும் வயிற்றுப்பகுதியில் குண்டுகள் பாய்ந்துள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன. பிபிசியால் அதை தனிப்பட்ட முறையில் உறுதி செய்யமுடியவில்லை. இந்த சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் பிபிசியிடம் பேசுகையில், "நான் பிரதமரின் கைகளைக் குலுக்க சென்ற போது மூன்று குண்டுகள் சுடப்பட்ட சத்தத்தை கேட்டேன். பின் பிரதமரின் தலையில் ஒரு கீறலையும் பார்த்தேன்" என்றார். பிரதமர் படுகொலை செய்ய முயற்சிகள் நடந்திருப்பதாக ஸ்லோவாக்கியா உள்துறையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஆனால், பிரதமரின் உடல்நிலை குறித்து எந்த தகவலையும் அவர் குறிப்பிடவில்லை. பிரதமரின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், “பிரதமர் பல முறை சுடப்பட்டார், அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார். அவர் ஹெலிகாப்டர் மூலமாக பான்ஸ்கா பைஸ்ட்ரிகா நகருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,2018 இல் புலனாய்வுப் பத்திரிகையாளரான ஜான் குசியாக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஃபிகோ பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. யார் இந்த ராபர்ட் ஃபிகோ? கடந்த செப்டம்பரில் நடந்த தேர்தலுக்குப் பிறகு ஸ்லோவாக்கியாவின் பிரதமராக மீண்டும் ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்டார் ராபர்ட் ஃபிகோ. இடதுசாரி ஸ்மெர்-எஸ்எஸ்டி கட்சிக்கு தலைமை தாங்கி வரும் ராபர்ட், கடந்த செப்டம்பரில் நடந்த தேர்தலில், ரஷ்யாவுக்கு எதிரான போரில் யுக்ரேனுக்கான போர் உதவிகளை நிறுத்துவதாக உறுதிமொழி கொடுத்திருந்தார். அதே சமயம் தான் ஒரு ரஷ்ய சார்பற்றவன் என்பதையும் அவர் தெரிவித்துக் கொண்டார். 2018 இல் புலனாய்வுப் பத்திரிகையாளரான ஜான் குசியாக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஃபிகோ பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. "தங்களது கட்சி ஆட்சிக்கு வந்தால், யுக்ரேனுக்கு ஒரு சுற்று வெடிமருந்துகளை கூட அனுப்பமாட்டோம்” என்று தேர்தல் பரப்புரையின் போது ராபர்ட் உறுதியளித்தார். . ரஷ்யா மீதான மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை எதிர்ப்பதாக அவர் அளித்த உறுதிமொழியும், சிலரிடம் வரவேற்பை பெற்றது. இவரையும், ஹங்கேரியின் வலதுசாரி பிரதமரான விக்டர் ஓர்பனையும் ஒப்பிட்டு ஐரோப்பிய அரசியல் அரங்கில் விவாதங்கள் நடந்தன. ஒருவர் கைது ஸ்லோவாக்கியா பிரதமர் சுடப்பட்டது தொடர்பாக சம்பவ இடத்தில் ஒரு நபர் காவலர்களால் கைது செய்யப்பட்டார். அவர் யார்?, அவர்தான் பிரதமரை துப்பாக்கியால் சுட்டாரா? பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட என்ன காரணம்? என்பன போன்ற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,பிரதமர் மீது தாக்குதல் நடத்தியதாக ஒருவரை கைது செய்துள்ளனர் காவல்துறையினர்.   பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு,ஸ்லோவாக்கியா பிரதமர் மீதான தாக்குதலை உலகத் தலைவர்கள் கண்டித்துள்ளனர். உலகத் தலைவர்கள் கண்டனம் ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் மீதான தாக்குதலை உலக தலைவர்கள் பலரும் கண்டித்துள்ளனர். ஸ்லோவாக்கியா அதிபர் சுசானா கேப்புட்டவா, இந்த தாக்குதலை மிருகத்தனமானது மற்றும் இரக்கமற்றது என விமர்சித்துள்ளார். “நான் இந்த தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். இந்த மோசமான சூழ்நிலையில், தாக்குதலில் இருந்து மீண்டு வர ராபர்ட் ஃபிகோவுக்கு கூடுதல் வலிமை கிடைக்க வேண்டுகிறேன்” என்று அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், ஃபிகோ மீதான இந்த மோசமான தாக்குதலை தான் கண்டிப்பதாக கூறியுள்ளார். ருமேனிய பிரதமர் மார்செல் சியோலாகு, துப்பாக்கிச் சூடு பற்றிய செய்தியைக் கேட்டு தான் "ஆழ்ந்த அதிர்ச்சியில்" இருப்பதாககூறியுள்ளார். செக். குடியரசு நாட்டின் பிரதமர் பீட்டர் ஃபியாலா, இந்த சம்பவம் "அதிர்ச்சியூட்டுவதாகவும்”, ஃபிகோ விரைவில் குணமடைய விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பன் கூறுகையில், "எனது நண்பரான பிரதமர் ராபர்ட் ஃபிகோவுக்கு எதிரான இந்த கொடூரமான தாக்குதலால் நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்" என்று கூறியுள்ளார். இங்கிலாந்து பிரதமரான ரிஷி சுனக் தனது எக்ஸ் பக்கத்தில், “இந்த பயங்கரமான தாக்குதல் சம்பவத்தை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளேன். நாங்கள் அனைவரும் ஃபிகோ மற்றும் அவரது குடும்பத்தாரையே நினைத்துக் கொண்டிருக்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஸ்லோவாக்கியா பிரதமர் மீதான தாக்குதலை கண்டித்துள்ளார் யுக்ரேனிய அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி யுக்ரேன் அதிபர் கண்டனம் யுக்ரேன் அதிபர் வோலோதிமிர் ஜெலென்ஸ்கி இந்த தாக்குதலை பயங்கரமானது என்று கூறியுள்ளார். எந்த ஒரு நாட்டிலும், எந்த வடிவத்திலும் வன்முறைக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். நேட்டோ தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், தங்களது சிந்தனை முழுவதும் ராபர்ட் ஃபிகோ மற்றும் அவரது அன்புக்குரியவர்கள், ஸ்லோவாக்கியாவின் மக்களோடு இருப்பதாக தெரிவித்துள்ளார். https://www.bbc.com/tamil/articles/c9rzrlekkn1o
    • தங்கள் உறவுகளை நினைவேந்தும் உரிமை மக்களுக்கு உண்டு. அதைச் சட்டத்தாலும் மறுக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன்(Charles Nirmalanathan) மற்றும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்(Mano Ganesan ) ஆகிய இருவரிடமும் தொடர்பு கொண்டு பேசிய போதே இதனை கூறியுள்ளார். மேலும், ‘‘திருகோணமலை, மூதூர் - சம்பூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறியமைக்காகக் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்கள் விரைவில் பிணையில் விடுவிக்க வழி செய்யப்படுவார்கள். பொலிஸ் கெடுபிடி அது தொடர்பாக பொதுப் பாதுகாப்பு அமைக்க டிரான் அலஸ் உரிய தரப்புகளுக்கு வழிகாட்டல் விடுத்திருக்கின்றார்.” என்றும் இந்த உரையாடல்களின்போது ஜனாதிபதியால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மனோ கணேசன் எம்.பி. நேற்று (15) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ‘‘கிழக்கில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் பொலிஸ் கெடுபிடி, அராஜகம் குறித்து விசனத்துடன் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதை விவரமாகச் செவிமடுக்க முன்னரே, இவ்விடயம் குறித்து சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி. தன்னுடன் தொடர்பு கொண்டு பேசினார் என்றும், சம்பூரில் கைதானோரைப் பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மனோ கணேசனுக்குத் தெரிவித்துள்ளார். "உயிரிழந்தவர்களுக்காக உறவுகள் நினைவேந்தல் செய்வது அந்த உறவுகள் ஒவ்வொருவரினதும் உரிமை. அதை ஏன் தடை செய்யப் பொலிஸார் முனைகின்றனர் என்பது எனக்கு விளங்கவில்லை." என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார். மனோ கணேசன் எம்.பி. வலியுறுத்து “இது தொடர்பில் அரசுத் தலைவராக நீங்கள் ஒரு கொள்கை ரீதியான முடிவு எடுத்து, அதைப் பகிரங்கமாக அறிவித்துப் பொலிஸாருக்கும் நாட்டுக்கும் தெளிவான வழிகாட்டுதலை வழங்க வேண்டும்.   அதற்கான காலம் இதுதான். 'தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் அல்லது அமைப்புடன் தொடர்பு படுத்தாமல் தங்கள் உறவுகளை நினைவேந்த அனைத்து மக்களுக்கும் உரிமையுண்டு. அதை அங்கீகரிக்கின்றோம். அதைத் தடுக்க முடியாது. தடுக்கக் கூடாது. என்ற கொள்கைப் பிரகடனத்தை நீங்கள் தெளிவாக வெளிப்படுத்த வேண்டும்.''  என்று ஜனாதிபதியிடம் இதன்போது மனோ கணேசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார். ஒவ்வொருவருக்கும் மறைந்த தங்கள் உறவுகளை நினைவேந்த உரிமையுண்டு என ஏற்கனவே தாம் ஜனாதிபதி பதவிக்கு வந்த உடனேயே ரணில் விக்ரமசிங்க அறிவித்திருந்தார். எனினும் அவரின் கீழே இயங்கும் பொலிஸ் கட்டமைப்பு வேறு நிகழ்ச்சி நிரலில் விடயங்களைக் கையாள்வது இப்போது நிரூபணமாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/mullivaikkal-remembrance-ranil-speech-1715819542
    • இது ரணிலை விழுத்தவென்றே யாரோ செய்த சதி. ரணில் தான் தமிழர்களிள் நண்பனாச்சே.
    • ஒரு ஜென்ட்ரல் நொலேட்ஜ்ஜுக்காக: எங்கண்ட ஜூயிஸ் பீப்பிளும் போர்க், ஹம் ஒண்டும் சாப்பிட்றேல்ல!
    • தமிழ் மக்கள் சிங்களவர்களோடு இணங்கி, அனுசரித்துப் போய், பொருளாதாரத்தையும், வாழ்க்கைத்தரத்தையும் மேம்படுத்த ரணிலுடன் சமரசம் பேச எத்தனிக்கும்போது இப்படி முள்ளிவாய்க்கால்க் கஞ்சி என்று காய்ச்சி எங்களின் எண்ணத்தில் நெருப்பை அள்ளிக் கொட்டுவது தகுமா?  இந்த நவடிக்கைகளை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இது எனது இணக்க அரசியலுக்குக் கடுமையான சேததைத்தை விளைவிக்கிறது.  ரணில் மாத்தையாட்ட ஜயவேவா !!! ஒஹொம யங், ஒஹொம யங் !!!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.