Jump to content

"நன்றியுள்ள நண்பன்" [நாய்]


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
"நன்றியுள்ள நண்பன்" [நாய்]
 
 
பூனையும் நாயும் வளர்ப்புப் பிராணிகளில் முன்னணி வகித்தாலும், தான் கக்கியதையே திரும்பவும் உணவாகக் கொள்ளும் நாயின் மேல் எனக்கு ஒரு அருவருப்பு எப்பவும். அது. மட்டும் அல்ல, ஒரு துண்டு பிஸ்கட் போட்டால் போதும். வாலை ஆட்டி, நம்முடன் வரும்  அதே நாய், வெறி பிடித்து விட்டால், பிஸ்கட் போடுபவனையே கடித்து குதறியதும் கேள்விப்பட்டுள்ளேன். அதனாலோ என்னவோ நான், நாய் வளர்ப்பதை எங்கள் வீட்டில் தடுத்துவிட்டேன். என்றாலும் பக்கத்து வீட்டில் நல்ல அழகான நாய் வளர்ந்து வந்தது. நான் வேலைக்கு போகும் பொழுது அல்லது திரும்பி வரும் பொழுது, அந்த வீட்டு அம்மா, தன் செல்ல நாயுடன் படலையில் பிராக்கு பார்த்துக்கொண்டு நிற்பார். என்னை கண்டால் தம்பி, எப்படி சுகம் என்று விசாரிப்பது வழக்கம். அப்பொழுது அந்த அவர்களின் நாய் என்னைச்  சுற்றி துள்ளி குதிக்கும். நான் அதை பெரிதாக பொருட்படுத்துவதில்லை. 
   
'நன்றியுள்ள உயிர்களெல்லாம் பிள்ளை தானடா, நன்றி கெட்ட மகனை விட, நாய்கள் மேலடா' 
 
நான் பக்கத்து வீட்டை கடந்து போகும் போதும் வரும் போதும் , அந்த அவர்களின் நாய், வால் ஆட்டிக்கொண்டு என் காலடிக்கு வரும். ஆனால் நான் கெதியாக நடந்து அதை கடந்து போய்விடுவேன்,  ஆனால், பக்கத்து வீட்டு அம்மா அதை பார்த்து சிரிப்பார். ஏ தம்பி,   ‘யாவரினுங் கடையனாய நாயினேன் ஆதலையும் நோக்கிக் கண்டு’ என்று மக்களைக் காட்டிலும் விலங்கு இழிபிறப்புடையது; விலங்கில் மிக இழிந்தது நாய். நாய் போன்ற இழி பிறப்புடையவன் யான் என்று மாணிக்கவாசகர் ஆண்டவனிடம் கூறியது தெரியாதோ என்று கேட்டார். நான் அதற்கு “நாற்பது வயதில் நாய் குணம்“ தானே? ஒருவேளை அவருக்கு நாற்பது வயதோ ? என்று கூறிவிட்டு சென்றுவிட்டேன்
 
எம் வீடு மலை நாட்டில் இருந்ததால், எங்கள் வீட்டிற்குப் பின்னால் ஒரு சிற்றோடை ஒன்று இருந்தது. இது ஒரு சிறிய அளவில் நீர் வடிந்து செல்லும் படுகை ஆகும். இது ஆற்றை விடச் சிறியது என்றாலும், தாராளமாக அதில் நீந்தக் கூடிய அளவு நீர் ஓடிக் கொண்டு இருக்கும். எனவே நான் தினம் அதில் நீந்துவது வழமை. இந்த சிற்றோடை அருகில் இருக்கும் ஆற்றிலிருந்து பிரிந்து வருகிறது. நீர் பெரிய தாழம் இல்லை, ஆனால் விரைவாக ஓடுகிறது.  அது எமது வீட்டை  தாண்டி, கீழ்நோக்கி ஓடி, ஒரு முக்கால் மைல் தூரத்தின் பின்  ஒரு நீர்வீழ்ச்சி மீது விழுகிறது. நான் அப்படி தினம் நீந்தும் பொழுது, எனோ, அந்த பக்கத்து வீட்டு நாயும் வந்துவிடும். நான் கல் எறிந்து துரத்தினாலும், அது ஒரு குறிப்பிட்ட தூரத்தில் என்னை பார்த்த படியே இருக்கும். நானும் அதை பின் கவனிக்காமல் விட்டு விட்டேன்   
 
ஒரு கோடை காலத்தில், அன்று நான் அரை நேரத்தில் வேலையில் இருந்து திரும்பியதால், வழமைக்கு முதலே நான் நீந்த ஓடைக்கு போனேன். கையில் ஒரு கல்லுடன். நீருக்குள் போகுமுன் சுற்றிப்பார்த்தேன், அந்த பக்கத்து வீட்டு நாயை காணவில்லை. ஒருவேளை நான் இன்று முந்தி வந்ததால், கவனிக்கவில்லையோ என்று சிந்தித்தபடி, கல்லை எறிந்துவிட்டு , நீரில் குதித்தேன்.  
 
அன்று தண்ணீர் மிகவும் நன்றாகவும் குளிர்ச்சியாகவும் இருந்தது. ஆனால் வழமையை விட அதி வேகத்துடன் ஓடிக்கொண்டு இருந்தது. ஆகவே என்னை கீழே போகும் நீர் இழுத்து போக கொஞ்ச நேரம் விட்டுவிட்டு, பின், மேல் நோக்கி, ஓடைக்கு எதிராக நீந்தி பொழுதைக் கழித்தேன். அது மிகவும் சுவாரசியமாகவும் பரபரப்பாகவும் இருந்தது. ஆனால், நேரம் போகப் போக திரும்பி, ஓடைக்கு எதிராக நீந்துவது கடினம் கடினமாக களைப்பினால் வரத் தொடங்கியது.
 
இனி இப்படி நான் நீந்துவதை நிறுத்தவேண்டும் என்று யோசிக்கும் பொழுது தான் , நான் உணர்ந்தேன் , நான் ஏற்கனவே கீழ் நோக்கி பலதூரம் போய்விட்டேன் என்று. என்னால்  நீர் அருவியின் மீது, நீர் பாயும் சத்தமும் கேட்கக் கூடியதாகவும் இருந்தது. நான் உடனடியாக மேல்நோக்கி நீந்த முற்சித்தேன். ஆனால் என் உடல் அதற்கு இடம் அளிக்கவில்லை. அப்பத்தான் என் தனிமை, வரப்போகும் பயங்கரம் எல்லாம் என் கண்முன் நிழலாக வந்தன. அந்த நேரம் என் கண்ணின் ஒரு கோணத்தில், அந்த பக்கத்து வீட்டு நாய் ஓடையின் கரையில் மிகவும் வேகமாக கீழ் நோக்கி ஓடுவதைக் கண்டேன். அது என்னை கடந்து போனபின், நீரில் குதித்து, நடுப்பகுதியில் தன்னை மிதக்க வைத்துக்கொண்டு என்னையே விடாமல் பார்த்துக் கொண்டு காத்து நின்றது. எனக்கு ஒன்றும் புரியவில்லை . ஒரு வேளை நான் கல்லால் எறிவானோ என்று அப்படி நிற்கிறதோ என்று எண்ணினேன். என் உடலில் பலம் இப்ப இல்லை. என்ன செய்வது என்று புரியவில்லை, ஓடை நீர் என்னை வாரி அள்ளிக் கொண்டு போக தொடங்கி விட்டது. நான் அந்த பக்கத்து வீட்டு நாயை கடந்ததும் , அந்த ஆழமான நீர் வீழ்ச்சியில் விழப் போகிறேன். அது என் முடிவு என்று எண்ணி கண்ணை இருக்க மூடிவிடடேன், 
 
என்றாலும் சற்று நேரத்தின் பின் கண் திறந்து பார்த்தேன். என்ன ஆச்சரியம் !  நான் நீர் ஓட்டத்துடன் நாய்க்கு கிட்ட கிட்ட வர, அந்த நாயும் தன்னை என்னைத் தடுக்கக் கூடியதாக சரிப்படுத்திக் கொண்டு இருந்தது . அப்ப தான் அந்த நாயின் திட் டம் எனக்குப் புரிந்தது. நான்  அதற்கு கிட்ட போனதும் அதன் நீண்ட உரோமத்தை இருக்க பிடித்துக் கொண்டேன் அது உடனடியாக குறுக்கே நீந்தி கரையை அடைந்தது. 
 
நானும் பக்கத்து வீட்டு நாயும் கரையை அடைந்ததும், ஓடையில் இருந்து வெளியே வந்து, அந்த கரையிலேயே களைப்பினால் படுத்துவிட்டேன். ஆனால் அந்த நாயோ , அப்படியே என்னை விட்டுவிட்டு ஒரே பாச்சலில் பாய்ந்து எங்கள் வீட்டு பக்கத்தை நோக்கி, மலையில் ஏறி ஓடத்தொடங்கி விட்டது. நான் தனிய அந்த களைப்புடன், படுத்து இருப்பது கொஞ்சம் பயமாக இருந்தது. அதை கூப்பிடுவோம் என்றால், அதன் பெயர் கூட எனக்குத் தெரியாது. பக்கத்து வீட்டு அம்மா தன் மகளின் செல்லப் பிராணி என்றும் , அதை அவள் எதோ ஒன்று சொல்லி கூப்பிடுவதாக சொன்ன ஞாபகம். அந்த பெயர் என் மனதில் வரவே இல்லை. ஆகவே நான் மீண்டும் மணலில் படுத்தேவிட்டேன்.
 
பிறகு என்ன நடந்தது என்று எனக்கு ஒன்றும் தெரியாது. நான் கண் விழிக்கும் பொழுது முதல் உதவியாளர்கள், அந்த பக்கத்து வீட்டு நாய், அந்த அம்மாவின் மகள் எல்லோரும் என்னை சுற்றி தேவையான உதவிகள் செய்து கொண்டு நிற்பதைக் கண்டேன். எனக்கும் ஓரளவு தெம்பு வந்துவிட்டது. அந்த நாய் நான் முழித்ததை கண்டதும் வாலை ஆடிக்கொண்டு பக்கத்தில் வந்து காலை நக்கியது. நான் இப்ப அருவருப்பு அடையவில்லை, கல்லால் எறியவும் இல்லை, அதை அணைத்தபடி, பக்கத்து வீட்டு அம்மாவின் மகளை பார்த்தேன். என்னால் நம்பவே முடியவில்லை. அத்தனை கொள்ளை அழகு. அவள் மெல்லிய புன்னகை சிந்தியபடி, நான் எழும்ப கை நீட்டினாள்! அன்று அவளின் கை பிடித்தவன் தான், இன்று அதை நிரந்தரமாகி விட்டேன் . இப்ப என் தனிக் குடும்பத்தில், நானும், அவளும் அந்த நாயும் தான்!  ஒன்று சொல்ல மறந்து விட்டேன், அந்த நாயின் பெயர் பப்பு , அவளின் பெயர் ஜெயா 
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்] 
316310443_10222050110584587_5801060104720890890_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=105&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=prKcuFFUKJwQ7kNvgFWyevz&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfACPG9LDjkuTC44nMd09Bb_s5x-zsQZkDehC7GNoDiteg&oe=66381263 316408537_10222050113344656_28371569523450419_n.jpg?stp=dst-jpg_p403x403&_nc_cat=105&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=lKgTm3knbCoQ7kNvgEfIqL8&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfDfYwpX9oZ18qfH3qUyUmvdulCuGK-Oy3d14JfAYXr0rw&oe=66380E01 316127437_10222050113624663_6561447728753640837_n.jpg?_nc_cat=107&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=l3JoTuyJcucQ7kNvgGKOlHM&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfDp691CwO4ydd58wppke1CklCSDg0gNFE5rxX23RsuhZg&oe=663802EE
 
 
 
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, kandiah Thillaivinayagalingam said:

அந்த நாய் நான் முழித்ததை கண்டதும் வாலை ஆடிக்கொண்டு பக்கத்தில் வந்து காலை நக்கியது. நான் இப்ப அருவருப்பு அடையவில்லை, கல்லால் எறியவும் இல்லை, அதை அணைத்தபடி, பக்கத்து வீட்டு அம்மாவின் மகளை பார்த்தேன். என்னால் நம்பவே முடியவில்லை

ரொம்பவும் குற்ற உணர்ச்சியாக இருந்திருக்குமே?

பப்பு இல்லா விட்டால் தில்லையே இல்லை.

எத்தனை தடவை நாய்கள் எத்தனையோ பேரின் உயிர்களை அதுவும் குழந்தைகளை காப்பாற்றுவதை காணொளிகளில் கண்டுள்ளேன்.

ஆனாலும் நீங்க பலே கில்லாடி.

ஒரு கல்லில் இரண்டு மாங்காய்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ஆற்றில் மூழ்கப்போவது மட்டுமன்றி எதிர்காலத்தில் தனது எஜமானன் ஆகப்போகின்றீர்கள் என்பதும் அந்த ஜீவனுக்குத் தெரிந்ததுதான் விந்தை......!  😂

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 18 MAY, 2024 | 04:07 PM   கிழக்கு பல்கலைகழக மாணவர்கள்  உருவாக்கியிருந்த தற்காலிக நினைவகத்தை பொலிஸார் அழித்தமை குறித்து இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் கண்டனம் வெளியிட்டுள்ளார். குறிப்பிட்ட காவல்துறை உத்தியோகத்தர் வெளிப்படுத்திய வன்முறை அவமரியாதை தற்காலிக நினைவகத்தை தண்டனை குறித்த அச்சமின்றி அவர் அழிப்பது போன்றவை கவனத்தை ஈர்த்துள்ளன என அவர் தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்க அவர்களே உங்கள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும்  பொலிஸ்மா அதிபரும் சட்டம் மற்றும் அரசியல் அமைப்பை மீறுகின்றனர் இதற்கு உங்கள் பதில் என்ன? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். https://www.virakesari.lk/article/183882
    • சென்னைக்கும் பெங்களூருக்கும் இடையிலான தீர்மானம் மிக்க போட்டி தோனியின் பிரியாவிடை போட்டியாகவும் இது அமையலாம்! 18 MAY, 2024 | 03:36 PM   (நெவில் அன்தனி) சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையிலான தீர்மானம் மிக்க இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டி இன்று (18) இரவு பெங்களூரு எம். சின்னஸ்வாமி விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (19 புள்ளிகள்) ராஜஸ்தான் றோயல்ஸ் (16 புள்ளிகள்), சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (15 புள்ளிகள்) ஆகிய 3 அணிகள் ப்ளே ஓவ் சுற்றில் விளையாடுவதை ஏற்கனவே உறுதி செய்துகொண்டுள்ளன. இந் நிலையில் ப்ளே ஓவ் சுற்று தகுதியைப் பெறப் போகும் நான்காவது அணி எது என்பதைத் தீர்மானிக்கும் போட்டியிலேயே சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஒன்றையொன்று எதிர்த்தாடவுள்ளன. இரண்டு அணிகளுக்கும் இடையிலான இன்றைய போட்டி, சீரான காலநிலை நிலவும் பட்சத்தில் இந்த வருடத்திற்கான அதிசிறந்த போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ப்ளே ஓவ் சுற்றுக்கு செல்ல இன்னும் ஒரே ஒரு புள்ளியே சென்னைக்கு தேவைப்படுகிறது. இந்தப் போட்டி ஒருவேளை மழையினால் கைவிடப்பட்டால் ப்ளே ஓவ் சுற்றுக்குள் நான்காவது அணியாக சென்னை நுழையும். றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியைப் பொறுத்தமட்டில் மிகப் பெரிய வெற்றியை ஈட்டினால் மாத்திரமே ப்ளே ஒவ் வாய்ப்பை பெற முடியும். உதாரணத்திற்கு வெற்றி இலக்கு 200 ஓட்டங்களாக இருந்தால் பெங்களூர் 2 18 ஓட்டங்களால் வெற்றிபெறவேண்டும். பதிலளித்து துடுப்பெடுத்தாடினால் 18.1 ஓவர்களுக்குள் வெற்றிபெற வேண்டும். இந்த இரண்டு அணிகளுக்கும் இடையில் அண்மைக் காலங்களில் நடைபெற்ற போட்டிகள் சென்னை சுப்பர் கிங்ஸுக்கு சாதகமாகவே இருந்துள்ளது. கடந்த 5 போட்டிகளில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு ஒரே ஒரு தடவையே சென்னையை வெற்றிகொண்டுள்ளது. ஆனால், இந்தப் போட்டி நொக் அவுட்டுக்கு ஒப்பானதாக இருப்பதால் இரண்டு அணிகளும் ஒன்றையொன்று வீழ்த்த கடுமையாக முயற்சிக்கும். இரண்டு அணிகளினதும் இந்த வருட ஐபிஎல் முடிவுகளைப் பார்க்கும்போது றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு கடந்த 5 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றிபெற்றுள்ளது. சென்னை சுப்பர் கிங்ஸ் கடந்த 5 போட்டிகளில் மேடு பள்ளங்களை சந்தித்து வந்துள்ளது. எவ்வாறாயினும் கடந்த போட்டி முடிவுகளை வைத்து எந்த அணி வெற்றிபெறும் என்பதை அனுமானிக்க முடியாது. இன்றைய போட்டியில் எந்த அணி சகலதுறைகளிலும் சிறப்பாக விளையாடுகின்றதோ அந்த அணிக்கே வெற்றி கிடைக்கும். இது இவ்வாறிருக்க, இன்றைய போட்டியுடன் சென்னை வெளியேறினால் அப் போட்டி 43 வயதை அண்மித்துக்கொண்டிருக்கும் மஹேந்த்ர சிங் தோனிக்கு பிரியாவிடை போட்டியாக அமையும் என கருதகப்படுகிறது. ஆனால், அது நிச்சயம் இல்லை என்ற கருத்தும் நிலவுகிறது. ஒருவேளை இது அவரது கடைசியாகப் போட்டியாக இருந்தால் தோனியும் கோஹ்லியும் ஒருவரை ஒருவர் எதிர்த்தாடும் கடைசிப் போட்டியாகவும் இது அமையும். அணிகள் (பெரும்பாலும்) சென்னை சுப்பர் கிங்ஸ்: ருத்துராஜ் கய்க்வாட் (தலைவர்), ரச்சின் ரவிந்த்ரா, டெரில் மிச்செல் அல்லது அஜின்கியா ரஹானே, ஷிவம் டுபே, ரவிந்த்ர ஜடேஜா, சமீர் ரிஸ்வி, எம்.எஸ். தோனி, மிச்செல் சென்ட்னர், ஷர்துல் தாகூர், மஹீஷ் தீக்ஷன, துஷார் தேஷ்பாண்டே. றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர்: விராத் கோஹ்லி, பவ் டு ப்ளெசிஸ் (தலைவர்), க்ளென் மெக்ஸ்வெல், ரஜாத் பட்டிடார், மஹிபால் லொம்ரோர், கெமரன் க்றீன், தினேஷ் கார்த்திக், யாஷ் தயாள், கரண் ஷர்மா, மொஹமத் சிராஜ், லொக்கி பேர்கசன். https://www.virakesari.lk/article/183877
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • எலுமிச்சை, இஞ்சியின் விலை சடுதியாக உயர்வு! சந்தையில் எலுமிச்சை மற்றும் இஞ்சியின் விலை இன்றைய தினம் (18) சடுதியாக அதிகரித்துள்ளது. இதன்படி ஒரு கிலோகிராம் எலுமிச்சையின் சில்லறை விலை 2,000 ரூபாவை எட்டியுள்ளது. அத்துடன் ஒரு கிலோகிராம் இஞ்சியின் விலை 3,000 ரூபாவைக் கடந்துள்ளதாக சந்தைத் தரவுகள் தெரிவிக்கின்றன. https://thinakkural.lk/article/301947
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.