Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புங்குடுதீவில் ஆரம்பமான மனித எலும்புக்கூடு அகழ்வு பணி!

977309797.jpg

இனியபாரதி.

யாழ்ப்பாணம் - புங்குடுதீவு அரசினர் மருத்துவமனையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட இடங்களில் இன்று வியாழக்கிழமை(02) அகழ்வு பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஊர்காவற்துறை மாவட்ட நீதிபதி நீதிவான் நளினி சுபாகரன் மற்றும் சட்ட மருத்துவ அதிகாரி செ.பிரணவன் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் முன்னிலையில் குறித்த அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

புங்குடுதீவு 10ஆம் வட்டாரத்தில் அரசினர் மருத்துவமனையை அண்மித்த தென்பெருந்துறை சதானந்தசிவன் ஆலயத்தின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் வேளையில் ஆலய சூழலில் கிடங்கொன்றினை வெட்டிய போது மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டது.

அதனை தொடர்ந்தே கிடங்கு வெட்டும் பணிகளை இடைநிறுத்தி அது தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் , அவ்விடத்தினை தமது கட்டுப்பாட்டுக்குள் எடுத்த நிலையில் அவ்விடத்தில் அகழ்வு பணிகளை முன்னெடுக்க, ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் அனுமதி கோரி விண்ணப்பம் செய்தனர்.

அதனடிப்படையில்  இன்று நீதிமன்றத்தின் அனுமதியுடன் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 
 

https://newuthayan.com/article/புங்குடுதீவில்_ஆரம்பமான_மனித_எலும்புக்கூடு_அகழ்வு_பணி!

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரையில் மனித எச்சங்கள் அகழ்வு

Published By: DIGITAL DESK 3   02 MAY, 2024 | 10:37 AM

image

யாழ்ப்பாணம் - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை (02) அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

ஊர்காவற்துறை மாவட்ட நீதிபதி நீதீவான்   நளினி சுபாகரன், சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவன் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் முன்னிலையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

புங்குடுதீவு 10 ஆம் வட்டாரத்தில் அரசினர் வைத்தியசாலையை அண்மித்த பகுதியிலுள்ள தென்பெருந்துறை சதானந்தசிவன் ஆலயத்தின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் வேளையில், ஆலய சூழலில் கிடங்கொன்றினை வெட்டிய போது , மனித எலும்பு கூட்டு எச்சங்கள்  அண்மையில் வெளிவந்தன.

அதனை தொடர்ந்தே கிடங்கு வெட்டும் பணிகளை இடைநிறுத்தி அது தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டதை , அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், அவ்விடத்தினை தமது கட்டுப்பாட்டுக்குள் எடுத்த நிலையில் அவ்விடத்தில் அகழ்வு பணிகளை முன்னெடுக்க, ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் அனுமதி கோரி விண்ணப்பம் செய்தனர்.

அதன் அடிப்படையில்  இன்றையதினம் நீதிமன்றத்தின் அனுமதியுடன் அவ்விடத்தில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படுகிறது.

WhatsApp_Image_2024-05-02_at_10.10.58_AM

WhatsApp_Image_2024-05-02_at_10.10.56_AM

WhatsApp_Image_2024-05-02_at_10.10.55_AM

WhatsApp_Image_2024-05-02_at_10.10.54_AM

https://www.virakesari.lk/article/182459

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். புங்குடுதீவு மனித எச்ச அகழ்வுப் பணிகள் நிறைவுக்கு வந்தது

Published By: DIGITAL DESK 3   02 MAY, 2024 | 02:14 PM

image

யாழ்ப்பாணம் - புங்குடுதீவு கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டமை தொடர்பாக இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட அகழ்வு பணிகள் மதியத்துடன் நிறைவுக்கு வந்தது.

புங்குடுதீவு 10 ஆம் வட்டாரத்தில் அரசினர் வைத்தியசாலையை அண்மித்த பகுதியிலுள்ள தென்பெருந்துறை சதானந்தசிவன் ஆலயத்தின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் வேளையில், ஆலய சூழலில் கிடங்கொன்றினை வெட்டிய போது, மனித எலும்பு கூட்டு எச்சங்கள்  அண்மையில் வெளிவந்தன.

அதனை தொடர்ந்தே கிடங்கு வெட்டும் பணிகளை இடைநிறுத்தி அது தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டதை, அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் , அவ்விடத்தினை தமது கட்டுப்பாட்டுக்குள் எடுத்த நிலையில் அவ்விடத்தில் அகழ்வு பணிகளை முன்னெடுக்க, ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் அனுமதி கோரி விண்ணப்பம் செய்தனர்.

அதன் அடிப்படையில்  இன்றையதினம் நீதிமன்றத்தின் அனுமதியுடன் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் நளினி சுபாகரன், சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவன், தொல்லியல் துறை அதிகாரி மணிமாறன் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள், பொலிஸார், தடயவியல் பொலிஸார் முன்னிலையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

அகழ்வின் போது பெண்ணொருவரினுடையதாக கருதப்படும் எலும்புக் கூடு முழுமையாக மீட்கப்பட்டது. எலும்புக் கூடுடன் செப்பு நாணயங்கள், துணி, அரிசி துகள்கள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதி முன்னைய காலத்தில் மயானமாக இருந்திருக்கலாம் என்றும் குறித்த பெண்ணின் உடல் இந்து முறைப்படி கிரியை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

இந்நிலையில் மீட்கப்பட்ட எலும்புக் கூடு மற்றும் ஏனைய சான்றுப் பொருட்களை பார்வையிட்ட நீதவான் இது தொடர்பான பகுப்பாய்வு பரிசோதனையை நடத்தி அறிக்கையை சமர்ப்பிக்க சட்ட மருத்துவ அதிகாரிக்கு உத்தரவிட்டார்.

இதனையடுத்து அப்பகுதியில் அகழ்வுப் பணிகள்  நிறைவுக்கு வந்ததுடன் மீட்கப்பட்டுள்ள எலும்புக் கூடு மற்றும் சான்றுப் பொருட்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/182482

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத் தெரிந்த வகையில் முதலில் அது ஓர் ஆலயமில்லை. அது ஓர் இந்து துறவியாக சென்று இறந்தவரின் சமாதியாகும். அதனை அதன் உறவினர்கள் வெளிநாடுகளில் இருந்து கோவில் போன்று கட்டுமானங்களை மேற்கொள்கின்றனர்.

முன்னர் அவ்விடத்திற்கு சமீபமாகத்தான் கிறிஸ்தவ மக்களின் இறந்த உடல்களையும் வயதில் குறைந்த இந்துப்பிள்ளைகள் இறந்தாலும் அவர்களின் உடல்களைப் புதைப்பார்கள். அவ்வாறான உடல்களில் ஒன்றாக அவை இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

எனக்குத் தெரிந்த வகையில் முதலில் அது ஓர் ஆலயமில்லை. அது ஓர் இந்து துறவியாக சென்று இறந்தவரின் சமாதியாகும். அதனை அதன் உறவினர்கள் வெளிநாடுகளில் இருந்து கோவில் போன்று கட்டுமானங்களை மேற்கொள்கின்றனர்.

முன்னர் அவ்விடத்திற்கு சமீபமாகத்தான் கிறிஸ்தவ மக்களின் இறந்த உடல்களையும் வயதில் குறைந்த இந்துப்பிள்ளைகள் இறந்தாலும் அவர்களின் உடல்களைப் புதைப்பார்கள். அவ்வாறான உடல்களில் ஒன்றாக அவை இருக்கலாம்.

அமைதியாக உறங்கியவர்களைத் தட்டி எழுப்பிவிட்டனர் என்கிறீர்கள். 

😔

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

அமைதியாக உறங்கியவர்களைத் தட்டி எழுப்பிவிட்டனர் என்கிறீர்கள். 

😔

முடிந்த முடிவாக சொல்லி விட எனது ஊர் அமைதிப் பூங்காவாக இருந்ததில்லை. இதை பாவித்து நாசவேலைகளில் யாரும் ஈடுபட்டு இருக்கலாம். எனவே விசாரணை முடியட்டும். நன்றி. 

Edited by விசுகு
எழுத்துப்பிழை

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.