Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நேபாள‌ம் கைக்கு வ‌ந்த‌ வெற்றிய‌ கோட்ட‌ விட்டுட்டு

 

புள்ளி போனாலும் ப‌ர‌வாயில்லை நேபாள‌ம் வெல்ல‌னும் என்று விரும்பினேன் 2 ப‌ந்துக்கு 2 ர‌ன்ஸ் அடிச்சா வெற்றி ஆனால் அதுக்குள் தென் ஆபிரிக்கா ம‌ட‌க்கி போட்டுது.................................

Link to comment
Share on other sites

  • Replies 1.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

கிருபன்

இன்றைய சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி குயின்ரன் டிகொக்கின் அதிரடியான 74 ஓட்டங்களுடன் 4 விக்கெட் இழப்பிற்கு 194 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஐ

கிருபன்

பன்னிரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நமீபியா அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 155 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணி சுழல்பந்துக்கு அடிக்கமுடியாமல் தடுமாறினாலும் வெ

கிருபன்

பதின்மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கனடா அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 137 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய அயர்லாந்து அணி விக்கெட்டுகளை தொடர்ச்சியாக இழந்து வெற்றி இலக்கை அடை

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

நேபாளம் தென்னாபிரிகாவை வென்று எல்லோருக்கும் முட்டை தரப் போகிறது.

நேபாளம் இந்தப் போட்டியை எப்படி தோற்றதென்பது கண்டுபிடிக்க ஒரு விசாரணை குழு அமைக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ரசோதரன் said:

நேபாளம் இந்தப் போட்டியை எப்படி தோற்றதென்பது கண்டுபிடிக்க ஒரு விசாரணை குழு அமைக்க வேண்டும்.

இர‌ண்டு ஓவ‌ரில் மூன்று விக்கேட் அவுட்

 

அதோட‌ க‌ட‌சி ஓவ‌ரில 8ர‌ன்ஸ் தேவை ப‌ட்ட‌து 4 . 2 அடிக்க‌ . 2 ப‌ந்துக்கு . 2 ர‌ன் தேவைப் ப‌ட்ட‌து வ‌டிவாய் வெற்றி பெற்று இருக்க‌ வேண்டிய‌ நேபாள‌ம் தோத்த‌து க‌வ‌லை அளிக்குது அண்ணா

 

நேபாள‌ம் இன்று தென் ஆபிரிக்காவை வென்று அடுத்த‌ விளையாட்டில் வ‌ங்கிளாதேஸ்ச‌ வென்று இருக்க‌னும் சூப்ப‌ர்8க்கு போய் இருப்பின‌ம்..................

 

நேபாள‌ம் ந‌ல்ல‌ அணி🙏🥰🏏...................................

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, வீரப் பையன்26 said:

நேபாள‌ம் ந‌ல்ல‌ அணி🙏🥰🏏....

🤝...

நேபாளம் வென்றிருக்க வேண்டும், பையன் சார். எவ்வளவு நல்லாக விளையாடிக் கொண்டிருந்தார்கள்.... தென் ஆபிரிக்கா தப்பி தப்பிக் கொண்டு வருகின்றது.

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

99 உலக கோப்பை செமியில் தெ.ஆ வின் டொனால்டும், குலூஸ்னரும் தோத்த அதே பாணியில் இன்று நேபாளம்.

கைக்கெட்டியது….

7 hours ago, கிருபன் said:

போட்டியில் சிக்கலான விதிகளைக் கொண்டு வந்தால் கொஞ்சம் கஷ்டம்! குழு B உம் குழு C உம் பிரச்சினை கொடுக்கும் போலிருக்கு. பார்ப்போம்.

இதுக்கு ஒரே ஒரு தீர்வுதான் இருக்கு.

இதுவரைக்கும் நடந்த போட்டியில் யார் அதிகநாள் முதல்வரோ அவரே நிரந்தர முதல்வர் என அறிவித்து விடுங்கள்🤣

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

31வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி 7 விக்கெட்டுகளை இழந்து 115 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.

பதிலுக்குத் துடுப்பாடிய நேபாளம் அணி குறைவான ஓட்ட இலக்கை அடைய வாய்ப்பு இருந்தும், குறிப்பாக கடைசி ஓவரில் எட்டு ஓட்டங்கள் எடுக்கவேண்டிய நிலையில் 6 ஓட்டங்களை மட்டுமே எடுத்தமை, இறுதியில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 114 ஓட்டங்களை எடுத்து வெற்றிவாய்ப்பை இழந்தது.

முடிவு: தென்னாபிரிக்கா அணி ஒரே ஒரு ஓட்டத்தால் வெற்றியீட்டியது

அனைவரும் தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. 

 

---

32வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய உகண்டா அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து 18.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 40 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.

பதிலுக்குத் துடுப்பாடிய நியூஸிலாந்து அணி குறைவான ஓட்ட இலக்கை அடைய மிகவேகமாக அடித்தாடி 5.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 41 ஓட்டங்கள் எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது.

முடிவு: நியூஸிலாந்து அணி 9 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது

அனைவரும் நியூஸிலாந்து அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

448456649_882824697190917_11555615443250

முன்பெல்லாம் நம் நாடு உலகக் கிண்ணம் ஜெயிக்கவில்லையென்றால் ஏதாவது ஒரு ஆசிய நாடு ஜெயிக்க வேண்டும் என கேட்டு இருக்கேன் ஆனால் இப்போ நமக்கு கிடைக்காத எதுவும் பக்கத்து நாட்டு காரனுக்கு கிடைக்க கூடாதுனு நினைக்கிறோம்.. பக்கத்து வீட்டுக்கரன் நல்லா இருந்தா நமக்கு  நிம்மதியா தூக்கம் வந்திருக்குமில்ல.
- Vijay Vj -

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

இதுக்கு ஒரே ஒரு தீர்வுதான் இருக்கு.

இதுவரைக்கும் நடந்த போட்டியில் யார் அதிகநாள் முதல்வரோ அவரே நிரந்தர முதல்வர் என அறிவித்து விடுங்கள்🤣

மீண்டும் சினைப்பரை தூக்கப் பண்ண போறீங்க.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரசோதரன் said:
10 hours ago, வீரப் பையன்26 said:

நேபாள‌ம் ந‌ல்ல‌ அணி🙏🥰🏏....

🤝...

நேபாளம் வென்றிருக்க வேண்டும், பையன் சார். எவ்வளவு நல்லாக விளையாடிக் கொண்டிருந்தார்கள்.... தென் ஆபிரிக்கா தப்பி தப்பிக் கொண்டு வருகின்றது

இரு அணிகளும் பாடசாலை மாணவர்கள் போல விளையாடினார்கள்.

நேபாளின் பந்து வீச்சு அபாரம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா க‌ன‌டா விளையாட்டும் ம‌ழையால் த‌டை ப‌ட்டு இருக்கு

இந்த‌ உல‌க‌ கோப்பையில் ம‌ழையால் கைவிட‌ ப‌ட்ட‌ போட்டிக‌ள் அதிக‌ம்............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, ஈழப்பிரியன் said:

இரு அணிகளும் பாடசாலை மாணவர்கள் போல விளையாடினார்கள்.

நேபாளின் பந்து வீச்சு அபாரம்.

ஆம் நேபாள் அணி வீர‌ர்க‌ள் ந‌ல்லா தான் ப‌ந்து போட்ட‌வை

 

நேபாள் வெல்ல‌ அதிக‌ வாய்ப்பு இருந்தும் க‌ட‌சியில் தோல்வி........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

 பக்கத்து வீட்டுக்கரன் நல்லா இருந்தா நமக்கு  நிம்மதியா தூக்கம் வந்திருக்குமில்ல.

🤣....

நமக்கு மூஞ்சை, முகம் எது போனாலும் பரவாயில்லை, ஆனால் பக்கத்து வீட்டுக்காரனுக்கு முழுவியலம் கெட்டுப் போக வேண்டும் என்பது ஒரு வழக்கம்......யார் வென்றாலும் வெல்லட்டும், ஆனால் 'அவன்' மட்டும் வெல்லக் கூடாது......🤣

இன்றும் மெல்லிதாக நினைவில் வந்து போகும் ஒரு நிகழ்வு. 92ம் ஆண்டென்று நினைக்கின்றேன். இலங்கை பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான உதைபந்தாட்டப் போட்டி. யாழ் பல்கலைக்கழக அணியை பலத்த கஷ்டங்களிற்கு மத்தியிலும் போட்டியில் பங்குபற்ற தென் பகுதிக்கு அழைத்து வந்திருந்தனர்.

பேராதெனிய அணியில் ஒரேயொரு சிங்கள மாணவன், மற்றவர்கள் எல்லோரும் தமிழர்கள். அணியின் தலைவர் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்தவர். அணியின் பயிற்சியாளார் தமிழர். அவரது பெயர் ராமன் என்று ஞாபகம். இலங்கை அணி மற்றும் கொழும்பில் Renown அணிக்கு விளையாடியவர்.

இந்த இரண்டு அணிகளிலும் விளையாடிய சிலர் ஒரே பாடசாலை வகுப்புகளில், ஒரே ஊர்களில், ஒரே வருடங்களில் படித்த நண்பர்கள். எல்லோருக்கும் எல்லோரையும் தெரிந்தும் இருந்தது.

பேராதெனிய மாணவர்கள் மிகவும் கவனம் எடுத்து யாழ் பல்கலை மாணவர்களை பார்த்துக் கொண்டனர். 

போட்டியில் இரண்டு அணிகளுமே நன்றாக விளையாடினார்கள். அரை இறுதிக்கு இரண்டு அணிகளும் தெரிவாகியதாக ஞாபகம்.

இங்கே தான் பழைய பழக்கம் தலை தூக்கியது. 'நாங்க வெல்லாட்டியும் பரவாயில்லை, ஆனால் அவங்க வெல்லக் கூடாது.......' என்று ஆரம்பித்து, இரண்டு அணிகளுமே இறுதி ஆட்டத்திற்கு போகவில்லை.......😔 

     

Edited by ரசோதரன்
  • Haha 1
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம‌ழையால் விளையாட்டு ந‌டை பெற‌ வில்லை....................இங்லாந்த் விளையாட்டும் ம‌ழையால் கை விட‌ ப‌ட்டால் ஸ்கொட்லாந் சூப்ப‌ர் 8க்கு போய் விடும்.......................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, வீரப் பையன்26 said:

இங்லாந்த் விளையாட்டும் ம‌ழையால் கை விட‌ ப‌ட்டால் ஸ்கொட்லாந் சூப்ப‌ர் 8க்கு போய் விடும்.......................

காலநிலை இங்கிலாந்துக்கு சாதகமாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

12:33 PMUpdate 10.04 PM IST (0434 PM GMT) - Well, not the best of news to begin with for England, the covers are in place but there seems to be no rain. However, there was a lot of rain earlier but the forecast is really good. Let me remind you, England need a game to be played here, they need a win to go through. They'll hope the conditions improve and they do get a game. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

காலநிலை இங்கிலாந்துக்கு சாதகமாக உள்ளது.

இங்லாந் விளையாட்டிலும் ம‌ழை.....................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

இங்லாந் விளையாட்டிலும் ம‌ழை.....................

இங்கிலாந்து இன்று விளையாடி சூப்பர் 8 க்கு போகவில்லையானால் ஈழப்பிரியன் காலி.

2.17pm The covers are coming off... this is not a drill. And, as feared, they are going back on again. Oh boy... There will be an inspection at 2.45pm. No there won't, because it is raining again!

போட்டி நடக்காது போல இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

இங்கிலாந்து இன்று விளையாடி சூப்பர் 8 க்கு போகவில்லையானால் ஈழப்பிரியன் காலி.

2.17pm The covers are coming off... this is not a drill. And, as feared, they are going back on again. Oh boy... There will be an inspection at 2.45pm. No there won't, because it is raining again!

போட்டி நடக்காது போல இருக்கு.

இங்லாந் ந‌மீயா விளையாட்டு ப‌ற்றி த‌க‌வ‌ல்க‌ள் எதுவும் போட‌ வில்லை ம‌ழை அடிச்சு ஊத்துது போல‌..........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஈழப்பிரியன் said:

இங்கிலாந்து இன்று விளையாடி சூப்பர் 8 க்கு போகவில்லையானால் ஈழப்பிரியன் காலி.

🤣.....

இந்தக் காளியோட ஆட்டத்தை இனிமேல தான் பார்க்கப் போறீங்க என்று சொல்வீங்க என்று பார்த்தால்.... காலி என்று ஒரு வார்த்தையில் முடிச்சிட்டீங்க....

நாலு பெரிசும், நாலு சின்னனும் சூப்பர் எட்டுக்கு போகும் போல, மழை பெய்தால்...
 

Edited by ரசோதரன்
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ரசோதரன் said:

🤣.....

இந்தக் காளியோட ஆட்டத்தை இனிமேல தான் பார்க்கப் போறீங்க என்று சொல்வீங்க என்று பார்த்தால்.... காலி என்று ஒரு வார்த்தையில் முடிச்சிட்டீங்க....

நாலு பெரிசும், நாலு சின்னனும் சூப்பர் எட்டுக்கு போகும் போல, மழை பெய்தால்...
 

இந்த‌ உல‌க‌ கோப்பையில் ம‌ழையால் சிறு அணிக‌ளுக்கு அடிச்ச‌து ல‌க்

 

ப‌ல‌மாம‌ன‌ அணிக‌ள் ஆன‌

 

நியுசிலாந்

பாக்கிஸ்தான்

இல‌ங்கை

 

ம‌ழை பெய்து விளையாட்டு த‌டை ப‌ட்டால் இங்லாந்தும் வெளி ஏறுவின‌ம்

 

 

போட்டில‌ ஏன் இந்த‌ முறை அதிக‌ புள்ளிக‌ள் எடுக்க‌ வில்லை என்று என்னை பார்த்து யாரும் ந‌க்க‌ல் அடிச்சா....................ஒரு சொல் ம‌ழையால் என் திட்ட‌ங்க‌ள் எல்லாம் வீனா போச்சு ஹா ஹா....................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, வீரப் பையன்26 said:

ம‌ழை பெய்து விளையாட்டு த‌டை ப‌ட்டால் இங்லாந்தும் வெளி ஏறுவின‌ம்

 

15 minutes ago, ரசோதரன் said:

இந்தக் காளியோட ஆட்டத்தை இனிமேல தான் பார்க்கப் போறீங்க என்று சொல்வீங்க என்று பார்த்தால்.... காலி என்று ஒரு வார்த்தையில் முடிச்சிட்டீங்க...

இங்கிலாந்து இன்று விளையாடவில்லை என்றால்

காணாமல் போனோர் பட்டிலில் என்னையும் சேர்த்துடுங்க.

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ஈழப்பிரியன் said:

 

இங்கிலாந்து இன்று விளையாடவில்லை என்றால்

காணாமல் போனோர் பட்டிலில் என்னையும் சேர்த்துடுங்க.

இந்த‌ உல‌க‌ கோப்பை நாங்க‌ள் நினைத்த‌ மாதிரி அமைய‌ வில்லை

 

உங்க‌ட‌ அண்ணாக்கு புரிய‌ ப‌டுத்துங்கோ . அந்த‌ ம‌னுஷ‌ன‌ முத‌ல் இட‌த்தில் வைச்சு பார்க்க‌னும் என்று ப‌ல‌ வாட்டி நினைப்ப‌து உண்டு ஆனால்

எப்ப‌வும் எதிர் மாறாக‌ போட்டி முடிவுக‌ள் அமையுது.................................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

It’s 11 Over game

 

 
3:19pm: You might need to lift your jaws off the floor cos 4pm has been announced as the start time for a 11-overs-per-side game. Toss at 3:40pm local. There will be three overs of powerplay. Three bowlers can bowl a maximum of three overs.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@நீர்வேலியான்

எங்கை எங்க‌ட‌ அண்ணா

ஆளை சில‌ நாட்க‌ளாக‌ இந்த‌ திரி ப‌க்க‌ம் காண‌ வில்லை......................................................

27 minutes ago, ஈழப்பிரியன் said:

It’s 11 Over game

 

 
3:19pm: You might need to lift your jaws off the floor cos 4pm has been announced as the start time for a 11-overs-per-side game. Toss at 3:40pm local. There will be three overs of powerplay. Three bowlers can bowl a maximum of three overs.

 

ந‌மீயா ப‌ந்து வீச்சை தெரிவு செய்து இருக்கின‌ம்........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, வீரப் பையன்26 said:

@நீர்வேலியான்

எங்கை எங்க‌ட‌ அண்ணா

ஆளை சில‌ நாட்க‌ளாக‌ இந்த‌ திரி ப‌க்க‌ம் காண‌ வில்லை

மேல நின்றா வருவாங்க.

4 minutes ago, வீரப் பையன்26 said:

ந‌மீயா ப‌ந்து வீச்சை தெரிவு செய்து இருக்கின‌ம்..

அப்பாடா இப்ப தான் நெஞ்சில பாலை வார்த்த மாதிரி உள்ளது.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 20 JUN, 2024 | 07:48 PM   (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) நாட்டில் 25 மாவட்டங்களிலும் தமிழ் மொழிமூல ஆரம்ப வகுப்பு பாடசாலைகள் காணப்படுகின்றன. இந்நிலையில் வடக்கு மற்றும் கிழக்கில் சிங்கள மொழி மூல பாடசாலைகள் இல்லாமல் இருப்பது கவலைக்குரியது. இவ்வாறான நிலைமையில் எப்படி இனங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என  சுயாதீன எதிரணியின் உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (20) மகளிர் வலுப்படுத்தல் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, யுனெஸ்கோ பிரகடனத்தில் பிள்ளைகளுக்கு தாய் மொழியில் கற்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். ஆனால், 1983ஆம் ஆண்டுக்குப் பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிங்கள மொழி மூல பாடசாலைகளுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் ஏற்கனவே கேள்விகளை எழுப்பியுள்ளேன்.  கடந்த 5 வருடங்களை எடுத்துக்கொண்டால் 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப் புள்ளிகள் வெளியிடப்படும்போது 25 மாவட்டங்களிலும் தமிழ் மொழிமூல வெட்டுப்புள்ளிகள் வெளியாகின்றன. யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள்  நிறைவடைந்துள்ள பின்னரும் கிளிநொச்சி, மன்னார், மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் சிங்கள வெட்டுப்புள்ளிகள் கிடையாது. வடக்கு மற்றும் கிழக்கில் சிங்கள மொழிமூலம் ஆரம்பக் கல்வி பாடசாலைகள் இல்லை என்பதனையே காட்டுகிறது. தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களே உங்களின் மனசாட்சியிடம் கேட்டுப் பாருங்கள்... யுத்த காலத்திலும் கூட கொழும்பு ரோயல் கல்லூரியில் தமிழ்மொழி மூலம் வகுப்புகள் இடம்பெற்றன. ஆனால், வடக்கு, கிழக்கில் சிங்கள மொழிமூலம் வகுப்புகள் ஏதும் இல்லை. மட்டக்களப்பில் எத்தனையோ சிங்கள கிராமங்கள் உள்ளன. எத்தனையோ சிங்கள பாடசாலைகள் பிரபுக்களால் அமைக்கப்பட்டன. ஆனால், அவை இல்லாது இருக்கின்றன. இப்படி இருக்கையில் இனங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை எவ்வாறு உருவாக்க முடியும் என்றார். https://www.virakesari.lk/article/186596
    • டி20 உலகக் கோப்பை: மிரட்டிய ஆப்கானிஸ்தானை வியூகம் வகுத்துச் சுருட்டிய இந்தியா பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆப்கானிஸ்தான் அணியை 47 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 21 ஜூன் 2024, 03:09 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மேற்கிந்தியத்தீவுகளுக்கு சூப்பர்-8 சுற்று ஆட்டங்கள் மாறிவிட்டதால் இனிமேல் டி20 போட்டிகளுக்கே உரிய ரன் குவிப்பை பார்க்கலாம் என்று கூறப்பட்டது. ஆடுகளங்கள் ரன்குவிப்புக்கு சாதகமாக இருப்பதுபோல் தெரிந்தாலும், பேட்டர்கள் பந்தைக் கவனித்து ஷாட்களை அடிக்க வேண்டியுள்ளது. இதுதான் நேற்றை இந்தியா-ஆப்கானிஸ்தான் ஆட்டத்தில் தாத்பரியமாக இருந்தது. அனுபவ பேட்டர்கள், தொடக்க ஆட்டக்காரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா இருவரும் பொறுமையாக, நிதானமாக பேட் செய்யாமல் விக்கெட்டை இழந்தனர். ஆனால், சூர்யகுமார் யாதவ் நிதானமாக, அதேநேரம் எந்தப் பந்தை பெரிய ஷாட்டாக மாற்றலாம் எனத் தெரிந்து அடித்து ஹீரோவாக ஜொலித்தார். பிரிட்ஜ்டவுனில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-8 சுற்றில் குருப்- ஏபிரிவில் நடந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை 47 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் சேர்த்தது. 182 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 134 ரன்களுக்கு ஆட்டமிழந்து 47 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றி மூலம், இந்திய அணி குரூப்-1 பிரிவில் 2 புள்ளிகளுடன், நிகர ரன்ரேட்டில் 2.350 என்று வலுவாக முதலிடத்தில் இருக்கிறது. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தொடர்ந்து 13 சர்வதேச போட்டிகளை இந்திய அணி வென்று சாதனையை தக்கவைத்துள்ளது. ஆப்கானிஸ்தான் ரன்ரேட் மைனஸ் 2.350 என்று குறைவாக இருக்கிறது. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். இந்தியா - ஆப்கானிஸ்தான் போட்டியில் நடந்தது என்ன? இந்த ஆட்டத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தது பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ், துணைக் கேப்டன் ஹர்திக் பாண்டியாவும், பந்துவீச்சில் பும்ரா, அர்ஷ்தீப் சிங் இருவரும்தான். அதிலும் புதிய பந்தில் பும்ராவின் பந்துவீச்சு துல்லியமாக இருந்ததை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இந்திய அணி 90 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது, இந்திய அணியை தாங்கிப்பிடித்து பெரிய ஸ்கோருக்கு கொண்டுவந்தவர் சூர்யகுமார் யாதவ். 28 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்த சூர்யகுமார் கணக்கில் 5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் அடங்கும். அணியைச் சரிவிலிருந்து மீட்ட சூர்யகுமார் ஆட்டநாயகனாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சூர்யகுமார்-ஹர்திக் பாண்டியா கூட்டணி நேற்றைய ஆட்டத்தில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இருவரும் 5-ஆவது விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்ததுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாகவும், பெரியஸ்கோருக்கும் வழிவகுத்தது. ஹர்திக் பாண்டியாவும் 2 சிக்ஸர்கள், 3பவுண்டரிகள் உள்பட 32 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பந்துவீச்சில் பும்ராவின் திறமை ஒவ்வொரு போட்டியிலும் மெருகேறிக் கொண்டே செல்கிறது. இந்த டி20 உலகக் கோப்பைத் தொடங்கியதிலிருந்து பும்ரா பந்துவீச்சில் எக்கானமி 3 ரன்களைக் கடக்கவில்லை. இந்த ஆட்டத்திலும் 4 ஓவர்கள் வீசிய பும்ரா 7 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது திறனை வெளிப்படுத்தினார். அதிலும் புதிய பந்தில் பும்ராவாவின் பந்துவீச்சை சமாளிக்க ஆப்கானிஸ்தான் பேட்டர்கள் கடும் சிரமப்பட்டு விக்கெட்டையும் இழந்தனர். அதேபோல அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்கள் வீசி 36 ரன்கள் கொடுத்து 3 விக்கெட், சிராஜுக்குப் பதிலாக கொண்டுவரப்பட்ட குல்தீப் யாதவ் 4 ஓவர்களிலி் 32 ரன்கள் கொடுத்து 2 விக்கெட் என அற்புதமாகப் பந்துவீசினர். அக்ஸர் படேலும், ஜடேஜாவும் தங்களின் கட்டுக்கோப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தி வெற்றிக்கு துணை செய்தனர்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ரோகித் சர்மான கூறியது என்ன? வெற்றிக்குப்பின் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் “கடந்த 2 ஆண்டுகளாக நாங்கள் இங்கு டி20 போட்டிகளை விளையாடியிருக்கிறோம் என்பதால், சூழலை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றாற்போல் திட்டமிட முடிந்தது. அதனால்தான் 180 ரன்களை எட்ட முடிந்தது.” என்றார். “பேட்டர்களின் பங்கு அசாத்தியமானது. எங்களிடம் உலகத் தரம்வாய்ந்த பந்துவீச்சாளர்கள் இருப்பதால் ஸ்கோரை டிபெண்ட் செய்ய முடிந்தது, பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இக்கட்டான நேரத்தில் ஒவ்வொரு வீரரும் தங்களின் பங்களிப்பை அளித்தனர். ஸ்கை, ஹர்திக் பார்ட்னர்ஷிப் முக்கியமானதாக இருந்தது. ஆட்டத்தை ஆழமாகக் கொண்டு செல்ல இருவரின் ஆட்டம் அவசியமானதாக இருந்தது. பும்ராவின் பந்துவீச்சு குறித்து நமக்குத் தெரியும். அவர் பந்துவீச்சில் என்ன செய்வார் என்பதும் தெரியும். சூழலையும், ஆடுகளத்தையும் சாதகமாக பயன்படுத்தி பந்துவீசக்கூடியவர். பொறுப்பெடுத்து தனது பங்களிப்பை பல ஆண்டுகளா அளித்து வருகிறார் பும்ரா. இந்த ஆடுகளத்தின் தன்மையைப்புரிந்து கொண்டுதான் 3 சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சுக்கு ஏற்ற ஆடுகளம் அடுத்த ஆட்டத்தில் இருந்தால், அதிகமான வேகப்பந்துவீச்சாளர்களுடன் வருவோம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ரோகித், கோலி 2 ஆண்டுகளாக விளையாடவில்லை ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என கணித்து ரோகித் சர்மா, கோலி பேட் செய்து கையைச் சுட்டுக்கொண்டனர். 2022 டி20 உலகக் கோப்பைத் தொடருக்குப்பின் கடந்த ஜனவரி மாதம் வரை சர்வதேச டி20 போட்டிகளில் இதுவரை ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் விளையாடவில்லை. ரோஹித் சர்மா 13 பந்துகளில் 8 ரன்களுடன் பரூக்கி பந்துவீச்சில் பெரிய ஷாட்டுக்கு சென்று விக்கெட்டை இழந்தார். இன்றைய டி20 போட்டிகளில் பந்துவீச்சில் ஒவ்வொரு வீரரும் எவ்வாறு வேரியேஷன்களை கொண்டு வருகிறார்கள். 145 கி.மீ வேகத்தில் பந்துவீசும் ஒரு பந்துவீச்சாளர் அடுத்த பந்தை அப்படியே வேகத்தைக் குறைத்து 110 கி.மீ வேகத்தில் வீசுகிறார். இதை கவனிக்காமல் விட்டதுதான் நேற்றைய ஆட்டத்தில் ரோஹித் சர்மா செய்த தவறாகும். ஐபிஎல் தொடரில் பலமுறை லெக் ஸ்பின்னுக்கு கோலி ஆட்டமிழந்துள்ளார். இதை உணர்ந்த ரஷித் கான் தனது பந்துவீச்சில் கோலியை பெரிய ஷாட்டுக்கு மாற்றும் வகையில், ஆசையைத் தூண்டும் வகையில் பந்துவீசினார். இதை கவனிக்காத கோலி, சிக்ஸருக்கு முயன்று கேட்சாகினார். பட மூலாதாரம்,GETTY IMAGES சூர்யகுமார் யாதவ் சிறப்பான பேட்டிங் சூர்யகுமாரின் பேட்டிங் நேற்றைய ஆட்டத்தில் மாஸ்டர் கிளாஸாக இருந்தது. சூர்யகுமார் 3வது வீரராக வழக்கமாகக் களமிறங்கிய நிலையில் இந்த உலகக் கோப்பைத் தொடரில் அவருக்கு 4வது இடம் தரப்பட்டது. ஆனாலும், தனக்குரிய பணியை இந்தத் தொடரில் சிறப்பாகவே செய்து வருகிறார். சூர்யகுமார் ஒவ்வொரு போட்டியிலும் வித்தியாசமான, ஸ்பெஷல் ஷாட்களை ஆடுவதை வழக்கமாக வைத்துள்ளார். ஆப்சைட் சென்ற பந்துகளை ஸ்வீபுக்கு மாற்றியது, ஃபுல்டாஸ் பந்தை ஸ்வீப்புக்கு மாற்றியது என எதிரணி பீல்டர்கள் கணிக்க முடியாத வகையில் ஷாட்களை விளையாடினார். அதாவது இடதுபுறம் பவுண்டரி எல்லை குறைவாக இருக்கிறது என்பதை உணர்ந்து பெரும்பாலான ஷாட்களை சூர்யாக இடதுபுறம் அடித்து ஸ்மார்ட் கிரிக்கெட்டை ஆடினார். சூர்யகுமார் அடித்த 3 சிக்ஸர்களில் ஒரு சிக்ஸரில் பந்து அரங்கத்தின் மேற்கூரையில் விழுந்தது. ஸ்லோவர் பந்துகளை எவ்வாறு கணித்து ஆட வேண்டும் என்பதற்கு பிரத்யேகப் பயிற்சி எடுத்த சூர்யா, நேற்று ஸ்லோவர் பந்துகளை சிக்ஸருக்கும், பவுண்டரிகளுக்கும் பறக்கவிட்டார். ஒரு கட்டத்தில் பந்துவீச்சு வேரியஷன்கள் சூர்யாவிடம் தோல்வி அடைந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆடுகளம் மந்தமாக இருந்தால், பந்து வரும் திசையை பேட்டர்கள் கணிப்பது சிரமம். இதற்கு நீண்டநேரம் களத்தில் இருந்து பந்தை கணித்தால்தான் ஆட முடியும். ஆனால், இதை சூர்யகுமார் வந்தவுடன் புரிந்து கொண்டு ஆடுகளத்துக்கு ஏற்றபடி ஆட்டத்தை மாற்றிக்கொண்டார். வழக்கமாக ஸ்விட்ச் ஹிட், ரிவர்ஸ் ஸ்வீப் போன்றவற்றை அதிகமாக ஆடக்கூடிய சூர்யா நேற்று பெரிதாக ஆடவில்லை.இந்த ஆட்டத்தில் 14 ரன்கள் மட்டுமே கீப்பருக்கு பின்னால் அடித்து சூர்யா சேர்த்தார். இதுபோன்று ஆடுவது சூர்யாவின் பேட்டிங்கில் குறைந்த சதவீதம் என்றாலும், ஆடுகளத்தின் மெதுவான தன்மை, பந்தின் வேகக் குறைவால் அதிகமான சக்தியை செலுத்திதான் இந்த ஷாட்களை ஆட முடியும் என்பதால் பெரியாக மெனக்கெடவில்லை. ஆடுகளத்தின் தன்மையைப் புரிந்து கொண்ட சூர்யா, அதை ஹர்திக் பாண்டியாவிடம் கூறி, அவர் அடித்த அதே ஷாட்களுக்கு அடிக்க மாற்றினார். இருவருமே பீல்டர்கள் கணிக்க முடியாத பகுதியில் பவுண்டரி, சிக்ஸர்களை விளாசினர். ரன் சேர்ப்பதற்கு கோலி, ரோஹித், ரிஷப் பந்த், துபே ஆகியோர் சிரமப்பட்ட நிலையில், சூர்யகுமார் 27 பந்துகளில் அரைசதம் அடித்தது சகவீரர்களுக்கே வியப்பாக இருந்திருக்கலாம். ஆனால், கடைசி நேரத்தில் பரூக்கி வீசிய ஸ்லோவர் பந்துக்கு சூர்யா இரையாகினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES பும்ரா சிறப்பான பந்துவீச்சு புதிய பந்தில் பும்ராவின் பந்துவீச்சு வேகம் அற்புதமானது. புதிய பந்தில் பும்ரா பந்துவீசினாலே 75 சதவீதத்துக்கும் மேல் விக்கெட் வீழ்த்தும் சாதனையை டி20 போட்டியில் வைத்துள்ளார். அதை நேற்றைய ஆட்டத்திலும் பும்ரா நிரூபித்தார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவதற்குள் ஆப்கானிஸ்தானின் குர்பாஸ்(11), ஜசாய்(2) விக்கெட்டுகளை காலி செய்தார். இந்த டி20 உலகக் கோப்பையில் அதிகமான ரன் குவித்தவர்கள் வரிசையில் முதலிடத்தில் இருக்கும் குர்பாஸ் விக்கெட்டை அனாசயமாக எடுத்தார் பும்ரா. குர்பாஸ் இறங்கி வந்ததும் பந்தை ஆஃப் சைடில் விலக்கி பும்ரா வீசவே, அதை அடிக்க முற்பட்டு ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்தார் குர்பாஸ். ஆடுகளத்தன் தன்மையை உடனடியாகக் கணித்து அதற்கு ஏற்றார்போல் பும்ரா பந்துவீசுவதால்தான் அனைத்து ஃபார்மெட்டுகளின் ராஜா என்று புகழப்படுகிறார். இந்த ஆட்டத்தில் பும்ரா 7 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார். அனுபவமில்லாத ஆப்கானிஸ்தான் ஆடுகளத்தின் தன்மையை உணர்ந்து அதற்கு ஏற்றபடி பேட்டிங்கையும், பந்துவீச்சையும் உடனடியாக மாற்றாததன் விளைவுக்கு ஆப்கானிஸ்தான் நேற்று விலை கொடுத்தது. பேட்டிங்கில் தொடக்க வீரர்கள் முதல் நடுவரிசை வரை பெரிய ஷாட்களுக்குதான் பெரும்பாலும் முயன்றார்களே தவிர, களத்தில் நிலைத்திருக்க முயலவில்லை. இதனால்தான் ஆப்கானிஸ்தான் அணியில் ஓமர்சாய் தவிர, மற்ற எந்த பேட்டரும் 20 பந்துகளுக்கு மேல் சந்திக்கவில்லை. பந்துவீச்சிலும் ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்றார்போல் ரஷித் கான், பரூக்கி இருவர் மட்டுமே பந்துவீசினர். மற்ற பந்துவீச்சாளர்கள் யாரும் ஆடுகளத்தின் தன்மையை உணர்ந்து பந்துவீசவில்லை. அதிலும் குறிப்பாக நவீன் உல் ஹக் பந்துவீச்சு படுமோசமாக இருந்தது. ரஷித் கான் தவிர அனைத்து பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு 8 ரன்களுக்கு மேல் வாரி வழங்கினர். https://www.bbc.com/tamil/articles/cy99zwqqpkno
    • இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன் பிடித்த குற்றச்சாட்டில் நான்கு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்று திங்கட்கிழமை (17) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.   யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒரு படகையும் அதிலிருந்த நான்கு இந்திய மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் கடற்படையினர் கைது செய்தனர்.  
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.