Jump to content

ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்களென இந்தியாவில் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் தேர்தல் வெற்றியை மையப்படுத்தியதா? - முஷாரப் சந்தேகம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 7   22 MAY, 2024 | 08:19 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்ட காலமும் ஒரு தேர்தல் காலம். அதேபோன்று இந்தியாவில்  4 முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் காலகட்டம், இந்தியாவை பொறுத்தவரையில் தேர்தல் இடம்பெற்றுவரும் கால கட்டம்.

இலங்கையை பொறுத்தவரை விரைவில் ஒரு தேர்தலை எதிர்பார்த்திருக்கும் ஒரு காலகட்டாமாகும்.  அதனால் தேர்தல் வெற்றியை மையப்படுத்தி, புனையப்படுகின்ற ஒருவிடயமாக இது இருக்கக்கூடும் என்ற ஒரு சந்தேகம் எழுகிறது என ஆளும் கட்சி உறுப்பினர் எம்.முஷாரப் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

இந்திய அஹமதாபாத் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ள 4 முஸ்லிம் இளைஞர்கள் தொடர்பாக இந்த சபையில் உறுப்பினர் ஒருவர் குறிப்பிடுகையில், முஸ்லிம் தீவிரவாதம் தலைதூக்கும் அபாயம் இருக்கிறது.

சில காலங்களுக்கு முன்னரும் இது தொடர்பாக சபையில் தெரிவித்திருந்தேன். அதன் பிரகாரம் தற்போது இந்தியாவில் 4முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதனால் இலங்கையில் மீண்டும் ஐ.எஸ். தலைதூக்கி வருகிறது என மிகவும் கடும் தொனியில் உரையாற்றி இருந்தார்.

ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டு சில மணி நேரங்களில் ஐ,எஸ்.ஐ.எஸ். இந்த தாக்குதலை நாங்கள்தான நடத்தினோம என உரிமை கோரினார்கள். ஆனார் ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டு பல வருடங்கள் கடந்தும் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரி கண்டுபிடிக்கப்படாவிட்டாலும் இந்த தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ்ஸுக்கு எந்த தொடர்பும் இல்லை என இது தொடர்பில் விசாரணை மேற்கொண்ட அனைத்து விசாரணை குழுக்களும் தெரிவித்துள்ளன.

இவ்வாறு இருக்கையில், ஏப்ரல் 21தாக்குதல் நடத்தப்பட்டு சில மணி நேரங்களில் இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு உரிமை கோரியது என்றும் இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்ட ஐ.எஸ். ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபூபக்கர் பக்தாதி தான் உயிருடன் இருக்கிறேன் என அறிவித்தார் என சொல்லப்பட்ட விடயங்களுக்கு பின்னால் தேசிய, சர்வதேச பெரும் சதி இருப்பதை எமது நாட்டு மக்கள் இப்போது புரிந்திருக்கின்ற சூழலில்தான், இந்தியாவில் கைது செய்யப்பட்ட 4 இளைஞர்களின் சம்பவத்தை ஐ.எஸ்.ஐ.எஸ்ஸுடன் தொடர்புபடுத்தி, இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதம் மேலும் தலைதூக்கப்போகிறது என்ற போர்வையில் தற்போது சில கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அத்துடன் 2021 ஏப்ரல் 21 தாக்குதல் நடத்தப்பட்ட காலமும் ஒரு தேர்தல் காலம். இப்போது இந்த கைது செய்யப்பட்டிருக்கும் காலகட்டம், இந்தியாவை பொறுத்தவரையில் தேர்தல் இடம்பெற்றுவரும் கால கட்டம். இலங்கையை பொறுத்தவரை விரைவில் ஒரு தேர்தலை எதிர்பார்த்திருக்கும் ஒரு காலகட்டாமாகும்.  அதனால் தேர்தல் வெற்றியை மையப்படுத்தி, புனையப்படுகின்ற ஒருவிடயமாக இது இருக்கக்கூடும் என்ற ஒரு சந்தேகம் எமக்கு எழுந்தால் அதனை யாரும் மறுத்துவிட முடியாது. ஏனெனில் ஏப்ரல் 21 தாக்குதல் அப்படியானதொரு தோற்றப்பாட்டைத்தான் இந்த தேசத்துக்குள் உருவாக்கியது. 

அன்றும் இந்த தாக்குதல் தொடர்பாக இந்தியாவின் புலனாய்வு அதிகாரிகள் தகவல் தெரிவித்தார்கள், தாக்குதல் இடம்பெற்றது. தாக்குதலுக்கும் இந்தியாவுக்கும் சம்பந்தம் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கிறார். இவ்வாறு பல்வேறுபட்ட சம்பவங்கள் கருத்துக்கள் இருக்கின்ற நிலையில், புதிதாக வந்திருக்கும்  இந்த செய்தி குறித்து நாட்டில் இருக்கின்றன சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் மிகவும் தெளிவாக இருக்கவேண்டும். மீண்டும் ஒரு தேர்தலை வெற்றி கொள்வதற்காக இவ்வாறான தாக்குதல் அல்லது பயங்கரவாதம் போன்ற பொய்யான கருத்துக்களைக்கொண்டு ஊடுருவுக்கின்ற அரசியல் சக்திகளை தீய சக்திகளை தோற்கடிக்கின்ற பெரும் பாெறுப்பு இந்த தேசத்தில் இருக்கின்ற மக்களுக்கு இருக்கிறது.

உண்மையில் பயங்கரவாத்துடன் தொடர்புபட்ட யாராவது கைதுசெய்யப்பட்டிருந்தால் உரியமுறையில் விசாரிக்கப்பட்டு உரிய தகவல் தெரிவிக்கப்படுவதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் ஒரு தேர்தலை மையப்படுத்தியதாக, எப்ரல் 21 தாக்குதலைப் போன்றதான ஒரு தோற்றப்பாட்டை உருவாக்கின்ற நாேக்கில் இது நடைபெறுமாக இருந்தால் அதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம் என்றார்.

https://www.virakesari.lk/article/184255

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள்  சுத்தத் தங்கம் தானுங்கோ.....😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் காலம் என்ன கோடைகாலம், குளிர் காலம், மழை காலம், இலையுதிர் காலம், இலை துளிர் காலங்களிலும் முஸ்லிம்களை கைது செய்ய கூடாது.

புனித போருக்கு இடையூறாக ஏதாவது அரச நடவடிக்கைகள்  அமைந்துவிடாமல் அவர் கவனித்து கொள்கின்றார்.

Link to comment
Share on other sites

இந்தச் செய்தியில் பிடித்த விடயம், 4 இலங்கை முஸ்லிம்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டதை ஒரு முஸ்லிம் அரசியல்வாதி பகிரங்கமாக ஆணித்தரமாகத் தனது கண்டனத்தைத் தெரிவிப்பதுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, இணையவன் said:

இந்தச் செய்தியில் பிடித்த விடயம், 4 இலங்கை முஸ்லிம்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டதை ஒரு முஸ்லிம் அரசியல்வாதி பகிரங்கமாக ஆணித்தரமாகத் தனது கண்டனத்தைத் தெரிவிப்பதுதான்.

இவர் இந்தியாவில் இருந்து இப்படிக் கதைத்து இருந்தால்..இவருடைய வீட்டின்மேல் புல்டோசர் ஏறி இருக்கும்...ஆளையும் விட்டுவச்சிருக்க மாட்டினம்..

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என்னது...... ஒரு ஆட்டுப்பட்டியையே, எப்படி கடத்தியிருப்பார்கள்? அவர்களை ஒரு போலீஸ் அதிகாரி மடக்கிப்பிடித்திருக்கிறார்?  அதுக்குத்தான் எங்கள் வரிப்பணத்தில் சம்பளம் அளிக்கப்படுகிறதே. அது சரி, இந்த வாள்வெட்டுக்குழு, போதைப்பொருளை கடத்துவோரை மட்டும் கைது செய்யமாட்டார்கள், கண்ணை மூடிக்கொண்டு போக விட்டுவிடுவார்கள். வர வர சிவசேனைக்கு பொன்னாடை போத்துற வேலை அதிகரிக்கிறது. அதற்காக ஆட்களை தேடுகிறார்களாம் போர்த்துவதற்கு.
    • இந்தியா தமிழீழம் என்பதற்கு மிகவும் எதிரானது. இன்னும் சொல்லப்போனால் சமஷ்ட்டி, ஒன்றுபட்ட நாட்டிற்குள் அதிகாரம் மிக்க பிராந்தியங்கள் ஆகியவற்றிற்கும் கூட இந்தியா எதிரானது. ஆகவே, மதுரை ஆதீனம் தன் பங்கிற்கு இதனைச் சொல்லிவிட்டுப் போகலாம், மோடிக்குத் தெரியும் என்ன செய்ய வேண்டும் என்பது. அண்மையில்க் கூட இலங்கை அரசாங்கத்தை மகிழ்ச்சிப்படுத்த இல்லாத புலிகள் மீதான தடையினை மேலும் 5 வருடங்களுக்கு நீட்டித்துக் காட்டியிருக்கிறார் அவர்.  தமிழர்களுக்கு ஈழத்தை எடுத்துக் கொடுப்பதில் உண்மையான அக்கறையுடன் செயற்ப்பட்டவர்கள் புலிகள் மட்டும்தான். வேறு எவரிடமும் நாம் வைக்கும் கோரிக்கைகள் செவிடன் காதில் பேசுவதற்கு ஒப்பானது. 
    • தமிழருக்கெதிரான அடக்குமுறையினை அரசமயப்படுத்தியவர்களில் முதன்மையானவர் ஜெயவர்த்தன. 1983 ஆம் ஆண்டு இனக்கொலையே இதற்குச் சாட்சி. அவரால் உருவாக்கப்பட்ட சர்வ வல்லமை பொருந்திய ஜனாதிபதி எனும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பதவியும் ஒற்றையாட்சி முறைமையுமே தமிழர்களின் அபிலாஷைகளுக்கு பிரதான முட்டுக்கட்டையாக இருந்து இனக்கொலையினை நடத்திவருபவை. இப்பதவியில் அமர்ந்த அனைத்துச் சிங்கள ஜனாதிபதிகளுமே தமிழரின் இனவழிப்பில் தமது பங்கினைத் தவறாமல்ச் செய்து வந்தவர்கள் தான்.  ஆகவே, இவ்வாறான இன்னுமொருவரை பதவியில் அமர்த்துவதற்குத் தமிழ் மக்கள் ஆர்வம் காட்டவேண்டிய தேவை இல்லையென்பதை சாதாரணமாகச் சிந்திக்கும் எவரும் இலகுவாக உண‌ர்ந்துகொள்வார்கள். ஆகவே, இதற்கான தமது எதிர்ப்பினைக் காட்டவே தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் தேவை என்பதையும் அவர்களால் உணர்ந்துகொள்ள முடியும். ஆனால், அப்படியா எல்லோரும் இருக்கிறோம், இல்லையே?! சிலருக்கு வெளிப்படையாகத் தெரிவதையே புரிந்துகொள்ளும் ஆற்றல் இல்லாமலிருக்கிறதே, என்ன செய்வது ?! 
    • ஸ்கொட்லாந் க‌டிமையாக‌ போராடின‌வை சூப்ப‌ர்8க்கு போக‌ ஆனால் அது ந‌ட‌க்க‌ல‌   இங்லாந் சூப்ப‌ர்8க்கு போய் பெரிசா சாதிக்க‌ போவ‌து கிடையாது.................................
    • 10 ஓவர் முடிய இனி என்ன தோல்வி தானே படுப்பம் என்றால் சரி 15 ஓவர்வரை பார்ப்போம் என்று இருந்தேன்.பரவாயில்லை.நிம்மதியான தூக்கம்.
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.