Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழரும் பெரியாரும் இராமனும் கம்பன் கோட்டமும்-2

Featured Replies

தயா!

நீங்கள் எழுதிய கருத்துக்கள் எதுவும் இங்கே நீக்கப்படத் தேவையில்லை என்பதுதான் என்னுடைய கருத்து.

நீங்கள் கருத்துக்களை கண்ணியமான முறையில் தெரிவிக்கிறீர்கள். உங்களுடைய எழுத்துக்கள் யார் மீது வெறுப்புக்களையும், குரோதங்களையும் கொட்டவில்லை.

உங்களுடைய கருத்துக்கள் எனக்கு தவறாகப் படுகிறது. ஆனால் நீக்கப்படுகின்ற அளவிற்கு பண்பு மீறி நீங்கள் இங்கே எழுதிய கருத்துக்கள் இல்லை.

*********

Edited by harikalan

  • கருத்துக்கள உறவுகள்

80கள், அல்லது அதற்கு அண்மைய காலத்தில் கொடுக்கப்பட்ட ஆதரவுகளுக்கும், 90களின் பிற்பகுதியில் கொடுக்கப்பட்ட ஆதரவுக்கும் நிறையவே வேறுபாடு உண்டு.

80களில் இந்திராக்காந்தியும் ஆதரவு தந்தார், எம்ஜிஆர் தந்தார், கருணாநிதி தந்hர். ஏன் இயக்கத்தை விரோதமாகப் பார்க்கின்ற ஜெயலலிதா ஆதரித்துப் பேசாத பேச்சா?

ஒருவகையில் அந்த நாட்களில் பொதுப்படையான ஆதரவு தந்தமைக்கு மரியாதை அளிக்கின்றேன். ஆனால் தயா சொன்னது போலத் தமிழர்களுக்கு வந்த சேகுவரா கிடையாது.

ஈழத்தில் தமிழ்த்தேசியம் என்பது ஓரளவு பெறுமதியாக உருவாக்கம் கொண்டிருப்பது தலைவர் பிரபாகரனின் இந்த காலத்தில் தான் தவிர முன்னெப்போதும் அல்ல. தேசத்தில் வாழும் அனைத்து தரப்பு மக்களையும் உள்வாங்கி அனைத்து தரப்பு மக்களின் உரிமைகளையும் மதிக்கின்ற அதே நேரம் அனைத்து தரப்பு மக்களும் சரி சமமாக போராட்டத்தில் பங்கு பெறும் நிகழ்வு இப்போது தான் நிகழ்கின்றது. இங்கே ஓரளவு என்று நான் குறிப்பிடுவதுக்கு காரணம் இருக்கின்றது. மதவாரியாக வேறுபட்டு நிற்கும் இஸ்லாமிய சமூகத்தினருக்கும் ஏனைய தரப்ப்பும் மொழி வாழ்விடம் அடிப்படையில் ஒன்றிணையும் போது தான் ஓரளவு என்பது முழுமை பெறும்.

தலைவர் பிரபாகரனுக்கு முற்பட்ட காலத்தில் தமிழ்தேசியம் என்பது அடிமட்ட மக்களும் சம்மந்தப்பட்டதில்லை. அது மேட்டுக்குடியின் பிரதிபலிப்பு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்திய தேசியம் என்பது அடிமட்ட மக்களை பிரதிபலிக்கும் ஒன்றாகவோ அல்லது அனைத்து தரப்பு மக்களின் வாழ்வுரிமைகளையும் மதிக்கும் ஒன்றாகவே எந்த காலத்திலும் இருந்ததில்லை. இப்போதும் இல்லை. இந்திய தேசியம் என்பது அங்கு உயர்வர்கத்தின் ஒரு கருவியாகவே என்றும் இருந்து வருகின்றது. இந்த நிலைப்பாட்டுக்கு தமிழ்நாடும் ஒரு விதிவிலக்கல்ல.

தேசியம் ஒரு தரப்பின் வாழ்வுரிமையை மறுதலிக்கின்றது என்றால் அந்த தரப்பு தேசியத்தை தலையில் தூக்கி வைத்து ஆடத்தேவையில்லை. இன்றைய தாழ்தப்பட்ட மக்களுக்கு இந்திய தேசியம் எதிரானது என்பது வெளிப்படை. இந்த நிலையில் இந்திய அதிகார வர்கத்துக்கு எதிராக போராட வேண்டிய தேவைதான் அவர்களிடம் உண்டு தவிர இந்திய தேசியம் என்றொரு மாயையை கட்டிக்கொண்டு அழவேண்டிய அவசியம் என்ன அவர்களுக்கு உண்டு?

உதாரணத்துக்கு ஈழத்தமிழர்களில் நாவலர் மட்டுமே குறிப்பிடும் படியாக காலனித்துவ அரசை எதிர்த்தார் என்பது தெரிந்த ஒன்று. அவர் எதிர்ததுக்கான காரணமும் தெரிந்த ஒன்று. அவரின் செயற்பாட்டை ஈழ தேசய செயற்பாடாக முன்னெடுத்தால் ஈழத்தில் நாவலரின் சாதியை தவிர்ந்த ஏனைய சாதிகளுக்கு அந்த தேசியம் விரோதமானதாக இருப்பதில் என்ன ஆச்சரியம் இருக்கப்போகின்றது? ஏனெனில் நாவலரின் சாதியம் சம்மந்தமான நிலைப்பாடு என்ன என்பதும் வெளிப்படையானது.

ஈழத்தில் முன்பு அடயாளப்படுத்தப்பட்ட தேசியம் என்பது வேறு, இப்போது உள்ள தேசியம் என்பதின் வளர்ச்சிப்போக்கு வேறு. இப்போது உள்ள வளர்ச்சியானது ஒரு முழுமையை எட்டிவிடும் என்ற நம்பிக்கை உண்டு.

காலனித்துவத்தை எதிர்ப்பது பெரியாரின் குறிக்கோளாக இருந்ததில்லை. பெரியார் கையில் எடுத்த பிரச்சனை இந்திய தேசியம் என்ற மாயைக்குள் ஒடுக்கப்படும் மக்களின் உரிமைகள் சார்ந்தது. பெரியார் காலத்தில் அவர் தேசியத்தை தலையில் தூக்கி வைத்து ஆட வேண்டிய தேவை இல்லை. அவர் கையில் எடுத்த விசயங்கள் அது சார்ந்ததும் இல்லை. ஆனால் பெரியாரின் செயற்பாடுகளின் விழைவுகள் ஒரு பெறுமதியான தேசிய வளர்ச்சிக்கு அல்லது இந்திய தேசியத்திலும் அரசிலும் கணிசமான பங்கு மேலும் இந்திய அதிகார வர்க்கத்தை நோக்கி உரிமைகள் கேட்க கூடிய வலு என்பன வளர வித்திட்டது என்பது உண்மை.

தேசியம் என்பது தேசத்தில் வாழும் அனைத்து தரப்பு மக்களையும் அவர்களினது உரிமைகளையும் பிரதிபலிக்கும் ஒன்றாக இல்லதாத பட்சத்தில் அதனை முக்கியத்துவப்படுத்த வேண்டிய தேவை எதுவும் இல்லை. வாழ்வுரிமையை மறுதலிப்பது தேசியமாக இருந்தால் அதையும் எதிர்க்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.

தலைவர் பிரபாகரன் காலத்தில் நாம் காணும் தேசிய எழுச்சி என்பது தமிழர் வரலாற்றில் ஒரு புதிய விசயம். தமிழர் தேசியம் இப்போது உள்ளது போல் எந்தக்காலத்திலும் வலுவாக இருந்ததில்லை. ஆரோக்கியமாக இருந்ததில்லை. இந்த தேசிய வாத எழுச்சியை முழுமையடைய செய்ய வேண்டும். அதற்கு அனுசரிப்புகள் விட்டுக்கொடுப்புகள் என்னும் எராளமான நல்ல விசயங்கள் செய்ய வேண்டியுள்ளது.

தயா!

உங்களுடைய கருத்துக்கள் எனக்கு தவறாகப் படுகிறது. ஆனால் நீக்கப்படுகின்ற அளவிற்கு பண்பு மீறி நீங்கள் இங்கே எழுதிய கருத்துக்கள் இல்லை.

எனது கருத்துக்களை தேவை ஏற்பட்டால் நீக்க சொன்னதுக்கு முக்கிய காரணமே இண்றைக்கு தமிழீழ தேசியத்துக்காக பாடு படும் எல்லோரிலும் அங்கமாக திகழும் பெரியாரின் வளிவந்தவர்களை காயப்படுத்த வேண்டாம் என்பதினால் மட்டும்தான்... எங்களின் விடுதலைக்கு எல்லோரின் உதவியும் வேண்டும்... அதனால்தான்...!

மற்றும் உங்களு்க்கு தெரிந்த விடயம் எண்டாலும் ஒருமுறை மீண்டும் சொல்ல ஆசைப்படுகிறேன்...

1956 ம் வருடம் . சிங்களம் தனிச்சட்டம்தான் தமிழரை விடுதலை நோக்கி பயனிக்க தள்ளியது என்பது உங்களுக்கு தெரியாதது இல்லை... அதே காலப்பகுதியில் அறிஞர் அண்ணாவின் தி. மு. க தலைமையில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டங்களும் கட்டுரைகளும், மேடை பேச்சுகளும் பரவலாக ஈழத்துக்கும் எட்டிய காலப்பகுதி அது...!!

அந்த காலப்பகுதியில் தான் தமிழரசு கட்சியும் சரி, பேரவையும் சரி அறிஞர் அண்ணாவின் செயற்பாடுகளால் உந்தப்படார்கள், செயற்படார்கள் எண்று சொன்னால் மிகையானது அல்ல... அதில் தந்தை செல்வா திமுக தலைவர் அண்ணாவை அடிக்கடி சந்தித்து ஆதரவையும் ஆலோசனைகளையும் பெற்றும் இருக்கிறார்....! இதில் கலைஞர் கருணாநிதியின் பேச்சுகள் ஈழத்தில் மிகவும் பிரபல்யம்.. அதில் கவரப்பட்டவர்கள் எனது குடும்பதில் பலர் இருந்தனர்.. அவர் இந்தியை எதிர்த்து பேசவில்லை சிங்களதை பற்றித்தான் பேசுகிறார் எனும் உணர்வை தோற்றுவித்தவர் கலைஞர்.... தமிழீழ எழுச்சியை தோற்றுவித்தவர்களுக்கு உற்ற்சாகம் தந்தவர்கள் அறிஞர் அண்ணாத்துரையும் அவர் தொண்டர்களும் தானே அண்றி பெரியார் அல்ல...!

விடயம் இப்படி இருக்க, அண்ணாவால் தமிழக தமிழர் தேசியம் எழுச்சியாக்க பட்டதை பெரியார் கண்டிக்கிறார்...( இதைத்தான் நீங்கள் இந்திய தேசியதை கண்டித்ததாக அர்த்தப் படுத்தி உள்ளீர்கள்) அவர் சொன்னதில் அறிஞர் அண்ணாவின் தேசியம் மீண்டும் இன்னும் ஒரு சுறண்டலை தமிழக தாள்த்த பட்ட மக்களுக்கு செய்து இன்னல்கலை விளைவிக்க கூடாது எனும் நல்ல நோக்கமாக கூட இருந்து இருக்கலாம்...!

ஆனால் பெரியார் அவ்வளவாக ஈழத்தமிழர் பிரச்சினைகளில் நாட்டம் இல்லாதோ, இல்லை அறிந்து கொள்ளாதவராகவோதான் இருந்தார்... அதுக்காக பெரியாரை நான் குறை சொல்ல வரவில்லை... அவரின் நாட்டில் மட்டும் அவர் அக்கறைகொள்வதை நான் எப்படி குறையாக சொல்ல முடியும்... ??

ஆனால் அறிஞர் அண்ணா பெற வேண்டிய ஒரு பெரு்மையை பெரியாருக்கு நான் கொடுக்க விரும்பவில்லை...

யாழ்களத்தில் இளங்கோ அவர்கள் பேரவை தலைவராக இருந்த சத்தியசீலன் அவர்களின் பேட்டி ஒண்றை இணைத்து இருந்தார்.. அதில் சத்தியசீலன் அவர்கள் பெரியாரை சந்தித்ததை கனிவாகவும் மகிழ்வாகவும் சொல்கிறார்...

  • " 1971 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நாங்கள் பெரியாரைச் சந்தித்தோம். அப்போது பெரியார் உடல் நலமில்லாமல் திருச்சியில் தங்கியிருந்தார். அவரைச் சந்தித்து எங்களின் போராட்டத்தை விளக்கினோம். அப்போது அவர் சிங்களவன் பெரிய பெரிய டாங்கிகள் பீரங்கிகளால் உங்கள் எல்லாரையும் நசுக்கிப் போடுவானே என்று கவலைப்பட்டுக் கூற, நாங்கள் இல்லை ஐயா அதையும் எதிர்த்து நாங்கள் உறுதியாகப் போராடுவேம் என்றோம். அவர் உடனே நீங்கள் உங்கள் போராட்டத்தை விளக்கி எனக்கு எழுதித் தாருங்கள் நான் விடுதலையில் போட்டுவிடுகிறேன் என்றார்.

1971 ம் ஆண்டுவரை பெரியாருக்கு ஈழத்தில் என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை எண்று நான் சொல்ல வரவில்லை... அவர் செய்ய நல்லதுகளில் அந்த கட்டுரையை விடுதலையில் பிரசுரிக்க சொன்னதாக இருக்கலாம்.... ஆனால் பெரிதாக ஈழதமிழரின் விடிவுக்காக பெரியார் பாடுபட வில்லை, குரல் கொடுக்கவில்லை......!

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.