Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈ.பி.டி.பி. எம்.பி. விகாரைக்கு நிதி ஒதுக்கீடு

1905279526.jpg

(ஆதவன்)

வவுனியாவின் எல்லையில் உருவாக்கப்பட்ட சிங்களக் குடியேற்றக் கிராமங்களில் ஒன்றான நந்திமித்திரகம கிராமத்தில் விகாரை அமைப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் நிதி ஒதுக்கியுள்ளார்.

அங்குள்ள விகாரையின் அபிவிருத்திப் பணிகளுக்காக 10 இலட்சம் நிதியை நாடாளுமன்ற உறுப்பினர் ஒதுக்கியுள்ளதுடன், அங்கு புதிதாக அமைக்கப்படவுள்ள கட்டடம் ஒன்றுக்கான அடிக்கலையும் நட்டுள்ளார்.

அதேவேளை, கம்பிலிவெவ சிங்களக் குடியேற்றக் கிராமத்துக்கும் பல்வேறு அபிவிருத்திப் பணிகளுக்காக 19 இலட் சம் ரூபா நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபனால் அண்மையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.(ச)

 

https://newuthayan.com/article/ஈ.பி.டி.பி._எம்.பி._சிங்களவரின்_விகாரைக்கு_நிதி_ஒதுக்கீடு

 

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு வாக்களித்த கிளிநொச்சி வாக்காளர்கள்தான் இதுகுறித்துக் கேட்கவேண்டும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ரஞ்சித் said:

இவருக்கு வாக்களித்த கிளிநொச்சி வாக்காளர்கள்தான் இதுகுறித்துக் கேட்கவேண்டும். 

கிளிநொச்சி யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் உள்ளது. வன்னியில் வாக்களிப்பின்போது தேசியக் கட்சிகள் பிளவுபட்டு தேர்தலில் நின்றதால்தான் ஈபிடிபிக்கு ஒரு ஆசனம் கிடைத்தது!  அடுத்தமுறை இரண்டு கிடைக்கலாம்!

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

கிளிநொச்சி யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் உள்ளது. வன்னியில் வாக்களிப்பின்போது தேசியக் கட்சிகள் பிளவுபட்டு தேர்தலில் நின்றதால்தான் ஈபிடிபிக்கு ஒரு ஆசனம் கிடைத்தது!  அடுத்தமுறை இரண்டு கிடைக்கலாம்!

தேசிய நீக்கம், புலிநீக்கம் செய்யும் ஜனநாயக, இணக்க அரசியல்வாதிகள் இதுகுறித்துக் கவலைப்படப் போவதில்லை. தமிழர்களின் பிரதேச அபிவிருத்தி நோக்கிப் பயன்படுத்தப்பட வேண்டிய பணம் சிங்களக் குடியேற்றத்திற்கும், பெளத்த மயமாக்கலுக்கும் பயன்படுத்தப்படுவது கண்டு தமிழர்கள் பெருமைப்பட வேண்டும். இனியென்ன, அடையாளம் துறந்து, இலங்கையர்களாக இணைந்து, சிங்களவர்களுடன் ஒன்றுபட்டு, எமது சுய நலன்களைக் காத்துக்கொள்வோம். நீங்கள் எப்படி? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

நீங்கள் எப்படி? 

நான் இலங்கையன் என்று ஒருபோதும் சொல்லுவதில்லை. பிறந்தது இலங்கை என்றாலும் இலங்கையன்/ஶ்ரீலங்கன் எனும் அடையாளத்தில் உள்ள வெறுப்பு இன்னும் குறையவில்லை. ஆனால் மடச்சாம்பிராணிகளாக இருக்கும் தமிழ் அரசியல்வாதிகளால் தமிழ் மக்களை ஒரு இனமாக திரட்டமுடியாமல் இருப்பதைத்தான் கடந்த 15 வருட வரலாறு சொல்கின்றது. வளர்ந்து வரும் இளைஞர்கள் தேசிய உணர்வுகளை அடையாளநாட்களில் மட்டும் காட்டுவார்கள். மற்றும்படி கேளிக்கை மனநிலையில்தான் உள்ளனர். அது அவர்களின் தவறும் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

 மடச்சாம்பிராணிகளாக இருக்கும் தமிழ் அரசியல்வாதிகளால் தமிழ் மக்களை ஒரு இனமாக திரட்டமுடியாமல் இருப்பதைத்தான் கடந்த 15 வருட வரலாறு சொல்கின்றது. வளர்ந்து வரும் இளைஞர்கள் தேசிய உணர்வுகளை அடையாளநாட்களில் மட்டும் காட்டுவார்கள். மற்றும்படி கேளிக்கை மனநிலையில்தான் உள்ளனர். அது அவர்களின் தவறும் இல்லை. 

தற்போது இது போன்ற வசனங்களை அதிகம் காண கேட்கக் கூடியதாக இருக்கிறது. 

உண்மையில் இது ஆட தெரியாதவனுக்கு மேடை கோணல் என்ற சாட்டாகத்தான் நான் பார்க்கிறேன். 

உண்மையில் இந்த சந்ததி தாம் எதிலும் பங்கெடுக்காது தூங்கிக் கொண்டு பெரியவர்கள் எம்மை சரியாக வழி நடத்தவில்லை என்று புலம்புவது இதன் முதல் தலைமுறையான எம்மையும் அவர்கள் மறந்து விட்டார்கள் என்பதை தான் காட்டுகிறது. ஏனெனில் நாம் எமது பெரியவர்களையும் நாமே வழி நடாத்தி காட்டி இருக்கிறோம். 

முன்பை விட தற்போது தேவையும் ஒற்றுமையும் அதிகமாக தேவைப்படும் போது அவர்கள் ஆளை ஆள்......???

Edited by விசுகு
எழுத்துப்பிழை

36 minutes ago, விசுகு said:

 

உண்மையில் இந்த சந்ததி தாம் எதிலும் பங்கெடுக்காது தூங்கிக் கொண்டு பெரியவர்கள் எம்மை சரியாக வழி நடத்தவில்லை என்று புலம்புவது இதன் முதல் தலைமுறையான எம்மையும் அவர்கள் மறந்து விட்டார்கள் என்பதை தான் காட்டுகிறது. ஏனெனில் நாம் எமது பெரியவர்களையும் நாமே வழி நடாத்தி காட்சி இருக்கிறோம். 

 

இரத்தமும் உயிரும் கொடுத்த, கடும் இராணுவ மற்றும் தமிழ் கொலைக் குழுக்களின் அச்சுறுத்தல்களுக்கும் மத்தியிலும் போராளிகளுக்கு அடைக்கலமும் உதவிகளும் புரிந்த, அப்பணிப்பு நிறைந்த போராட்டத்தை வளர்த்து எடுத்த ஒரு தலைமுறையால் தான் இன்றைய தலைமுறை பெற்று, வளர்த்து எடுக்கப்படுகின்றனர் என்பதையும் நினைவில் வைத்து இருங்கள்.

தம் தியாங்கள் வீணாகி மண்ணோடு மண்ணாகிப் போனதையும் பார்த்து வெறுத்த தலைமுறையும் அவர்களே /நாமே


 

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, நிழலி said:

இரத்தமும் உயிரும் கொடுத்த, கடும் இராணுவ மற்றும் தமிழ் கொலைக் குழுக்களின் அச்சுறுத்தல்களுக்கும் மத்தியிலும் போராளிகளுக்கு அடைக்கலமும் உதவிகளும் புரிந்த, அப்பணிப்பு நிறைந்த போராட்டத்தை வளர்த்து எடுத்த ஒரு தலைமுறையால் தான் இன்றைய தலைமுறை பெற்று, வளர்த்து எடுக்கப்படுகின்றனர் என்பதையும் நினைவில் வைத்து இருங்கள்.

தம் தியாங்கள் வீணாகி மண்ணோடு மண்ணாகிப் போனதையும் பார்த்து வெறுத்த தலைமுறையும் அவர்களே /நாமே

நீங்கள் நாங்க வளர்த்த அல்லது எங்களை பார்த்து வளர்ந்த தலைமுறை ராசா. உண்மையை சொன்னால் உங்களுக்கு வேறு வழிகள் இருக்கவில்லை.

இப்போது நீங்கள் வளர்க்கின்ற அல்லது உங்களை பார்த்து வளரும் தலைமுறை சார்ந்து தானே கேள்வி....???

1 hour ago, விசுகு said:

நீங்கள் நாங்க வளர்த்த அல்லது எங்களை பார்த்து வளர்ந்த தலைமுறை ராசா. உண்மையை சொன்னால் உங்களுக்கு வேறு வழிகள் இருக்கவில்லை.

இப்போது நீங்கள் வளர்க்கின்ற அல்லது உங்களை பார்த்து வளரும் தலைமுறை சார்ந்து தானே கேள்வி....???

உங்கள் கேள்வியை சரியாக விளங்கிக் கொண்டேனோ தெரியவில்லை.

2009 இன் பின் பிறந்த தலைமுறை மற்றும், அதற்கு 10 வருடங்களுக்கு முன் பிறந்தவர்களை பெற்ற தலைமுறையை நான் குறிப்பிட்டு இருந்தேன். நான் குறிப்பிடும் இத் தலைமுறையில் இருப்பவர்கள் இன்று 40 தொடக்கம் 55 வயதுக்குள் இருப்பார்கள். அதுவும் எம்மைப் போல் புலம்பெயராமல். அத்தனை அழிவுகளையும் நேரில் சந்தித்த தலைமுறை இவர்கள். 

இவர்களால் வளர்க்கப்படும் தலைமுறையினர் தான் இன்று பலருக்கு பொறுத்துக் கொள்ள முடியாமல், 'கேளிக்கைகளுக்குள் மூழ்கிக் கிடக்கின்றனர் என்று குற்றம் சாட்டப்படுகின்றவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, நிழலி said:

உங்கள் கேள்வியை சரியாக விளங்கிக் கொண்டேனோ தெரியவில்லை.

2009 இன் பின் பிறந்த தலைமுறை மற்றும், அதற்கு 10 வருடங்களுக்கு முன் பிறந்தவர்களை பெற்ற தலைமுறையை நான் குறிப்பிட்டு இருந்தேன். நான் குறிப்பிடும் இத் தலைமுறையில் இருப்பவர்கள் இன்று 40 தொடக்கம் 55 வயதுக்குள் இருப்பார்கள். அதுவும் எம்மைப் போல் புலம்பெயராமல். அத்தனை அழிவுகளையும் நேரில் சந்தித்த தலைமுறை இவர்கள். 

இவர்களால் வளர்க்கப்படும் தலைமுறையினர் தான் இன்று பலருக்கு பொறுத்துக் கொள்ள முடியாமல், 'கேளிக்கைகளுக்குள் மூழ்கிக் கிடக்கின்றனர் என்று குற்றம் சாட்டப்படுகின்றவர்கள்.

அவர்கள் அப்படி இருக்க அல்லது வளர்க்கப்பட பல்வேறு காரண காரியங்கள் இருக்கலாம். வழி நடத்தும் தலைவர்கள் சரியில்லை என்பது எவ்வளவு உண்மையானது என்பதே எனது கேள்வி. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

இவர்களால் வளர்க்கப்படும் தலைமுறையினர் தான் இன்று பலருக்கு பொறுத்துக் கொள்ள முடியாமல், 'கேளிக்கைகளுக்குள் மூழ்கிக் கிடக்கின்றனர் என்று குற்றம் சாட்டப்படுகின்றவர்கள்.

இது குற்றச்சாட்டு இல்லை.  சமூகவலை உலகமாக மாறியுள்ள இந்தக் காலத்தில் எல்லோரும் கேளிக்கைகளையே விரும்புகின்றனர்.  எதையும் கொண்டாடவே விரும்புகின்றனர். அண்மையில் முகநூலில் ஒரு கோவில் திருவிழாவின்போது குத்தாட்டப் பாடலுக்கு பெரும்தொகையான இளைஞர்கள் ஆடிக்கொண்டிருந்தனர். புலம்பெயர் நாடுகளில் நடனவிடுதிகள், அல்லது திறந்தவெளி இசைநிகழ்வுகளில் ஆடுவதுபோன்றே அவர்களும் ஆடுகின்றனர்.  அதுதான் நடப்பு நிலை.. அதனால்தான் பெரும்பாலோனார் முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளுக்குப் போவதைவிட, இந்திரவிழாவுக்கும், வெசாக் விழாக்களுக்கும் போகின்றனர். 

எங்கள் தலைமுறையினருக்கு தேசிய உணர்வை பாடசாலைகளில், தனியார் கல்விக்கூடங்களில் இருந்தே ஊட்டினர். அங்கு போராடப் போங்கள் என்று யாரும் நேரடியாகச் சொன்னதில்லை. ஆனால் போராட்ட சிந்தனைக்கு விதையை ஊன்றினார்கள். எனக்குக் கல்விகற்பித்த ஆசிரியர்களில் பலர் பகுத்தறிவோடு, இனவுணர்வையும், தமிழரின் பெருமிதங்களையும், அடக்குமுறைக்கு எதிரான போராட்டங்களின் வரலாறுகளையும் சொல்லித் தந்தனர். ஒரு சில ஆசிரியர்களின் பிள்ளைகள் ஆயுதப் போராட்டத்தில் இணைந்தும் இருந்தனர், உயிர்களைத் துறந்தும் இருந்தனர். 

இப்போது ஒழுக்கத்தையும், ஆளுமையையும் கற்பிக்க இராணுவத்தைக் கூப்பிடும் நிலை! இப்படியான மாற்றங்கள் உள்ள சமூகத்தில் தேசிய உணர்வு காணாமல் போவதில் வியப்பில்லை. 

 

3 hours ago, கிருபன் said:

 

எங்கள் தலைமுறையினருக்கு தேசிய உணர்வை பாடசாலைகளில், தனியார் கல்விக்கூடங்களில் இருந்தே ஊட்டினர். அங்கு போராடப் போங்கள் என்று யாரும் நேரடியாகச் சொன்னதில்லை. ஆனால் போராட்ட சிந்தனைக்கு விதையை ஊன்றினார்கள். எனக்குக் கல்விகற்பித்த ஆசிரியர்களில் பலர் பகுத்தறிவோடு, இனவுணர்வையும், தமிழரின் பெருமிதங்களையும், அடக்குமுறைக்கு எதிரான போராட்டங்களின் வரலாறுகளையும் சொல்லித் தந்தனர். ஒரு சில ஆசிரியர்களின் பிள்ளைகள் ஆயுதப் போராட்டத்தில் இணைந்தும் இருந்தனர், உயிர்களைத் துறந்தும் இருந்தனர். 

இப்போது ஒழுக்கத்தையும், ஆளுமையையும் கற்பிக்க இராணுவத்தைக் கூப்பிடும் நிலை! இப்படியான மாற்றங்கள் உள்ள சமூகத்தில் தேசிய உணர்வு காணாமல் போவதில் வியப்பில்லை. 

 

அன்று ஒரு நம்பிக்கை தரக்கூடிய,ஒழுக்கம் நிறைந்த தலைமை இருந்தது. என்ன நடந்தாலும் தலைவர் இருக்கின்றார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்பதை முற்றுமுழுதாக நம்பக் கூடிய சூழல் இருந்தது.. எனவே ஆசிரியர்களும் சரி, ஏனையவர்களும் சரி, தமிழ் தேசிய உணர்வை மேலும் வலுப்படுத்த தம்மாலான அனைத்தையும் செய்தனர்.

ஆனால் இன்று இருப்பவர்கள், தலைத்துவம் என்றால் என்னவென்றே தெரியாத, ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூவாக மிஞ்சியிருக்கும் அரசியல்வாதிகள். இவர்களை நம்பி எவரும் பின்னால் போகப் போவதும் இல்லை, அவர்களை நம்பி இளையவர்களை தயார்படுத்தப் போவதும் இல்லை.

சிங்களத்தை விட, இந்த தமிழ் அரசியல்வாதிகள் தான் தமிழ் தேசிய உணர்வு முன்னரைப் போல் கூர்மையடையக் கூடாது என்று நினைப்பவர்களாக இருப்பர். கூர்மையடைந்தால் தம் இருப்புக்கே ஆபத்து என்பதை உணர்ந்தவர்களாக மட்டுமன்றி, ஏற்கனவே போராட்ட காலத்தில் அப்படியான ஆபத்தை எதிர் நோக்கியவர்களாகவும் இருந்தவர்கள் எனபதால், இவர்கள் ஒரு போதும் தமிழ் தேசிய உணர்வை ஒரு கட்டத்துக்கு மேல் கூர்மையடைய விடமாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, கிருபன் said:

ஒரு கோவில் திருவிழாவின்போது குத்தாட்டப் பாடலுக்கு பெரும்தொகையான இளைஞர்கள் ஆடிக்கொண்டிருந்தனர். புலம்பெயர் நாடுகளில் நடனவிடுதிகள், அல்லது திறந்தவெளி இசைநிகழ்வுகளில் ஆடுவதுபோன்றே அவர்களும் ஆடுகின்றனர்.  அதுதான் நடப்பு நிலை..

நூறுவீதம் உண்மை
மேற்குலக நாடுகளில் உள்ள திறந்தவெளி இசைநிகழ்வுகள் நடனவிடுதிகளுக்கு பதிலாக இலங்கையில் வாழ்கின்ற  மக்கள் கோவில் திருவிழா வெசாக் கொண்டாட்டங்களை பாவிக்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் நாம் நல்ல தலைமையை இழந்து விட்டோம் , அதன் பின் வந்த தமிழ் சுயநல வாதிகளினால் எமது நியாயமான நோக்கம் அழிந்து விடுகின்ற நிலையில் இப்ப உள்ள பெற்றோர்கள் அந்த வழியில் சிந்திப்பதை நிறுத்தி சுயநல வட்டத்திற்குள் வந்து விட்டார்கள் . அதனால் அவர்கள் பிள்ளைகளும் நோக்கத்தை விட்டு மாறிக்கொண்டு இருக்கின்றார்கள் . இதன் பின்னணி சிங்களம் . நாம் செய்யவேண்டியது நல்ல தலைமையை உருவாக்க முயற்ச்சி செய்யவேண்டும். 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.