Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN   11 JUL, 2024 | 10:36 AM

image
 

சூழல் பாதிப்புகள் குறித்த கரிசனைகள் வெளியாகியுள்ள போதிலும் அரசாங்கத்தின் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் தொடர்பில் எந்த விட்டுக்கொடுப்பிற்கும் தயாரில்லை என அரசாங்ககத்தின் உயர்வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் வட்டாரங்களே இதனை தெரிவித்துள்ளன.

காற்றாலை மின்உற்பத்தி திட்டம் தொடர்பான இடம்குறித்து எந்த விட்டுக்கொடுப்பிற்கும் தயாரில்லை என தெரிவித்துள்ள மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சக வட்டாரங்கள் சூழல் பாதிப்புகளை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு மாத்திரம் அரசாங்கம் தயார் என குறிப்பிட்டுள்ளன.

மன்னார் பூநகரியில் உருவாகவுள்ள அதானி கிறீன்ஸ் நிறுவனத்தின் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தினால் சூழலுக்கு பாதிப்பு  அந்த திட்டம் தொடர்பில் போதிய வெளிப்படைதன்மை இல்லை போன்ற கரிசனைகள் வெளியாகியுள்ளதுடன் இது தொடர்பில் நீதிமன்றில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

மன்னாருக்கு 150 க்கும் மேற்பட்ட வகை பறவைகள் வருவதற்கு காரணமான மத்திய ஆசிய பறப்புபாதையில் உருவாகவுள்ள இந்த திட்டத்திற்கு இலங்கையின் பேண்தகு எரிசக்தி அதிகாரசபை அனுமதியை கோரியுள்ளது.

எனினும் இந்த பகுதியிலேயே காற்றலை மின் உற்பத்திக்கு அதிக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள உயர் அதிகாரியொருவர் ஆகவே இது குறித்து எந்த விட்டுக்கொடுப்பையும் செய்ய முடியாது என தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த திட்டம் காரணமாக வலசப்பறவைகளின் பாதைகள் அவற்றின் வாழ்விடங்கள் மற்றும் இனப்பெருக்க முறைகள் ஆகியவற்றுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கதயார் என அந்த அதிகாரிதெரிவித்துள்ளார்.

இந்த பாதிப்புகளை சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு நாங்கள் தயார் , என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/188185

  • கருத்துக்கள உறவுகள்

சுற்றுச் சூழலைப் பற்றி இங்கு அரசு கவலைப் படவில்லை. 
இந்திய நிறுவனத்தை திருப்திப் படுத்துவதிலேயே அரசாங்கம் முனைப்பு காட்டுகின்றது.

தீவுப்குதி, மன்னார், திருகோணமலை, பூநகரி என்று தமிழர் வாழும் பகுதிகளையே குறி வைத்து கெடுப்பது ஏன்?
போய்…. சிங்களவர் பகுதிகளில் உங்கள் திட்டங்களை செயல்படுத்த வேண்டியதுதானே…

அவன் ஒற்றுமையாக எதிர்ப்பான் என்ற பயமா…. 
நமக்கு வாய்த்த அரசியல் வாதிகளால் எத்தனை துன்பத்தை  அனுபவிக்க வேண்டி உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

சுற்றுச் சூழலைப் பற்றி இங்கு அரசு கவலைப் படவில்லை. 
இந்திய நிறுவனத்தை திருப்திப் படுத்துவதிலேயே அரசாங்கம் முனைப்பு காட்டுகின்றது.

தீவுப்குதி, மன்னார், திருகோணமலை, பூநகரி என்று தமிழர் வாழும் பகுதிகளையே குறி வைத்து கெடுப்பது ஏன்?
போய்…. சிங்களவர் பகுதிகளில் உங்கள் திட்டங்களை செயல்படுத்த வேண்டியதுதானே…

அவன் ஒற்றுமையாக எதிர்ப்பான் என்ற பயமா…. 
நமக்கு வாய்த்த அரசியல் வாதிகளால் எத்தனை துன்பத்தை  அனுபவிக்க வேண்டி உள்ளது.

அனல் பறக்கும் கேள்விகள் அய்யா... உங்களை சம்பந்தரின் இடத்துக்கு எம்.பி ஆக்கி இருக்கவேணும்...😄

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, alvayan said:

அனல் பறக்கும் கேள்விகள் அய்யா... உங்களை சம்பந்தரின் இடத்துக்கு எம்.பி ஆக்கி இருக்கவேணும்...😄

உண்மையாகவா… கேட்கவே உடம்பெல்லாம் புல்லரிக்குது. 😂
அடுத்த தீபாவளிக்கு முயற்சி பண்ணி பார்ப்போம். 😛 🤪 😜 🤣

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

சுற்றுச் சூழலைப் பற்றி இங்கு அரசு கவலைப் படவில்லை. 
இந்திய நிறுவனத்தை திருப்திப் படுத்துவதிலேயே அரசாங்கம் முனைப்பு காட்டுகின்றது.

தீவுப்குதி, மன்னார், திருகோணமலை, பூநகரி என்று தமிழர் வாழும் பகுதிகளையே குறி வைத்து கெடுப்பது ஏன்?
போய்…. சிங்களவர் பகுதிகளில் உங்கள் திட்டங்களை செயல்படுத்த வேண்டியதுதானே…

அவன் ஒற்றுமையாக எதிர்ப்பான் என்ற பயமா…. 
நமக்கு வாய்த்த அரசியல் வாதிகளால் எத்தனை துன்பத்தை  அனுபவிக்க வேண்டி உள்ளது.

இந்தியாவிற்கு சிங்களம் செய்வது இராசதந்திரம். 

டமில்ஸ் செய்வதோ கழுவுதல்,.. 😁

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.