Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Capture-7.jpg?resize=741,375

பாகிஸ்தான் இளைஞர்கள் மீது பிரித்தானிய பொலிஸார் தாக்குதல்!

பிரித்தானியாவில் மான்செஸ்டர் விமானநிலையத்தில் பொலிஸார் அதிகாரிகள் சிலர், பாகிஸ்தானை சேர்ந்த இளைஞர்களை காலால் தாக்கும் காணொளியொன்று சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தாக்குதல் நேற்றிரவு நடத்தப்பட்டுள்ள நிலையில், ரோச்டேல் பொலிஸ் நிலையத்திற்கு வெளியே, நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரி ஒருவர், பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வீடியோவில், இளைஞர் ஒருவர் தரையில் விழுந்து கிடப்பதையும், அவரை நோக்கி இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள், மின்சாரம் பாய்ச்சும் துப்பாக்கியை நீட்டும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

அத்துடன், மற்றொரு இளைஞனின் தலையை பொலிஸ் அதிகாரி ஒருவர் காலால் மதிப்பதையும் அவதானிக்க முடிகின்றது.

மேலும், மற்றொரு இளைஞர் மீது மிளகு தண்ணீர் வீசி, அவரின் கழுத்தை மடக்கி இளைஞனை கீழே தள்ளும் காட்சியும் பதிவாகியுள்ளது.

அத்துடன், தற்போது வைரலாகி வரும் இந்த வீடியோவில், நபர் ஒருவரை ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் தரையில் வீழ்த்துவதையும் கைகளை பின்பக்கமாக இழுத்து வைத்திருப்பதையும், அந்த நபரை அதிகாரி ஒருவர் காலால் உதைப்பதையும் காணமுடிகின்றது.

 

இதில் பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்கான ஒரு இளைஞன் தான் சாதாரண மக்கள் எனக் கூறுவதையும் அவதானிக்க முடிகின்றது.

இந்த சர்ச்சைக்குறிய வீடியோ வெளியானதை தொடர்ந்து பிரித்தானிய, பொலிஸார் குறித்து கேள்வி எழுந்துள்ளது.

பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட பின்னரே இந்த சம்பவங்கள் இடம்பெற்றதாகவும், இதில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் மான்செஸ்டர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், இந்த தாக்குதலுக்கு இனவெறியே காரணம் என மெட்ரோபொலிட்டன் காவல்துறையின் முன்னாள் சிரேஸ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2024/1393611

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 மான்செஸ்டர் விமான நிலைய சம்பவத்தின் புதிய மற்றும் தெளிவான வீடியோ.

இவர்கள் ஒரு பிரித்தானிய போலீஸ் பெண்ணை தாக்கி மூக்கை உடைத்த குற்றவாளிகள். ஒழுங்கையும் ஒழுக்கத்தையும் மீட்டெடுத்த மான்செஸ்டர் காவல்துறைக்கு பாரிய ஆதரவு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்மைக்காலமாக ஐரோப்பிய நாடுகளில் வெளிநாட்டவர்கள்/அகதியாக வந்தவர்கள் செய்யும் அட்டூழியங்கள் அஜாரகங்களை பார்க்கும் போது காவல்துறைக்கு மேலதிக அதிகாரங்களை அந்தந்த அரசுகள் கொடுக்க வேண்டும் என நினைக்கின்றேன்.

குற்றம் செய்யும் வெளிநாட்டவர்களை  திருப்பி  அனுப்ப உத்தரவு செய்வது முதல்  கத்தி தூக்கி  அஜாரகம் செய்பவர்களை சுட்டு தள்ளும் வரைக்கும்....

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

Capture-7.jpg?resize=741,375

பாகிஸ்தான் இளைஞர்கள் மீது பிரித்தானிய பொலிஸார் தாக்குதல்!

பிரித்தானியாவில் மான்செஸ்டர் விமானநிலையத்தில் பொலிஸார் அதிகாரிகள் சிலர், பாகிஸ்தானை சேர்ந்த இளைஞர்களை காலால் தாக்கும் காணொளியொன்று சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தாக்குதல் நேற்றிரவு நடத்தப்பட்டுள்ள நிலையில், ரோச்டேல் பொலிஸ் நிலையத்திற்கு வெளியே, நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரி ஒருவர், பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வீடியோவில், இளைஞர் ஒருவர் தரையில் விழுந்து கிடப்பதையும், அவரை நோக்கி இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள், மின்சாரம் பாய்ச்சும் துப்பாக்கியை நீட்டும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

அத்துடன், மற்றொரு இளைஞனின் தலையை பொலிஸ் அதிகாரி ஒருவர் காலால் மதிப்பதையும் அவதானிக்க முடிகின்றது.

மேலும், மற்றொரு இளைஞர் மீது மிளகு தண்ணீர் வீசி, அவரின் கழுத்தை மடக்கி இளைஞனை கீழே தள்ளும் காட்சியும் பதிவாகியுள்ளது.

அத்துடன், தற்போது வைரலாகி வரும் இந்த வீடியோவில், நபர் ஒருவரை ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் தரையில் வீழ்த்துவதையும் கைகளை பின்பக்கமாக இழுத்து வைத்திருப்பதையும், அந்த நபரை அதிகாரி ஒருவர் காலால் உதைப்பதையும் காணமுடிகின்றது.

 

இதில் பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்கான ஒரு இளைஞன் தான் சாதாரண மக்கள் எனக் கூறுவதையும் அவதானிக்க முடிகின்றது.

இந்த சர்ச்சைக்குறிய வீடியோ வெளியானதை தொடர்ந்து பிரித்தானிய, பொலிஸார் குறித்து கேள்வி எழுந்துள்ளது.

பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட பின்னரே இந்த சம்பவங்கள் இடம்பெற்றதாகவும், இதில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் மான்செஸ்டர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், இந்த தாக்குதலுக்கு இனவெறியே காரணம் என மெட்ரோபொலிட்டன் காவல்துறையின் முன்னாள் சிரேஸ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2024/1393611

காய‌ம் அடைந்த‌ பெண் காவ‌ல்துறையின் ப‌ட‌ம் வீடியோ எங்கை................இது மிருக‌ செய‌ல் த‌ங்க‌ளிட‌ம் துப்பாக்கியும் காவ‌ல்துறை சீர் உடையும் இருக்கென்ற‌ திமீரில் போட்டு மிதிக்கின‌ம் இன‌த்துக்கு அப்பால் ச‌க‌ ம‌னித‌னாய் இந்த‌ செய‌லை  பார்க்கும் போது கோவ‌ம் வ‌ருது   ம‌னித‌ நேய‌த்தை நேசிக்கும் ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கும் இந்த‌ ச‌ம்ப‌வ‌ம் கோவ‌த்தை வ‌ர‌ வைக்கும் காவ‌ல்துறை மீது 

 

தேவை இல்லாம‌ ஒரு  வ‌ருட‌த்துக்கு முத‌ல் பிரான்ஸ்சில் ஒரு க‌ருத்த‌ இன‌ இளைஞ‌னை சுட்டு கொன்ற‌துக்கு அர‌சின் சொத்துக‌ள்  தீக்கிர‌ ஆக்க‌ப் ப‌ட்டு அர‌சுக்கு ப‌ல‌ கோடி ந‌ஷ்ட‌ம் அதுக்கு பிற‌க்கு பிரான்ஸ் த‌லை ந‌க‌ர‌ம் எங்கும் போராட்ட‌ம் காவ‌ல்துறை மீது தாக்குத‌ல் இப்ப‌டி ப‌ல‌ அட்டூழிய‌ங்க‌ள் ந‌ட‌ந்த‌து...................

 

இங்லாந்திலும் அதே நிலை சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்பு  க‌டைக‌ள் உடைக்க‌ப் ப‌ட்டு க‌ல‌வ‌ர‌ம் இர‌ண்டு நாள் வ‌ரை தொட‌ர்ந்த‌து

 

 

அமெரிக்காவில் க‌டைக்கு சிக‌ரேட் வேண்ட‌ போன‌ க‌ருத்த‌ இன‌த்த‌வ‌ரை போலிஸ் க‌ழுத்தில் கால‌ வைச்சு அந்த‌ க‌ருத்த‌ இன‌த்த‌வ‌ரை கொல்ல‌ வில்லையா அத‌ற்க்கு பிற‌க்கு அந்த‌ கொலை ச‌ம்ப‌வ‌ம் ஒட்டு மொத்த‌ உல‌கையே உலுக்கின‌து

 

வெளி நாட்ட‌வ‌ர்க‌ள் என்றால் போல் எல்லாரும் கெட்ட‌வ‌ர்க‌ள் கிடையாது அடைக்க‌ல‌ம் த‌ந்த‌ நாட்ட‌வ‌ர்க‌ளும் இன‌வெறி பிடித்த‌வ‌ர்க‌ளும் இருக்கின‌ம்😒☹️...............................

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

i

1 hour ago, குமாரசாமி said:

அண்மைக்காலமாக ஐரோப்பிய நாடுகளில் வெளிநாட்டவர்கள்/அகதியாக வந்தவர்கள் செய்யும் அட்டூழியங்கள் அஜாரகங்களை பார்க்கும் போது காவல்துறைக்கு மேலதிக அதிகாரங்களை அந்தந்த அரசுகள் கொடுக்க வேண்டும் என நினைக்கின்றேன்.

குற்றம் செய்யும் வெளிநாட்டவர்களை  திருப்பி  அனுப்ப உத்தரவு செய்வது முதல்  கத்தி தூக்கி  அஜாரகம் செய்பவர்களை சுட்டு தள்ளும் வரைக்கும்....

இன்னா சாமி..ஒங்கடை நாட்டில் பல நூற்றுக்கணக்கான மசூதி அரசினால் உடைக்கப்படுவதாக செய்தியில் பார்த்தேனே உண்மையா..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.