Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 7   31 JUL, 2024 | 10:36 AM

image
 

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பதுரியா நகர் பகுதியில் ஆயுதங்களுடன் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு (30) நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விஷேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர்களுக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய மேற்கொண்ட சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போதே ஆயுதங்களுடன் 43 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து ரி-56 ரக இரு துப்பாக்கிகள், ஒரு வாள், துப்பாக்கி ரவைகள் 60, மெகசீன் 2 என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், கைது செய்யப்பட்ட நபரையும் ஆயுதங்களையும் வாழைச்சேனை பொலிஸார் நீதிமன்றில் ஆஜர் படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/189868

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் துப்பாக்கிகளுடன் இஸ்லாமிய மதகுரு ஒருவர் கைது

மட்டக்களப்பு - மாஞ்சோலை பிரதேசத்தில் இஸ்லாமிய மதகுரு  ஒருவர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்ற போது விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலன்னறுவை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, அரலகங்வில விசேட அதிரடிப்படையினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது நடவடிக்கை 

ஓட்டமாவடி, மாஞ்சோலை பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய இஸ்லாமிய மதகுரு ஒருவரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, சந்தேகநபரின் மோட்டார் சைக்கிளில் இருந்து இரண்டு T.56 துப்பாக்கிகள், அறுபது தோட்டாக்கள், இரண்டு மகசீன்கள் மற்றும் ஒரு பைனாகுலர் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  

மட்டக்களப்பில் துப்பாக்கிகளுடன் இஸ்லாமிய மதகுரு ஒருவர் கைது | An Islamic Cleric Arrested With Guns In Batticaloa

மேலும், கைது செய்யப்பட்ட  சந்தேகநபரை மன்னம்பிட்டி விசேட அதிரடிப்படை முகாமிற்கு கொண்டு சென்று விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் இவரை கொழும்பிலுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவிடம் ஒப்படைப்பற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் துப்பாக்கிகளுடன் இஸ்லாமிய மதகுரு ஒருவர் கைது

அட இனி வரப்போகினம் ..அது புலிகளின் ஆயுதமாம்...எடுத்து ஆமியிடம் ஒப்படைக்க் போகையில் ஆமி பிடித்துவிட்டதாம்..

சனாதிபதி வேட்பாளர்களும் ..இதனை ஆமோதித்து மதகுரு வெளியில் விடப்படுவார்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

துப்பாக்கிகளுடன் கைதான மௌலவி: விசாரணையில் வெளியிட்ட தகவல்

மட்டக்களப்பு (Batticaloa) - மாஞ்சோலை பிரதேசத்தில் வைத்து துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட மௌலவி முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரிடம் இருந்து அவற்றை பெற்றுக்கொண்டுள்ளதாக வாக்கு மூலம் வழங்கியுள்ளார்.

துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்று கொண்டிருந்த போது குறித்த மௌலவி நேற்று (31) விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டார்.

இதன்படி, சந்தேகநபரிடமிருந்து ரி 56 ரக துப்பாக்கி, மகசீன்கள் மற்றும் 29 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டது.

துப்பாக்கிகள் மீது கொண்ட நாட்டம்

இந்நிலையில் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது குறித்த மௌலவி துப்பாக்கிகள் மீது கொண்ட நாட்டம் காரணமாக முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரிடம் இருந்து அந்த ஆயுதங்களை பெற்றுவைத்திருந்ததாக தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிகளுடன் கைதான மௌலவி: விசாரணையில் வெளியிட்ட தகவல் | Confession Of Maulavi Caught With Gun

மேலும் காவல்துறை விசேட அதிரடிப்படை அதிகாரிகள், அவரது சகோதரர் ஒருவரின் வீட்டை சோதனையிட்டதில், மற்றுமொரு ரி 56 ரக துப்பாக்கி ஒன்றும், மகசீன்கள் மற்றும் 30 தோட்டாக்கள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

துப்பாக்கிகளுடன் கைதான மௌலவி: விசாரணையில் வெளியிட்ட தகவல்

மட்டக்களப்பு (Batticaloa) - மாஞ்சோலை பிரதேசத்தில் வைத்து துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட மௌலவி முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரிடம் இருந்து அவற்றை பெற்றுக்கொண்டுள்ளதாக வாக்கு மூலம் வழங்கியுள்ளார்.

துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்று கொண்டிருந்த போது குறித்த மௌலவி நேற்று (31) விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டார்.

இதன்படி, சந்தேகநபரிடமிருந்து ரி 56 ரக துப்பாக்கி, மகசீன்கள் மற்றும் 29 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டது.

துப்பாக்கிகள் மீது கொண்ட நாட்டம்

இந்நிலையில் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது குறித்த மௌலவி துப்பாக்கிகள் மீது கொண்ட நாட்டம் காரணமாக முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரிடம் இருந்து அந்த ஆயுதங்களை பெற்றுவைத்திருந்ததாக தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிகளுடன் கைதான மௌலவி: விசாரணையில் வெளியிட்ட தகவல் | Confession Of Maulavi Caught With Gun

மேலும் காவல்துறை விசேட அதிரடிப்படை அதிகாரிகள், அவரது சகோதரர் ஒருவரின் வீட்டை சோதனையிட்டதில், மற்றுமொரு ரி 56 ரக துப்பாக்கி ஒன்றும், மகசீன்கள் மற்றும் 30 தோட்டாக்கள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இது நான் முன்னரே குறிபிட்டதுபோல் சொல்லிவிட்டார்...இனி மவுலவி புனிதர்..

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, alvayan said:

மட்டக்களப்பில் துப்பாக்கிகளுடன் இஸ்லாமிய மதகுரு ஒருவர் கைது

அட இனி வரப்போகினம் ..அது புலிகளின் ஆயுதமாம்...எடுத்து ஆமியிடம் ஒப்படைக்க் போகையில் ஆமி பிடித்துவிட்டதாம்..

சனாதிபதி வேட்பாளர்களும் ..இதனை ஆமோதித்து மதகுரு வெளியில் விடப்படுவார்...

அல்வாயன்…  இப்படித்தான் நடக்கும் என்று, முன்பே கணித்த உங்களுக்கு பாராட்டுக்கள். 🙂

தொப்பிக்காரரின் சாதகத்தை, விரல் நுனியில் வைத்திருக்கின்றீர்கள். 😅

 மௌலவி ஏன் துவக்கு வாங்கினவராம்… கொக்கு சுடவா…??? 😂 🤣

Edited by தமிழ் சிறி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.