Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2023 மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடத்தப்படவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்தமைக்கு எதிராக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் என்ற வகையில் ஜனாதிபதியும், நிதியமைச்சரும் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

அதன்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவில் நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, மாற்றுக் கொள்கை மையம் மற்றும் பெஃப்ரல் அமைப்பு தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுக்கள் மீதான தீர்ப்பின் போதே, மக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, விஜித் மல்லல்கொட, முர்து பெர்னாண்டோ, காமினி அமரசேகர மற்றும் யசந்த கோதாகொட உள்ளிட்ட ஐவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு சில நிமிடங்களுக்கு முன்னர் இந்தத் தீர்ப்பை அறிவித்துள்ளது.

https://thinakkural.lk/article/308232

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உள்ளுராட்சி தேர்தலை ஒத்திவைத்தது குறித்து வருத்தமடையவில்லை – ரணில்

22 AUG, 2024 | 08:48 PM
image
 

2023 இல் உள்ளுராட்சி தேர்தலை ஒத்திவைத்தமை குறித்து தான் கவலைப்படவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தேர்தலை ஒத்திவைத்தமை மக்களின் அடிப்படை உரிமையை மீறும் செயல் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி தேர்தலை ஒத்திவைத்தமை மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுகின்ற செயல் என்கின்ற போதிலும், நான் அதற்காக கவலைப்படவில்லை, ஏனென்றால் அந்த நேரம் வாழ்வதற்கான உரிமையை உறுதி செய்வதற்காக பயன்படுத்தப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாக்களிப்பதற்கான உரிமை வாழ்வதற்கான உரிமையை பாதுகாப்பது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/191738

ரணிலுக்கு தேர்தலுக்கு முன்னரே கிடைத்த பெரிய பின்னடைவு இது. இது கண்டிப்பாக இவரது வாக்கு வங்கியை பாதிக்கும்.

உள்ளூராட்சி, மாகாணசபை தேர்தல்களை நடத்தினால், தாம் (ஐதேக) ப்மண்ணைக் கவ்வுவோம் என்று நம்பியதால்தான் இவற்றை பிற்போடுவதற்கான அத்தனை வேலைகளையும் பார்த்தார்.

இலஙையின் நீதித்துறை சனாதிபதியின் ஆதிக்கத்துக்குள் /செல்வாக்குக்குள் இருந்து விடுபட்ட பின்னர் சனாதிபதியின் முடிவுக்கு எதிராக வழங்கப்பட்ட முக்கிய தீர்ப்பு இது.
 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, நிழலி said:

ரணிலுக்கு தேர்தலுக்கு முன்னரே கிடைத்த பெரிய பின்னடைவு இது. இது கண்டிப்பாக இவரது வாக்கு வங்கியை பாதிக்கும்.

உள்ளூராட்சி, மாகாணசபை தேர்தல்களை நடத்தினால், தாம் (ஐதேக) ப்மண்ணைக் கவ்வுவோம் என்று நம்பியதால்தான் இவற்றை பிற்போடுவதற்கான அத்தனை வேலைகளையும் பார்த்தார்.

இலஙையின் நீதித்துறை சனாதிபதியின் ஆதிக்கத்துக்குள் /செல்வாக்குக்குள் இருந்து விடுபட்ட பின்னர் சனாதிபதியின் முடிவுக்கு எதிராக வழங்கப்பட்ட முக்கிய தீர்ப்பு இது.
 

திறைசேரியில்... பணம் இல்லாததால் தான்... உள்ளூராட்சி தேர்தலை நடத்தாமல் விட்டதாக  அப்போது ஒரு காரணம் சொல்லப் பட்டது. 😂
உள்ளூராட்சி தேர்தல் நடத்தப் படும் என  நம்பி...   தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரிக்கப்பட்டு, தமிழரசு கட்சியாக சுருங்கியதும் நடந்தேறியது. 

  • கருத்துக்கள உறவுகள்

பாராளுமன்ற தேர்தலும் ஒன்றன் பின் ஒன்றாக வருகிறது.

5 minutes ago, தமிழ் சிறி said:

திறைசேரியில்... பணம் இல்லாததால் தான்... உள்ளூராட்சி தேர்தலை நடத்தாமல் விட்டதாக  அப்போது ஒரு காரணம் சொல்லப் பட்டது. 😂
உள்ளூராட்சி தேர்தல் நடத்தப் படும் என  நம்பி...   தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரிக்கப்பட்டு, தமிழரசு கட்சியாக சுருங்கியதும் நடந்தேறியது. 

ஆக மொத்தத்தில் நடக்காத தேர்தல் ஒன்றால், கூத்தமைப்பு உடைந்து போய் விட்டது!
அக்னி இன்னொரு திரியில் இவர்களைப் பற்றி எழுதியது 100% சரி!

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நிழலி said:

ஆக மொத்தத்தில் நடக்காத தேர்தல் ஒன்றால், கூத்தமைப்பு உடைந்து போய் விட்டது!
அக்னி இன்னொரு திரியில் இவர்களைப் பற்றி எழுதியது 100% சரி!

ஆக,  கூத்தமைப்பு உடை பட்டதற்கும்... நரியன் ரணில் காரணமாகி விட்டார்.  animiertes-gefuehl-smilies-bild-0090.gif

  • கருத்துக்கள உறவுகள்

Election-1.jpg?resize=600,375

உயர்நீதிமன்றத் தீர்ப்புக் குறித்து விசேட ஆராய்வு – தேர்தல்கள் ஆணைக்குழு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக நேற்று உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை ஆராய்வதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் 28ஆம் திகதி கூடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த 2023ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தன்னிச்சையாகவும் மற்றும் சட்ட விரோதமாகவும் பிற்போடப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் நிதியமைச்சர் என்ற வகையில், மக்களின் அடிப்படை உரிமைகளை ஜனாதிபதி மீறியுள்ளதாகவும் உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

தேர்தல் நடவடிக்கைகளை முறையாக திட்டமிட்டு நிர்வகிக்க தேர்தல்கள் ஆணைக்குழு தவறியுள்ளதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக எதிர்வரும் 28ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவில் ஆராயப்படும் என்றும் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1396841

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் உள்ளுராட்சி தேர்தல் - நீதிமன்றத்தின் தீர்ப்பு மக்களிற்கு கிடைத்த வெற்றி - மகிந்த தேசப்பிரிய

23 AUG, 2024 | 12:52 PM
image
 

ஜனாதிபதி  தேர்தலிற்கு பின்னர் உள்ளுராட்சி தேர்தல் இடம்பெறும் என முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய எதிர்வுகூறியுள்ளார்.

உள்ளுராட்சி தேர்தல்கள் குறித்து உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினை மக்களிற்கு கிடைத்த வெற்றி என மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தலை தாமதப்படுத்தியது தவறான நடவடிக்கை என தெரிவித்துள்ள அவர் நீதிமன்றம்  இதனை உறுதி செய்துள்ளமை நீதியை நோக்கிய முக்கியமான நடவடிக்கை என தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தின் இந்த தீர்மானம் ஆச்சரியமளிக்கும் ஒன்றல்ல என தெரிவித்துள்ள அவர் தேர்தல்களை பிற்போடுவது ஒத்திவைப்பது மக்களின் உரிமைகளை மீறும் செயல் என நீதிமன்றம் தொடர்ச்சியாக தெரிவித்துவந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

தாமதமானாலும் இறுதியாக நீதிநிலைநாட்டப்பட்டுள்ளது என நான் கருதுகின்றேன். ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்ததும் தேர்தல்கள் ஆணைக்குழு  உள்ளுராட்சி தேர்தல்களை நடத்தும் என நான் எதிர்பார்க்கின்றேன் என மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/191777

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விவகாரம் : தேர்தல் ஆணையம் நாளை கூடுகிறது

Published By: VISHNU

27 AUG, 2024 | 08:09 PM
image
 

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து ஆலோசிப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு 28ஆம் திகதி புதன்கிழமை கூடவுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க, உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து விவாதித்த பின்னரே உள்ளாட்சி தேர்தல் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார்.

https://www.virakesari.lk/article/192168

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.