Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் பகுதியில் பெண் வைத்தியர் ஒருவர் நோயாளர் காவு வண்டியிலிருந்து குதித்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் வவுனியா (Vavuniya) - மன்னார் (Mannar) வீதியில் நேற்று (26.08.2024) மாலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், வைத்தியர் வண்டியில் இருந்து குதித்த நிலையில், அங்கு கூடியவர்கள் சாரதி மீது தாக்குதல் நடத்தியுள்ளதுடன் இருவர் நெளுக்குளம் (Nelukkulam) காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

வண்டியிலிருந்து குதித்த வைத்தியர்

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா வைத்தியாசாலையில் இருந்து பம்பைமடு பகுதியில் உள்ள ஆயுர்வேத வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டியில் உணவு கொண்டு சென்றுள்ளனர்.

தமிழர் பகுதியொன்றில் நாேயாளர் காவு வண்டியிலிருந்து குதித்த பெண் வைத்தியர்! வெளியான காரணம் | Female Doctor Jumps From Moving Ambulance

குறித்த உணவை வழங்கிவிட்டு நோயாளர் காவு வண்டி வவுனியா நோக்கி வந்த போது வீதியில் நின்ற பெண் வைத்தியர் ஒருவர் குறித்த நோயாளர் காவு வண்டியை மறித்து ஏறியுள்ளார்.

குறித்த ஆயுர்வேத பெண் வைத்தியரை ஏற்றிக் கொண்டு வவுனியா நோக்கி சென்ற நோயாளர் காவு வண்டி வேப்பங்குளம் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை நிரப்பி விட்டு, மீண்டும் மன்னார் வீதி ஊடாக பம்பைமடு நோக்கி புறப்பட்டுள்ளது.

அப்போது நோயாளர் காவு வண்டியில் இருந்த பெண் வைத்தியர் நோயாளர் காவு வண்டி கதவை திறந்து கீழே குதித்துள்ளார்.

சாரதி மீது தாக்குதல்

இதனால் குறித்த பெண் வைத்தியர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழர் பகுதியொன்றில் நாேயாளர் காவு வண்டியிலிருந்து குதித்த பெண் வைத்தியர்! வெளியான காரணம் | Female Doctor Jumps From Moving Ambulance

அங்கு கூடிய மக்களிடம் தன்னை கடத்திச் செல்ல முற்பட்டதாக பெண் வைத்தியர் தெரிவித்ததையடுத்து நோயாளர் காவு வண்டியை மறித்து அதன் சாரதி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் நெளுக்குளம் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதனையடுத்து, கைது செய்யப்பட்டவர்களும் நோயாளர் காவு வண்டியையும் நெளுக்குளம் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை

இந்நிலையில் வைத்தியசாலை உதவிப் பணிப்பாளர் உள்ளிட்ட குழுவினர் நெளுக்குளம் காவல் நிலையத்திற்கு சென்று நோயாளர் காவு வண்டியை விடுவித்துள்ளதுடன் குறித்த முறைப்பாட்டை மீள பெறச் செய்வதற்கான முயற்சிகளும் இடம்பெற்று வருவதாக தெரியவருகிறது.

தமிழர் பகுதியொன்றில் நாேயாளர் காவு வண்டியிலிருந்து குதித்த பெண் வைத்தியர்! வெளியான காரணம் | Female Doctor Jumps From Moving Ambulance

இதேவேளை, குறித்த சாரதி தனது வீட்டிற்கு செல்ல வாகனத்தை திருப்பிய போதே குறித்த சகோதர மொழி பெண் வைத்தியர் அச்சம் காரணமாக குதித்தாக வைத்தியசாலை தரப்பால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நெளுக்குளம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://ibctamil.com/article/female-doctor-jumps-from-moving-ambulance-1724726551

Edited by ஏராளன்
தலையங்க எழுத்துப்பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஏராளன் said:

தமிழர் பகுதியில் பெண் வைத்தியர் ஒருவர் நோயாளர் காவு வண்டியிலிருந்து குதித்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் வவுனியா (Vavuniya) - மன்னார் (Mannar) வீதியில் நேற்று (26.08.2024) மாலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், வைத்தியர் வண்டியில் இருந்து குதித்த நிலையில், அங்கு கூடியவர்கள் சாரதி மீது தாக்குதல் நடத்தியுள்ளதுடன் இருவர் நெளுக்குளம் (Nelukkulam) காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

வண்டியிலிருந்து குதித்த வைத்தியர்

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா வைத்தியாசாலையில் இருந்து பம்பைமடு பகுதியில் உள்ள ஆயுர்வேத வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டியில் உணவு கொண்டு சென்றுள்ளனர்.

தமிழர் பகுதியொன்றில் நாேயாளர் காவு வண்டியிலிருந்து குதித்த பெண் வைத்தியர்! வெளியான காரணம் | Female Doctor Jumps From Moving Ambulance

குறித்த உணவை வழங்கிவிட்டு நோயாளர் காவு வண்டி வவுனியா நோக்கி வந்த போது வீதியில் நின்ற பெண் வைத்தியர் ஒருவர் குறித்த நோயாளர் காவு வண்டியை மறித்து ஏறியுள்ளார்.

குறித்த ஆயுர்வேத பெண் வைத்தியரை ஏற்றிக் கொண்டு வவுனியா நோக்கி சென்ற நோயாளர் காவு வண்டி வேப்பங்குளம் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை நிரப்பி விட்டு, மீண்டும் மன்னார் வீதி ஊடாக பம்பைமடு நோக்கி புறப்பட்டுள்ளது.

அப்போது நோயாளர் காவு வண்டியில் இருந்த பெண் வைத்தியர் நோயாளர் காவு வண்டி கதவை திறந்து கீழே குதித்துள்ளார்.

சாரதி மீது தாக்குதல்

இதனால் குறித்த பெண் வைத்தியர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழர் பகுதியொன்றில் நாேயாளர் காவு வண்டியிலிருந்து குதித்த பெண் வைத்தியர்! வெளியான காரணம் | Female Doctor Jumps From Moving Ambulance

அங்கு கூடிய மக்களிடம் தன்னை கடத்திச் செல்ல முற்பட்டதாக பெண் வைத்தியர் தெரிவித்ததையடுத்து நோயாளர் காவு வண்டியை மறித்து அதன் சாரதி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் நெளுக்குளம் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதனையடுத்து, கைது செய்யப்பட்டவர்களும் நோயாளர் காவு வண்டியையும் நெளுக்குளம் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை

இந்நிலையில் வைத்தியசாலை உதவிப் பணிப்பாளர் உள்ளிட்ட குழுவினர் நெளுக்குளம் காவல் நிலையத்திற்கு சென்று நோயாளர் காவு வண்டியை விடுவித்துள்ளதுடன் குறித்த முறைப்பாட்டை மீள பெறச் செய்வதற்கான முயற்சிகளும் இடம்பெற்று வருவதாக தெரியவருகிறது.

தமிழர் பகுதியொன்றில் நாேயாளர் காவு வண்டியிலிருந்து குதித்த பெண் வைத்தியர்! வெளியான காரணம் | Female Doctor Jumps From Moving Ambulance

இதேவேளை, குறித்த சாரதி தனது வீட்டிற்கு செல்ல வாகனத்தை திருப்பிய போதே குறித்த சகோதர மொழி பெண் வைத்தியர் அச்சம் காரணமாக குதித்தாக வைத்தியசாலை தரப்பால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நெளுக்குளம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://ibctamil.com/article/female-doctor-jumps-from-moving-ambulance-1724726551

நல்ல தமாசாக இருக்கு. 😂
சாரதி அந்த வைத்தியருக்கு... தனது வீட்டிற்கு போவதாக  சொல்லி விட்டு வாகனத்தை திருப்பியிருக்கலாமே... இப்ப , தவறான புரிந்து கொள்ளலால் வைத்தியருக்கு காயம், சாரதிக்கு தர்ம அடி என்று எத்தனை பிரச்சினைகள்.

  • ஏராளன் changed the title to தமிழர் பகுதியொன்றில் நோயாளர் காவு வண்டியிலிருந்து குதித்த பெண் வைத்தியர்! வெளியான காரணம்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

நல்ல தமாசாக இருக்கு. 😂
சாரதி அந்த வைத்தியருக்கு... தனது வீட்டிற்கு போவதாக  சொல்லி விட்டு வாகனத்தை திருப்பியிருக்கலாமே... இப்ப , தவறான புரிந்து கொள்ளலால் வைத்தியருக்கு காயம், சாரதிக்கு தர்ம அடி என்று எத்தனை பிரச்சினைகள்.

ஓமண்ணை கொஞ்சம் தெளிவாக  சொல்ல சாரதிக்கு சிங்களம் தெரியவில்லையோ?!

  • கருத்துக்கள உறவுகள்

சாரதி ஏதோ தவறாக நடந்தபடி வாகனத்தை தனது ரூமுக்கு திருப்பி இருப்பார் போலும்???

வைத்தியசாலைகளில் இருக்கும் சிக்கல்கள் போதாது என்று இது வேறயா??

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, ஏராளன் said:

குறித்த உணவை வழங்கிவிட்டு நோயாளர் காவு வண்டி வவுனியா நோக்கி வந்த போது வீதியில் நின்ற பெண் வைத்தியர் ஒருவர் குறித்த நோயாளர் காவு வண்டியை மறித்து ஏறியுள்ளார்.

 

நோயாளர் காவு வண்டி அவசரமாக நோயாளிகளை வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்ல மட்டுமே பாவிக்கப்படவேண்டும். ஆனால் சிறிலங்காவில் உணவு விநியோகத்திற்கும், மருத்துவர்களையும், தாதிமாரையும் ஏற்றி இறக்கவும் பயன்படுத்துகின்றார்கள். 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.