Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3   06 SEP, 2024 | 10:26 AM

image

தென் சீனாவை நோக்கி சக்தி வாய்ந்த யாகி சூறாவளி நகர்வதால் வெள்ளிக்கிழமை (06) பலத்த மழை பெய்துள்ளது. இதனால் பாடசாலைகள் இரண்டாவது நாளாக மூடப்பட்டுள்ளதோடு, விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு ஆசியாவைத் தாக்கும் வலிமையான சூறாவளிகளில் ஒன்றான யாகி ஹைனானின் வெப்பமண்டல கடற்கரையில் நிலச்சரிவை எற்படுத்ததும் என தெரிவிக்கப்படுகிறது.

245 கிலோ மீற்றர் அதிக வேகத்தில் தொடர்ந்து காற்று வீசும் என தெரிவிக்கப்படுகிறது.

2024 ஆம் ஆண்டில் பெரில் சூறாவளிக்கு பின்னர் உலகின் இரண்டாவது சக்திவாய்ந்த வெப்பமண்டல சூறாவளியாக யாகி பதிவுசெய்யப்பட்டுள்ளது.

வடக்கு பிலிப்பைன்ஸை தாக்கிய பலம் வாய்ந்த யாகி சூறாவளி வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் ஹைனான் தீவில் உள்ள வென்சாங்கிலிருந்து குவாங்டாங் மாகாணத்தில் உள்ள லீஜோ வரை சீனாவின் கடற்கரையோரம் நிலச்சரிவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் பின்னர் வியட்நாம் மற்றும் லாவோஸை தாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதனால்  ஹனோயின் நொய் பாய் இன்டர்நேஷனல் உட்பட வடக்கில் உள்ள நான்கு விமான நிலையங்கள் சனிக்கிழமை மூடப்படும் வியட்நாமின் சிவில் விமான போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த பகுதிகளில் வியாழக்கிழமை இரவு முழுவதும் வெள்ளிக்கிழமை காலை வரை காற்று வீசியதோடு, கடும் இடி மின்னலுடன் மழைபெய்துள்ளது.

ஹைனான், குவாங்டாங், ஹொங்கொங் மற்றும் மக்காவ் ஆகிய பகுதிகளில்  பல விமானங்கள் இரத்து செய்யப்பட்டதால், வெள்ளிக்கிழமை தெற்கு சீனா முழுவதும் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.

உலகின் மிக நீளமான கடற்பரப்கை கடந்து செல்ல ஹொங்கொங்கை மக்காவுடன் இணைக்கும் பிரதான பாலம் மற்றும் குவாங்டாங்கில் உள்ள ஜுஹாய் ஆகியவை மூடப்பட்டன.

https://www.virakesari.lk/article/192970

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாகி சூறாவளி : வியட்நாமில் 64 பேர் பலி

Published By: DIGITAL DESK 3   10 SEP, 2024 | 11:21 AM

image
 

பிலிப்பைன்ஸில் உருவான யாகி சூறாவளி சீனாவை தொடர்ந்து வியட்நாமை மிரட்டியது.   

வடக்கு வியட்நாமின் குவாங் நின், ஹைடாங் மற்றும் ஹோ பின் ஆகிய கடலோர மாகாணங்களை குறிவைத்து யாகி சூறாவளி வீசியது. மணிக்கு 149 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசி தலைநகர் ஹனோயில் யாகி சூறாவளி கரையை கடந்தது. 

வியட்நாமில் இந்த நூற்றாண்டின் மிக பயங்கரமான புயலாக கருதப்படும் இந்த யாகி, அந்த நாட்டை முழுவதுமாக உலுக்கியது.

இந்நிலையில் அங்குள்ள மலைபாங்கான காவ் பாங் மாகாணத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனிடையே அங்கே ஆற்றின் குறுங்கே கட்டப்பட்டிருந்த இரும்பு பாலம் ஒன்று இரண்டு தூண்டுகளாக உடைந்து ஒரு பகுதி ஆற்றில் மூழ்கியது.

அப்போது அந்த பாலத்தில் சென்று கொண்டிருந்த பஸ் ஒன்று ஆற்றில் விழுந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இந்த பஸ்சில் பயணித்த 20 பேரும் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். தகவலறிந்த மீட்புத்துறையினர் பஸ் பயணிகளின் உடல்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் வியட்நாமில் சூறாவளி பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை தற்போது 64 ஆக உயர்ந்ததாக அந்த நாட்டின் பேரிடர் நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. வியட்நாமைத் தாக்கும்முன், யாகி புயல் கடந்த வாரம் பிலிப்பைன்சில் 20 உயிர் இழப்புகளையும், தெற்கு சீனாவில் நான்கு பேரையும் பலிவாங்கியது குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/193301

  • கருத்துக்கள உறவுகள்

யாகி புயல் தாக்கம் – 127 பேர் பலி

யாகி புயல் தாக்கம் – 127 பேர் பலி.

வடமேற்கு பிலிப்பைன்ஸ் மற்றும் சீனாவை தாக்கிய யாகி சூறாவளி புயல் கடந்த சனிக்கிழமை வியட்நாமை மணித்தியாலத்துக்கு 149 கிலோ மீற்றர் வேகத்தில் தாக்கியிருந்தது.

வியட்நாமின் வடக்கு கடலோர பகுதி மாகாணங்களான குவாங் நின், ஹைபாங் ஆகிய பகுதிகளில் மணிக்கு 149 கி.மீ. வேகத்துடன் புயல் கரையை கடந்தது. இதனால் பலத்த காற்றுடன் பல மணி நேரம் கனமழை பெய்தது.

புயல் காரணமாக கடலோர பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படதோடு, பலத்த காற்று வீசியதால் மரங்கள் வீதியில் சரிந்து வீழ்ந்தன. கனமழையால் சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. புயல் காரணமாக விமான நிலையங்கள் மூடப்பட்டன. நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து செய்யப்பட்டன. மீட்புப் பணிகளில் இராணுவம், பொலிஸார் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்

இந்நிலையில், யாகி புயல் மற்றும் மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி 21 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதோடு  176 பேர் காயம் அடைந்துள்ளனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.

இந்நிலையில், தொடர்ந்து பெய்த மழையால் விபத்துகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 127 ஆக அதிகரித்துள்ளது. 50-க்கும் அதிகமானோரை காணவில்லை. நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர் என அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

வியட்நாம் நாட்டில் பல தசாப்தங்களாக இல்லாத வகையில் யாகி புயல் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1398894

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாகி சூறாவளி; வியட்நாமில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 197 ஆக அதிகரிப்பு

Published By: DIGITAL DESK 3   12 SEP, 2024 | 03:26 PM

image

வியட்நாமில் யாகி சூறாவளியால் ஏற்பட்ட   திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவில் சிக்கி 200 பேர்  உயிரிழந்துள்ளதோடு, 125 க்கும் மேற்பட்டோர் காணமல் போயுள்ளார்கள்.

 இதனை அந்நாட்டு ஊடகங்கள் வியாழக்கிழமை (12) தெரிவித்துள்ளன. இந்நிலையில் 800 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துளள்ளன.

வியட்நாம் தலைநகர் ஹனோய்யில்  சிவப்பு ஆற்றிலிருந்து வந்த நீர் சிறிது குறைந்த போதிலும் பல பகுதிகள் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது.

பல தசாப்தங்களுக்கு பின்னர் தென்கிழக்கு ஆசியாவை தாக்கிய மிக வலிமையான சூறாவளியாக யாகி  சூறாவளி காணப்படுகின்றது.

இந்த சூறாவளி  149 கிலோ மீற்றர் (92 மைல்) வேகத்தில் காற்றுடன் சனிக்கிழமை கரையைக் கடந்தது.

இந்நிலையில், சூறாவளி ஞாயிற்றுக்கிழமை  வலுவிழந்தாலும் தொடர்ந்து பெய்யும் மழையினால்  ஆறுகளில் நீர்மட்டம் அதிகரித்து ஆபத்தான நிலையில் உள்ளன.

கடந்த இரண்டு தசாப்தங்களில் இம்முறையே ஹனோய் வெள்ளத்தால் மிகவும் மோசமாக  பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை  வடக்கு வியட்நாமின் லாவோ காய் மாகாணத்தில் உள்ள லாங் நுவின் பகுதியில் கிராமங்கள் தீடீர் வெள்ளத்தில் மூழ்கியதால்  பலர்  நீரில் அடித்து செல்லப்பட்டனர்.

அவர்களை தேடும் பணிகள் நேற்று புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. இன்று வியாழக்கிழமை  காலை நிலவரப்படி 53 பேர் காணமல் போயுள்ளதோடு, 8 சடலங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. 42 உயிரிழந்துள்ளதாக VNExpress தெரிவித்துள்ளது.

பெரும்பாலான  உயிரிழப்புகள் வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் இடம் பெற்றுள்ளது.

அவற்றில் பல உயிரிழப்புகள் வியட்நாமில் லாவ் காய் பகுதியில் இருக்கும் லாங் நு கிராமத்தில் ஏற்பட்டுள்ளது.

லாவோ காய் மாகாணம் சாபாவின் பிரபலமான மலையேற்ற இடமாகவும் உள்ளது.

அங்கு திங்களன்று சூறாவளியில் மக்கள் நடமாட்டம் அதிகமிருந்த ஒரு பாலம் இடிந்து விழுந்து, அதன் மீதிருந்த பத்து கார்கள் மற்றும் இரண்டு மோட்டார்கைக்கிள்கள்,லொறிகள் சிவப்பு ஆற்றில் மூழ்கின.

அத்தோடு, மலைப்பகுதியான காவ் பாங் மாகாணத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் 20 பேருடன் சென்ற பஸ் வெள்ளம் நிறைந்த ஓடையில் அடித்துச் செல்லப்பட்டது.

யாகி போன்ற சூறாவளிகள் காலநிலை மாற்றத்தால் வலுவடைகிறது. இதனால், புவி வெப்பமடைவதால் சூறாவளிகள் பலத்த காற்றையும், தீவிர மழையையும் கொண்டு வர வழிவகுக்கிறது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

https://www.virakesari.lk/article/193498

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.