Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பம்பலப்பிட்டி கடற்கரையில் மீட்கப்பட்ட சடலம் விரிவுரையாளருடையதென அடையாளம் காணப்பட்டது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பம்பலப்பிட்டி கடற்கரையில் மீட்கப்பட்ட சடலம் விரிவுரையாளருடையதென அடையாளம் காணப்பட்டது

வீரகேசரி நாளேடு

கொழும்பு பம்பலப்பிட்டி கடற்கரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் பொலிஸாரினால் மீட்கப்பட்ட சடலம், காணாமல்போன யாழ். பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளருடையது என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் கணிதத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் பொன்னையா மகிணன் (வயது 62) என்பவர் கடந்த சனிக்கிழமை மாலை 5.30 மணியிலிருந்து காணாமல்போயிருந்தார். இந்நிலையிலேயே, இவர் சடலமாக பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார். இவரது மரணம் தொடர்பில் மர்மம் நிலவுகிறது.

வெள்ளவத்தை தயா வீதியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த இவர், க.பொ.த. (உ/த) பரீட்சை மதிப்பீட்டுப் பணிக்காகவே கடந்த 28 ஆம் திகதிக்குப் பின்னர் கொழும்புக்கு வந்துள்ளார். விமானம் மூலம் கொழும்புக்கு வந்த இவர், கடந்த சனிக்கிழமை மாலை 5.30 மணியளவில் விடுதியிலிருந்து வெளியே சென்றுள்ளார். இவ்வாறு சென்றவர் மீளவும் விடுதிக்குத் திரும்பவில்லை.

இதனையடுத்து, சம்பவம் தொடர்பில் விரிவுரையாளரின் உறவினர்களுக்கு விடுதியில் உள்ளவர்கள் அறிவித்துள்ளனர். உறவினர்கள் விரிவுரையாளர் காணாமல்போயிருப்பது தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் சனிக்கிழமை இரவு 10 மணியளவில் முறைப்பாடு செய்துள்ளனர். பின்னர், பொலிஸாரின் அறிவுறுத்தலுக்கமைய வைத்தியசாலைகளுக்குச் சென்று விசாரித்துள்ளனர். இதன்பயனாக பம்பலப்பிட்டி பொலிஸாரினால் சடலம் ஒன்று மீட்கப்பட்டு, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை அறியவந்துள்ளது.

பம்பலப்பிட்டி பொலிஸாரின் உதவியுடன் சடலத்தை இனங்காண்பதற்காக விரிவுரையாளரின் மனைவியின் தம்பி வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார். ஆனால், சடலத்தின் முகம் வீக்கமடைந்திருந்தமையால், அவரால் சடலத்தை இனங்காணமுடியவில்லை. இதனையடுத்து, யாழ்ப்பாணத்திலிருந்து மனைவி கொழும்புக்கு வரவழைக்கப்பட்டுள்ளார். அவர் நேற்றுமுன்தினம் பிற்பகல் 3 மணியளவில் கொழும்பு தெசிய வைத்தியசாலைக்குச் சென்று சடலம் தனது கணவருடையது என அடையாளம் காட்டியுள்ளார்.

இதேவேளை, விரிவுரையாளர் காணாமல்போன தினத்தன்று மாலை 4 மணியளவில் விடுதியிலிருந்து யாழ்ப்பாணத்திலுள்ள தனது மனைவியுடன் தொலைபேசி மூலம் பேசியுள்ளார். மருந்துவகைகள் மற்றும் தேவையான ஏனைய பொருட்களை வாங்கிவிட்டேன். திங்கட்கிழமை (கடந்த 8ஆம் திகதி) வீட்டுக்கு வருவேன் என்று மனைவியிடம் தெரிவித்துள்ள விரிவுரையாளர், இரவு 9 மணியளவில் தனக்குத் தொலைபேசி மூலம் பேசுமாறும் மனைவியிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து, கடந்த சனி இரவு 6.45 மணியளவில் யாழ்ப்பாணத்திலுள்ள விரிவுரையாளரின் வீட்டுக்குத் தொலைபேசி மூலம் பேசிய நபர் ஒருவர், மிகவும் பலவீனமான, தளதளத்த குரலில் தான் பேசுவது கேட்கின்றதா? எனப் பலமுறைகள் கேட்டுள்ளார். பின்னர், தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. தன்னுடன் பேசியவர் கனவராக இருக்கலாம் என்று சந்தேகம்கொண்ட மனைவி, இரவு 7 மணியளவில் விரிவுரையாளரின் கையடக்கத் தொலைபேசிக்கு தொடர்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஆனால், கையடக்கத் தொலைபேசி ஒலித்தாலும், விரிவுரையாளர் கதைக்கவில்லை. இரவு 11 மணிவரை இயங்கிய கையடக்கத் தொலைபேசி பின்னர், செயலிழந்துபோயுள்ளது. யாழ். கொக்குவில் கீழக்கைச் சேர்ந்த ஒரு பெண் பிள்ளையின் தந்தையான விரிவுரையாளரின் மரணம் தொடர்பில் மர்மம் நிலவுகிறது. நேற்றுமாலை பிரேத பிரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

பாவிகள், இவர்கள் விரைவில் அழிக்கப்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் யாழ். மூத்த விரிவுரையாளர் படுகொலை.

ஜ வியாழக்கிழமைஇ 11 ஒக்ரேபர் 2007 ஸ ஜ லக்ஸ்மன் ஸ

கொழும்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக கணிதத்துறையைச் சேர்ந்த மூத்த விரிவுரையாளர் எஸ்.மகினன் (வயது 60) சித்திரவதைக்குப் பின்னர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொள்ளுப்பிட்டிக்கும் பம்பலப்பிட்டிக்கும் இடைப்பட்ட கடற்கரையோரத்தில் இருந்து கடந்த 7 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை சிறிலங்கா காவல்துறையினர் சடலம் ஒன்றை மீட்டனர். எனினும் அந்த சடலம் அடையாளம் காணப்படாததால் அதனை கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிறிலங்கா காவல்துறையினர் ஒப்படைத்திருந்தனர். அந்த சடலம் காணாமல் போன யாழ். பல்கலைக்கழக கணிதத்துறைப் பீடத்தின் மூத்த விரிவுரையாளர் எஸ்.மகினனுடையதாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. இதனால் இது குறித்து யாழ்ப்பாணத்தில் இருந்த அவரது குடும்பத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இருந்து நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்புக்கு வந்த விரிவுரையாளர் எஸ்.மகினனுடைய மனைவி, கொழும்பு தேசிய மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டிருந்த அந்த சடலத்தை அடையாளம் காட்டினார். அவர் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது சடலத்தின் தலையிலும் முதுகிலும் காயங்கள் காணப்படுவதாகவும் சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டதாகவும் தெரிகிறது.அத்துடன் அவர் அணிந்திருந்த தங்க ஆபரணங்களை சடலத்தில் காணவில்லை என்றும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.யாழ். பல்கலைக்கழகத்தில் இருந்து க.பொ.த. உயர்தரப் பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணிக்காக இரண்டு வாரங்களுக்கு முன்னர் கொழும்பு வந்த அவர், வெள்ளவத்தையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்தார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை மாலை வெளியே சென்று வருவதாக கூறி விடுதியில் இருந்து புறப்படட பின்னர் மகினனைக் காணவில்லை.யாழப்பாணம் கொக்குவிலலைச் சேர்ந்த அவரது சடலத்தை சொந்த இடத்திற்கே கொண்டு செல்ல யாழ். பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.இது ஒரு கடத்தல் சம்பவமாகக்கூட இருக்கலாம் என்று கொழும்பில் விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணிக்காக வந்த மூத்த விரிவுரையாளர் கொழும்பில் அதுவும் உயர்பாதுகாப்பு வலயப்பகுதி ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டிருப்பது கல்விச்சமூகத்தை விசனத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

nitharsanam.com

யாழ். பல்கலைக்கழக மூத்த விரிவுரையாளர் பி.மகினனின் படுகொலைக்கு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணப் பல்கலை விரிவுரையாளர் சடலமாக மீட்பு

Written by Seran - Oct 11, 2007 at 12:30 PM

சிறிலங்கா தலைநகர் கொழும்பில் வைத்துக் காணாமல் போனதாகக் கூறப்படும் யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர் சடலமாக மீட்பு

சிறிலங்காவின் கொழும்பில் வைத்துக் காணாமல் போனார் எனக் கூறப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர் எஸ்.மகினன் (வயது 60) பம்பலப்பிட்டி கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை பம்பலப்பிட்டி கடற்கரையில் சடலம் ஒன்று கரையொதுங்கியபோதும் அதனை அடையாளம் காண்பதில் இழுத்தடிப்பு நிலைமை நீடித்தது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வந்த விரிவுரையாளரின் மனைவி தமது கணவனின் சடலத்தை நேற்று அடையாளம் கண்டு உறுதிப்படுத்தினார் எனப் பொலிஸ் தரப்புத் தெரிவித்துள்ளது.

க.பொ.த.(c/j)பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிக்காக கொழும்பு வந்து வெள்ளவத்தையில் தனியார் விடுதியில் தங்கியிருந்த விரிவுரையாளர் மகினனுக்கு என்ன நடந்தது எனத் தெரியாததால் வெள்ளவத்தைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இந்நிலையிலேயே, திங்களன்று மீட்கப்பட்ட சடலம் குறித்து பம்பலப்பிட்டிப் பொலிஸார் தகவல் வெளியிட்டனர். யாழ்ப்பாணத்தில் உள்ள காணாமற்போன மகினன் குடும்பத்தாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது மனைவி நேற்று தனது கணவனின் சடலத்தை அடையாளம் காட்டினார்.

சடலம் கரையொதுங்கிய நாளன்றே அது விரிவுரையாளரின் சடலம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டபோதிலும் அதனை உறுதிப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது. இது கொலையா, தற்கொலையா, விபத்தா அல்லது இயற்கை மரணமா என்பதில் தொடர்ந்தும் மர்மம் நீடிப்பதாக தகவல்கள் கூறுகின்றன. உறுதியான தகவல்கள் எவையும் நேற்று மாலை வரை கிடைக்கப்பெறவில்லை.

http://www.sankathi.net/index.php?option=c...79&Itemid=1

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணப் பல்கலைகழக விரிவுரையாளர் கொலைக்கு மாணவர்கள் கண்டனம்

Written by Seran - Oct 11, 2007 at 01:03 PM

கடத்தப்பட்டு பின் சடலமாக கொழும்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கணித புள்ளி விவரவியல் விரிவுரையாளர் ப. மகினனின் கொலையை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டித்துள்ளது.

ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இக்கட் டான சூழ்நிலையின் மத்தியில் எமது கணித புள்ளிவிவரவியற்றுறை விரிவு ரையாளர் ப. மகினன் கொலை செய்யப் பட்டமை மனித நாகரிக எல்லைகளுக்கும், உரிமைகளுக்கும் அப்பாற்பட்ட செயலாகும்.

எமது பல்கலைக்கழகத்தின் விரிவு ரையாளர்கள் பல்கலைக்கழகத்திலிருந்து அப்புறப்படுத்தப்படுவது எமது மாண வர்களுக்குமட்டுமன்றி தமிழ் சமூகத் திற்கே பெரும் இழப்பாகும். இந்த ஈவிரக்கமற்ற எவ்விதத்திலும் நியாயப் பத்த முடியாத செயலை மாணவர் ஒன் றியம் வன்மையாகக் கண்டிக்கிறது. இச் செயலை புரிந்தவர்கள் எமது மக்களின் வாழ்க்கையை அவர்களது எதிர்காலத்தை சிந்திக்காமல் ஒட்டுமொத்த பல்கலைக்கழ கத்தையே பாதிக்க வைத்துள்ளது.

இவ்வாறான கொலைகளுக்கான நியா யத்தை உரிய தரப்பினரிடமும், சர்வ தேச மனித உரிமை அமைப்புகளிட மும் வேண்டி நிற்கின்றோம். விரிவுரையா ளர் பி. மகினன் அவர்களின் இழப்பால் வாடும் அவரது குடும்பத்தினர், உறவி னர், நண்பர்களுக்கு மாணவர் ஒன்றியம் ஆழ்ந்த அனுதாபத்தையும் அஞ்சலியையும் தெரிவிக்கின்றது என்று உள்ளது

http://www.sankathi.net/index.php?option=c...82&Itemid=1

இப்படியான படுகொலைகளை மனித நேய விருதுகள் பெற்றுக்கொண்டுள்ள கூல்கள் கண்டுகொள்ளப்போவதில்லை. யாழ் பல்கலைக் கழக ஆசிரியர்கள் பெயரில் இயங்கும், தம்மை ஒரு மனித உரிமை அமைப்பாக விளம்பரம் செய்யும் இந்த நிறுவனம் இது பற்றி என்ன சொல்லப்போகின்றது என்று பொறுத்து இருந்து பார்ப்போம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.