Jump to content

கருணா அம்மான் கட்சிக்குள் உடைவு; கட்சியிலிருந்து வெளியேறினார் ஜெயா சரவணா


கிருபன்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கருணா அம்மான் கட்சிக்குள் உடைவு; கட்சியிலிருந்து வெளியேறினார் ஜெயா சரவணா

karuna-sabajeyaraj.jpg

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சி ஊழல் நிறைந்தது என கட்சியிலிருந்து வெளியேறிய தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் முன்னாள் உப தலைவரும், அம்மான் படையணியின் தலைவருமான ஜெயா சரவணா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

அரசியல் பயணத்தில் முக்கியமான ஒரு முடிவை அறிவிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளேன்.

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உப தலைவர் பதவியில் இருந்தும் அக்கட்சியின் அடிப்படை உரிமை பதவியில் இருந்தும் கடந்த 17.08.2024 அன்று விடுவித்து கொண்டுள்ளேன்.

அக்கட்சியில் நீண்ட தூரம் என்னால் பயணிக்க முடியாது என்பதனை புரிந்து கொண்டேன்.

போரினால் பாதிக்கப்பட்டு தமது அன்றாட வாழ்க்கைக்கு மற்றையவர்களிடம் கையேந்தும் நிலமைக்கு தள்ளப்பட்டிருக்கும் தமிழ் மக்களின் பொருளாதாரம், மேம்பாடு அவர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது என்பவற்றை கருத்தில் கொண்டு ஆரம்பித்த பயணம் இன்று பல கோடிக்கணக்கான பணத்தை இழந்து நிற்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

அங்கே நிதி மோசடிகளும், ஊழல்களும் வீண்விரயங்களும் செய்யப்பட்டு நிதிகள் இல்லாது ஒழிக்கப்பட்டுள்ளது.

ஊழல் நிறைந்த அக்கட்சியில் இருந்து என்னால்பயணத்தை தொடர முடியாது இருப்பதாலேயே இம் முடிவு எடுக்கவேண்டிய நிர்ப்பந்தம்.

நிதிமோசடிக்கு அந்த கட்சியின் தலைவர் கருணா அம்மான் அவர்களும் அவரினை சுற்றியிருக்கும் சமூகவிரோத கும்பல்களும் முழுப்பொறுப்பு கூறவேண்டும் .

ஒரு கட்சியினை எப்படி வழிநடத்த வேண்டும் என தெரியாமல் மிலேச்சத்தனமான போக்கில் செயற்பட்டு கொண்டிருக்கும்போது ஜனநாயக பாதையில் மக்களின் தேவையை, மக்களின் அன்றாட வாழ்கைக்கு எப்படி உதவுவது என்பதனை புரிந்து கொள்ள தெரியாத நிலையில் ஒருவட்டத்திற்குள் என்னால் செயற்படமுடியாது.

எனக்கு பலபக்கங்களிலும் இருந்து நிறைய அழுத்தங்கள், அச்சுறுத்தல்கள் வந்து கொண்டு இருக்கின்றன.

இருப்பினும் எனது மக்கள் சேவை அன்பின் இல்லம் அறக்கட்டளை சேவை மூலமும், என்னால் ஆரம்பிக்கப்பட்ட அம்மான் படையணி மூலமும் தொடரும்.

இதுரை நான் எவரிடமும் எனது அன்பின் இல்லத்திற்கோ, அம்மான் படையணிக்கோ ஒரு சதம் கூட கேட்கவும் இல்லை, பெறவும் இல்லை.

முழுநிதியும் என்னுடைய சொந்த உழைப்பில் எனது கையால் செலவிடப்பட்டது. இருப்பினும் எனது பயணத்தினை இடைநிறுத்தி கொள்வேன் என யாரும் கனவு காணவேண்டாம்.

இழப்புகள் என்பது எனக்கு புதிதல்ல, பல துரோகங்களை நான் சந்தித்திருக்கின்றேன். இன்றும் பாரிய துரோகம் முதுகில் குத்தும் செயலை சந்தித்திருக்கின்றேன். செய்தவர்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல.

என்து அன்பின் இல்லம் அறக்கட்டளை, அம்மான் படையணியுடன் இணைந்து இன்றில் இருந்து எனது சேவையை ஆரம்பிக்கும் . குறிப்பாக வடக்கு கிழக்கில் அது தொடர்ந்த வண்ணமே இருக்கும் என்பதை உறுதிபட கூறுகின்றேன்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எனது இரு அமைப்புக்களும் அதனை சார்ந்த மக்களும் எமது தமிழர் ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காக சமூதாயத்துடன் இணைந்து ஓட வேண்டும்.

மற்றையபடி விருப்பு வாக்கின்படி ஒரு புதிய ஜனாதிபதியை தெரிவு செய்தால் நன்றாக இருக்கும்.

அதேநேரம் எமது தமிழ் இருப்பை ஒற்றுமையாக காட்டவேண்டும் என்பதற்காக தமிழ் மக்களுடன் சமுதாயத்துடன் இணைந்து பயணிக்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

 

https://akkinikkunchu.com/?p=291785

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நரியன் ரணில்.... கருணா கட்சியையும் பிரித்துப் போட்டார் போலுள்ளது😃

நாசமாய் போனதுகள் பிரிந்து, சிதறி... சின்னா பின்னமாய் போகட்டும்😂

இதுகள் ஒன்றாய் இருந்து... ஊர், உலகத்துக்கு என்ன லாபம்.? 🤣

  • Like 2
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

நரியன் ரணில்.... கருணா கட்சியையும் பிரித்துப் போட்டார் போலுள்ளது😃

நாசமாய் போனதுகள் பிரிந்து, சிதறி... சின்னா பின்னமாய் போகட்டும்😂

இதுகள் ஒன்றாய் இருந்து... ஊர், உலகத்துக்கு என்ன லாபம்.? 🤣

அம்பாறை மக்கள்தான் கருத்துச் சொல்ல வேண்டும். நல்லது கெட்டது எல்லாம் அவர்களுக்குத்தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

அம்பாறை மக்கள்தான் கருத்துச் சொல்ல வேண்டும். நல்லது கெட்டது எல்லாம் அவர்களுக்குத்தான். 

அப்ப.... இங்கு உள்ள செய்திகளுக்கெல்லாம், அந்தந்த ஊர் மக்கள் தான் கருத்து சொல்ல வேணுமோ... 😮

அப்ப ஏன்... நீங்கள் மற்ற ஊர் செய்திகளுக்குள்ளை மூக்கை நுழைக்கிறீங்கள்😂

குருக்கள் "குசு" விட்டால்... ஓகே போல இருக்குதே.... 🤣

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு காலமும் ஒத்தோடினவருக்கு இப்போ சடுதியாக அதுவும் தேர்தல் நேரத்தில் இப்படியொரு அறிவிப்பு. சோழியன் குடுமி சும்மா ஆடாது கண்டியளோ .... பொறுத்திருப்போம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

அங்கே நிதி மோசடிகளும், ஊழல்களும் வீண்விரயங்களும் செய்யப்பட்டு நிதிகள் இல்லாது ஒழிக்கப்பட்டுள்ளது.

கஜானாவை காலியாக்கிப் போட்டுத் தான் வந்திருக்கிறார்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

அப்ப.... இங்கு உள்ள செய்திகளுக்கெல்லாம், அந்தந்த ஊர் மக்கள் தான் கருத்து சொல்ல வேணுமோ... 😮

அப்ப ஏன்... நீங்கள் மற்ற ஊர் செய்திகளுக்குள்ளை மூக்கை நுழைக்கிறீங்கள்😂

குருக்கள் "குசு" விட்டால்... ஓகே போல இருக்குதே.... 🤣

தாங்கள் திட்டியதற்காகத்தான் அப்படிக் குறிப்பிட்டேன். 

நீங்கள் தாராளமாகவே திட்டலாம்,...🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ஈழப்பிரியன் said:

கஜானாவை காலியாக்கிப் போட்டுத் தான் வந்திருக்கிறார்.

இப்போ ஒரு பண்பு வளருகிறது, எல்லா குற்றங்களையும் தாங்களே செய்வது, பின் அங்கு திருட வழியில்லை, என்கிற வங்குரோத்து நிலை வந்தவுடன், இலகுவாக தங்கள் குற்றங்களை மற்றவர் தலையில் கட்டிவிட்டு தாம் ஏதோ நல்ல மனிதர்போல் அறிக்கை விடுவர். அரசுமுதல் சாதாரண மனிதர் வரை தொடர்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்று மட்டும் புரியவில்லை, தன் சொந்த உழைப்பில் தான் மக்களுக்கு செலவு செய்தார் என்றால் ....இவரின் சொந்த உழைப்பு என்ன ? அவ்வளவு வருமானமா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, satan said:

இப்போ ஒரு பண்பு வளருகிறது, எல்லா குற்றங்களையும் தாங்களே செய்வது, பின் அங்கு திருட வழியில்லை, என்கிற வங்குரோத்து நிலை வந்தவுடன், இலகுவாக தங்கள் குற்றங்களை மற்றவர் தலையில் கட்டிவிட்டு தாம் ஏதோ நல்ல மனிதர்போல் அறிக்கை விடுவர். அரசுமுதல் சாதாரண மனிதர் வரை தொடர்கிறது.

இன்று ரணிலுடன் நிற்கும் குண்டர்களும் 

முன்னர் மகிந்தவுடன் நின்று நாட்டைச் சுரண்டியர்களே.

1 hour ago, தமிழன்பன் said:

ஒன்று மட்டும் புரியவில்லை, தன் சொந்த உழைப்பில் தான் மக்களுக்கு செலவு செய்தார் என்றால் ....இவரின் சொந்த உழைப்பு என்ன ? அவ்வளவு வருமானமா 

இதே கேள்வி எனக்குள்ளும் இருக்கிறது.

அப்படி என்ன தான் கடுமையான வேலை செய்து ஊழைத்துக் களைத்திருப்பார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/9/2024 at 15:28, கிருபன் said:

பல கோடிக்கணக்கான பணத்தை இழந்து நிற்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

 

On 17/9/2024 at 15:28, கிருபன் said:

அங்கே நிதி மோசடிகளும், ஊழல்களும் வீண்விரயங்களும் செய்யப்பட்டு நிதிகள் இல்லாது ஒழிக்கப்பட்டுள்ளது.

 

On 17/9/2024 at 15:28, கிருபன் said:

நிதிமோசடிக்கு அந்த கட்சியின் தலைவர் கருணா அம்மான் அவர்களும் அவரினை சுற்றியிருக்கும் சமூகவிரோத கும்பல்களும் முழுப்பொறுப்பு கூறவேண்டும் .

இதுதான் விஷயம். பணம் இல்லையென்றால் இவருக்கும் வேலை இல்லைத்தானே, கிளம்பிவிட்டார். கிளம்பியவர் குற்றச்சாட்டுடன் கிளம்பியிருக்கிறார்.  தன் சொந்த உழைப்பில் சேவை செய்பவர் ஏன் இவ்வளவுகாலம் பணம் தீரும் வரை அவர்களோடு ஒட்டியிருந்தார் என்பதையும் விளக்கியிருக்கலாம். அவரை குற்றம் சாட்டுவதற்கு முன் அவர்  குற்றச்சாட்டை முந்திக்கொண்டு வைத்துவிட்டார். நம்புவது யார்? 

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.