Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, விசுகு said:

மிகத் தவறான வஞ்சகமான கருத்து.

தாயகத்தின் பல மக்கள் அமைப்புக்கள் சேர்ந்து பலரை சிபாரிசு செய்து அவர்களிடயே இருந்து ஜனநாயக ரீதியில் தேர்வுகளை நடாத்தி இறுதியில் இவரை தெரிவு செய்தார்கள இந்த ஜனநாயக பண்புகளை மெச்சுவதை விடுத்து மீண்டும் மீண்டும் துண்டுச் சட்டிக்குள்......????

இந்த அமைப்புகளைப் பற்றி நிலாந்தனும் எழுதியிருந்தார். வர்த்தக சமாசங்கள், இன்ன பிற  என்று சில இருந்தன. இவற்றின் சார்பாக பொது வேட்பாளரை ஆதரிக்கும் முடிவெடுத்தவர்கள் "மக்கள் பிரதிநிதிகள்" என்று அடையாளப் படுத்தப் பட முடியாதவர்கள். உதாரணமாக "வவுனியா வர்த்தகர் சங்கம்" என்றால் "வர்த்தகர்களின் நலன் பேணும்" ஒரு சங்கம் - trade body, "வவுனியா மக்களின் நலன் பேணும்" ஒரு சங்கம் என்று சொல்லி அவர்களை மக்கள் பிரதிநிதிகளாக தரமுயர்த்த இயலாது.

அவர்கள் வாடி வீட்டில் கூடிக் கதைத்து எடுத்த பொது வேட்பாளர் முடிவை "ஜனநாயகம்" என்று மெச்சும் நீங்கள், தமிழரசுக் கட்சியின் பா. உக்கள் கட்சியின் மத்திய குழுவில்எடுத்த 19/23 முடிவை "இருவரின் முடிவு" என்று நிராகரிக்கிறீர்கள்😂.

உங்களிடம் ஏன் இந்த வேறுபாடென்று விளக்கம் கேட்க முயலவில்லை. ஆனால், இப்படியான முட்டாள் தனங்களைச் சுட்டிக் காட்ட வேண்டுமென்பதற்காக சொல்லியிருக்கிறேன்.

  • Replies 131
  • Views 7k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரஞ்சித்
    ரஞ்சித்

    1. கள யதார்த்தத்தின் படி இதில் வெற்றிபெற முடியாதென்பதை எவரும் மறுத்துரைக்க முடியாது.  தமிழ்ப்பொதுவேட்பாளர் இத்தேர்தலில் போட்டியிட்டது ஜனாதிபதியாகும் நோக்கத்தில் இல்லையென்று எத்தனை முறை கூறினாலும்

  • சுமந்திரன் சாணக்கியன் சொல்லி சஜித்திற்கு வாக்கு விழுந்திருக்காது. ரணிலுக்கு வாக்குகள் விழ பொருளாதாரம் 2027 இன் பின் என்ன ஆகப் போகிறது என்ற பயம் காரணம். சஜித் வாக்குகளின் காரணம், ரணிலின் தீர்வு தொடர்பா

  • பிழம்பு
    பிழம்பு

    // 2004-ஆம் ஆண்டு தொடக்கம் முதல் 2015-ஆம் ஆண்டு வரை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த பா. அரியநேத்திரன், 2004-ஆம் ஆண்டு தேர்தலில் விருப்பு வாக்குகள் அடிப்படையில் தேர்வாகவி

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Kandiah57 said:

முட்டாள்களையும். புத்திசாலிகளையும்   தரம் பிரிக்க தெரிந்த   உங்களை எப்படி அழைக்கலாம்.???? 

விசுகரிடம் கேட்டால் அவர் உங்களுக்கு உதவலாம்  🤣

51 minutes ago, விசுகு said:

மிகத் தவறான வஞ்சகமான கருத்து.

தாயகத்தின் பல மக்கள் அமைப்புக்கள் சேர்ந்து பலரை சிபாரிசு செய்து அவர்களிடயே இருந்து ஜனநாயக ரீதியில் தேர்வுகளை நடாத்தி இறுதியில் இவரை தெரிவு செய்தார்கள இந்த ஜனநாயக பண்புகளை மெச்சுவதை விடுத்து மீண்டும் மீண்டும் துண்டுச் சட்டிக்குள்......????

இதில் வஞ்சகம் என்ன இருக்கிறது? 

இது எல்லோருக்கும் பகிரங்கமாகத் தெரிந்த விடயமே? 

உந்த  கூலிக்கு மாரடிக்கும் அடிமைக் கூட்டம் இந்தியா சொல்வதை சிரமேல் வைது நடவாமல், புலம்பெயர்ஸ் உசார் மடையர் சொற் கேளாமல், எப்போது சுயமாகச் சிந்திக்கிறதோ அப்போதுதான் தமிழினத்துக்கு விமோசனம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

எங்களை தற்காத்துக் கொள்வதற்கு சகல தமிழ் தரப்பினரும் ஒருங்கிணைந்து செயலாற்ற முன்வர வேண்டும்; சிவகரன்

Digital News Team  

 

 

மன்னார் நிருபர்

“கட்சிக்கு எதிராக பேசினோம் என்று தான்தோன்றித்தனமாக எங்களை இடை நிறுத்த வேண்டுமென முற்பட்டவர்கள் தமிழரசுக் கட்சியின் ஒழுக்காற்று கோவை விதி 19 இன் பிரகாரம் எமக்கு எதிராக நடவடிக்கை எடுத்தோம் என கூறியவர்கள் இப்போது சுமந்திரனுக்கும், சிறிதரனுக்கும் எதிராக நடவடிக்கை எடுப்பார்களா? அல்லது ஏனைய தரப்புகளுக்கு அவர்கள் நடவடிக்கை எடுக்க முன் வருவார்களா? என்கின்ற கேள்வி எழுகின்றது” என தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்தார்.

sivakaran-1024x655.jpgமன்னாரில் இன்று புதன் கிழமை(12) காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் தமிழர் தரப்புக்கு பல்வேறு விதமான படிப்பினைகளை கற்பித்து இருக்கிறது. ஒற்றுமையீனம் எவ்வாறான விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது என்பதனை எல்லோரும் புரிந்து கொண்டிருக்கலாம்.

அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அசுர பலத்தோடு ஆட்சி பீடம் ஏறி இருக்கின்றது.

இந்த சூழ்நிலையில் தமிழர்கள் தொடர்ந்தும் பிரிந்து நின்றால் எவ்வாறான விளைவுகளை அவர்கள் எதிர் நோக்கப் போகின்றார்கள் என்பதனை புரிந்து கொள்ள வேண்டும்.

தங்களுக்குள்ளே உள்ள முரண்பாடுகள் எவ்வாறான விளைவுகளை தமிழ் மக்களினுடைய இருப்புக்கு எதிர் காலத்தில் ஏற்படுத்தியிருக்கின்றது.

2015 ஆம் ஆண்டு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் இணக்க அரசியலில் இவ்வாறான விளைவுகளை ஏற்படுத்தி சின்னா பின்னமாக சிதைந்து காணப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் சுதந்திரக் கட்சியும், வன்னியில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியும், மட்டக்களப்பில் பிள்ளையான் அவர்களும் முதன்மை இடங்களை பெறக் கூடிய அளவுக்கு மக்கள் தமிழ் தேசிய நீக்க அரசியலுக்கு ஆதரவளித்து இருக்கக் கூடிய ஒரு சூழ்நிலை மிகவும் வருந்தத்தக்க விடயமாகவே காணப்படுகிறது.

இவ்வாறான நிலைமைகள் கடந்த 2010 இல் இருந்து 2015 வரையான 7 தேர்தல்களில் இல்லை.

மக்கள் சலுகைகளை பெற்றுக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், தமிழ் தேசியத்திற்கும் ஆதரவாக வாக்களித்திருந்தனர். 2015 ஆட்சி மாற்றத்தின் பின்னரான இனக்க அரசியல் இவ்வாறான நிலையை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலைமைகளில் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னும் பாடம் கற்பதாக தெரியவில்லை.

இன்னும் தங்களுக்கிடையில் போட்டிகளையும் பிரச்சனைகளையும் அவர்கள் ஏற்படுத்திய வண்ணமே உள்ளனர்.

இந்த நிலைமையில் நோக்குகின்ற போது மாற்று அணியும் ஒரு வலுவான அணியாக எதிர் கொள்ளவில்லை.

ஏனெனில் மக்கள் மாற்றத்துக்காக வாக்களித்திருப்பார்கள் எனின் ஒன்றில் விக்ணேஸ்வரன் தலைமையிலான கூட்டுக்கு அல்லது கஜேந்திரகுமார் தலைமையிலான கட்சிக்கு வாக்களித்து இருக்க வேண்டும்.

அவர்களுக்கும் பெருவாரியான மக்கள் வாக்களிக்கவில்லை. அபிவிருத்திக்கும், இனக்க அரசியலுக்குமே கூட்டமைப்பு காட்டிய அரசியல் பாதையிலே மக்கள் போயிருக்கின்ற நிலைமைகள் மிகுந்த வேதனையை ஏற்படுத்தி இருக்கின்றது.

இந்த நிலைமைகளில் மாற்றம் ஏற்படுத்தப்படா விட்டால் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு தொடர்ச்சியாக அரசாங்கம் மிக இலகுவான முறையில் மேற்கொள்வதற்கு வழி வகை ஏற்படும்.

ஆகவே எல்லோரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டிய ஒரு தேவை இருக்கிறது. இம்முறை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் வடக்கு கிழக்கிலிருந்து ஒரு வல்லமை பொருந்தியவர்கள் அல்லது ஒரு சக்தி வாய்ந்தவர்கள், அறிவு விஞ்ஞான பூர்வமாக உரையாடக் கூடியவர், இராஜ தந்திர அணுகுமுறைகளை பின் பற்றக் கூடியவர்கள் பெருவாரியாக இல்லை.

மிகச் சாதாரணமானவர்களையே மக்கள் தெரிவு செய்திருக்கிறார்கள்.ஜனநாயகம் என்பது ஒரு கேலிக்கூத்தானது அல்லது ஜனநாயகம் என்பது கும்பலின் ஆட்சி என்கின்ற லெனினுடைய கூற்றையும், அரசியல் என்பது அயோக்கியனின் கடைசிப் புகலிடம் என்பதையும் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதியையும், சிறையில் இருப்பவர்களை போதைப் பொருள் வியாபாரிகளையும் மண் கடத்தல் காரர்களையும், சாதாரணமாணவர்களையும் பயனற்றவர்களையும் இந்த தேர்தலிலே பலர் நாடாளுமன்றம் சென்றுள்ள ஒரு அபத்தமான நிலை காணப்படுகிறது.

மாற்று அணி என்பது அவர்கள் ஒரு வாக்கு திரட்சியை ஏற்படுத்தவில்லை. வெறுமனே ஒரு கூட்டமைப்புக்கு எதிரான கோஸமாக அவர்கள் பின் பற்றினார்களோ தவிர ஒரு எதிர்ப்பு நிலையை வாக்கு திரட்சியாக மாற்றி அந்த எதிர்ப்பு மனே நிலையை வாக்கு சக்தியாக தங்கள் மீதான ஒரு கவர்ச்சிக்கு ஏற்படுத்தவில்லை.

அவர்களுடைய பேச்சை மக்கள் கேட்டார்களே தவிர ரசிக்கவில்லை. ரசிக்காத வரைக்கும் அது வாக்காக மாறக்கூடிய ஒரு நிலைமை காணப்படாது.

ஆகவே அவர்களும் பின்னடைவைச் சந்திக்க கூடிய இந்த நிலைமையில் எல்லோரும் ஐக்கியப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

இதற்கு மாறாக இப்பொழுது தமிழரசுக் கட்சிக்கு உள்ளே பல்வேறு விதமான பிரச்சனைகள் தோன்றியிருக்கின்றன.

சுமந்திரன் அவர்களும் சிறிதரன் அவர்களும் பகிரங்கமாகவே கட்சியினுடைய தலைமையையும் கட்சியையும் விமர்சிக்கின்ற போக்கு காணப்படுகிறது.

இதற்கு எதிராக கட்சி நடவடிக்கை எடுக்குமா? என்கின்ற கேள்வியும் எழுகின்றது.நாங்கள் கட்சிக்கு எதிராக பேசினோம் என்று தான்தோன்றித்தனமாக எங்களை இடை நிறுத்த வேண்டுமென முற்பட்டவர்கள் தமிழரசுக் கட்சியின் ஒழுக்காற்று கோவை விதி 19 இன் பிரகாரம் எமக்கு எதிராக நடவடிக்கை எடுத்தோம் என கூறியவர்கள் இப்போது சுமந்திரனுக்கும், சிறிதரனுக்கும் எதிராக நடவடிக்கை எடுப்பார்களா? அல்லது ஏனைய தரப்புகளுக்கு அவர்கள் நடவடிக்கை எடுக்க முன் வருவார்களா? என்கின்ற கேள்வி இப்பொழுது எழுகின்றது.

மாவை சேனாதிராஜா அவர்களினுடைய தலைமைத்துவ பலவீனமே இவ்வாறான நிலையை ஏற்படுத்தியுள்ளது.
அவர் தலைவராக 2014 ஆம் ஆண்டு வந்த காலத்திலிருந்து ஒரு வல்லமை பொருந்தியவராகவோ, ஒரு ஆளுமை செலுத்த கூடியவராகவும் இல்லாமல் சுமந்திரன் அவர்களில் தங்கி வாழ்ந்ததன் விளைவை மாவை சேனாதிராஜா அவர்கள் இன்றைக்கு எதிர் நோக்குகின்றனர்.

பலரை அவர் விடுவித்தும் பலரை காணா முகமாக இருந்து அறம் மாவை சேனாதிராஜா அவர்களையும் அடித்திருக்கின்றது.

எப்படி ஐக்கிய தேசியக் கட்சிக்கு தமிழர்களை அழித்து ஒழித்து இலங்கையிலுள்ள அனைத்து கட்சிகளையும் அழித்ததினால் ‘உள் வினை உருத்தி வந்துட்டும்’ என்பது போல அறம் எவ்வாறு அளித்ததோ அதே நிலைமை மாவை சேனாதிராசா விற்கும் தமிழரசுக் கட்சிக்கும் வந்திருக்கின்றது.

புலி நீக்க அரசியலையும் தமிழ் தேசிய நீக்கு அரசியலையும் மேற்கொண்ட சுமந்திரன் போன்றவர்களை கட்டுப்படுத்தாமலும், கட்சிக்குள் சர்வாதிகார நிலைமையை விட்டதும் சேனாதிராசா அவருடைய பங்கு.ஏனெனில் இந்த தான்தோன்றித் தனங்களுக்கு ஒரு முடிவு கட்டப்படவில்லை.

ஆனால் சுமந்திரன் அவர்களும் சிறீதரன் அவர்களும் பின் கதவால் கட்சியை கைப்பற்ற முனைவது ஏற்புடையது அன்று.

ஆனால் அ கைப்பற்றி விடுவார்கள் என்றும் நான் நினைக்கவில்லை. ஏனெனில் கட்சியினுடைய பொதுக்குழு என்பது 150 அங்கத்தவர்களை கொண்டது. மத்திய குழு என்பது 50 அங்கத்தவர்களை கொண்டது.

இந்த பொதுக்குழுவின் ஒப்புதலின்றி கட்சியை கைப்பற்றி விட முடியுமா? என்பதில் எனக்கு ஐயம் உண்டு. அப்படியானால் அண்ணா திமுகவை சசிகலா அல்லது பன்னீர் செல்வம் அணி போன்றது போல் இவர்களும் பொதுக்குழு அங்கத்தவர்களை விலைக்கு வாங்க வேண்டிய ஒரு நிலைமை ஏற்படலாம்.

அவர்கள் அதிலும் வல்லவர்கள் என்று நான் நம்புகிறேன். ஆனாலும் கூட இந்த மத்திய குழு 50 அங்கத்தவர்களில் சம்பந்தன் அவர்களிடம் ஏன் போய் தேசியப் பட்டியல் ஆசனத்தை கேட்கின்றார்கள் என்று தெரியவில்லை.
ஏனெனில் மத்திய குழுவின் தெரிவு பதவி வழி அங்கத்தவர்கள் 22 பேர்களும், மாவட்டத்துக்கான செயற்குழு உறுப்பினர்கள் 18 பேரூமாக மொத்தம் 40 ஆங்கத்தவர்கள்.

மேலும் 10 அங்கத்தவர்கள் தலைவருடைய ஆலோசனைக்கு அமைவாக நியமிக்கப்படுவது. இந்த 50 அங்கத்தவர்களுக்குள் சம்பந்தன் அவர்கள் இல்லை.

ஆகையினால் எப்படி அவர் தமிழரசுக் கட்சியில் அதிகாரம் செலுத்த முடியும்? 2014 ஆம் ஆண்டில் இருந்து சம்பந்தன் அவர்கள் சட்டப்படி தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு அங்கத்தவர் இல்லை.

ஆனால் மத்திய குழுவின் அரசியல் குழுவுக்கு தலைவராக இருக்கின்றார். அது மாத்திரமன்றி தமிழரசுக் கட்சியின் யாப்பின் பிரகாரம் 6 துணைச் செயலாளர்கள் தான் இருந்து விட முடியும்.

ஆனால் இன்றைக்கு 15க்கும் மேற்பட்ட துணைச் செயலாளர்கள் இருக்கிறார்கள். சுமந்திரன் அவர்கள் வகிக்கின்ற துணை பொதுச் செயலாளர் பதவி கூட சட்ட விரோதமானது. யாப்புக்கு முரணானது.

சிவஞானம் அவர்கள் வகிக்கின்ற சிரேஸ்ட துணைத் தலைவர் பதவி கூட சட்ட விரோதமானது. அதிலேயே ஒரு சிரேஸ்ட உப தலைவரும் ஒரு துணை பொதுச் செயலாளருமே யாப்பில் உள்ளது.

2014 ஆம் ஆண்டில் சேனாதிராசா அவர்களுக்கு இந்த விளக்கங்களை எல்லாம் சொல்லி கடிதம் அனுப்பி இருந்தேன். யாப்புக்கு மாறான தெரிவுகள் என்றோ ஒருநாள் பிரச்சினையைக் கொடுக்கும் என்று.

அப்போது பேசாமல் அமைதியாக இருந்தார்கள். 2016 ஜனவரி மாதம் 28ஆம் திகதி இன்னும் ஒரு கடிதத்தை அனுப்பி இருந்தேன். ஊடகங்களில் கூட வந்திருந்தது. வழிப்போக்கர்களிடம் கட்சி பறிபோகின்ற நிலைமை ஏற்படும்.

சுமந்திரன் அவர்களால் உங்களுக்கும் உங்கள் கட்சிக்கும் ஆபத்து ஏற்படும். இந்த நிலைமைகளை எல்லாம் ஒரு முடிவுக்கு கொண்டு வாருங்கள் என்று. ஆனால் அவர் அதை ஏற்கவில்லை.

தான் தோன்றித் தனமாகச் செயற்படும் சுமந்திரனை கட்டுப்படுத்தாததன் விளைவு இன்றைக்கு மாவை சேனாதிராசாவை களைக்க வேண்டும் என்ற நிலைமைக்கு அவர்கள் வந்து விட்டார்கள்.
இது அரசியல் இது ஒரு ஆரோக்கியமான நிலைமை அல்ல.

ஆனால் சுமந்திரன் அவர்கள் போக்கு சில வேளைகளில் வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு உண்டு. ஏனெனில் சம்பந்தன் அவர்களும் துரைராஜசிங்கம் அவர்களும் அவர்களுடைய அணியைச் சேர்ந்தவர்கள்.

பொதுச்செயலாளரின் ஒப்புதலின்றி இந்த கட்சியில் ஏனைய எந்த விடையங்களையும் முன்னெடுக்க முடியாது. ஆகவே இந்தக் நடவடிக்கைகளை அவர்கள் முன்னெடுப்பதற்கு பொதுச்செயலாளராக இருக்கிற துரைராஜசிங்கத்தை பயன்படுத்தி கட்சியை இலாபகரமாக கைப்பற்றக் கூடிய ஒரு சூழ்நிலை ஏற்படலாம்.

யார் கைப்பற்றுகிறார்கள்? யார் தலைவராக இருக்கிறார்கள்? என்பது தமிழ் மக்களுக்கு முக்கியமல்ல. தமிழ் தேசியத்தை சிதைத்து கூட்டமைப்பை உடைத்து சின்னா பின்னமாக்குகின்ற இந்த வேலையை இவர்கள் செய்யப் போகிறார்கள்.ஏனெனில் இவர்கள் வழிப்போக்கர்கள்.

இவர்கள் தமிழ் தேசியத்தின் அடி நாதம் தெரியாதவர்கள். பின் கதவால் கட்சிக்கு வந்தவர்கள். கட்சியினுடைய ஒரு முறைமைகளுக்கூடாக வந்தவர்கள் அல்ல.

இந்த இனத்தையும் அழித்து , இவர்களுடைய தலைமைத்துவத்தை மக்களோ அல்லது வாக்காளர்கள் அல்லது தொண்டர்கள், அங்கத்தவர்களும் பெரும்பாலானவர்கள் இருப்பார்கள் என்ற நிலைமை தெரியவில்லை.

ஏனெனில் இன்றைய தமிழரசுக் கட்சி என்பது ஒரு முழுமையான சட்ட முரண்களுக்குள் காணப்படுகின்றது.
அந்த சட்ட முரண்களில் இருந்து எவ்வாறு தண்னை விடுவித்துக் கொள்ளப் போகிறது? என்ற கேள்வி இருக்கிறது. இந்தக் கேள்விக்கு வருகின்ற சில நாட்களிலேயே விடை கிடைக்கும் என நம்புகின்றேன்.

எது எப்படி இருந்தாலும் எல்லோரும் ஒன்றித்து ஐக்கியத்தோடு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி பீடம் ஏறியுள்ள அரசுக்கு எதிரான நிலைப்பாட்டிற்கு எங்களை தற்காத்துக் கொள்வதற்கு சகல தமிழ் தரப்பினரும் ஒருங்கிணைந்து செயலாற்ற முன்வர வேண்டும்.

இவ்வாறான காட்டிக் கொடுப்புக்கள் , உட்கட்சிப் பிரச்சனைகள் யாவற்றையும் துறந்து மறந்து ஐக்கியத் தோடு செயலாற்ற முன்வர வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/61901

இது எப்போது எழுதப் பட்ட கட்டுரை நுணா? 2020?

"மக்கள் தமிழ் தேசியவாதிகளை விட்டு விட்டு, மிதவாதிகளைத் தேர்ந்திருக்கிறார்கள்" என்று சரியாகக் குறிப்பிட்டு விட்டு "மக்கள் அப்படி இருக்கக் கூடாது" என்று குமுறியிருக்கிறார்! 2020 நிலை?

2024 இல் இது இன்னும் தேசியக் கட்சிகள் நோக்கி சாதகமாக மாறும். ஏன் அப்படி மாறும் என்பது பற்றித் தான் கருத்து வேறு பாடுகள்!

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Justin said:

இந்த அமைப்புகளைப் பற்றி நிலாந்தனும் எழுதியிருந்தார். வர்த்தக சமாசங்கள், இன்ன பிற  என்று சில இருந்தன. இவற்றின் சார்பாக பொது வேட்பாளரை ஆதரிக்கும் முடிவெடுத்தவர்கள் "மக்கள் பிரதிநிதிகள்" என்று அடையாளப் படுத்தப் பட முடியாதவர்கள். உதாரணமாக "வவுனியா வர்த்தகர் சங்கம்" என்றால் "வர்த்தகர்களின் நலன் பேணும்" ஒரு சங்கம் - trade body, "வவுனியா மக்களின் நலன் பேணும்" ஒரு சங்கம் என்று சொல்லி அவர்களை மக்கள் பிரதிநிதிகளாக தரமுயர்த்த இயலாது.

அவர்கள் வாடி வீட்டில் கூடிக் கதைத்து எடுத்த பொது வேட்பாளர் முடிவை "ஜனநாயகம்" என்று மெச்சும் நீங்கள், தமிழரசுக் கட்சியின் பா. உக்கள் கட்சியின் மத்திய குழுவில்எடுத்த 19/23 முடிவை "இருவரின் முடிவு" என்று நிராகரிக்கிறீர்கள்😂.

உங்களிடம் ஏன் இந்த வேறுபாடென்று விளக்கம் கேட்க முயலவில்லை. ஆனால், இப்படியான முட்டாள் தனங்களைச் சுட்டிக் காட்ட வேண்டுமென்பதற்காக சொல்லியிருக்கிறேன்.

நீங்கள் எல்லோரையும் முட்டாள்கள் அல்லது முட்டாள்தனத்து துணை போறவர்கள் என்ற படி நிலைக்கு வந்துள்ளீர்கள். எனவே ஓய்வெடுங்கள். நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

நீங்கள் எல்லோரையும் முட்டாள்கள் அல்லது முட்டாள்தனத்து துணை போறவர்கள் என்ற படி நிலைக்கு வந்துள்ளீர்கள். எனவே ஓய்வெடுங்கள். நன்றி.

முட்டாள் தனத்தை முட்டாள் தனமென்று தான் சொல்ல முடியும். 

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, Justin said:

முட்டாள் தனத்தை முட்டாள் தனமென்று தான் சொல்ல முடியும். 

 மன்னிக்கவும்   உங்கள் கருத்துகள் ரொம்ப சரியானது ஆனால்  

அந்த சொல்பவர்கள்  முட்டாள்  இல்லாமல் இருக்க வேண்டும் 

ஒரு முட்டாள்  மற்றவர்களை முட்டாள் என்று சொன்னால்   உண்மையில் அவர்கள் புத்திசாலிகள் தான்  🙏🙏🙏

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

விசுகரிடம் கேட்டால் அவர் உங்களுக்கு உதவலாம்  🤣

கேள்வி உங்களுக்கு ஆனாது   பதிலும் உங்களிடமிருந்து தான் வரவேண்டும்   

குறிப்பு,. .விசுகர். சொல்வதை நீங்கள் எற்றுக்கொள்வீர்களா.??

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.