Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொதுத் தேர்தல்; இதுவரை 241 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர்

image

எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்காக இதுவரை 241 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, அரசியல் கட்சிகளின் சார்பில் 147 பேரும் சுயேட்சை குழுவாக  94  பேரும் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

WhatsApp_Image_2024-10-11_at_02.22.06.jp

https://www.virakesari.lk/article/196043

  • Replies 63
  • Views 4.1k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    இந்தச் சட்டம் ஏற்கனவே உள்ளது என்றும் ஆனாலும் எவரும் கண்டுகொள்வதில்லை என்றும் சொல்கிறார்கள். இந்தத் தடவை அமுல்படுத்துவார்களா பார்ப்போம். அமுல்படுத்துவது மாத்திரமல்ல பகிரங்கப்படுத்தவும் வேண

  • வாதவூரான்
    வாதவூரான்

    இவ்வளவு சனத்தொகை உள்ள கொழும்பிலையே மொத்தமாக 10 குழுக்கள் தான் போட்டியிடுகினம் ஆனால் வடக்குகிழக்கில் ? வாக்குகளைப்பிரிக்க திட்டமிட்டு களமிறங்குவதாகவே தெரிகிறது

  • நிழலி
    நிழலி

    கடைசியில் என்னையும் இவர்களை ஆதரிக்க வைக்கப் போகின்றார்கள். உண்மையில் நல்ல விடயங்களை செய்ய தொடங்கியுள்ளார்கள் போல் உள்ளது. கந்தளாயில் சீனித் தொழிற்சாலைக்கு சொந்தமான 11,000 ஏக்கர் நிலத்தை குறுகிய க

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

பொதுத் தேர்தல்; இதுவரை 241 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர்

image

எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்காக இதுவரை 241 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, அரசியல் கட்சிகளின் சார்பில் 147 பேரும் சுயேட்சை குழுவாக  94  பேரும் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

WhatsApp_Image_2024-10-11_at_02.22.06.jp

https://www.virakesari.lk/article/196043

இவ்வளவு சனத்தொகை உள்ள கொழும்பிலையே மொத்தமாக 10 குழுக்கள் தான் போட்டியிடுகினம் ஆனால் வடக்குகிழக்கில் ? வாக்குகளைப்பிரிக்க திட்டமிட்டு களமிறங்குவதாகவே தெரிகிறது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2024 பொதுத் தேர்தலில் 22 மாவட்டங்களில் 690 குழுக்கள் போட்டி - தேர்தல்கள் ஆணைக்குழு

image

2024 பொதுத் தேர்தலில் 22 தேர்தல் மாவட்டங்களில் 690 குழுக்கள் போட்டியிடப் போவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

74 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

அநீதிகள் இடம்பெற்றுள்ளதாக உணர்ந்தால் அந்த குழுக்கள் நீதிமன்றத்திற்கு செல்ல முடியும் எனவும் ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையிலான அரசியல் குழுக்கள் போட்டியிடுவதுடன், அதன் எண்ணிக்கை 64 ஆகும்.

மொனராகலை மற்றும் பொலன்னறுவை தேர்தல் மாவட்டங்களில் குறைந்த எண்ணிக்கையிலான அணிகள் போட்டியிடுவதுடன், அங்கு தலா 15 அணிகள் போட்டியிடுகின்றன.

2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் வெள்ளிக்கிழமை (11) நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/196067

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக மாற்றுத் திறனாளிக்கு வாய்ப்பளிக்கும் தேசிய மக்கள் சக்தி

இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்காக தேசிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்டுள்ள தேசியப் பட்டியல் வேட்பாளர்களில் மாற்றுத்திறனாளி சமூகத்தின் பிரதிநிதி ஒருவரும் இடம்பெற்றுள்ளார்.

இலங்கை தேசியப்பட்டியலில் இவ்வாறான ஒரு வேட்பாளர் உள்வாங்கப்பட்டமை இந்த நாட்டின் வரலாற்றில் இதுவே முதல் தடவையாகும்.

தேசிய மக்கள் சக்தி தனது வேட்பு மனுக்கள் அனைத்தையும் ஏற்கனவே தயார் செய்து தேர்தல் அதிகாரிகளிடம் கையளித்துள்ளது.

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக மாற்றுத் திறனாளிக்கு வாய்ப்பளிக்கும் தேசிய மக்கள் சக்தி | Differently Abled Sri Lankan In Parliament

இன்றுடன் நிறைவு 

நாடாளுமன்றத் தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் செய்யும் செயற்பாடுகள் இன்று (11.10.2024) நண்பகல் 12 மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

https://tamilwin.com/article/differently-abled-sri-lankan-in-parliament-1728643472

5 minutes ago, ஏராளன் said:

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக மாற்றுத் திறனாளிக்கு வாய்ப்பளிக்கும் தேசிய மக்கள் சக்தி

இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்காக தேசிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்டுள்ள தேசியப் பட்டியல் வேட்பாளர்களில் மாற்றுத்திறனாளி சமூகத்தின் பிரதிநிதி ஒருவரும் இடம்பெற்றுள்ளார்.

இலங்கை தேசியப்பட்டியலில் இவ்வாறான ஒரு வேட்பாளர் உள்வாங்கப்பட்டமை இந்த நாட்டின் வரலாற்றில் இதுவே முதல் தடவையாகும்.

தேசிய மக்கள் சக்தி தனது வேட்பு மனுக்கள் அனைத்தையும் ஏற்கனவே தயார் செய்து தேர்தல் அதிகாரிகளிடம் கையளித்துள்ளது.

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக மாற்றுத் திறனாளிக்கு வாய்ப்பளிக்கும் தேசிய மக்கள் சக்தி | Differently Abled Sri Lankan In Parliament

இன்றுடன் நிறைவு 

நாடாளுமன்றத் தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் செய்யும் செயற்பாடுகள் இன்று (11.10.2024) நண்பகல் 12 மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

https://tamilwin.com/article/differently-abled-sri-lankan-in-parliament-1728643472

கடைசியில் என்னையும் இவர்களை ஆதரிக்க வைக்கப் போகின்றார்கள்.

உண்மையில் நல்ல விடயங்களை செய்ய தொடங்கியுள்ளார்கள் போல் உள்ளது. கந்தளாயில் சீனித் தொழிற்சாலைக்கு சொந்தமான 11,000 ஏக்கர் நிலத்தை குறுகிய கால விவசாயத்துக்கு வழங்கியுள்ளார்கள் நேற்று. இதுவும் மிகச் சிறந்த ஒரு செயல்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் கடமைகளுக்கு சமுகமளிக்காவிட்டால் ஒரு இலட்சம் ரூபாய் தண்டம் - தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்

image

(நமது நிருபர்) 

தேர்தல் கடமைகளுக்கு சமுகமளிக்குமாறு நியமனக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள சகல அதிகாரிகளும் கடமைகளுக்கு கண்டிப்பாக வருகை தருவது அவசியம் என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.  

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தேர்தல் கடமைகளுக்கான நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டுள்ள அதிகாரிகள், கடமைக்கு வருகை தரத் தவறும் பட்சத்தில், ஒரு இலட்சம் ரூபாய் தண்டப் பணம் அறவிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

சம்பந்தப்பட்ட சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அவர்களுக்கு இத்தண்டனை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.   

தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பித்திருக்காமை மற்றும் விண்ணப்பத்தை நிராகரித்திருந்தமை என்பவை தேர்தல் கடமைகளிலிருந்து விடுவிப்பதற்கான காரணமல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

அத்துடன் தாம், தேர்தல் கடமைகளில் ஈடுபடும் சேவை நிலையத்துக்கு வருகை தந்த பின்னர் வருகைக்கான சான்றிதழை  நிறுவனத்தின் தலைவருக்கு சமர்ப்பிப்பது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  

தேர்தல் கடமைகளுக்கு சமுகமளிக்காத அதிகாரிகள் நாட்டின் அரசியலமைப்புக்கு இணங்க, தேர்தல் ஆணைக்குழுவுடன் ஒத்துழைப்புடன் செயல்படுவதை நிராகரித்துள்ளதாக அல்லது அதற்கு தகுதி இல்லாத நபர் எனக் கணிக்கப்படுவார் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/196161

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

196 ஆசனங்களுக்கு 8388 வேட்பாளர்கள் போட்டி : கொழும்பில் மாத்திரம் 966 பேர் களத்தில் : திகாமடுல்லையில் 66 வேட்புமனுக்கள்!

image

(எம்.மனோசித்ரா)

பொதுத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ள ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள 690 வேட்புமனுக்களின் கீழ் 8388 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர். பாராளுமன்றத்துக்கு தெரிவாகும் 225 உறுப்பினர்களில் மக்களின் வாக்குகளால் தெரிவாகவுள்ள 196 பிரதிநிதிகளுக்காகவே இவ்வாறு 8000க்கும் மேற்பட்டோர் போட்டியிடவுள்ளனர்.

இவர்களில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிக வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் 18 ஆசனங்களுக்காக 966 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

பாராளுமன்றத்தில் 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 196 பேர் மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்படுவர். ஏனைய 29 பேர் தேசிய பட்டியலுக்கூடாக தெரிவு செய்யப்படுவர். 

இம்முறை பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை (11) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது. அதற்கமைய அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்களிடமிருந்து 764 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. எனினும், அவற்றில் 74 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 

பாராளுமன்றத்தில் கம்பஹா மாவட்டத்துக்கே அதிக ஆசனங்கள் ஒதுக்கப்படும்.  அவற்றின் எண்ணிக்கை 19 ஆகும். இந்த 19 ஆசனங்களுக்காக இம்முறை தேர்தலில் 24 அரசியல் கட்சிகள் மற்றும் 17 சுயாதீன குழுக்கள் ஊடாக 902 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.

அதேவேளை பாராளுமன்றத்தில் கொழும்பு மாவட்டத்துக்கே இரண்டாவது அதிக ஆசனங்கள் ஒதுக்கப்படும். அவற்றின் எண்ணிக்கை 18 ஆகும். இந்த 18 ஆசனங்களுக்காக 27 அரசியல் கட்சிகள் சார்பாகவும், 19 சுயாதீன குழுக்கள் ஊடாகவும் 966 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதற்கமைய இம்முறை கொழும்பு மாவட்டத்திலேயே அதிக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

குருணாகல் மாவட்டத்துக்கு 15 ஆசனங்கள் ஒதுக்கப்படும். அதற்காக 18 அரசியல் கட்சிகள், 9 சுயாதீன குழுக்கள் ஊடாக 486 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 

கண்டி மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 12 ஆசனங்களுக்காக 22 அரசியல் கட்சிகள் மற்றும் 12 சுயாதீன குழுக்கள் ஊடாக 510 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

களுத்துறை மாவட்டத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ள 11 ஆசனங்களுக்காக 15 அரசியல் கட்சிகள் மற்றும் 13 சுயாதீன குழுக்களிலிருந்து 392 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 

இரத்தினபுரி மாவட்டத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ள 11 ஆசனங்களுக்காக 18 அரசியல் கட்சிகள் மற்றும் 7 சுயாதீன குழுக்கள் ஊடாக 350 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

காலி மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 9 ஆசனங்களுக்காக 17 அரசியல் கட்சிகள் சார்பிலும், 5 சுயாதீன குழுக்கள் ஊடாகவும் 264 வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர். 

அநுராதபுரம் மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 9 ஆசனங்களுக்காக 17 அரசியல் கட்சிகள் மற்றும் 9 சுயாதீன குழுக்களிலிருந்து 312 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

பதுளை மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 9 ஆசனங்களுக்காக 15 அரசியல் கட்சிகள் மற்றும் 5 சுயாதீன குழுக்களிலிருந்து 240 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கேகாலை மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 9 ஆசனங்களுக்காக 14 அரசியல் கட்சிகள் மற்றும் 4 சுயாதீன குழுக்களிலிருந்து 216 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

நுவரெலியா மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 8 ஆசனங்களுக்காக 17 அரசியல் கட்சிகள் மற்றும் 11 சுயாதீன குழுக்களிலிருந்து 308 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 

புத்தளம் மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 8 ஆசனங்களுக்காக 24 அரசியல் கட்சிகள் மற்றும் 15 சுயாதீன குழுக்களிலிருந்து 429 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

மாத்தறை மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 7 ஆசனங்களுக்காக 15 அரசியல் கட்சிகள் மற்றும் 7 சுயாதீன குழுக்களிலிருந்து 220 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அம்பாந்தோட்டை மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 7 ஆசனங்களுக்கு 16 அரசியல் கட்சிகள் மற்றும் 9 சுயாதீன குழுக்களிலிருந்து 250 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

திகாமடுல்லைக்கு ஒதுக்கப்பட்டுள்ள 7 ஆசனங்களுக்காக 22 அரசியல் கட்சிகள் மற்றும் 42 சுயாதீன குழுக்களிலிருந்து 640 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இம்முறை பொதுத் தேர்தலில் அதிக கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் இந்த மாவட்டத்திலேயே களமிறங்க முன்வந்துள்ளன. யாழ்ப்பாணத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 6 ஆசனங்களுக்காக 23 அரசியல் கட்சிகள் மற்றும் 21 சுயாதீன குழுக்களிலிருந்து 396 வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர்.

வன்னி தேர்தல் மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 6 ஆசனங்களுக்கு 24 அரசியல் கட்சிகள் மற்றும் 27 சுயாதீன குழுக்களிலிருந்து 459 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மாத்தளை மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 5 ஆசனங்களுக்காக 16 அரசியல் கட்சிகள்மற்றும் 7 சுயாதீன குழுக்களிலிருந்து 184 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

மட்டக்களப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ள 5 ஆசனங்களுக்காக 27 அரசியல் கட்சிகள் மற்றும் 22 சுயாதீன குழுக்களிலிருந்து 392 வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 4 ஆசனங்களுக்காக 17 அரசியல் கட்சிகள் மற்றும் 14 சுயாதீன குழுக்களிலிருந்து 217 வேட்பாளர்கள் களமிங்குகின்றனர்.

மொனராகலை மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 6 ஆசனங்களுக்காக 12 அரசியல் கட்சிகள் மற்றும் 3 சுயாதீன குழுக்களிலிருந்து 135 வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர். பொலன்னறுவை மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 5 ஆசனங்களுக்காக 13 அரசியல் கட்சிகள் மற்றும் 2 சுயாதீன குழுக்களிலிருந்து 120 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதற்கமைய மொனராகலை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலேயே குறைந்தளவான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

https://www.virakesari.lk/article/196141

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வேட்பாளர் விருப்பு இலக்கங்கள் நாளை வெளியாகிறது

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்கள் நாளை புதன்கிழமை வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஆணைக்குழு தற்போது அனைத்து மாவட்டங்களிலும் சமர்ப்பிக்கப்பட்ட எண்களை சரிபார்த்து வருகிறது, செயல்முறை முடிந்ததும் அவற்றை மீண்டும் மாவட்ட செயலாளர்களிடம் சமர்ப்பிக்கும்.

மேலும், ஒரு வேட்பாளருக்கு அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச செலவு உள்ளிட்ட முக்கிய தேர்தல் விவகாரங்கள் குறித்து விவாதிக்க அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற உள்ளது.

https://thinakkural.lk/article/310749

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரசாரங்களின்போது ஒரு வாக்காளருக்காக செலவிடக்கூடிய அதியுச்ச தொகை எவ்வளவு?; கட்சிகளின் செயலாளர்களுடன் தேர்தல்கள் ஆணைக்குழு கலந்துரையாடல்

image

(நா.தனுஜா)

தேர்தல் பிரசார செலவினங்கள் ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் பிரகாரம் எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடும் சகல அரசியல் கட்சிகளும், சுயேட்சை வேட்பாளர்களும் அவர்களது தேர்தல் பிரசார நடவடிக்கைகளின்போது ஒரு வாக்காளருக்காக செலவிடக்கூடிய அதியுச்ச தொகையை நிர்ணயிப்பதற்கான ஆலோசனை கலந்துரையாடல்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் நேற்றைய தினம் நடாத்தப்பட்டது.

இதில் கலந்துகொண்ட அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் அதியுச்ச தொகை குறித்த ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளித்தனர்.

பொதுத்தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தல் மற்றும் வேட்புமனுத்தாக்கல் என்பன கடந்த வெள்ளிக்கிழமை நண்பகலுடன் முடிவுக்கு வந்தது. தேர்தல் பிரசார செலவினங்கள் ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் பிரகாரம் வேட்புமனுத்தாக்கல் முடிவுக்குவந்து 5 நாட்களுக்குள் தேர்தல்கள் ஆணைக்குழுவானது அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் ஒவ்வொரு வாக்காளருக்கும் செலவிடவேண்டிய அதியுச்ச தொகை எவ்வளவு என்று நிர்ணயித்து, அதனை வர்த்தமானியில் வெளியிடவேண்டும்.

அதேபோன்று அத்தொகையை நிர்ணயிப்பதற்கு முன்னதாக தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களிடமிருந்து இவ்விடயம் தொடர்பில் ஆணைக்குழு ஆலோசனை பெற்றுக்கொள்ளவேண்டும்.

அதற்கமைய ஒவ்வொரு மாவட்ட வாரியாக தேர்தல் பிரசார செலவினம் தொடர்பில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களின் பரிந்துரைகளை தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்கனவே திரட்டியிருந்தது.

அதேவேளை கொழும்பு மாவட்டத்தில் ஒவ்வொரு வாக்களாளருக்கும் செலவிடப்படவேண்டிய அதியுச்ச தொகை குறித்த பரிந்துரைகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் தேர்தல்கள் ஆணைக்குழுவானது நேற்று செவ்வாய்கிழமை எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடும் சகல அரசியல் கட்சிகளினதும் செயலாளர்களுடன் சந்திப்பொன்றை நடத்தியிருந்தது. இச்சந்திப்பின்போது பிரசார செலவினங்கள் தொடர்பில் அக்கட்சிகளின் பரிந்துரைகள் பெற்றுக்கொள்ளப்பட்டன.

இவ்வாறு நாட்டின் சகல தேர்தல் மாவட்டங்களில் இருந்தும் திரட்டப்பட்ட தரவுகளை அடிப்படையாகக்கொண்டு, அந்தந்த மாவட்டங்களின் சனத்தொகை, பூகோள அமைவிடம் மற்றும் செலவினங்கள் ஆகியவற்றை மையப்படுத்தி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் ஏற்கனவே தயாரிக்கப்பட்டிருக்கும் செயன்முறை ஊடாக ஒரு வாக்காளருக்கு செலவிடப்படவேண்டிய அதியுச்ச தொகை கணிப்பிடப்படும். இத்தொகையானது மேற்கூறப்பட்ட காரணிகளின் அடிப்படையில் மாவட்டத்துக்கு மாவட்டம் வேறுபடும்.

அதன்படி எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலில் போட்டியிடும் சகல அரசியல் கட்சிகளும், சுயேட்சை வேட்பாளர்களும் பிரசார நடவடிக்கைகளின்போது ஒரு வாக்காளருக்காக செலவிடவேண்டிய அதியுச்ச தொகையின் சராசரியானது பெரும்பாலும் 109 - 110 ரூபா என்ற மட்டத்தில் அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இத்தொகை ஒவ்வொரு மாவட்டத்துக்கும் வேறுபடும் என்பதால், கொழும்பு உள்ளிட்ட சனத்தொகை மற்றும் செலவினங்கள் கூடிய தேர்தல் மாவட்டங்களுக்கான அதியுச்ச தொகை அண்ணளவாக 110 - 120 ரூபா வரையும், வன்னி போன்ற சனத்தொகை மற்றும் செலவினங்கள் குறைந்த தேர்தல் மாவட்டங்களுக்கான அதியுச்ச தொகை அண்ணளவாக 80 - 100 ரூபா வரையும் நிர்ணயிக்கப்படக்கூடிய சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றன.

https://www.virakesari.lk/article/196389

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொதுத் தேர்தல்; உத்தியோகப்பூர்வமான வாக்காளர் அட்டைகள் வழங்கப்படும் திகதி அறிவிப்பு

image

எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான உத்தியோகப்பூர்வமான வாக்காளர் அட்டைகள் வழங்கப்படும் திகதி தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையில் குறிப்பிடப்படுவதாவது, 

பொதுத் தேர்தலுக்கான உத்தியோகப்பூர்வமான வாக்காளர் அட்டைகள் செப்டெம்பர் 27 , 31 மற்றும் நவம்பர் 03 ஆகிய திகதிகளில் வழங்கப்படும்.

நவம்பர் 7 ஆம் திகதிக்குப் பின்னர் உத்தியோகப்பூர்வமான வாக்காளர் அட்டைகள் கிடைக்கப் பெறாத வாக்காளர்கள் தங்களது பிரதேசங்களில் உள்ள தபால் அலுவலகங்களுக்குச் சென்று உத்தியோகப்பூர்வமான வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது .

WhatsApp_Image_2024-10-15_at_05.56.47.jp

https://www.virakesari.lk/article/196382

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொதுத் தேர்தல் : கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் உள்நாட்டு பங்குதாரர்களுக்கு உபகரணங்கள் கையளிப்பு 

image

எதிர்வரும் பொதுத் தேர்தலில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற உள்நாட்டுப் பங்குதாரர்களுக்கு உபகரணங்களைக் கையளிக்கும் நிகழ்வு இன்று (16) கொழும்பில் நடைபெற்றுள்ளது. 

ஐரோப்பிய ஒன்றிய தேர்தல்கள் கண்காணிப்புக் குழுவின் தலைவர் கார்மன் மொரீனோ உட்பட பலர் இதில் பங்கேற்றனர். 

(படப்பிடிப்பு : எஸ்.எம்.சுரேந்திரன்)

download__1_.jfif

https://www.virakesari.lk/article/196464

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஊடகங்களிடம் தேர்தல்கள் ஆணையாளர் விடுத்துள்ள விசேட கோரிக்கை

பொதுத் தேர்தலை நியாயமான முறையில் நடத்தி முடிப்பதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க சகல ஊடகங்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் நேற்று ஊடகப் பிரதானிகளுடன் நடைபெற்ற சந்திப்பில் இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட அவர்,

கடந்த வெள்ளிக்கிழமையுடன் பொதுத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தல் மற்றும் வேட்புமனுத்தாக்கல் செய்வது நிறைவடைந்துள்ள நிலையில்,

அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தியும், சுயேட்சையாகவும் போட்டியிடும் வேட்பாளர்கள் நாடளாவிய ரீதியில் தமது தேர்தல் பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற காலப்பகுதியில் வேட்பாளர்களின் பிரசார நடவடிக்கைகளுக்காக ஊடகங்களால் வழங்கப்பட்ட  நியாய பூர்வத்தன்மை, தேர்தல் பிரசாரங்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னரான காலப்பகுதியில் ஊடகங்களும் அதனை உரியவாறு பின்பற்றி நடந்துகொண்டமையையும் அவர் இதன்போது நினைவுக் கூர்ந்தார்.

அத்தோடு, பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட அறிவிப்புக்களை மக்களிடம் கொண்டுச் சென்று சேர்ப்பதில் ஊடகங்கள் வழங்கிய ஒத்துழைப்புக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

அதே காலப்பகுதியில் சில ஊடகங்களின் நியாயமற்ற நடத்தைகளைச் சுட்டிக்காட்டி, அவை மீண்டும் இடம்பெறாதிருப்பதை உறுதிப்படுத்துமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எதிர்வரும் பொதுத் தேர்தலை நியாயமான முறையில் நடத்திமுடிப்பதற்கு அவசியமான ஒத்துழைப்பை வழங்குமாறும், இந்தத் தேர்தலில் போட்டியிடும் சகல வேட்பாளர்களுக்கும் இயலுமானவரை சமத்துவமான பிரசார வாய்ப்பை அளிக்குமாறும் அவர் ஊடகப்பிரதானிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

https://thinakkural.lk/article/310815

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொதுத் தேர்தல் தொடர்பாக 257 முறைப்பாடுகள் - தேர்தல்கள் ஆணைக்குழு

image

பொதுத் தேர்தல் தொடர்பாக இதுவரை 257 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெறப்பட்ட புகார்கள் அனைத்தும் சட்டத்தை மீறியவை எனத் தெரிவித்துள்ளது.

பெறப்பட்ட புகார்களில் 181 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டு, மேலும் 76 புகார்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/196533

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொதுத் தேர்தல்; விசேட தேவையுடையோருக்கு போக்குவரத்து வசதிகள்

image

எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிக்கவுள்ள விசேட தேவையுடைய வாக்காளர்களுக்குப் போக்குவரத்து வசதிகள் பெற்றுக்கொடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்கழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தேர்தல் ஆணைக்கழு மேலும் தெரிவிக்கையில், 

பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கு நடத்து அல்லது பொது போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தியோ வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்ல முடியாத விசேட தேவையுடைய வாக்காளர்களுக்குப் போக்குவரத்து வசதிகள் பெற்றுக்கொடுக்கப்படும்.

இந்த போக்குவரத்து வசதிகளைப் பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பங்களை மாவட்ட தேர்தல் அலுவலகங்களிலும், பிரதேச செயலகங்களிலும், கிராம அலுவலர் அலுவலகங்களிலும், www.election .gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாகவும் பெற்றுக் கொள்ள முடியும்.

இந்த விண்ணப்பங்களை நவம்பர் மாதம் 7 ஆம் திகதிக்கு முன்னர் உரிய தெரிவத்தாட்சி அலுவரிடம் அல்லது  மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பவர், தன்னால் கால்நடையாகவோ அல்லது பொது போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தியோ வாக்களிப்பு நிலையத்திற்குச் செல்ல முடியாது என நிரூபிக்கக்கூடியவாறு வைத்தியரின் சான்றிதழுடன் விண்ணப்பத்தை ஒப்படைக்க வேண்டும் என தேர்தல் ஆணைக்கழு மேலும் தெரிவித்துள்ளது.

WhatsApp_Image_2024-10-18_at_02.54.29.jp

https://www.virakesari.lk/article/196588

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் முறைப்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரிப்பு - தேர்தல்கள் ஆணைக்குழு

image

பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை 400ஐ தாண்டியுள்ளது.

கடந்த தினத்தில் ஆணைக்குழுவிற்கு 58 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இதுவரை கிடைக்கப்பெற்ற மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 401 ஆக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த முறைப்பாடுகள் அனைத்தும் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பானவை என்றும் வன்முறை தொடர்பான முறைப்பாடுகள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை என்றும் தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

கிடைக்கப்பெற்ற 401 முறைப்பாடுகளில் 309 முறைப்பாடுகளுக்கு ஏற்கனவே தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/196735

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் திகதி அரசியலமைப்புக்கு எதிரானது; நீதிமன்றில் மனு தாக்கல்

பாராளுமன்றத் தேர்தலை நவம்பர் 14 ஆம் திகதி நடத்துவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று தீர்ப்பளிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிவில் அமைப்பு செயற்பாட்டாளரும் “நாம் இலங்கை தேசிய அமைப்பின்” அழைப்பாளருமான எச். எம். பிரியந்த ஹேரத்தினால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் சார்பில் சட்டமா அதிபர், ஜனாதிபதியின் செயலாளர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் 10 ஆவது பிரிவின்படி, வேட்புமனு தாக்கல் செய்வதற்கான திகதி ஒக்டோபர் 4 முதல் ஒக்டோபர் 11 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் சுட்டிக்காட்டினார்.

தேர்தல்கள் சட்டத்தின்படி, ஐந்து வாரங்களுக்கு குறையாமலும், வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நாளிலிருந்து ஏழு வாரங்களுக்கு மிகையாகாமலும் வாக்குப்பதிவுக்கான திகதி நிர்ணயிக்கப்பட வேண்டும்.

அதன்படி, வேட்புமனு ஏற்கும் பணி முடிவடையும் ஒக்டோபர் 11 ஆம் திகதி முதல் ஐந்து வார கால அவகாசம் நவம்பர் 15 ஆம் திகதியும், ஏழு வார கால அவகாசம் நவம்பர் 29ஆம் திகதியும் நிறைவடையும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தற்போது பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நவம்பர் 14 ஆம் திகதி, அந்த சட்டக் காலப்பகுதியில் உள்ளடக்கப்படாததால், அன்றைய தினம் பாராளுமன்றத் தேர்தலை நடத்துவது சட்டத்திற்கு முரணானது என மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே சம்பந்தப்பட்ட விடயத்தை சரி செய்வதற்கு ஏற்ற உத்தரவாக இருந்தால், உயர் நீதிமன்றம் அத்தகைய உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு மனுதாரர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.

https://thinakkural.lk/article/310964

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நவம்பர் 21இல் பாராளுமன்றம் கூடும் போது 225 உறுப்பினர்களின் முழுப் பிரதிநிதித்துவமும் இருக்காது

பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியானதன் பின்னர் அரசியல் கட்சிகள் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்குப் பிரதிநிதிகளை நியமிப்பதை தாமதப்படுத்தினால், நவம்பர் 21 ஆம் திகதி பாராளுமன்றம் கூடும் போது 225 உறுப்பினர்களின் முழுப் பிரதிநிதித்துவமும் இருக்காது என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நவம்பர் 15 அல்லது 16 ஆம் திகதிகளில் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகும் எனவும், பெற்ற வாக்குகளின் அடிப்படையில் ஒவ்வொரு கட்சி மற்றும் சுயேச்சைக் குழுவிற்கும் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகள் வழங்கப்பட உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த தேர்தல் ஆணையாளர் நாயகம் ரத்நாயக்க, தேர்தல் திகதிக்கும் பாராளுமன்றம் கூடும் திகதிக்கும் இடையில் சுமார் ஒரு வாரகாலம் உள்ளதால் எதிர்வரும் நவம்பர் 18 அல்லது 19 ஆம் திகதிகளில் மக்கள் பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை வர்த்தமானியில் வெளியிட வேண்டும்.

அரசியல் கட்சிகள் அல்லது சுயேச்சைக் குழுக்கள் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு பெயர்களை பரிந்துரைப்பதில் தாமதம் செய்தால், பாராளுமன்றம் கூடும் திகதிக்கு முன்னர் இந்தப் பெயர்களை வர்த்தமானியில் வெளியிட முடியாது. இதனால், நவம்பர் 21ஆம் தேதி நாடாளுமன்றம் கூடும் போது 225 உறுப்பினர்களும் பிரதிநிதித்துவப்படுத்தப்பட மாட்டார்கள்.

முந்தைய பாராளுமன்ற கூட்டத்தொடரிலும், முதல் கூட்டத்தில் அனைத்து எம்.பி.க்களின் முழு பிரதிநிதித்துவம் இல்லை. கணிசமான காலதாமதத்தின் பின்னரே ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஒதுக்கப்பட்ட தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டார்.

ஆரம்பத்தில், தேசியப் பட்டியலில் பெயர் உள்ளவர் அல்லது தேர்தலில் போட்டியிட்ட ஒருவரை மட்டுமே தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு நியமிக்க முடியும். ரணில் விக்கிரமசிங்கவின் பெயர் தேசியப்பட்டியலில் இல்லாவிட்டாலும், அவர் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு வர அனுமதித்திருந்தார். தேர்தலில் போட்டியிடாத அல்லது தேசியப்பட்டியலில் பெயர் இல்லாத ஒருவர் முதலில் பொதுப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட ஒருவர் இராஜினாமா செய்ததன் காரணமாக ஒரு ஆசனம் வெற்றிடமானால் மட்டுமே எம்.பி.யாக நியமிக்க முடியும்.

https://thinakkural.lk/article/310979

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் இதுவரை 600 முறைப்பாடுகள் பதிவு

image
 

பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் இதுவரை (செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி முதல்  ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி வரை) 600 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 196 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 385 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதேவேளை, மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 04 முறைப்பாடுகளும் ஏனைய விடயங்கள் தொடர்பில் 15 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

https://www.virakesari.lk/article/196983

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொதுத்தேர்தல் வாக்களிப்பு : வாக்காளரின் இடது கை ஆட்காட்டி விரல் மீது  அடையாளமிடப்படும் - தேர்தல்கள் ஆணைக்குழு

image

(இராஜதுரை ஹஷான்)

பொதுத்தேர்தலின் போது வாக்காளரின் இடது கை ஆட்காட்டி விரல் மீது உரிய அடையாளமிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. வாக்காளருக்கு  இடது கை ஆட்காட்டி விரல் இல்லாதிருப்பின் அவரது வலது கையிலுள்ள வேறேதேனுமொரு விரலில் உரிய அடையாளமிடப்படும் என  தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இடம்பெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பின் போது வாக்காளரின் இடது கை சுண்டு விரலில் உரிய அடையாளமிடப்பட்டது. அத்துடன் நாளை சனிக்கிழமை இடம்பெறவுள்ள காலி மாவட்டம் எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் வாக்காளரின் இடது கை பெருவிரலில் உரிய அடையாளமிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான பின்னணியில் 1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 38(3(ஆ) ஆம் பிரிவின் பிரகாரம், வாக்களிப்பின் போது வாக்காளிப்பதை அடையாளப்படுத்துவதை அடையாளமிடுவதில் எழும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில்,

எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைப்பெறவுள்ள பொதுத்தேர்தலின் போது வாக்காளரின் இடது கை ஆட்காட்டி விரல் மீது உரிய அடையாளமிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. வாக்காளருக்கு  இடது கை ஆட்காட்டி விரல் இல்லாதிருப்பின்  அவரது வலது கையிலுள்ள வேறேதேனுமொரு விரலில் உரிய அடையாளமிடப்படும்.

பொதுத்தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை தேர்தல்கள் ஆணைக்குழு சனிக்கிழமை (26) தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கவுள்ளது. இதற்கதைய வாக்காளர் அட்டைகள் ஞாயிற்றுக்கிழமை (27) முதல் விநியோகிக்கப்படவுள்ளது. அத்துடன் வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 7 ஆம் திகதிக்குள் விநியோகித்து நிறைவு செய்ய தபால் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

தபால்மூல வாக்களிப்பு எதிர்வரும் புதன்கிழமை (30) மற்றும் நவம்பர் மாதம் 1, 4 ஆகிய திகதிகளில் நடத்தப்படவுள்ளது. இத்தினங்களில் வாக்களிக்காதவர்கள் நவம்பர் மாதம் 7 மற்றும் 8 ஆகிய தினங்களில் வாக்களிக்க முடியும்.

https://www.virakesari.lk/article/197033

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தேர்தலில் முதன்முறையாக போட்டியிடும் திருநங்கை

இலங்கை சோசலிச கட்சியின் மகளிர் விவகார செயலாளர் சானு நிமேஷா, இலங்கை தேர்தலில் போட்டியிடவுள்ள முதல் திருநங்கை என்ற வரலாற்றை படைத்துள்ளார்.

இவர், நடைபெறவுள்ள பொதுதேர்தலில், கேகாலை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.

“பொதுத் தேர்தலில் போட்டியிட எனக்கு வாய்ப்பளித்த இலங்கை சோசலிசக் கட்சிக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். முதன்முறையாக தேர்தலில் போட்டியிட திருநங்கை ஒருவரை நிறுத்தியதன் மூலம் சரித்திரம் படைத்தேன்” என, நிமேஷா ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/311174

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சல் மூல வாக்களிப்பு நாளை ஆரம்பம்

பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு நாளை ஆரம்பமாகவுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களிலும் அஞ்சல் மூல வாக்களிப்புக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாளை தவிர்ந்து, அடுத்த மாதம் 4 ஆம் திகதியும் அஞ்சல் மூல வாக்களிப்புக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

முப்படை முகாம்களிலும், அனைத்து அரச நிறுவனங்களிலும் அடுத்த மாதம் முதலாம் திகதியும் 4 ஆம் திகதியும் அஞ்சல் மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ளது.

குறித்த தினங்களில் வாக்களிக்க முடியாதவர்களுக்காக அடுத்த மாதம் 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/311292

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு

image

பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை (செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி வரை) 1,042  முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 297 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 714 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதேவேளை, மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 10 முறைப்பாடுகளும் ஏனைய விடயங்கள் தொடர்பில் 21 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

11.jpg1122.jpg

https://www.virakesari.lk/article/197521

  • கருத்துக்கள உறவுகள்
On 12/10/2024 at 04:53, நிழலி said:

கடைசியில் என்னையும் இவர்களை ஆதரிக்க வைக்கப் போகின்றார்கள்.

 

கிழக்கு மாகாணத்தில் தேசிய மக்கள் கட்சிக்கு வழங்கும் வாக்குகள் அக்கட்சி சார்பாக போட்டியிடும் தமிழரல்லாத வேட்பாளரை தெரிவு செய்ய உதவி செய்யும். உதாரணம்-  சிலதமிழர்கள்  தேசிய மக்கள் கட்சிக்கும் அக்கட்சி சார்பாக போட்டியிடும் 3 தமிழ்வேட்பாளர்களுக்கு வாக்களிக்கிறார்கள்.  தேசிய மக்கள் கட்சிஅம்மாவட்டத்தில் 2 இடங்களை கைப்பற்றுகிறது. அக்கட்சிக்கு வேட்பாளர்களில் அதிக வாக்குகளை பெறுபவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.  முதல் இரண்டு இடங்களை பெற்றவர்கள் தமிழரல்லாதவர்களாகவும் இருக்கலாம். 

இதே போல தமிழர் தாயகத்தில் சிங்கள கட்சிகளுக்கு கிடைக்கும் வாக்குகள் தேசியரீதியில் தேசிய பட்டியலின் மூலம் தமிழருக்கு எதிராக குரல் கொடுக்கும் ஒருவரை தெரிவு செய்ய உதவலாம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொதுத்தேர்தல் தொடர்பில் இதுவரை 1,136 முறைப்பாடுகள் பதிவு - தேர்தல் ஆணைக்குழு

image

பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை (செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி வரை) 1,136 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 316 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 788 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதேவேளை, மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 11 முறைப்பாடுகளும் ஏனைய விடயங்கள் தொடர்பில் 21 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

 

1.jpg

https://www.virakesari.lk/article/197599

Edited by ஏராளன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அனைத்து நிறுவனங்களின் தலைவர்களுக்கும் தேர்தல் ஆணைக்குழுவின் முக்கிய அறிவித்தல்

image

நிறுவனங்களில் புதிய நியமனங்கள் மற்றும் பணி இடமாற்றங்களை செய்வதற்கு முன்னர் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிக்க வேண்டும் என அனைத்து நிறுவனங்களின் தலைவர்களுக்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவிக்கையில், 

தேர்தல் காலத்தில் பல்வேறு நிறுவனங்களில் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவுக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதனை கருத்தில் கொண்டே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் தலைவர் அல்லது பணிப்பாளரை நியமிப்பதற்குத் தேவை ஏற்பட்டால் அது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு உடனடியாக அறிவிக்க வேண்டும்.

மேலும், தேர்தல் நடவடிக்கையை பாதிக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் புதிய நியமனங்கள் மற்றும் பணி இடமாற்றங்கள் தேர்தல் சட்டத்துக்கு எதிரானது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/197703

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.