Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
மாற்றம் ஒன்றே மாறாதது
 
நான் யார் என்ற கேள்வியும் அதற்கான தேடலும் எங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கின்றது. அது அப்பன், அப்பப்பன், முப்பாட்டன் எண்ட பரம்பரையின் ஆணி வேராகவோ இல்லை பரம்பி் வாழும் எங்கள் இனத்தின் தேடலாகவோ இல்லை என்னுள் நானே என்னைத் தேடும் ஆத்மீகத் தேடலாகவோ இருக்கும்.
இங்கே ஒவ்வொருவனும் சமூகத்தில் தன் அடையாளம் என்னவென்றே தேடிக்கொண்டிருக்கிறான். அதைத் தக்க வைக்கவும் தகமைப்படுத்தவுமே பாடுபடுகிறான். பலர் அதைத் தொலைத்துவிட்டு தங்களை மட்டுமில்லை தங்கள் சமூகத்தையே நிர்க்கதியாக்கி விட்டார்கள்.
பிறக்கும் போது இன்னாரின் மகனாகி , வளர்ப்பின் போது இன்னாரின் பரம்பரையாகி, படிக்கும் போது இந்தப் பாடசாலையின் மாணவனாகி, பல்கலைக்கழகத்தில் பலதில் ஒருவனாகி, சமூகத்தில் தன்னை நிலைநிறுத்த ஒரு தொழிலாழியாகும் ஒவ்வொருத்தனுக்கும் தன் அடையாளங்கள் மாறிக்கொண்டே இருக்கும் .
இது தான் மாற்றமா ? மாறாதது ஒன்றும் அல்லையா? அப்படியானால் மற்றவர்கள் மாறும் போது நானும் மாறுவது பச்சோந்தித் தனம் இல்லையா? வயதும் முதிர்ச்சியும் மாற்றமா இல்லை வாழ்க்கையின் படிநிலைகளா?
அப்படியானால் இளையராஜாவை விட்டுவிட்டு இமானைக் கேட்டபது தான் மாற்றமா
இடியபத்துக்குப் பதிலாக இன்னோரு உணவைத் தேடுவது தான் மாற்றமா
காற்றை விட்டுவிட்டு பையில் அடைத்த பிராணவாயுவை சுவாசித்தல் மாற்றமா?
அப்படியானால் நான், என்னுடையது, என் சமூகம், என் உணர்வு, என் உரிமை , என் மண், என் சுவாசம் என்று எல்லாவற்றையும் விட்டுவிட்டு இன்னொரு உடலுள் கூடுவிட்டு கூடுபாய்ந்து இருப்பது தான் மாற்றமா?
இல்லை எனில்…..
ஆம் நீ என்பதே நீ மட்டுமல்ல நீ சார்ந்த சமூகம் என்று வரைவிலக்கணப்படுத்தப்படும் போது எவ்வாறு நீ உன் முடிவுகளை உனக்கான வசதிக்கும் வாய்ப்புக்குமாய் உன்நலன் மட்டும் கருதி எடுப்பாய். நீ வாழும் சமூகத்தை உதறிவிட்டு , உன் இனம், உன் மண்ணின் மணம், உன் சந்ததி, உன் கலை, உன் உடை , உன் கலாச்சார விழுமியங்கள் எல்லாவற்றையும் தொலைத்து நிற்பது தான் மாற்றமா?
என்னில் நம்பிக்கையிழந்து தேவதூதன் வந்து என்னைக்காப்பாற்றுவான் என்று ஏன் காத்திருக்க வேண்டும். தூதர்கள் வரட்டும், வருவோர் மாற்றங்களை ஏற்படுத்தட்டும் அது நிலைக்கட்டும் நாடு சுபிட்சம் பெறட்டும் அதற்காக மாற்றம் என்ற பேரில், பேரலையில், சுழல்காற்றில் சிக்கிச் காற்றின் போக்கெல்லாம் சருகாயப் பறக்காமல்;
“ நான் விருட்சமாகி, என் இனமாய் ஆழ வேரூன்றி, என் சனமாய் அகலக் காலூன்றி, மண்ணுக்காய் வித்தாகிய விதைகளின் உணர்வை உயிராக்கி, என் அடையாளத்தை தொலைக்காமல் நான் நானாய் , நமக்காக நாமாய் , தமிழனாய், தாயகத்து மைந்தனாய், இனத்தின் குரலாய், தன்மானத்தோடு தலைநிமர்ந்து தனி வழி பயணிக்க வேண்டும்”
நீ உன் அடையாளத்தைத் தொலைக்காமல் இருக்கும், உன்னை இழக்காமல் இருக்கும் மாறாத மாற்றம் ஒன்றே மாறாதது.
“ தலை நிமிர்ந்து நில்லடா “
 
  • கருத்துக்கள உறவுகள்

திருவாளர் சுமந்திரன் அவர்களே ஒருவேளை இதை நீங்கள் படிக்க நேர்ந்தால்.........

நாம் யாரென்ற தேடலில் எப்போதும் குழப்பம் எமக்கு இருந்ததில்லை, நாம் இருக்கும்வரைக்கும்  இறக்கும் வரைக்கும் இறந்த பிறகும் நாம் பிரபாகரனின் பிள்ளைகள்,

மானத்திற்காக ஏங்கியிருந்து உயிர்விட்ட  ஏங்கிய ,ஏங்கிகொண்டிருக்கும் எம் பாட்டன் முப்பாட்டன் தகப்பன் நான் உட்பட  அனைவருக்கும் தந்தையும் அவர்தான்,

அந்த மானசீக தந்தையின் குடை நிழலில் ஒதுங்கி நின்று எச்சி துப்பி போகும் நீங்கள் எம் இனத்தின் பெயரையே உச்சரிக்க தகுதியற்றவர்கள்>

 

சமூகத்தில் எம் அடையாளம் என்னவென்று நாம் தெளிவாகவே தெரிந்து வைத்துள்ளோம்,  எம் மண்ணை சிங்களவன் ஆக்கிரமித்துவிட்டாலும் என் மனசை ஒருபோதும் ஆட்சி செய்யமுடியாது என்பதில் உறுதியாகவே உள்ளோம்.

அதனால்தான் தமிழர்கள் பேரில் கட்சி வைப்பதால் உங்கள் சார்ந்தவர்களை ஒப்புக்காச்சும் தேர்வு செய்து நாளுமன்றம் அனுப்பினார்கள் தமிழர்கள், அதன் அர்த்தம் உங்களைத்தான் தமிழர்பிரதிநிதி என்று ஒட்டுமொத்தமாய் தேர்வு செய்தோம் என்று அர்த்தமல்ல, ஒட்டுமொத்தமாய் எமக்காய் போரிட்டவர்கள் அழிந்துபோனபோது உங்களையாச்சும் தேர்ந்தெடுக்கலாமே என்ற வேறு வழியற்ற தீர்மானம்தான் அது.

 

  தமிழரிடம் வாக்குவாங்கி பாராளுமன்றம் சென்று சிங்கள அதிரடிப்படையின் பாதுகாப்பில் ஜனாதிபதி சட்டத்தரணியாக வலம் வந்த நீங்கள்தான் எந்த இனத்தின் அடையாளம் என்பதை நீங்கள் தெளிவாக தெரிந்து வைத்திருந்தால் எமக்கு சொல்லுங்கள்.

விடுதலைபுலிகள் போர்குற்றமிழைத்தார்கள் சர்வதேசத்துக்கு தகவல் கொடுப்பவர்போல் பேசிய நீங்கள் மண்ணுக்காக விதையாகிய வித்துக்கள் பற்றி எப்படி கூச்சம் கொஞ்சம்கூட இன்றி பேச முடிகிறது?

ஒவ்வொரு ஜனாதிபதி மாற்றத்தின்போதும் அவர்களுடன் ஒட்டியுறவாடி, ஜனாதிபதி தேர்தலின் இறுதி நிமிடம்வரை ரணிலுடன் கூடி திரிந்து காணி பொலிஸ் அதிகாரம் எல்லாம் வாங்கி தருவேன் என்று புளுகி சிங்கள  எஜமான விசுவாசம் காட்டிவிட்டு, இன்று அநுர ஆட்சியில் நீங்கள் உங்களை சார்ந்தவர்களை தமிழர்கள் தூக்கியெறியலாம் என்ற அச்சத்தில், சாராய அனுமதி யார் பெற்றார்கள் என்று அறியவேண்டுமென்று ஒரு சாட்டு சொல்லி அநுரவுடம் ஓடிபோய் நின்று சந்திப்பு நடத்துகிறீர்கள் , அப்படியாவது அவருடன் ஒட்டுண்ணியாகி உங்கள் அரசியல் பித்தலாட்டத்தை தக்க வைக்கலாம் என்று கனவு காண்கிறீர்கள்.

உங்கள் சொகுசு வாழ்வை தக்கவைக்க எப்படி வேண்டுமென்றாலும் முயற்சிக்கலாம் அதில் தப்பில்லை ஆனால் இனத்தின் பெயரை அதற்குள் இழுத்து வராதீர்கள்,

உங்களுக்கெல்லாம் காலணியை தூக்கி இறந்த எம்மவர்களின் உறவுகள் காண்பிக்கலாம், ஆனால் அது மிக தவறு எமக்காகவே வாழ்ந்து எம்மோடு எப்போதும் கூட பயணித்து எமக்குமுன்னமே வாழ்வை தொலைக்கும் காலணிகள் உங்களைவிட உயர்வானவை,  அதனை உங்களுக்கு காண்பித்து காலணிகளின் புனிதத்தை எவரும் களங்க படுத்தகூடாது.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, valavan said:

திருவாளர் சுமந்திரன் அவர்களே ஒருவேளை இதை நீங்கள் படிக்க நேர்ந்தால்.........

நாம் யாரென்ற தேடலில் எப்போதும் குழப்பம் எமக்கு இருந்ததில்லை, நாம் இருக்கும்வரைக்கும்  இறக்கும் வரைக்கும் இறந்த பிறகும் நாம் பிரபாகரனின் பிள்ளைகள்,

மானத்திற்காக ஏங்கியிருந்து உயிர்விட்ட  ஏங்கிய ,ஏங்கிகொண்டிருக்கும் எம் பாட்டன் முப்பாட்டன் தகப்பன் நான் உட்பட  அனைவருக்கும் தந்தையும் அவர்தான்,

அந்த மானசீக தந்தையின் குடை நிழலில் ஒதுங்கி நின்று எச்சி துப்பி போகும் நீங்கள் எம் இனத்தின் பெயரையே உச்சரிக்க தகுதியற்றவர்கள்>

 

சமூகத்தில் எம் அடையாளம் என்னவென்று நாம் தெளிவாகவே தெரிந்து வைத்துள்ளோம்,  எம் மண்ணை சிங்களவன் ஆக்கிரமித்துவிட்டாலும் என் மனசை ஒருபோதும் ஆட்சி செய்யமுடியாது என்பதில் உறுதியாகவே உள்ளோம்.

அதனால்தான் தமிழர்கள் பேரில் கட்சி வைப்பதால் உங்கள் சார்ந்தவர்களை ஒப்புக்காச்சும் தேர்வு செய்து நாளுமன்றம் அனுப்பினார்கள் தமிழர்கள், அதன் அர்த்தம் உங்களைத்தான் தமிழர்பிரதிநிதி என்று ஒட்டுமொத்தமாய் தேர்வு செய்தோம் என்று அர்த்தமல்ல, ஒட்டுமொத்தமாய் எமக்காய் போரிட்டவர்கள் அழிந்துபோனபோது உங்களையாச்சும் தேர்ந்தெடுக்கலாமே என்ற வேறு வழியற்ற தீர்மானம்தான் அது.

 

  தமிழரிடம் வாக்குவாங்கி பாராளுமன்றம் சென்று சிங்கள அதிரடிப்படையின் பாதுகாப்பில் ஜனாதிபதி சட்டத்தரணியாக வலம் வந்த நீங்கள்தான் எந்த இனத்தின் அடையாளம் என்பதை நீங்கள் தெளிவாக தெரிந்து வைத்திருந்தால் எமக்கு சொல்லுங்கள்.

விடுதலைபுலிகள் போர்குற்றமிழைத்தார்கள் சர்வதேசத்துக்கு தகவல் கொடுப்பவர்போல் பேசிய நீங்கள் மண்ணுக்காக விதையாகிய வித்துக்கள் பற்றி எப்படி கூச்சம் கொஞ்சம்கூட இன்றி பேச முடிகிறது?

ஒவ்வொரு ஜனாதிபதி மாற்றத்தின்போதும் அவர்களுடன் ஒட்டியுறவாடி, ஜனாதிபதி தேர்தலின் இறுதி நிமிடம்வரை ரணிலுடன் கூடி திரிந்து காணி பொலிஸ் அதிகாரம் எல்லாம் வாங்கி தருவேன் என்று புளுகி சிங்கள  எஜமான விசுவாசம் காட்டிவிட்டு, இன்று அநுர ஆட்சியில் நீங்கள் உங்களை சார்ந்தவர்களை தமிழர்கள் தூக்கியெறியலாம் என்ற அச்சத்தில், சாராய அனுமதி யார் பெற்றார்கள் என்று அறியவேண்டுமென்று ஒரு சாட்டு சொல்லி அநுரவுடம் ஓடிபோய் நின்று சந்திப்பு நடத்துகிறீர்கள் , அப்படியாவது அவருடன் ஒட்டுண்ணியாகி உங்கள் அரசியல் பித்தலாட்டத்தை தக்க வைக்கலாம் என்று கனவு காண்கிறீர்கள்.

உங்கள் சொகுசு வாழ்வை தக்கவைக்க எப்படி வேண்டுமென்றாலும் முயற்சிக்கலாம் அதில் தப்பில்லை ஆனால் இனத்தின் பெயரை அதற்குள் இழுத்து வராதீர்கள்,

உங்களுக்கெல்லாம் காலணியை தூக்கி இறந்த எம்மவர்களின் உறவுகள் காண்பிக்கலாம், ஆனால் அது மிக தவறு எமக்காகவே வாழ்ந்து எம்மோடு எப்போதும் கூட பயணித்து எமக்குமுன்னமே வாழ்வை தொலைக்கும் காலணிகள் உங்களைவிட உயர்வானவை,  அதனை உங்களுக்கு காண்பித்து காலணிகளின் புனிதத்தை எவரும் களங்க படுத்தகூடாது.

அத்தனையும்… வரிக்கு, வரி  மிக அருமையான கருத்து. நன்றி வளவன். 🙏

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, valavan said:

திருவாளர் சுமந்திரன் அவர்களே ஒருவேளை இதை நீங்கள் படிக்க நேர்ந்தால்.........

நாம் யாரென்ற தேடலில் எப்போதும் குழப்பம் எமக்கு இருந்ததில்லை, நாம் இருக்கும்வரைக்கும்  இறக்கும் வரைக்கும் இறந்த பிறகும் நாம் பிரபாகரனின் பிள்ளைகள்,

மானத்திற்காக ஏங்கியிருந்து உயிர்விட்ட  ஏங்கிய ,ஏங்கிகொண்டிருக்கும் எம் பாட்டன் முப்பாட்டன் தகப்பன் நான் உட்பட  அனைவருக்கும் தந்தையும் அவர்தான்,

அந்த மானசீக தந்தையின் குடை நிழலில் ஒதுங்கி நின்று எச்சி துப்பி போகும் நீங்கள் எம் இனத்தின் பெயரையே உச்சரிக்க தகுதியற்றவர்கள்>

 

சமூகத்தில் எம் அடையாளம் என்னவென்று நாம் தெளிவாகவே தெரிந்து வைத்துள்ளோம்,  எம் மண்ணை சிங்களவன் ஆக்கிரமித்துவிட்டாலும் என் மனசை ஒருபோதும் ஆட்சி செய்யமுடியாது என்பதில் உறுதியாகவே உள்ளோம்.

அதனால்தான் தமிழர்கள் பேரில் கட்சி வைப்பதால் உங்கள் சார்ந்தவர்களை ஒப்புக்காச்சும் தேர்வு செய்து நாளுமன்றம் அனுப்பினார்கள் தமிழர்கள், அதன் அர்த்தம் உங்களைத்தான் தமிழர்பிரதிநிதி என்று ஒட்டுமொத்தமாய் தேர்வு செய்தோம் என்று அர்த்தமல்ல, ஒட்டுமொத்தமாய் எமக்காய் போரிட்டவர்கள் அழிந்துபோனபோது உங்களையாச்சும் தேர்ந்தெடுக்கலாமே என்ற வேறு வழியற்ற தீர்மானம்தான் அது.

 

  தமிழரிடம் வாக்குவாங்கி பாராளுமன்றம் சென்று சிங்கள அதிரடிப்படையின் பாதுகாப்பில் ஜனாதிபதி சட்டத்தரணியாக வலம் வந்த நீங்கள்தான் எந்த இனத்தின் அடையாளம் என்பதை நீங்கள் தெளிவாக தெரிந்து வைத்திருந்தால் எமக்கு சொல்லுங்கள்.

விடுதலைபுலிகள் போர்குற்றமிழைத்தார்கள் சர்வதேசத்துக்கு தகவல் கொடுப்பவர்போல் பேசிய நீங்கள் மண்ணுக்காக விதையாகிய வித்துக்கள் பற்றி எப்படி கூச்சம் கொஞ்சம்கூட இன்றி பேச முடிகிறது?

ஒவ்வொரு ஜனாதிபதி மாற்றத்தின்போதும் அவர்களுடன் ஒட்டியுறவாடி, ஜனாதிபதி தேர்தலின் இறுதி நிமிடம்வரை ரணிலுடன் கூடி திரிந்து காணி பொலிஸ் அதிகாரம் எல்லாம் வாங்கி தருவேன் என்று புளுகி சிங்கள  எஜமான விசுவாசம் காட்டிவிட்டு, இன்று அநுர ஆட்சியில் நீங்கள் உங்களை சார்ந்தவர்களை தமிழர்கள் தூக்கியெறியலாம் என்ற அச்சத்தில், சாராய அனுமதி யார் பெற்றார்கள் என்று அறியவேண்டுமென்று ஒரு சாட்டு சொல்லி அநுரவுடம் ஓடிபோய் நின்று சந்திப்பு நடத்துகிறீர்கள் , அப்படியாவது அவருடன் ஒட்டுண்ணியாகி உங்கள் அரசியல் பித்தலாட்டத்தை தக்க வைக்கலாம் என்று கனவு காண்கிறீர்கள்.

உங்கள் சொகுசு வாழ்வை தக்கவைக்க எப்படி வேண்டுமென்றாலும் முயற்சிக்கலாம் அதில் தப்பில்லை ஆனால் இனத்தின் பெயரை அதற்குள் இழுத்து வராதீர்கள்,

உங்களுக்கெல்லாம் காலணியை தூக்கி இறந்த எம்மவர்களின் உறவுகள் காண்பிக்கலாம், ஆனால் அது மிக தவறு எமக்காகவே வாழ்ந்து எம்மோடு எப்போதும் கூட பயணித்து எமக்குமுன்னமே வாழ்வை தொலைக்கும் காலணிகள் உங்களைவிட உயர்வானவை,  அதனை உங்களுக்கு காண்பித்து காலணிகளின் புனிதத்தை எவரும் களங்க படுத்தகூடாது.

சும் அனுரவைச்சந்திச்சதே தன்ரை பேர் விளிவராமல் தடுக்கத்தான் என்று பேசிக்கொள்கிறார்கள் (இப்பிடி எழுதாட்டில் சும்மின்ரை ஆக்கள் ஓடி வந்திடுவினம்நிரூபிக்கச்சொல்லி)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.