Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
image

(எம்.நியூட்டன்)  

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்துக்குரிய வேட்புமனுக்களை இன்று புதன்கிழமை (09)  தாக்கல் செய்தது.  

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இன்று வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. 

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சங்கு சின்னத்தில் களமிறங்குகிறது. 

வேட்பாளர் பட்டியலின்படி, தர்மலிங்கம் சித்தார்த்தன், ஆறுமுகம் கந்தையா பிரேமச்சந்திரன், குருசுவாமி சுரேந்திரன், கனகலிங்கம் சிவாஜிலிங்கம், பாலச்சந்திரன் கஜதீபன், சிங்கபாகு சிவகுமார், சசிகலா ரவிராஜ், சிவநாதன் ரவீந்திரா, ஜெயரத்தினம் ஜெனார்த்தனன் ஆகியோர் களமிறங்குகின்றனர்.  

IMG_20241009_115935.jpg

IMG_20241009_115253.jpg

IMG_20241009_115038.jpg

IMG_20241009_114837.jpg

https://www.virakesari.lk/article/195875

  • கருத்துக்கள உறவுகள்

எங்க நிலாந்தன் மாஸ்டரைக் காணேல்லை!😂

  • கருத்துக்கள உறவுகள்

படங்களைப் பார்த்தால், எங்கேயோ இழவு வீட்டுக்குப் போய் இரங்கல் தெரிவிப்பது போல  இருக்கிறது. கொஞ்சம் சிரிக்கச் சொல்லுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தில் தமிழ் தேசியம் தொடர்ந்து நிலைத்து நிற்க குரல் கொடுக்க வாழ்த்துக்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

தெற்கில் ஏற்பட்ட மாற்றம் தமிழ் மக்களுக்கான மாற்றம் அல்ல: மீண்டும் சங்கு வெல்லும்

Oruvan

தமிழ் தேசியத்தின்பால் பயணிக்கின்ற மக்களின் திரட்சியாக சங்குச் சின்னம் பாராளுமன்றத் தேர்தலில் அதிகப்படியான ஆசனத்தை பெற்று வெற்றி பெறும் என ரெலோ அமைப்பின் பேச்சாளரும், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளருமான சுரேன் குருசுவாமி தெரிவித்தார்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கீழ் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் சங்குச் சின்னத்தில் தமிழ் தேசியத்தின் திரட்சிக்காக பொது வேட்பாளர் களம் இறக்கப்பட்ட நிலையில் தமிழ் மக்கள் அவருக்கு அமோக ஆதரவை வழங்கினார்கள்.

அந்த ஆதரவை எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் சங்கு சின்னத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களுக்கு தமிழ் மக்கள் வழங்குவார்கள் என்ற நம்பிக்கையுடன் சங்கு சின்னத்தில் களமிறங்கியுள்ளோம்.

ஜனாதிபதி தேர்தலில் தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம் தமிழ் மக்களுக்கான மாற்றம் கிடையாது. அதனை அரசாங்கம் ஜெனிவா தொடர்பில் வெளியிட்ட கருத்து தெளிவாக சுட்டிக்காட்டுகின்றது.

ஜெனிவா தீர்மானத்தை முற்றாக நிராகரிக்கிறோம் உள்நாட்டு பொறிமுறை மூலமே பிரச்சனைகளுக்கான தீர்வு என இலங்கை அரசாங்கம்,தெரிவித்திருக்கின்ற நிலையில் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு சிதறடிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அரசாங்கம் தமிழருக்கு ஏதாவது செய்யும் என பெரும்பாலானோர் எதிர்பார்த்திருக்கும் நிலையில்,அவர்களின் நிலைப்பாடு தமிழ் மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை வழங்கியுள்ளதுடன் நம்பிக்கையீனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த் தேசியத்தின் பால் பயணிக்கின்ற கட்சிகள் ஒன்றிணைந்து சங்குச் சின்னத்தில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தி எமது பலத்தை காட்டியுள்ளோம்.

அடுத்து பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்காக, ஓரணியில் பயணிக்கின்ற தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து சங்கு சின்னத்தில் களமிறங்கி உள்ளன.

சங்குச் சின்னம் தமிழ் தேசிய உணர்வுடன் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக பயணிக்கும் சின்னமாக காணப்படுகின்ற நிலையில் சங்குச் சின்னத்தை அமோக வெற்றி பெறச் செய்வதன் மூலம் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான பயணத்தை தொடர முடியும்” என அவர் தெரிவித்தார்.
 

 

https://oruvan.com/sri-lanka/2024/10/10/the-change-in-the-south-was-not-a-change-for-the-tamil-people

  • கருத்துக்கள உறவுகள்

தேசியம் என்பது தமிழ் மக்களின் அபிலாசை ஆனால் அரசியல் வாதிகளுக்கு அது ஒரு மூலதனம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 10/10/2024 at 14:02, சுவைப்பிரியன் said:

தேசியம் என்பது தமிழ் மக்களின் அபிலாசை

அப்படி என்றால் இலங்கை தமிழர்கள் அபிவிருத்தி  முன்னேற்றம் இல்லாமல் இருக்க வேண்டியது☹️

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.