Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொதுக்கட்டமைப்பு தற்போது இல்லை – மக்களிடம் மன்னிப்பு கோருகிறோம்

adminOctober 13, 2024
IMG_2631.jpg

 

மக்கள் நாணயமானவர்களுக்கும், கறைபடியாதவர்களுக்கும் தேச திரட்சிக்காக உழைப்பவர்களுக்கும் மக்கள் வாக்களிக்க வேண்டும் என பொதுக்கட்டமைப்பை சேர்ந்த நிலாந்தன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்கள் பொதுச்சபை ஜனாதிபதி தேர்தலை கையாண்ட போன்று, மற்றைய தேர்தல்களை கையாள முடியாததால் நாடாளுமன்ற தேர்தலில் விலகி இருக்கின்றது. ஜனாதிபதி தேர்தலில் பாவித்த சங்கு சின்னத்தை பாவிக்க வேண்டாம் என கோரினோம். கட்சிகள் விரும்பி இருந்தால் சங்கு சின்னத்தை எடுக்காது இருந்து இருக்கலாம். அதனையும் மீறி எடுத்துள்ளார்கள்.

சங்கு சின்னத்திற்கும், தமிழ் மக்கள் பொதுச்சபைக்கும், பொது கட்டமைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை.  தமிழ் மக்கள் பேரவையின் கூர்ப்பாகவே தமிழ் மக்கள் பொதுச்சபையாகும். பொதுச் சபை அடுத்த கூர்ப்புக்கு போன பின்னரே தேர்தல்களை எதிர்கொள்ள முடியும்.  தமிழ் மக்கள் பொதுச்சபை ஜனாதிபதி தேர்தலில் தேச திரட்சியை எதிர்பார்த்து, அதில் வெற்றியும் பெற்றோம். அது சில நாட்களில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புடன் மீள சிதறியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் பலம் தமிழ் மக்கள் பொதுச்சபையிடம் இல்லாததால்,  அதில் இருந்து விலகி இருக்கிறோம். எனவே மக்கள் நாணயமானவர்களுக்கும் கறைபடியாதவர்களுக்கும் தேச திரட்சிக்காக மக்கள் வாக்களிக்க வேண்டும்.

சங்கு சின்னம் புனிதமானது இல்லை. அதற்கு யாரும் உரிமை கோர முடியாது. அது ஒரு பொது நிலைப்பாட்டிற்கான குறீயிடு. பொதுக்கட்டமைப்பில் இருந்த பலர் வெளியில் நிற்கும் போது சிலர் மட்டும் அதனை பயன்படுத்துவது அறமில்லை.

சங்கு சின்னத்திற்கு, நாடாளுமன்ற தேர்தலில் சங்கு சின்னத்தில் போட்டியிடுபவர்கள் மட்டும் உழைக்கவில்லை. பலரின் உழைப்பு அதில் உண்டு. தேர்தல் பிரச்சாரத்திற்கு பலர் முன்னரங்கில் வந்து உழைக்காமல் பின்னின்று உழைத்தவர்களும் உண்டு.

தேச திரட்சியை உருவாக்க முயன்று வெற்றி கண்டு சில நாட்களில் அது சிதறுண்டு போயுள்ளது. அதற்காக நாம் மக்களிடம் மன்னிப்பு கோருகிறோம். அத்துடன் பொதுக்கட்டமை தற்போது இல்லை என தெரிவித்தார்.

IMG_2632-800x475.jpg
 
  • கருத்துக்கள உறவுகள்

நிலாந்தன் மாஸ்டர் ஏற்கனவே சங்கூதியாச்சு மாஸ்டர். நீங்க கொஞ்சம் லேட்!😂

  • கருத்துக்கள உறவுகள்

டக்கியர்ர சத்தத்தை யாழ் களத்தில் காணலியே,....ஏன்? 

🤣

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கிருபன் said:

சங்கு சின்னத்திற்கும், தமிழ் மக்கள் பொதுச்சபைக்கும், பொது கட்டமைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை. 

large.IMG_7212.jpeg.2764747c1af865295407

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேசியத்தில் அசலும் போலியும்!

October 14, 2024
 

போலித் தேசியவாதிகளை மக்கள் நிராகரிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியப் பசுமை கட்சியின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்திருக்கின்றார். இது போலி – இது அசல் என்பதை எவ்வாறு வரையறுப்பது- யார் வரையறுப்பது – எப்படி வரையறுப்பது? இந்தக் கேள்விகளுக்கு பதிலிருந்தால் மட்டும்தான் எது போலி – எது அசல் என்பதை ஒருவர் அறிந்து கொள்ள முடியும்? ஒரு குறிப்பிட்ட சூழலில் சிலர் இணைந்து பணியாற்றுகின்றனர்.

அவ்வாறு பணியாற்றுகின்றபோது, அவர்கள் அனைவருமே தேசியவாதிகளாகவே தங்களை முன்னிறுத்திக் கொள்கின்றனர். அவர்கள் சில காரணங்களால் பிரிந்துவிடும் சந்தர்ப்பத்தில் திடீரென்று ஒருவரை மற்றவர் போலித் தேசியவாதி என்கிறார் – இதன் மூலம் தானே சரியானவன் என்கிறார். நேற்றுத் தேசியவாதிகளாக தெரிந்தவர்கள் திடீரென்று எவ்வாறு போலித் தேசியவாதிகளாக மாற்றமடைய முடியும்? உண்மையில், தமிழ் சூழலில் இடம்பெறும் தேசியம் பற்றிய உரையாடல்கள் சலிப்பூட்டுபவர்களாகவே இருக்கின்றன. தேர்தல் காலத்தில் தேசியம் என்பதும் பின்னர் அடுத்த தேர்தல் வரையில் அமைதியாக இருப்பதும்தானா – தேசியம் பற்றிய கரிசனை என்னும் கேள்வி எழுகின்றது.

தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு தொடர்பில் பரவலான நம்பிக்கை நிலவியது. ஏழு கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலை எதிர்கொள்வதற்கான வாய்ப்புக் கிட்டியது. தமிழ் மக்கள் பொதுச் சபை என்னும் அடிப்படையில் சிவில் சமூகப் பிரதிநிதிகளும் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து தேர்தலை எதிர்கொண்டிருந்தால் வடக்கு, கிழக்கின் அதிக ஆசனங்களை கைப்பற்றும் அமைப்பாகத் தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு வெளிப்பட்டிருக்கும். ஆனால், ஒரு சில சிவில் சமூகக் குழுக்களின் அரசியல் அறியாமையின் காரணமாக நிலைமைகள் சில தினங்களிலேயே தலைகீழானது. இதன் விளைவாக, தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பாக பயணிக்கும் நம்பிக்கையுடனிருந்தவர்கள் சிதற வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

இதனால் பாதிக்கப்பட்டவர்களில் பொ.ஐங்கரநேசனும் ஒருவர். அவர் இப்போது போலித் தேசிய வாதிகளை நிராகரிக்குமாறு கூறுகின்றார். நேற்று வரையில் தான் யாரோடு இணைந்து செயல்பட்டாரோ அவர்களை நோக் கியே கல்லெறிய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார். இதுதான் தமிழ்த் தேசியத்தின் அடிப்படையில் இடம்பெறும் சிக்கலான உரையாடல். கடந்த பதினைந்து வருடங்களாக இதுதான் நடக்கின்றது. ஐங்கரநேசன் போன்றவர்களை இவ்வாறான நிலைக்கு தள்ளிவிட்டமைக்கான பொறுப்பை தமிழ் மக்கள் பொதுச் சபை என்னும் பெயரில் ஒன்றுபட்ட சிவில் சமூகக் குழுக்களும் அவர்களை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருந்த புத்திஜீவிகளுமே காரணமாவர். ஆனால், இன்றுவரையில் அவர்கள் தங்களின் பொறுப்பின்மைக்கு இதுவரையில் பொறுப்புச் சொல்ல வேண்டிய கடப்பாடு தங்களுக்கு உண்டு என்று கூட உணராமல் இருப்பதுதான் தவறானது.

 

https://eelanadu.lk/தேசியத்தில்-அசலும்-போலிய/

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

போலித் தேசியவாதிகளை மக்கள் நிராகரிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியப் பசுமை கட்சியின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்திருக்கின்றார்

ஐங்கரநேசன் தன்னைப் போன்றவர்களை நிராகரிக்கும்படி சுயவொப்புதல் கொடுத்திருக்கின்றார். சங்கைத் தொடும்போதே சொன்னனாங்கள் சிங்கங்கள் பன்றிகள் அறுவான்கள் குறுக்காலைபோவான்கள் வந்து சங்கூதுவானுகள் எண்டு.😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.