Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறிலங்காவின் மனித உரிமைகள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் கவலை

Featured Replies

சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலைமையை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் லூய்ஸ் ஆர்பர் விமர்சனம் செய்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

சிறிலங்காவின் மனித உரிமைகள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் கவலை

[சனிக்கிழமை, 13 ஒக்ரொபர் 2007, 19:06 ஈழம்] [ப.தயாளினி]

20071013001.jpg

சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலைமையை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் லூய்ஸ் ஆர்பர் விமர்சனம் செய்துள்ளார்.

இலங்கைப் பயணத்தை இன்று சனிக்கிழமை நிறைவு செய்த லூய்ஸ் ஆர்பர் தனது பயணம் தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கிழக்கு மாகாணத்தைப் பார்வையிட எனக்கு அனுமதி வழங்காமை குறித்து வருத்தப்படுகிறேன். மேலும் தமிழீழ விடுதலைப் புலிகளினது மனித உரிமை மீறல்கள் மற்றும் சிறார்களைப் படையணிகளில் சேர்த்தல் தொடர்பாக விடுதலைப் புலிகளுடன் நேரடியாகப் பேசுவதற்காக கிளிநொச்சி பயணம் மேற்கொள்ளும் சந்தர்ப்பம் கிடைக்காமை குறித்தும் வருத்தப்படுகிறேன்.

எமக்குக் கிடைக்கப்பெற்ற பல முறைப்பாடுகள் பலவும் தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட ஆயுதம் தாங்கிய குழுக்களினால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களாக இருந்தன.

அனைத்து உலக மனித உரிமைகள் தொடர்பிலான ஒப்பந்தங்களை சிறிலங்கா அரசாங்கம் உறுதிப்படுத்தப்பட வேண்டியது உள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிரான அவசரகால நடவடிக்கைகள், சட்டத்தின் ஆட்சியினது பலவீனம் உள்ளிட்டவைகள் அச்சமூட்டுபவையாக உள்ளன.

பெருந்தொகையான படுகொலைகளும் கடத்தல்களும் காணாமல் போதல்களும் தொடர்பில் தீர்க்கப்பட வேண்டியதுள்ளது. காணாமல் போதல் உள்ளிட்ட வன்முறைகளிலிருந்து எப்படிப் பாதுகாப்பது என்பது தொடர்பில் கடந்த கால விசாரணை ஆணையங்கள் எதுவும் பரிந்துரைக்காதது வருத்தமளிகக்கக் கூடியதாக உள்ளது.

மனித உரிமை விவகாரங்கள் தொடர்பிலான சிறிலங்கா அரசாங்கத்தினது கட்டமைப்பு போதுமானதாக இருப்பதாக எம்முடைய சந்திப்புகளில் அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் அத்தகைய நிறுவனங்கள் மீது பல தரப்பினரும் நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தியுள்ளனர்.

சிறிலங்கா மனித உரிமைகள் ஆணையத்தின் செயற்பாடுகள் அதிருப்தியளிப்பதாக உள்ளது. பொது விசாரணைகளை நடத்தி பகிரங்க அறிக்கைகளை அது வெளியாடததன் மூலம் அதன் மீதான நம்பகத்தன்மை குலைந்துள்ளது. அது சுயாதீனமாக இயங்கவில்லை.

சிறிலங்காவின் மனித உரிமைகள் பாதுகாப்பு தொடர்பில் அனைத்துலக வல்லுநர்கள் குறிப்பிட்ட சில விடயங்களில் பயிற்சி அளிக்க வேண்டியவர்களாக உள்ளனர். இதனை சிறிலங்கா அரசாங்கம் என்று உணருகிறேன் என்றார் அவர்.

http://www.eelampage.com/?cn=33798

Edited by சாணக்கியன்

ஐ.நா. மனித உரிமைகள் கண்காணிப்பு அலுவலகம் அமைக்க சிறிலங்கா எதிர்ப்பு

[சனிக்கிழமை, 13 ஒக்ரொபர் 2007, 19:54 ஈழம்] [செ.விசுவநாதன்]

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவை இலங்கையில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.

இது தொடர்பில் சிறிலங்கா மனித உரிமைகள் விவகாரங்களுக்கான அமைச்சர் மகிந்த சமரசிங்க கூறுகையில்

இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் பிரசனம் தொடர்பில் விவாதம் நடத்த நாம் விரும்பவில்லை. அதேபோல் ஐ.நா. மனித உரிமைகளுக்கான அலுவலகத்தை இலங்கையில் அமைப்பதற்கும் நாம் விரும்பவில்லை என்றார்.

http://www.eelampage.com/?cn=33799

இத்துடன் ஐ.நா வின் நெறியாள்கையில் நடைபெற்ற "ஜுலியஸ் சீஸர்" மன்னிக்கவும் "லூய்ஸ் ஆர்பர்" என்ற நாடகம் இனிதே நிறைவு பெற்றது.

இந்த நாடகத்திற்கு விளம்பர அனுசரனை வழங்கிய ஊடகங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் அனைவருக்கும் நன்றிகளை கூறிக்கொண்டு இறுதிவரை விறுவிறுப்புடன் காத்திருந்து நாடகத்தை கண்டுகளித்த அனைத்து அப்பாவி தமிழ் மக்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டு விடைபெறுகின்றோம் நன்றி! வணக்கம்!

Edited by சாணக்கியன்

பேட்டிகள், அறிக்கைகள், கவலைகள் இவைகளால் இலங்கையரசைத் திருத்திவிட முடியாது. இந்த அறிக்கைக்கான கண்டன அறிக்கையை விரைவில் எதிர்பார்க்கலாம். யுத்தம் பற்றிய பயம் தென்னிலங்கையை எப்போது பற்றிக் கொள்கிறதோ அப்போது மட்டுமே உண்மையாகத் துPர்வின் முக்கியத்துவத்தைச் சிங்களம் உணரும். அதுவரை சாணக்கியனின் "லூய்ஸ் ஆர்பர்" என்ற நாடகம் இனிதே நிறைவு பெற்றது. என்ற முடிவுதான் பொருந்தும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.