Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

image

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொலை,  ரக்பி வீரர் வாசிம்தாஜூதீன் மரணம்,  பிரகீத் எக்னலிகொட காணாமல்போகச்செய்யப்பட்டமை குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

waseem-thajudeen.jpg

ஏற்கனவே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள  ஏழு சம்பவங்களிற்கு அப்பால் கடந்த காலத்தின் அனைத்து குற்றங்கள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ள அமைச்சரவை பேச்சாளர் குற்றவாளிகள் என கண்டுபிடிக்கப்படுபவர்களிற்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

கடந்தகால குற்றங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதை அரசாங்கம் ஒருபோதும் தவிர்க்காது.

அவசியமான தகவல்கள் பெறப்பட்ட அல்லது விசாரணைகள் பூர்த்தியான அல்லது சிறியளவு விசாரணைகளை முன்னெடுக்க வேண்டியுள்ள ஏழு முக்கிய சம்பவங்கள் குறித்தே அரசாங்கம் தற்போது விசாரணைகளை துரிதப்படுத்தியுள்ளது.

ஆனால் இதன் அர்த்தம் ஏழு சம்பவங்கள் குறித்து மாத்திரம் விசாரணைகளை முன்னெடுக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதல்ல, கடந்த காலத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட அனைத்து சம்பவங்கள் குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.

பொருளாதார குற்றங்கள், படுகொலைகள் பத்திரிகையாளர்கள் காணாமல்போனமை குறித்தும் விசாரணைகளை மேற்கொள்ளுவோம்.

ரக்பி வீரர் வாசிம் தாஜூதீனின் மரணம், லசந்த விக்கிரமதுங்க படுகொலை, பிரதீப் எக்னலிகொட காணாமலாக்கப்பட்டமை குறித்தும் விசாரணைகளை முன்னெடுப்போம்.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல்போகச்செய்யப்பட்டமை குறித்த விசாரணைகள் பூர்த்தியாகிவிட்டன, நீதிமன்ற வழக்கொன்று இடம்பெறுகின்றது, தற்போதைக்கு புதிய விசாரணையை ஆரம்பிக்கவேண்டிய அவசியமில்லை தேவைப்பட்டால் புதிய விசாரணைகளை முன்னெடுப்போம்.

https://www.virakesari.lk/article/196341

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

  ரக்பி வீரர் வாசிம்தாஜூதீன் மரணம், 

ராஜபக்சவின் மகனையும் தூக்கப் போகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

ராஜபக்சவின் மகனையும் தூக்கப் போகிறார்கள்.

நடக்காது அய்யா..இது எல்லாம் தேர்தல் கண்துடைப்பு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.