Jump to content

தமிழ் தேசியக் கூட்டமைப்பை நான்தான் உருவாக்கினேன் - கருணா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
image

தமிழ் தேசியக் கூட்டமைப்பை நான்தான் உருவாக்கினேன். தலைவரிடம் விடயத்தை எடுத்துக் கூறி தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று முடிவெடுத்து அதனை உருவாக்கினேன். மட்டக்களப்பில் இருந்து உருவாகிய கருதான் அந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு என மட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சையாக பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்தார்.  

அவரது தேர்தல் அலுவலகமொன்று நேற்று சனிக்கிழமை (19) மாலை மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு தேர்தல் தொகுதிக்குட்பட்ட மகிழூர் கிராமத்தில் திறந்துவைத்துவிட்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் இதன்போது மேலும் தெரிவிக்கையில், 

கடந்த காலங்களிலே நான் ஒருபோதும் தேசிய கட்சிகளிலும், தேர்தல்களிலும் களமிறங்கவில்லை. அம்பாறை மாவட்டத்திலும் நான் தனி தமிழ் கட்சியிலே தான் தேர்தலில் களமிறங்கி இருந்தேன்.  

இம்முறையும் நான் மட்டக்களப்பில் தேசிய ஜனநாயக முன்னணி எனும் தமிழ் கட்சியிலேதான் போட்டியிடுகிறேன். தேசிய கட்சியில் நாங்கள் தேர்தலில் களமிறங்கினால் நிச்சயமாக அதில் மூன்று முஸ்லிம் வேட்பாளர்களை களமிறக்குவார்கள். 

எம்முடைய வாக்குகள் அவர்களைத்தான் வெற்றிபெற வைக்கும். அதனால்தான் நாங்கள் தேசியக் கட்சிகளில் தேர்தலில் களமிறங்கவில்லை. அதனால்தான் இம்முறையும் நாங்கள் எட்டு தமிழ் வேட்பாளர்களோடு மட்டக்களப்பு மாவட்டத்தில் களமிறங்கி இருக்கின்றோம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பை நான்தான் உருவாக்கினேன். தலைவரிடம் விடயத்தை எடுத்துக் கூறி தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று முடிவெடுத்து அதனை உருவாக்கினேன். 

மட்டக்களப்பில் இருந்து உருவான கரு தான் அந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு. அதனை தலைவர் ஏற்றுக்கொண்டு கூட்டமைப்பை உருவாக்கினார்.  

அக்காலத்தில் யுத்தம் நடைபெற்றபோது எமது மக்களின் இழப்புக்கள், யுத்த அழிவுகள் உலக அரங்குக்கு தெரிய வர வேண்டும். அது பாராளுமன்றத்தில் பேசப்பட வேண்டும். தமிழர்களின் குரல்கள் பாராளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்பதற்காகத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. 

அந்தக் கடமையை ஆரம்பத்தில் அவர்கள் நன்றாக மேற்கொண்டிருந்தார்கள். அதனை நான் வரவேற்கின்றேன். சம்பந்தன் ஐயா இருக்கும்போது அது நன்றாகத்தான் செயற்பட்டது.  

அவர் மரணித்ததன் பின்னர் அவர்கள் சிதறுண்டு போய்விட்டார்கள். காலப்போக்கில் அவர்கள் பணத்துக்கு அடிமையாகி பதவிகளுக்கு ஆசைப்பட்டு சிதறிப் போயுள்ளார்கள். இதுதான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வரலாறாகும். 

வட கிழக்கிலே இருக்கின்ற தமிழ் மக்களுக்கு ஒரு காத்திரமான தலைமைத்துவத்தை வழங்குவதற்காக வேண்டி நான் இந்த தேர்தலிலே மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுகிறேன்.  

அதனை ஏற்படுத்துவதற்கு என்னால் முடியும். அதற்காகவேதான் நான் வந்திருக்கின்றேன். இதனை விட்டுக்கொடுக்க முடியாது. பணத்துக்கும் இலஞ்சத்துக்கும் இடம்வழங்கக் கூடாது. இரண்டு தடவைகள் நான் பாராளுமன்றத்தில் அங்கம் வைத்துள்ளேன்.  

அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக வரப் போகின்றார் என்ற போது அனைவரும் நடுங்கிக் கொண்டிருந்தார்கள். நான் மாத்திரம் சிரித்துக்கொண்டே இருந்தேன். ஒரு ஊழல் குற்றச்சாட்டுகளும் என்னில் சுமத்த முடியாது. ஒரு மதுபான கடைகுரிய அனுமதிப்பத்திரம் என்னிடம் இல்லை.   

மணல் ஏற்றுவதற்கு உரிய அனுமதிப்பத்திரமில்லை. நான் இருந்தபடியே தான் இப்போதும் இருக்கிறேன். களவு செய்தவர்கள் அனைவரும் பயத்திலே திரிகின்றார்கள, பழைய அமைச்சர்கள் கொழும்பிலே ஒளித்துவிட்டார்கள், நானும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் அனுரகுமார திசாநாயக்கா அவர்களுக்குத்தான் வாக்களிக்குமாறு மக்களிடம் கேட்டிருந்தேன். 

ஊழலை நிறுத்த வேண்டும், ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும், அதன் சூத்திரதாரிகளை கண்டுபிடிக்க வேண்டும், என்பதற்காகவே தான் நான் அவ்வாறு கூறியிருந்தேன். ஏனெனில் ஜனாதிபதியாக சிங்கள நபர் ஒருவர்தான் இந்த நாட்டிலே வரமுடியும் தமிழர் ஒருவரோ இஸ்லாமியர் ஒருவரோ வரமுடியாது.  

ஆனால் பொதுத்தேர்தல் என்பது வேறாகும் இதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். இதிலே ஜேவிபி எனும் கட்சிக்குப் பின்னால் யாரும் போகக்கூடாது. அவர்கள் இனத் துவேஷம் பிடித்த ஒரு கட்சியாகும் தமிழர்களுக்கு முதலாவது துரோகம் செய்த கட்சி ஜே.வி.பி. ஆகும்.   

நீதிமன்றம் சென்று வடகிழக்கை சட்ட ரீதியாக அவர்கள் பிரித்தார்கள். ஆனால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோ, மஹிந்த ராஜபக்ஷவோ, ரணில் விக்கிரமசிங்கவோ பிரிக்கவில்லை. பிரித்தவர்கள் ஜே.வி.பியினர். இதனை நாம் மறந்துவிட முடியாது.   

சிலர் திசைகாட்டி திசைகாட்டி என வருவார்கள். மட்டக்களப்பு மாவட்டத்திலே திசைகாட்டி சின்னத்திலேயே மூன்று தீவிரமான முஸ்லிம்களும், ஒரு சிங்களவரும், ஏனையவர்கள் மலையகத்தைச்  சேர்ந்தவர்களையும் மட்டக்களப்பிலே களமிறக்கியுள்ளார்கள். 

தமிழ் தேசியக் கூட்டமைப்பை எடுத்துக்கொண்டால் சங்கு ஒரு பக்கம், மற்றவர்கள் ஒரு பக்கம் உள்ளார்கள். கடந்த ஜனாதிபதி தேர்தலில் அல்லது ஒரு முடிவு எடுத்தார்கள். நானும் அதோடு சத்தமிடாமல் இருந்தேன்.  அவர் ஜனாதிபதியாக வரமுடியாவிட்டாலும் தமிழர்கள் ஒற்றுமையாக இருக்கின்றார்கள் என்பதை காட்டுவதற்காக அவர்கள் வந்தார்கள். 

ஆனால் சுமந்திரனும் சாணக்கியனும் பணத்தைப் பெற்றுக்கொண்டு ஓடிவிட்டார்கள். ரணிலிடம் 60 கோடியை சாணக்கியன் வாங்கிவிட்டு சஜித் பிரேமதாசவுக்கு வேலை செய்துள்ளார். 

சாணக்கியனும் சுமந்திரனும் எப்போது கட்சிக்குள் வந்தார்களோ அப்போது அந்த கட்சி அழிந்து போய்விட்டது. இதில் எமது மக்கள் தெளிவாக இருக்க வேண்டும். தேசியம் தேசியம் என கதைத்து  உசுப்பேத்துகின்றார்கள்.  

இம்முறை தேசியம் கதைப்பதற்கு வந்தால் கணக்கறிக்கையை மக்கள் கேட்க வேண்டும். கொள்ளையடித்த பணத்துக்கு கணக்கை தெரிவித்துவிட்டு தேசியத்தைக் கதையுங்கள் என மக்கள் கூற வேண்டும்.  

இதனை நான் கூறவில்லை. ஜனா முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் கூறுகின்றார். 60 கோடியை  சாணக்கியன் பெற்றதாக சாணக்கியன் கூறுகின்றார். ஜனாவை பார்த்து நீ அதிக அளவு சொத்துக்கள் குவித்து வைத்திருக்கிறாய் அந்த சொத்து எங்கிருந்து வந்தது உமக்கு என கேட்கின்றார்.  

இன்னும் ஒருவருக்கு 588 கோடி ரூபாய்க்கு உரிய விசாரணை வரவிருக்கிறது. சிங்கப்பூரிலிருந்து அனைத்து இடங்களிலும் வீடு வாங்கியுள்ளார். அதனை மக்கள் பத்திரிகைகளில் பார்த்திருப்பார்கள். இவ்வாறு கொள்ளை அடித்திருந்தால் எவ்வாறு மக்களுக்கு அவர்கள் சேவை செய்வது இந்த நிலையில் மக்கள் நன்றாக முடிவெடுக்க வேண்டும். 

எனது கண்ணுக்கு முன்னரே பல போராளிகள் மடிந்தார்கள். அதனை நான் மறக்கவில்லை. பல போராளிகள் அங்கவீனமாக இருக்கின்றார்கள். அதை நீ நான் மறக்கவில்லை. பல தாய்மார்கள் தற்போதும் கண்ணீர் வடித்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.   

இதற்கு எல்லாம் நாம் ஒரு முடிவு கட்ட வேண்டும். இதற்காக வேண்டி அனைத்து போராளிகளும் அணி திருளுங்கள். ஒருவொருவரும், மாற்றுத் திசைகளுக்கு செல்ல வேண்டாம். எனக்கு தான் போராளிகளின் அருமை தெரியும். யாருக்கும் அது பற்றி கதைப்பதற்கு உரிமை இல்லை.  

மாவீரர் நாள் அனுஷ்டிப்பது என்றால் அதனை நாங்கள் தான் அனுஷ்டிக்க வேண்டும். வெளிநாடுகளில் ஒளிந்திருந்துவிட்டு வந்தவர்களுக்கு எந்த உணர்வுமில்லை. இனிமேல் அதற்கு அனுமதிக்க முடியாது.  

எனவே தமிழர்களின் இருப்பை காப்பாற்றுவதற்கு சிறந்த தலைமைத்துவத்தை வளர்த்துவிட வேண்டும். படித்தவர்கள் எதனையும் சாதிப்பதில்லை. இலங்கையிலே முதலாவது படிப்பு படித்தவர் தான் மதுபான கடை நடத்துகின்றார். நான் மதுபான கடைகளுக்குரிய அனுமதிப்பத்திரம் பெறுவது என்றால் நூற்றுக்கு மேற்பட்ட அனுமதி பத்திரங்களை பெற்றிருக்கலாம். அதெல்லாம் வேண்டாத விடயம். 

தமிழரசு கட்சியில் வைத்தியர் உள்ளிட்ட பலர் போட்டியிடுகிறார்கள். அவர்களுக்கு இருக்கின்ற சொத்துக்களை காப்பாற்றுவதற்காகவே அவர்கள் போட்டியிடுகிறார்கள். மக்களுக்கு சேவை செய்வதற்காக அவர்கள் போட்டியிடவில்லை.  

அவர்களுக்கு தமிழர்களின் பிரச்சினையை பற்றி தெரியாது. நான் 22 வருடங்கள் போராடி இருக்கிறேன். எனது சொந்த அண்ணனை கூட நான் இழந்திருக்கின்றேன். அனைவருக்கும் இழப்புக்கள் உள்ளன. தேசியப் பட்டியலில்தான் நான் இரண்டு முறை பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டேன். 

அதனூடாக அதிகளவு வேலைகளை மக்கள் மத்தியில் நான் செய்திருக்கின்றேன். இந்த முறை பாராளுமன்றத்திற்கு மக்களின் ஆணையுடன்தான் செல்ல வேண்டும். அவ்வாறெனில் தான் எதையும் வாதிட்டு பெற்றுக்கொள்ளலாம். நமது பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கு சென்று எதிரே உள்ள உறுப்பினர்களை குற்றம் சுமத்துவதுதான் அவர்களுடைய வேலை. மாறாக இஸ்லாமிய பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்களுக்கு இடையே யாரையும் குற்றம் சுமத்தி பாராளுமன்றத்தில் பேசவில்லை. 

கடந்த முறை அம்பாறையிலே போட்டியிட்டு 35000 வாக்குகளை அந்த மக்கள் எனக்கு அளித்திருந்தார்கள். மக்களுக்காக நாங்கள் உயிரையும் தருவதற்கு காத்திருக்கின்றோம். அது எனக்கு பெரிய பிரச்சனை இல்லை.  கூட்டமைப்புக்கும் சங்கு குழுவுக்கும் மக்கள் முடிவு கட்ட வேண்டும்.  

இலஞ்ச ஊழலை நிறுத்த வேண்டும். ஒரு வேட்பாளர் தலா 3 ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்கின்றாராம், இன்னும் ஒரு வேட்பாளர் மதுபானம் வழங்கியதாக பொலிஸாரால் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். களவு செய்த காசுகளை அவர்கள் அள்ளி வழங்குகிறார்கள். தேசப்பற்றுடன் சேவை செய்யக்கூடிய தலைவர்களை நாங்கள் வளர்த்துவிட வேண்டும் என்றார். 

https://www.virakesari.lk/article/196681

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிவராம் கொடுப்புக்குள் சிரிப்பார்.  😏

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

தேசியம் கதைப்பதற்கு வந்தால் கணக்கறிக்கையை மக்கள் கேட்க வேண்டும். கொள்ளையடித்த பணத்துக்கு கணக்கை தெரிவித்துவிட்டு தேசியத்தைக் கதையுங்கள் என மக்கள் கூற வேண்டும்.  

large.IMG_7272.jpeg.f4fce0ef79297e6d0739

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மெதுமெதுவாக தொடுவானம் நோக்கி நடந்து, பின்னர் ஒருநாள் அப்படியே மறைந்தும் போகலாம். ஆனால் அந்தக் கொடுப்பனவு கூட சிலருக்கு வாய்க்காது போல.............. 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ரசோதரன் said:

மெதுமெதுவாக தொடுவானம் நோக்கி நடந்து, பின்னர் ஒருநாள் அப்படியே மறைந்தும் போகலாம். ஆனால் அந்தக் கொடுப்பனவு கூட சிலருக்கு வாய்க்காது போல.............. 

இவருக்கு இந்தமுறை சிலநூறு வாக்குகள் தான் கிடைக்கும். அதுக்காக எப்பிடியெல்லாம் கதைக்கவேண்டி கிடக்கு

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • டி20 உலகக் கோப்பையைக் கைப்பற்றிய நியூசிலாந்து பெண்கள் அணி - ஆண்கள் அணியால் முடியாததை சாதித்தது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நியூசிலாந்தின் அமெலியா கெர், தனது சக வீரர் ஜெஸ் காருடன் கட்டுரை தகவல் எழுதியவர், மனோஜ் சதுர்வேதி பதவி, விளையாட்டுச் செய்தியாளர், பிபிசி இந்திக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஐ.சி.சி மகளிர் டி20 உலகக் கோப்பையை வெல்லும் நியூசிலாந்தின் கனவு இறுதியாக நனவாகியிருக்கிறது. நியூசிலாந்து இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. தனது மூன்றாவது முயற்சியில் நியூசிலாந்து இந்த வெற்றியைப் பெற்றுள்ளது. இதற்கு முன், 2009 மற்றும் 2010-ஆம் ஆண்டுகளில் இறுதிப் போட்டி வரை சென்றது நியூசிலாந்து மகளிர் அணி. தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்கு வந்த பிறகும் தென்னாப்பிரிக்காவால் கோப்பையைக் கைப்பற்ற முடியாமல் போனது. கடந்த உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்க அணியில் விளையாடிய 10 வீராங்கனைகள் இந்தத் தொடரின் அனைத்துப் போட்டிகளிலும் விளையாடினர். ஆனால் அந்த அனுபவத்தைப் பயன்படுத்தத் தவறிவிட்டனர். நியூசிலாந்து அணி சாம்பியன் ஆனதும், ஒட்டுமொத்த அணியும் கேப்டன் சோஃபி டிவைனைக் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்த, அனைத்து வீராங்கனைகளின் கண்களும் ஆனந்தக் கண்ணீர் வடித்தன. கேப்டன் சோஃபி டிவைன் என்ன சொன்னார்? இந்த வெற்றி குறித்துப் பேசிய நியூசிலாந்து கேப்டன் சோஃபி டிவைன், "முந்தைய நாள் இரவு எனது அணியுடன் கோப்பையை கைப்பற்றுவது போல் கனவு கண்டேன். பத்து தொடர் தோல்விகளுக்குப் பிறகு கோப்பையை வென்றிருக்கிறோம். நாங்கள் தொடர்ந்து சரியான திசையில் பயணித்தோம். அதன் பலன்தான் இது,” என்றார். தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா வோல்வார்ட், "இறுதி ஆட்டத்தில் எங்களால் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த இயலவில்லை. ஏழாவது ஓவருக்கும் 11-வது ஓவருக்கும் இடையே எங்களது ஆட்டம் சிறப்பாக இல்லை என்பது என் கருத்து. ஆனால் வெற்றியின் பெருமை நியூசிலாந்து அணிக்கே சேரும்," என்றார். நியூசிலாந்துக்கு முதன்முறையாகக் கோப்பையைப் பெற்றுத் தந்ததில் ஒரு வீராங்கனை முக்கியப் பங்கு வகித்தார் என்றால், அது அமெலியா கெர்தான். சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி, ஐந்து விக்கெட்டுகளுக்கு 158 ரன்களை எட்டச்செய்தார். அவர் 43 ரன்கள் எடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தென்னாப்பிரிக்காவின் அனுபவமிக்க அணியால் நியூசிலாந்தைத் தோற்கடிக்க இயலவில்லை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அமெலியா முதல் விக்கெட் வீழ்ந்தபோது களம் இறங்கிய அமெலியா, விக்கெட்டில் திடமாக நின்று அணியை பலப்படுத்தினார். தொடக்கத்தில் உறுதுணையாக விளையாடிய அவர், கடைசி நிமிடத்தில் தனது கூர்மையான ஆட்டத்தால் அணி நல்ல ஸ்கோர் பெற உதவினார். தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா வோல்வார்ட் கூட ‘மேட்ச் சேஞ்சர்’ என்று கருதப்படும் ஒரு வீராங்கனை. அவர் விளையாடும் போதே தென்னாப்பிரிக்கா தனது கோப்பைக் கனவை நனவாக்க முடியும் என்று தோன்றியது. ஆனால் பத்தாவது ஓவரின் முதல் பந்தில் அவரது விக்கெட்டை வீழ்த்தி ஆட்டத்தைத் தனது அணிக்குச் சாதகமாக மாற்றினார் அமெலியா. அமெலியா சிறப்பான சுழற்பந்து வீச்சை வெளிப்படுத்தி நான்கு ஓவர்களில் 24 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அமெலியாவைத் தவிர, தென்னாப்பிரிக்காவின் இன்னிங்ஸை ஒன்பது விக்கெட்டுக்கு 126 ரன்களுக்கு மட்டுப்படுத்தியதில் அந்த அணியின் பவுலர் ரோஸ்மேரி மேயரும் முக்கியப் பங்காற்றினார். அவரும் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். அமெலியா, "இந்த வெற்றியைப் பற்றிப் பேச என்னிடம் வார்த்தைகள் இல்லை. வெற்றி பெற்ற பிறகு நான் கொஞ்சம் உற்சாகமாக இருந்தேன். ஃபீல்டிங் செய்யும் போது எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டது. ஆனால் அதற்குப் பிறகும் என்னால் எனது பொறுப்பை நிறைவேற்ற முடிந்ததில் எனக்கு மகிழ்ச்சி," என்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இறுதிப் போட்டியில் அமெலியா கெர் சிறப்பாக விளையாடினார் ஆண்கள் அணியால் செய்ய முடியாத சாதனை நியூசிலாந்து ஆண்கள் கிரிக்கெட் அணியால், ஒருமுறை மட்டுமே (2021-ஆம் ஆண்டு) ஐசிசி டி-20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி வரை வர முடிந்தது. ஆனால் கோப்பையை வெல்லும் அதன் கனவு இன்னும் நிறைவேறவில்லை. ஆனால், நியூசிலாந்து மகளிர் அணி மூன்றாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியதன் மூலம் சாதித்திருக்கிறது. பெண்கள் அணி சாம்பியனான நிலையில், இப்போது ஆண்கள் அணியும் இதிலிருந்து உத்வேகம் பெறக்கூடும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பவர் பிளேயிலும் தென்னாப்பிரிக்க அணி மோசமாகச் செயல்பட்டது பவர்பிளேயை இழந்த தென்னாப்பிரிக்கா தென்னாப்பிரிக்கா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான வோல்வார்ட் மற்றும் தாஜ்மின் பிரிட்ஸ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 6.5 ஓவரில் 51 ரன்கள் சேர்த்த போது, அணி வெற்றியை நோக்கி நகர்வது போல் இருந்தது. அந்த நேரத்தில் வூல்வர்ட் முழு ஃபார்மில் விளையாடிக்கொண்டிருந்தார். இந்த ஜோடியை எப்படிக் கட்டுப்படுத்துவது என்பதை நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் புரிந்து கொள்ள முடியாமல் தவித்தனர். தஜ்மினின் விக்கெட் வீழ்ந்ததால் இந்த பார்ட்னர்ஷிப் முறிந்த பிறகு, வோல்வார்ட் மூலம் நியூசிலாந்து அணிக்குக் குறிப்பிடத்தக்க அச்சுறுத்தல் எதுவும் இல்லை. ஆனால், பத்தாவது ஓவரில் வோல்வார்ட், போஷ் ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் அமெலியா போட்டியை ஓரளவு தனக்குச் சாதகமாக மாற்றினார். அடுத்த 13 பந்துகளில் மரிஜான் கேப் மற்றும் டி கிளர்க்கின் விக்கெட்டுகளும் கைப்பற்றப்பட்டபோது போட்டியின் முடிவு பெரிதும் தீர்மானமாகிவிட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இப்போட்டியில் நியூசிலாந்து அணி சிறப்பாகச் செயல்பட்டது சிறந்த பீல்டிங்கால் உருவான அழுத்தம் நியூசிலாந்து ஆக்ரோஷமாகத் தொடங்க முயற்சித்தது. இதற்குச் சான்றாக இரண்டு ஓவர்களில் நான்கு பவுண்டரிகள் அமைந்தன. ஆனால், தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சாளர்கள், குறிப்பாகச் சுழற்பந்து வீச்சாளர்கள் அவர்களைச் சுதந்திரமாக ஷாட்களை விளையாட அனுமதிக்கவில்லை. நியூசிலாந்து பேட்டர்களான சுசி பேட்ஸ் மற்றும் அமெலியா கெர் வெளியே வந்து ஷாட்களை ஆடிய போதெல்லாம், அவர்களால் எச்சரிக்கையான பீல்டர்களை ஊடுருவி வெற்றிபெற முடியவில்லை. பொதுவாக அணிகள் மிடில் ஓவர்களில் வேகமாக ரன்களை எடுக்க முயற்சிக்கும். ஆனால் தென்னாப்பிரிக்கச் சுழற்பந்து வீச்சாளர்கள், குறிப்பாக டிரையன் மற்றும் மலாபா ஆகியோர் தொடர்ந்து பந்துவீசி ரன்களின் வேகத்தை அதிகரிக்காமல் தடுத்தனர். இதில், பேட்டர்களை பவுண்டரி அடிக்க விடாமல் தடுப்பது முக்கியப் பங்காற்றியது. எட்டாவது மற்றும் 13-வது ஓவர்களுக்கு இடையில் பவுண்டரிகள் அடிக்கப்படாமல் தடுப்பதில் வெற்றி பெற்றனர். டி கிளர்க் வீசிய 15-வது ஓவரில் தொடர்ந்து இரண்டு பவுண்டரிகளை அடித்து ரன் வேகத்தை அதிகரித்தார் ஹால்லிடே. இதன் பிறகு, மற்ற பேட்டர்களும் அடித்து ஆட முயன்றனர். இதன் காரணமாக அந்த அணி ஐந்து விக்கெட்டுக்கு 158 ரன்களை எட்டியது.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நியூசிலாந்தின் பேட்டிங்கிற்கு தென்னாப்பிரிக்க அணி ‘பிரேக்’ போட்டது நியூசிலாந்து அணி எப்படிச் சமாளித்தது? தென்னாப்பிரிக்காவின் சுழற்பந்து வீச்சாளர்களின் இறுக்கமான பந்துவீச்சு மற்றும் சிறந்த பீல்டிங் காரணமாக, நியூசிலாந்து அணி பவுண்டரிகள் அடிப்பதில் சிரமத்தை எதிர்கொண்டது. ஆனால் இதையும் மீறி விக்கெட்டுகளுக்கு இடையே தொடர்ந்து ஓடினர். ரன்களின் வேகத்தை அவர்கள் குறையவிடவில்லை. கடைசி 5-6 ஓவர்களில் நியூசிலாந்து அணி விரைவாக ரன்களைக் குவித்தது. அமெலியா கெர் ஒரு முனையைச் சமாளித்தபடி ரன்களை அதிகரித்துக் கொண்டிருந்தார். ப்ரூக் ஹால்லிடே அவருக்கு ஒரு நல்ல துணையாக இருந்தார். ஹால்லிடே 135 ஸ்டிரைக் ரேட்டில் பேட்டிங் செய்து 28 பந்துகளில் 38 ரன்களை எடுத்தது மட்டுமின்றி, அமெலியாவை வேகமாக ரன் எடுக்கத் தூண்டினார். https://www.bbc.com/tamil/articles/cg78ll2zk40o
    • இலங்கைக்கு வந்துள்ள புதிய கடவுச் சீட்டு.
    • இணையவழி மோசடிகள், போலி முகநூல் கணக்குகள் தொடர்பில் 8 ஆயிரம் முறைப்பாடுகள் பதிவு இவ்வருடத்தின் கடந்த 9 மாதங்களில் இணையவழி மோசடிகள் மற்றும் போலி முகநூல் கணக்குகள் தொடர்பில் 8 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (SLCERT) தெரிவித்துள்ளது. இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவின் பொறியியலாளர் சாருக தமுனுபொல இது தொடர்பில் தெரிவிக்கையில்,  சமூக ஊடகங்களில் உள்ள போலிக் கணக்குகள் மூலம் அதிகளவான  இணையவழி மோசடிகள் இடம்பெறுகின்றன. இணையவழி மோசடிகள் தொடர்பில் கிடைக்கப் பெற்ற 8 ஆயிரம் முறைப்பாடுகளில் 200 முறைப்பாடுகள் ஒ.டி.பி. இலக்கங்களுடன் தொடர்புடையவை ஆகும். தங்களது ஒ.டி.பி. இலக்கங்களை பல்வேறு நபர்களுக்குப் பகிர்வதாலும் அதிகளவான இணையவழி மோசடிகள் இடம்பெறுகின்றன. இதனால், பொதுமக்கள் தங்களது ஒ.டி.பி. இலக்கங்களை எந்த சந்தர்ப்பத்திலும் வேறு நபர்களுக்குப் பகிர வேண்டாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/196775
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.