Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

‘இனவாதத்திலிருந்து ஜே.பி.வி இன்னும் மீளவில்லை’ : சிவாஜிலிங்கம் தெரிவிப்பு

October 21, 2024

சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூட நன்மைகள் கிடைக்க கூடாது என்பதற்காக அதனை எதிர்ந்து கொழும்பை முடக்கி போராட்டம் செய்தவர்கள் தான் மக்கள் விடுதலை முன்னணி என முன்னாள் நாடாளுமன்றம் உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

நேற்று தனது இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது.

அண்மையில் ஜனாதிபதி தேர்தலில் அனுர. குமார திசநாயக்க ஜனாதிபதியாக தெருவு செய்யப்பட்டிருக் கின்றார். இந்த பின்னணியில் ஏதோ மாற்றம்வரும் என நம்பியவர்களுக்கு அந்த ஜே.பி.வி கட்சியினுடைய பொது செயலாளர் ரில்வின் சில்வா தமிழர்களுக்கு பிரச்சினை இல்லை, பொருளாதார ரீதியாகத்தான் பிரச்சினை இருக்கிறது என்று, இளையோர் இதைப்பற்றி கவலைப்படவில்லை, 13 வது திருத்தம் அல்லது அது போன்ற அதிகார பகிர்வு தேவை இல்லை என தெரிவித்திருக்கின்றார்.

இது முதலாவது அடி, இரண்டாவது ஐக்கியநாடுகள் பொதுச் சபையிலே, மனித உரிமை பேரவையிலே அங்கு வந்த தீர்மானத்திலே ஓராண்டு காலம் அவகாசம் வழங்கி விசாரணைகளை மேற்கொள்வது என்பதை மறுத்து இலங்கையினுடைய வெளிவிவகார அமைச்சர் அதனை மறுத்து உள்ளக விசாரணைதான் என கூறியிருக்கின்றார். ஆகவே இதில் என்ன தெரிகிறது என்றால் இந்த பிரச்சினையில் அவர்கள் சர்வதேசத்திற்கும் உதவ தயாராக இல்லை, இதை நம்பி எங்களுடைய மக்கள் நூற்றுக்கணக்கானவர்கள் பொதுத் தேர்தலில் இறங்கியுள்ளார்கள்.

இந்த சூழ்நிலையின் பின்னணியிலேதான் அவர்களுடைய அந்த அமைச்சரவையில் இருக்கக் கூடிய. அமைச்சர்கள் தெரிவிக்கக் கூடிய கருத்துக்கள் ஜனாதிபதியின் கருத்துக்கள் தான். வெளிவிவகார அமைச்சகமும் இவ்வாறு கூறியிருக்கின்றது என்றால் இதைவிட என்ன கருத்துக்கள் உங்களுக்கு தேவைப்படுகின்றன.

புதுமையான இன்னொரு விடயத்தையும் பார்க்க வேண்டும், இதுவரை தேர்தல்களில் விருப்பு வாக்கு அழிக்கப்படாது கட்சிக்கு மட்டுமே வாக்களிக்கப்படும், ஆனால் இம்முறை விருப்பு வாக்குகளை வருகின்ற வேட்பாளர்கள் பயன்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது. ஆகவே இது பேரினவாத கட்சிகளைப் போன்று அடிஎடுத்து வைக்கின்றது என்பதைச் சொல்கிறது.

ஆகவே வெளிவிவகார அமைச்சர் கூறிய கருத்துக்களையும் வைத்து பார்க்கின்றபோது ஜே.பி.வி இன்னும் இனவாத்த்திலிருந்து மீளவில்லை, தமிழருக்கு தமிழினத்திறக்கு எதிரான அனியாயங்களுக்காக 8000 க்கு மேற்பட்ட படையினரை நாங்கள் தான் சேர்துக் கொடுத்தோம் என்று மார்தட்டியவர்களுக்கு எங்களுடைய மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். அதே இராணுவம்தான் எங்களுடைய மக்களை படுகொலை செய்தது, மானபங்க படுத்தியது, கற்பழித்தது. அவ்வாறு செய்தவர்களுக்கு நீங்கள் சாமரம் வீசுவது போல வாக்களிக்க முற்படுவது எந்த வகையில் நியாயம், இதை விட வடக்கு கிழக்கு மாகாணங்களை நீதிமன்ற தீர்ப்பின் மூலம் பிரித்தவர்கள் ஜே.வி.பியினர்.

2004 ம் ஆண்டு வீசிய கடற்கோள் அதாவது சுனாமியின் பின் சர்வதேச சமூகமும், இலங்கை அரசும் இணைந்து சுனாமியின் பின் அந்நேரம் ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்கா அரசாங்கமும் சேர்ந்து ஒரு ஒப்பந்தத்தை செய்தார்கள் பீரொம்ஸ். அதாவது post tsunami operational management structure சுனாமிக்கு பின்னரான மீள் கட்டுமானம். பாராளுமன்றத்திலே கொண்டுவரப்பட்டு அவற்றை எல்லாம் செயற்படுத்தப்படுகின்ற பருவம் வருகின்றபோது அதனுடைய தலமைச் செயலகம் கிளிநொச்சியிலே அமைக்கப்படும் என்று கூறப்பட்டது.

அதற்கு எதிராகவும் நீதிமன்றம் சென்று அதனையும் தடுத்தவர்கள். அதைவிட கொழும்பிலேயும் இதற்கு எதிராக பல்வேறு போராட்டங்களையும் செய்தவர்கள் ஜேவிபியினர். இவ்வாறு இருக்க ஜே.பி.விபியினருக்கு நீங்கள் வாக்களிக்க முயன்றல் அது எங்களை அகல பாதாளத்தில்தான் கொண்டு சென்று விடும் என்பது எனது தாழ்மையான கருத்து என்றார்.

 

https://www.ilakku.org/இனவாதத்திலிருந்து-ஜே-பி/

  • கருத்துக்கள உறவுகள்

இனவாதத்தில் இருந்து சிவாஜிலிங்கமும் ஜேவிபியும் மீளவேண்டும்.  அதுவே மீட்சி. 

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு அவர்கள் இனவாதிகள்.......... அவர்களுக்கு நாங்கள் இனவாதிகள்............... போதாக்குறைக்கு ஊருக்குள் நாங்கள் சாதியவாதிகள்............ சந்தர்ப்பம் கிட்டும் போதெல்லாம் நாங்களும் மார்க்ஸிஸக்காரர்கள் தான், அவர்களைப் போலவே...........😜.

மக்கள் இவை எல்லாவற்றையும் கரைத்துக் குடித்து, பின்னர் ஒரு கட்சிக்கும் மூன்று வேட்பாளர்களுக்கும் வாக்குகள் போடுவதென்றால்............ ஈலான் மஸ்க் யாருக்கேனும் செல்லக் கூடிய வாக்களிக்கும் எங்கள் சனங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு மில்லியன் ரூபாய் பரிசு கொடுக்கலாம்................

 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, கிருபன் said:

ஆகவே வெளிவிவகார அமைச்சர் கூறிய கருத்துக்களையும் வைத்து பார்க்கின்றபோது ஜே.பி.வி இன்னும் இனவாத்த்திலிருந்து மீளவில்லை, தமிழருக்கு தமிழினத்திறக்கு எதிரான அனியாயங்களுக்காக 8000 க்கு மேற்பட்ட படையினரை நாங்கள் தான் சேர்துக் கொடுத்தோம் என்று மார்தட்டியவர்களுக்கு எங்களுடைய மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். அதே இராணுவம்தான் எங்களுடைய மக்களை படுகொலை செய்தது, மானபங்க படுத்தியது, கற்பழித்தது. அவ்வாறு செய்தவர்களுக்கு நீங்கள் சாமரம் வீசுவது போல வாக்களிக்க முற்படுவது எந்த வகையில் நியாயம், இதை விட வடக்கு கிழக்கு மாகாணங்களை நீதிமன்ற தீர்ப்பின் மூலம் பிரித்தவர்கள் ஜே.வி.பியினர்.

ஒரு லட்சத்து ஐம்பதினாயிரம் மக்களும் போராளிகளும் இறக்க காரணமாக இருந்த சரத் பொன்சேகாவை எப்படி தமிழர்கள் ஆதரித்தார்கள்?

2 hours ago, ஈழப்பிரியன் said:

ஒரு லட்சத்து ஐம்பதினாயிரம் மக்களும் போராளிகளும் இறக்க காரணமாக இருந்த சரத் பொன்சேகாவை எப்படி தமிழர்கள் ஆதரித்தார்கள்?

எய்தவரான மஹிந்தவை ஆட்சியில் இருந்து அகற்ற அன்றைய நிலையில் எந்த வழியும் இல்லாமல் தாயக மக்களுக்கு இருந்த ஒற்றை தெரிவு என்பதால் ஆதரித்தார்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரசோதரன் said:

எங்களுக்கு அவர்கள் இனவாதிகள்.......... அவர்களுக்கு நாங்கள் இனவாதிகள்............... போதாக்குறைக்கு ஊருக்குள் நாங்கள் சாதியவாதிகள்............ சந்தர்ப்பம் கிட்டும் போதெல்லாம் நாங்களும் மார்க்ஸிஸக்காரர்கள் தான், அவர்களைப் போலவே...........😜.

சரியாச் சொன்னீர்கள். மொத்தத்தில் எல்லோரும் சுயநலவாதத்தின் வெவ்வேறு படிநிலைகளில் நின்று விளையாடுபவர்கள்... 😄

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ஈழப்பிரியன் said:

ஒரு லட்சத்து ஐம்பதினாயிரம் மக்களும் போராளிகளும் இறக்க காரணமாக இருந்த சரத் பொன்சேகாவை எப்படி தமிழர்கள் ஆதரித்தார்கள்?

ஒரு கட்சி என்ன சொன்னாலும் கேட்க வேண்டும் என்ற மோட்டு தனம்.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, நிழலி said:
20 hours ago, ஈழப்பிரியன் said:

ஒரு லட்சத்து ஐம்பதினாயிரம் மக்களும் போராளிகளும் இறக்க காரணமாக இருந்த சரத் பொன்சேகாவை எப்படி தமிழர்கள் ஆதரித்தார்கள்?

எய்தவரான மஹிந்தவை ஆட்சியில் இருந்து அகற்ற அன்றைய நிலையில் எந்த வழியும் இல்லாமல் தாயக மக்களுக்கு இருந்த ஒற்றை தெரிவு என்பதால் ஆதரித்தார்கள்

மகிந்தவை எதிர்த்து வாக்குப் போட எத்தனையோ வழிகள் இருந்தது.

யாராவது ஒருத்தரை டம்மியாக இறக்கியிருக்கலாம்.அல்லது பகிஸ்கரிப்பு செய்திருக்கலாம்.இப்படி எத்தனையோ வழிகள் இருக்க கொலைகார பொன்சேகாவுக்கு வூக்கைப் போடுங்கள் என்று சொல்ல எப்படி மனம் வந்தது?

நாளைக்கு பொன்சேகாவுக்கு எதிராக எப்படி நடந்து கொள்ளப் போகிறார்கள்?

இது தான் ஒற்றைத் தெரிவு என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இது முடிந்த கதை என்றாலும் வலிக்கிறது.

9 minutes ago, விளங்க நினைப்பவன் said:

ஒரு கட்சி என்ன சொன்னாலும் கேட்க வேண்டும் என்ற மோட்டு தனம்.

அண்மையில் சுமந்திரனும் இதை அத்தாட்சிப்படுத்தியிருந்தார்.

நாங்கள் என்ன சொன்னாலும் மக்கள் கேட்பார்கள் என்று.

மக்களை மாந்தைகளாக எண்ணுகிறார்கள்.

இந்தத் தடவை படிப்பிப்பார்கள்.

45 minutes ago, ஈழப்பிரியன் said:

மகிந்தவை எதிர்த்து வாக்குப் போட எத்தனையோ வழிகள் இருந்தது.

யாராவது ஒருத்தரை டம்மியாக இறக்கியிருக்கலாம்.அல்லது பகிஸ்கரிப்பு செய்திருக்கலாம்.இப்படி எத்தனையோ வழிகள் இருக்க கொலைகார பொன்சேகாவுக்கு வூக்கைப் போடுங்கள் என்று சொல்ல எப்படி மனம் வந்தது?

நாளைக்கு பொன்சேகாவுக்கு எதிராக எப்படி நடந்து கொள்ளப் போகிறார்கள்?

இது தான் ஒற்றைத் தெரிவு என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இது முடிந்த கதை என்றாலும் வலிக்கிறது.

 

டம்மியாக ஒருத்தரை இறக்கியிருப்பினும், தேர்தலை பகிஸ்கரித்து இருப்பினும் மகிந்தவின் வெற்றி வாய்ப்பு மேலும் அதிகரித்து இருந்திருக்கும்.

மகிந்தவுக்கு அடுத்ததாக இருந்தது சரத் தான். நான் நினைக்கிறேன் 40 வீத வாக்குகள் கிடைத்தன என. எனவே வெல்லக்கூடிய ஒருவர் என அவரை நினைத்தனர்.

இம் முறையைத் தவிர,எப்போதுமே இரு முனைப் போட்டியாக இருந்து வந்த தேர்தல் என்பதால், மகிந்தவை வர விடாமல் செய்ய இரண்டாம் நிலையில் இருந்தவரை ஆதரித்தனர். ஒரு பேயை விரட்ட இன்னொரு பிசாசை ஆதரித்தனர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தன்னை அழிக்கும் இனத்திற்கு தானே வாக்களித்து.....வாக்களிப்பட்டவனாலேயே அழியும்/ அழிந்த இனமென்றால் அது தமிழினம் மட்டுமே.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.