Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

image

நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பெரும்பான்மை ஆசனங்களை பெறுவது குறித்து நம்பிக்கையுடன் உள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் விஜிதஹேரத் தேசிய ஐக்கியத்தை உருவாக்குவதற்காக தமிழ் முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து தேசிய ஐக்கிய அரசாங்கத்தினை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம் என தெரிவித்துள்ளார்.

புதிய நாடாளுமன்றத்தில் அதிக ஆசனங்களை கைப்பற்றுவது குறித்து தேசிய மக்கள் சக்தி நம்பிக்கையுடன் உள்ளதாக தெரிவித்துள்ள அவர் எனினும் அரசியல் சூழ்நிலையை வலுப்படுத்துவதற்காக தனது கட்சி தமிழ் முஸ்லீம் கட்சிகளை பிரதிநிதித்துவம் செய்யும் நாடளுமன்ற உறுப்பினர்களிற்கு அழைப்பு விடுக்கும் என தெரிவித்துள்ளார்.

எனினும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்போவதில்லை தமிழ் முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கே அழைப்புவிடுப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் முஸ்லீம் சமூகத்தினை பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தேசிய ஐக்கிய அரசாங்கத்தை அமைப்பது குறித்த பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயாராகவுள்ளோம், நாங்கள் ஏற்படுத்த விரும்பும் ஐக்கியத்தை இதன் மூலமே ஏற்படுத்த முடியும், என தெரிவித்துள்ள விஜித ஹேரத் தேசிய ஐக்கிய அரசாங்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும், தேசிய மக்கள் சக்தியால் வெற்றிகரமாக ஆட்சி செய்ய முடியும் அனைத்து சமூகங்களிற்காகவும் பணியாற்ற முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/198387

  • கருத்துக்கள உறவுகள்

மாற்றங்கள் ஒன்ரே மாறாதது , பார்ப்பம் உங்கள் அரசாங்கம் தமிழர் மீதான நலனில் ....

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

தேசிய ஐக்கியத்தை உருவாக்குவதற்காக தமிழ் முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து தேசிய ஐக்கிய அரசாங்கத்தினை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம் என தெரிவித்துள்ளார்.

உதை தானே உங்கன்ட  எஜமானர்காலாகிய பிரித்தானியா நாட்டை உங்களிடம்  தந்து விட்டு சென்ற பொழுது சொன்னார்கள்  ...இதை புரிந்து கொள்ள உங்கன்ட் ஆட்களுக்கு 75 வருடங்கள் சென்றிருக்கின்றது...  ஐக்கிய தேசிய கட்சி உருவானதே அதறகு தானே....புதுசாக நீங்கள் ஐக்கியம் பற்றிபாடம் எடுக்கிறீயல் ....புத்த‌ன் சர்ணம் கச்சாமி.....

  • கருத்துக்கள உறவுகள்
கோர்ட்டில். ஒரு. குற்ற. வழக்கில்.
சாட்ச்சிகளிடம். குறுக்கு. விசாரணை. நடைபெற்று கொண்டிருந்தது
அப்போது
அந்த ஊர்லயே வயசான ஒரு கிழவியை சாட்சியா விசாரிச்சுக் கிட்டிருக்காங்க...!
வக்கீல் :
"பாட்டி உங்களப் பத்தி சுருக்கமா சொல்லுங்க..."
பாட்டி :
"என்னை பத்தி சொல்ல என்ன இருக்கு ?
உன்னைப்பத்தி சொல்லவா ?
நீ சின்ன வயசுல இந்த ஊர்ல பெரிய களவாணிப் பய. சின்னச் சின்ன திருட்டெல்லாம் பண்ணி தப்பிச்சிகிட்டே...,
அப்புறம் ஒருநாள் நம்ம ஊரு கோயில் உண்டியலை உடைச்சு நகை, பணம் எல்லாம் திருடிட்டே..
ஊர் மக்கள் கிட்ட மாட்டாம உன்ன உங்க அப்பன் வெளியூருக்கு கூட்டிகிட்டு போய் படிக்க வச்சான். இன்னிக்கு நீ வக்கீலா இங்க வந்து நிக்கற..."
அதிர்ந்து போனார் வக்கீல்.
மெல்ல சமாளிச்சிகிட்டு,
"சரி பாட்டி.. இந்த எதிர் தரப்பு வக்கீலை உங்களுக்கு தெரியுமா ?" ன்னு கேட்டார்.
பாட்டி :
"தெரியுமாவா; இந்த மொள்ளமாரி சின்ன வயசுல, ஊர் பொண்ணுங்க ஒண்ணைக்கூட விட்டு வைக்க மாட்டான்.
சரியான பொம்பளை பொறுக்கி, பஞ்சாயத்து இவனை ஊர விட்டு ஒதுக்கி வச்சுருச்சு...
இப்போ என்னமோ, கோட்டு போட்டுக்கிட்டு வந்து நிக்கிறான் !"
ஜட்ஜ் : (மேஜையை தட்டி)
"அரை மணி நேரம் கழித்து கோர்ட் மீண்டும் கூடும்" ன்னு உத்தர விட்டுட்டு வக்கீல்கள் இருவரையும் தன் அறைக்கு அழைத்தார்.
அறைக்குள் நுழைந்த அந்த இரு வக்கீல்களிடமும் ஜட்ஜ் பின் வருமாறு கூறினார் :
"கோர்ட் மறுபடியும் தொடங்கிய தும் நீங்க ரெண்டு பேரும் 'இந்த ஜட்ஜ் ஐயாவை தெரியுமா?' ன்னு அந்தக் கிழவிகிட்ட கேட்டீங்கன்னா செருப்பு பிஞ்சுடும், ஜாக்கிரதை !!"
 
நன்றி நுணவிலான்
 
தேர்தல் நெருங்க... இங்கு வக்கீல்கள்   தமிழ் கட்சிகளகவும் ...ஜட்ஜு..  என் .பி.பீ யாகவும் எனக்குத் தெரிகின்றனர்... உங்களுக்கு எப்படி
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ், முஸ்லிம் எம்.பிகளை இணைத்து தேசிய ஐக்கிய அரசாங்கம்

Oruvan

தமிழ், முஸ்லிம் கட்சிகளை இணைத்து தேசிய ஐக்கிய அரசாங்கத்தை நிறுவுவதற்கு தேசிய மக்கள் சக்தி எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

”பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மையை பெறும். எவ்வாறாயினும், தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து தேசிய ஐக்கிய அரசாங்கத்தை நிறுவுவதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம்.

தேசிய ஐக்கிய அரசியல் சூழலை வளர்ப்பதில் கட்சி ஆர்வமாக உள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களைத் தவிர்த்து தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு தேசிய ஐக்கிய அரசாங்கத்தை அமைப்பதற்கான அழைப்பு விடப்படும்

தேசிய ஐக்கிய அரசாங்கத்தை அமைப்பதன் மூலம் இந்த நாட்டில் தேசிய ஐக்கியத்தை உண்மையாகவே அடைய முடியும். எனினும் ஐக்கிய அரசாங்கம் இல்லாவிட்டாலும் எம்மால் அரசாங்கத்தை வெற்றிகரமாக நடத்த முடியும் மற்றும் அனைத்து சமூகங்களுக்கும் சேவை செய்யவும் முடியும்” என்றும் கூறியுள்ளார்.

என்றாலும் அண்மையில் யாழ்ப்பாணத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழு உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பிமல் ரத்நாயக்க, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தில் அமைச்சுப் பதவி வழங்கப்பட மாட்டாது.

கடந்த தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்த டக்ளஸ் தேவானந்தா, நாட்டில் ஏற்பட்ட கணிசமான பிரச்சினைகளுக்கு பங்களிப்பை வழங்கிய முன்னைய அமைச்சரவையில் அங்கம் வகித்தவர்.

டக்ளஸ் தேவானந்தா , அண்மையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்திருந்தார். இதுதொடர்பிலான புகைப்படத்தை சமூக ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் அவரது பிம்பத்தை உயர்த்துவதற்காக அவரது தரப்பு பயன்படுத்தியிருந்தது.

இலங்கைக்கு பாதகமான கொள்கைகளை வகுத்து மகிந்த ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க, மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் அமைச்சரவையிலும் டக்ளஸ் தேவானந்தா, உறுப்பினராக இருந்தார்.

றிசாத் பதியுதீன், சுமந்திரன், ஸ்ரீதரன் மற்றும் சில தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களின் வாக்குகளைப் பெறுவதற்காக தவறான பிரச்சாரங்களில் ஈடுபடுகின்றனர்.” எனக் குற்றம் சுமத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

https://oruvan.com/sri-lanka/2024/11/12/national-unity-government-to-include-tamil-and-muslim-mps-vijitha-herath-announces

 

  • கருத்துக்கள உறவுகள்

யாரோடும் இணைய மாட்டோம் என்று சொன்னார்களே முதலில்.

  • கருத்துக்கள உறவுகள்

சுருதி மாறுதே?

அரச புலானாய்வு - அறுதி பெரும்பான்மை கிடைக்காது என் அறிக்கை கொடுத்துள்ளொதோ?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.