Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிர்க்கட்சிக்கும் புதியவர்களை தெரிவு செய்ய வேண்டும் பலமான எதிர்க்கட்சி இருப்பது நாட்டுக்கு நன்மை பயக்கும் - பிரதமர் ஹரிணி அமரசூரிய

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

image

(இராஜதுரை ஹஷான்)

ஆளும் தரப்புக்கு புதியவர்களை தெரிவு செய்ய வேண்டும் என்பதை போன்று எதிர்க்கட்சிக்கும் புதியவர்களை தெரிவு செய்ய வேண்டும். சிறந்த மற்றும் பலமான எதிர்க்கட்சி இருப்பது நாட்டுக்கு நன்மை பயக்கும். 21 ஆம் திகதிக்கு பின்னர் எமது கொள்கைத் திட்டத்தை முறையாக செயற்படுத்துவோம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய  தெரிவித்தார்.

கொழும்பு – மிரிஹான பகுதியில் வியாழக்கிழமை (14) வாக்களித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

எமக்கு பதவி முக்கியமல்ல, பலமான பாராளுமன்றத்தை அமைப்பதையே எதிரர்பார்த்துள்ளோம். பெரும்பான்மை பலம் எமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை முழுமையாக உள்ளது. பதவிகள் தொடர்பில் எமது அணிக்குள் எவ்வித முரண்பாடுகளும் கிடையாது.

10 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு எதிர்வரும் வியாழக்கிழமை (21) கூடும். ஜனாதிபதித் தேர்தலில் நாங்கள் முன்வைத்த கொள்கைத் திட்டத்தை சிறந்த முறையில் செயற்படுத்துவோம். உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கமைய உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.

புதியவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்புமாறு நாங்கள் குறிப்பிடும் போது எதிர்தரப்பினர் பழையவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் என்று குறிப்பிட்டார்கள். பழையவர்கள் நாட்டுக்கு என்ன செய்தார்கள் என்பதை ஆராய வேண்டும்.

அத்துடன் அனுபவமில்லாதவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்ப கூடாது என்று குறிப்பிடுவதை அவதானிக்க முடிகிறது. அரச நிதியை  மோசடி செய்த அனுபவமும்,  பாராளுமன்றத்தில் முறையற்ற வகையில் செயற்பட்ட அனுபவமும் எமக்கு கிடையாது.

ஆளும் தரப்புக்கு புதியவர்களை தெரிவு செய்ய வேண்டும் என்பதை போன்று எதிர்க்கட்சிக்கும் புதியவர்களை தெரிவு செய்ய வேண்டும். சிறந்த மற்றும் பலமான எதிர்க்கட்சி இருப்பது நாட்டுக்கு நன்மை பயக்கும் என்றார்.

https://www.virakesari.lk/article/198729

  • கருத்துக்கள உறவுகள்

டிமிரு புடிச்ச பொண்ணு...ஒரு விடையத்தில் அனுரவுடன் முரண்பாடு என்று கதை வந்தது...வெயிட் பண்ணி பார்ப்பம்..

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

டிமிரு புடிச்ச பொண்ணு...ஒரு விடையத்தில் அனுரவுடன் முரண்பாடு என்று கதை வந்தது...வெயிட் பண்ணி பார்ப்பம்..

அவரது கருத்தில் என்ன பிழை உண்டு”???  

இதுவரை 173  பாராளுமன்ற உறுப்பினர்கள் பெற்று விட்டார்கள்  

இது எப்படி சாத்தியம்??  தமிழ்  சிங்கள மக்கள் வாக்கு போட்டமையால் அல்லவா???  அந்த மக்கள் தீர்ப்பு மதிக்கலாம் 

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இதுவரை  இருந்த அரசியல்கட்சிகள், அரசியல்தலைவர்கள் போல செயற்படாமல் மக்கள் நன்மையின கருதிற்கொண்டு செயற்பட்டால் நன்று, அதே போல் சிறுபான்மை மக்களின் பிரச்சினையிலும் பழைய அரசியல்வாதிகள் போல பேரினவாத கொள்கையினை கடைப்பிடிக்காமல் மக்களுக்கான அனைத்து சம உரிமைகளும் சிறுபான்மை மக்களுக்கும் கிடைப்பதனை உறுதி செய்தால் நல்லது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.