Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போர் முடியும்வரை இந்தியா எமக்கு உதவியது – புதுடில்லியில் ரணில் உரை!

போர் முடியும்வரை இந்தியா எமக்கு உதவியது – புதுடில்லியில் ரணில் உரை!

அமைதிப் பேச்சுவார்த்தையை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் எதிர்த்ததில் இருந்து 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடையும்வரை இந்தியா இலங்கைக்கு உதவியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

புதுடில்லியில் நடைபெற்ற 7வது அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவுச் சொற்பொழிவில் உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்தாவது,

வாஜ்பாயும் நானும் அதிகாரத்தில் இருக்கும் போது பயங்கரவாதத்திற்கு எதிரான போர் உச்சத்தில் இருந்தது. நாங்கள் வெளியிட்ட இரண்டு அறிக்கைகள் அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் உலகளவில் எதிர்க்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகின்றன.

இலங்கையின் பாதுகாப்புப் படைகளுக்கு பயிற்சி மற்றும் உபகரணங்களை வழங்குவதில் தொடர்ந்து ஒத்துழைப்பது பற்றி அக்டோபர் 2003 அறிக்கையின் குறிப்பில் உள்ளது.

கடற்புலிகளின் கடல்சார் நடவடிக்கைகளில் பிரபாகரன் அதீத நம்பிக்கை கொண்டிருந்தார். எனினும், எனது பார்வையில் இது விடுதலைப் புலிகளின் குறைப்பாடாக கண்டறிந்தேன.

எனவே, வாஜ்பாய்ஜியும் நானும் எங்கள் கடல் பகுதியில் அரசு அல்லாதவர்கள் செயல்பட அனுமதிக்க மாட்டோம் என்று ஒரு உடன்பாட்டுக்கு வந்தோம். கடற்புலிகளின் செயற்பாடுகளை நடுநிலையாக்கி பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கு இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை உறுதிப்படுத்தினோம்.

2003 ஆம் ஆண்டளவில், நிலைமை இலங்கைக்கு சாதகமாக மூலோபாய ரீதியாக, பொருளாதார ரீதியாக மற்றும் சர்வதேச ரீதியாக மாறியது. சமாதானப் பேச்சுவார்த்தையில் தன்னால் வெற்றிபெற முடியாது என்பது பிரபாகரனுக்குத் தெரியும். எனவே, அமைதிப் பேச்சுவார்த்தையை அவர் புறக்கணிக்கத் தொடங்கினார்.

இந்த முக்கியமான கட்டத்தில், இலங்கை அரசாங்கம் முன்வைத்த முன்மொழிவுகளுக்கு விடுதலைப் புலிகளின் பதிலை வலியுறுத்தியும், பேச்சுவார்த்தைகளை முன்கூட்டியே மீண்டும் தொடங்குவதற்கும் இந்தியா எங்களுக்கு ஆதரவளித்தது. அன்றிலிருந்து 2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படும் வரை இந்தியா எமக்கு ஆதரவளித்தது.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கு அப்பால் சென்று இரு நாடுகளுக்குமிடையில் நெருக்கமான பொருளாதார ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கான அவசியம் குறித்தும் வாஜ்பாய்ஜியும் நானும் விவாதித்த ஒரு தலைப்பு.

அரசாங்கத்தில், விவசாயம், மின்சாரம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளுக்கு முன்னுரிமை அளித்ததன் மூலம் இந்த பேச்சுவார்த்தைகளை செயல்படுத்த முடிந்தது. இதனால், போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தவுடன், பொருளாதாரத்தின் மீது எங்கள் கவனம் திரும்பியது.

முதன்முறையாக, இரு அரசாங்கங்களும் தங்கள் பொருளாதாரங்களை மேலும் தாராளமயமாக்குவதில் உறுதியாக இருந்தன. சேவைத் துறையை உள்ளடக்கிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மற்றும் அதற்கு அப்பால் ஒரு பணிக்குழுவை அமைப்பதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டது.

அக்டோபர் 2003 இல் நாங்கள் எங்கள் அடுத்த இருதரப்பு சந்திப்பை நடத்தியபோது, சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஒரு விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தமாக மாறியது. நாங்கள் 2004 ஆம் ஆண்டிற்குள் பேச்சுவார்த்தைகளை தொடங்கி விவாதங்களை முடிக்க முடிவு செய்தோம். ஆனால் அந்த நேரத்தில் நாங்கள் இருவரும் பதவியில் இல்லை.

நாங்கள் இருவரும் இந்திய-இலங்கை உறவுகளை ஒரு புதிய நிலைக்கு கொண்டு சென்றோம். முதலில், இந்திய எண்ணெயை இலங்கை சந்தையில் நுழைய அனுமதித்து, திருகோணமலையில் உள்ள எண்ணெய் தாங்கிகளை சேமிப்பிற்காக பயன்படுத்தினோம், இரண்டாவதாக, நிலக்கரியை நிறுவ ஒப்புக்கொண்டோம்.” என்றார்.

 

 

https://oruvan.com/india-helped-us-until-the-end-of-the-war-ranils-speech-in-new-delhi/

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நரி தான் மோசமான இனப்படுகொலை குற்றவாளி. ஆனாலும் சம் சும் கும்பல் இவருக்கு வெள்ளை அடிச்சது தான் மிச்சம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, கிருபன் said:

போர் முடியும்வரை இந்தியா எமக்கு உதவியது – புதுடில்லியில் ரணில் உரை!

போர்க்குற்ற விசாரணை வேண்டும் என்பவர்கள் வரிசையாக வரவும். 😎
இந்தியாவை மீறி எவன் எமக்கு உதவி செய்வான் என்பதையும் கையோட சொல்லவும். 😁

 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nedukkalapoovan said:

இந்த நரி தான் மோசமான இனப்படுகொலை குற்றவாளி. ஆனாலும் சம் சும் கும்பல் இவருக்கு வெள்ளை அடிச்சது தான் மிச்சம். 

 

சுமந்திரன் கூறியது நடைமுறை சார்ந்தது. இனப்படுகொலை நடைபெற்றதை நிரூபிப்பது கடினம் என்றுதான் சுமந்திரனால் கூறப்பட்டது. 

சுமந்திரன் என்கிற தனிமனிதனை ஏசுவதை விடுத்து இனப்படுகொலை நடைபெற்றது என்பதை நிரூபிக்க புலம்பெயர் தமிழர் நாம் என்ன செய்தோம்? 

(இந்த இந்தியாவைத்தான் இலங்கைத் தமிழர் தொப்புழ்கொடி உறவு என்றும் தந்தையர் நாடு என்றும் நாம் கொண்டாடினோம். 😏)

  • கருத்துக்கள உறவுகள்

சில வேளைகளில் நாங்கள் சில காரியங்களை செய்யும்போது அது பிழையாகி போனால் அதை அப்படியே சரி செய்யாமல் முதலில் இருந்து தொடங்குவோம். அப்படி ஒரு நாடு தான் இந்தியா. இந்தியாவை திருத்த முடியாது அழித்து தான் முதலில் இருந்து கட்டவேண்டும். எனவே 3-ஆம் உலகப்போர் என்று ஒன்று வந்தால் அதை சரியாக பயன்படுத்தி இந்தியர்கள் முயன்றுபார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

எந்தவொரு நாடும் முதலில் தமது சொந்த நலன்களை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படும், இதற்கு இந்தியாவும் விதிவிலக்கில்லை, இந்தியா எமக்காகச்  செய்யும் என நம்பிய நாங்கள் தான்!!!!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.