Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

தமிழரசுக் கட்சியில் இளைஞர், பெண்கள் இணைய வேண்டும் - பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் அழைப்பு

01 Jan, 2025 | 04:05 PM

image

(எம்.நியூட்டன்)

“பொதுத் தேர்தலில் நாம் பெற்ற பின்னடைவிலிருந்து மீண்டு எழுவதற்கான சந்தர்ப்பமாக உள்ளூராட்சிமன்றத் தோ்தல்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ள தமிழரசுக் கட்சியின் இடைக்கால பதில் தலைவா் சி.வி.கே.சிவஞானம், “இளைஞா்கள், பெண்கள் கூடுமானவரையில் எமது கட்சியில் இணைந்துகொள்ள வேண்டும். அதிலிருந்து பொருத்தமானவா்களை நாம் வேட்பாளா்களாகத் தெரிவு செய்வோம்” என்றும் தெரிவித்தாா். 

யாழ்ப்பாணத்தில் உள்ள தமது அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (31)  ஊடகவியலாளா்களை சந்தித்த போதே சி.வி.கே.சிவஞானம் இதனைத் தெரிவித்தாா்.

கடந்த சனிக்கிழமை வவுனியாவில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பதில் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட பின்னா் நேற்று முதல் தடவையாக ஊடகவியலாளா்களைச் சந்தித்து, கட்சியின் புதுவருடத்துக்கான உத்தேச  செயற்பாடுகளை அவா் விளக்கினாா். 

இதன்போது சி.வி.கே.சிவஞானம் தெரிவித்ததாவது,

“இரண்டு தோ்தல்கள் புதிய வருடத்தில் நடைபெறவிருக்கின்றது. உள்ளூராட்சி மன்றத் தோ்தல்களும், மாகாண சபைகளுக்கான தோ்தல்களும் புதிய வருடத்தில் நடைபெறும்.

உள்ளூராட்சி மன்றங்களுக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னா் வேட்புமனுக்கள் கோரப்பட்டிருந்தது. ஆனால், தோ்தல் நடைபெறவில்லை. 

அந்த வேட்புமனுக்கள் இரத்துச் செய்யப்படுமாயின், புதிய வேட்பாளா்களைத் தெரிவு செய்ய வேண்டிய தேவை இருக்கின்றது. 

இந்தத் தோ்தலப் பொறுத்தவரையில் வேட்பாளா் நியமனத்தில் 25 வீதமானவை பெண்களுக்கும், 25 வீதம் இளைஞா்களுக்கும் வழங்க வேண்டும். 

ஆனால், இதற்குத் தேவையானவா்கள் எம்மிடம் இருப்பதாகத் தெரியவில்லை. அதனால், பொருத்தமானவா்கள் உள்ளூராட்சி மன்றத் தோ்தலில் எமது கட்சியுடன் இணைந்து போட்டியிட முன்வரவேண்டும். 

தோ்தலில் போட்டியிட விரும்புபவா்கள் கட்சியின் தொகுதிக் கிளைகள் மூலமாகவோ அல்லது மூலக் கிளை மூலமாகவோ இணைந்துகொள்ள முடியும். 

அவ்வாறான நிலையில் கட்சி ஒரு நல்ல முடிவை எடுக்கும். பொருத்தமானவா்களைத் தெரிவு செய்யும். 

வடக்கு - கிழக்கு பகுதிகளில் கட்டமைப்புக்களைக் கொண்டியங்குவதும், தமிழ்ப் பகுதிகளில் அனைத்து மாவட்டங்களிலும் பாராளுமன்ற உறுப்பினா்களைக் கொண்ருப்பதுமான ஒரே கட்சி தமிழரசுக் கட்சிதான். அத்துடன் உள்ளூராட்சி மன்ற நிா்வாகத்தில் அனுபவம் உள்ள பலரும் எம்முடன் இருக்கின்றாா்கள். 

பொதுத் தோ்தலில் நாம் பெற்ற பின்னடைவிலிருந்து மீண்டெழுவதற்கான ஒரு சந்தா்ப்பமாக இந்த உள்ளூராட்சிமன்றத் தோ்தல்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் என்னுடைய முதலாவது கடமையாக இருக்கின்றது. 

அதனால் இளைஞா்கள், பெண்கள் கூடுமானவரையில் எமது கட்சியில் இணைந்துகொள்ள வேண்டும். இவா்களில் பொருத்தமானவா்களை வேட்பாளா்களாக்க போட்டியிடுவதற்கு நாம் வாய்ப்பளிப்போம். 

பாதுகாப்பும் காணி விடுவிப்பும்

இப்போது தென்பகுதியில் முன்னாள் ஜனாதிபதிகளுக்கான பாதுகாப்பு குறைக்கப்படுகின்றது. பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை என்ற நிலையில் அது குறைக்கப்படுவதாக அரசாங்கத்தின் சாா்பில் சொல்லப்படுகின்றது. 

பாதுகாப்பு அச்சுறுத்தல் இங்கு இல்லையென்றால் எதற்காக எங்களுடைய பகுதிகளில் எங்களுடைய நிலத்தை இராணுவம், கடற்படை, விமானப்படை என்பன ஆக்கிரமித்திருக்கின்றன? இதனால் எமது மக்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றது. 

குறிப்பாக, முல்லைத்தீவு மாவட்டத்தில் விமானப்படை அந்த மாவட்டத்தின் சுமாா் மூன்றில் ஒரு பகுதியை ஆக்கிரமித்துள்ளது. 

இதனால், எமது மக்கள் விவசாயத்தை மேற்கொண்டு, தமது வாழ்வாதாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு பறிக்கப்படுகிறது. 

எனவே அரசாங்கம் இவற்றைக் கருத்திற்கொண்டு இந்த முப்படையினரும் ஆக்கிரமித்துள்ள நிலங்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நான் கட்சி ரீதியாக முன்வைக்கிறேன்.

கட்சிக்குள் உருவாகியிருக்கும் பிரச்சினைகளை நாம் தீா்த்துவைத்து கட்டுக்கோப்பாக முன்னெடுத்துச் செல்வதற்கான செயற்பாடுகளையும் முன்னெடுத்திருக்கிறோம். 

அண்மைக்காலத் தெரிவுகளுக்குப் பின்னா் பல விமா்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. அதனையிட்டு நான் அக்கறைப்படுவதில்லை. இப்போது பவளவிழாவைக் கொண்டாட இருக்கிறோம். 

மட்டக்களப்பில் பிரதான நிகழ்வு இடம்பெறும். மாவட்ட ரீதியாகவும் நிகழ்வுகள் இடம்பெறும். இதன்போது, இளைஞா்கள் யுவதிகள் எமது கட்சியில் இணைந்து கட்சியைப் பலப்படுத்த உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன்” என்றும் சி.வி.கே.சிவஞானம் மேலும் தெரிவித்தாா்.

  •  

 

https://www.virakesari.lk/article/202697

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா மிதலில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒரு தேர்தலிலும் போட்டுயிட முடியாது என்று ஒரு rule போடுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

ஆளுக்கொரு ஊடக சந்திப்புகளை ஏற்படுத்துவது, கருத்து விடுவது. பிறகு நாங்கள் ஒற்றுமையாக இருக்கின்றோம் என நடிக்கிறது. இவர் முந்தா நாள் ஒரு கருத்து வெளியிட்டார், இன்று அதற்கு மாறாக கருத்து சொல்கிறார். எல்லாம் பதவி செய்யிற வேலை. மக்களை முட்டாளாக்குகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்று மாவையர் வேறு பேட்டி கொடுத்திருக்கிறார். இந்த சகுனி கட்சிக்குள் நுழைந்து, இனத்துக்கு எதிரான சதி வேலைகளை செய்யும் போதே தலையிலடித்துச்சொன்னோம், எச்சரித்தோம். யாரும் கேட்கவில்லை. தலையில் வைத்துக்கொண்டாடினார்கள், சொன்னதற்கெல்லாம் தலையாட்டினார்கள், சட்ட நிபுணர் என்று புகழாரம் வேறு சூட்டினார்கள். இப்போ எப்படி துரத்துவது என்று தெரியாமல், அவரின் தன்னிச்சையான அடக்குமுறைகளை தாங்கவும் முடியாமல் தவிக்கிறார்கள். ஒன்று சட்டப்படி இவரை கட்சியிலிருந்து நிறுத்த வேண்டும். அல்லது கட்சித்தொண்டர், ஆதரவாளர்கள், மக்கள் இவருக்கெதிராக கிளம்பி ஆர்ப்பாட்டங்களையும் எதிர்ப்புகளையும், கண்டனங்களையும் வெளிப்படுத்த வேண்டும். மக்களால் நிராகரிக்கப்பட்டவருக்கு ஏன் அதிகாரங்களை வழங்குகிறார்கள்? அல்லது அதிகாரம் செலுத்த விடுகிறார்கள்? மற்றய உறுப்பினர் தோற்ற போது அவர்களுக்கு என்ன செயல்முறையை நடைமுறைப்படுத்தினார்களோ அதையே இவருக்கும் செய்ய வேண்டியதுதானே. வலிய வீட்டுக்கை பூந்த ச**னை, குனியை விரட்டுவது கஸ்ரம்.   

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, கிருபன் said:

புதிய வேட்பாளா்களைத் தெரிவு செய்ய வேண்டிய தேவை இருக்கின்றது. ----

ஆனால், இதற்குத் தேவையானவா்கள் எம்மிடம் இருப்பதாகத் தெரியவில்லை. அதனால், பொருத்தமானவா்கள் உள்ளூராட்சி மன்றத் தோ்தலில் எமது கட்சியுடன் இணைந்து போட்டியிட முன்வரவேண்டும். 

Fidel Catto على X: "யாருமே இல்லாத கடைல யாருக்குத் தான்டா டீ  ஆத்துறீங்க...??! https://t.co/T8tluLU8Of" / X

ஆளே இல்லாத கடையில், யாருக்கு "ரீ" ஆற்றுகிறீகள். animiertes-essen-smilies-bild-0259
நீங்கள் கெட்ட கேட்டுக்கு,  உங்களை யாரும் தேர்தலில் போட்டியிடச் சொல்லி கேட்டார்களா? 
வந்திட்டாங்கள் தாங்களும் ஒரு ஆட்கள் என்று.  animiertes-gefuehl-smilies-bild-0048
போய்.... உங்கடை ஆட்களுக்கு, மாறி, மாறி முதுகு சொறிஞ்சு கொண்டு இருங்கோ.  animiertes-gefuehl-smilies-bild-0090

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இந்தமுறை ஒரு சின்ன break எடுத்து கட்சியை மீளக்கட்டமைச்சால் என்ன? 

  • கருத்துக்கள உறவுகள்

உள் வீட்டுக்குள்ளேயே வெட்டு கொத்து நடக்கும் போது

புதியவர்கள் உள்ளே போய் வெட்டு குத்து வாங்கணுமா?

சுமந்திரன் தனது கையாட்களை களமிறக்க நல்லதொரு சந்தர்ப்பம்.

தவறவிட மாட்டார் என்றே எண்ணுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
On 2/1/2025 at 00:43, கிருபன் said:

தமிழரசுக் கட்சியில் இளைஞர், பெண்கள் இணைய வேண்டும் -

நீங்கள் இளைப்பாறினால் தானே புதியவர்கள் வரலாம் ...நீங்கள் கட்சி பதவிகளை வைத்து கொண்டு புதியவர்கள் வாங்கோ வாங்கோ என்றால் என்ன நியாயம்...புதியவர்கள் வேறு கட்சிகள்  ஊடாக பாராளுமன்றம் சென்றுவிட்டார்கள் ...அர்ஜுனா , மற்றும் மக்கள் சக்தியின் ஐவர் ...யாவரும் புதியவர்கள் இளைஞர்கள் ...அவர்களுக்கு இருக்கும் துணிச்சல் ,இளமை உங்களது கட்சியினரிடம் இல்லை..
உங்களின்ட கட்சியில் அவர்கள் இணைந்திருந்தால் அவ்ர்களின் பாராளுமன்ற கனவு இன்னும் 30 வருடங்களுக்கு நிறை வடைந்திருக்க்காது..

...முதலில் உங்களை போன்ற   நரைத்தமுடி இளசுகள் கட்சியை விட்டு விலக வேண்டும் ...
 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 1/1/2025 at 14:43, கிருபன் said:

“பொதுத் தேர்தலில் நாம் பெற்ற பின்னடைவிலிருந்து மீண்டு எழுவதற்கான சந்தர்ப்பமாக உள்ளூராட்சிமன்றத் தோ்தல்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ள தமிழரசுக் கட்சியின் இடைக்கால பதில் தலைவா் சி.வி.கே.சிவஞானம், “இளைஞா்கள், பெண்கள் கூடுமானவரையில் எமது கட்சியில் இணைந்துகொள்ள வேண்டும். அதிலிருந்து பொருத்தமானவா்களை நாம் வேட்பாளா்களாகத் தெரிவு செய்வோம்” என்றும் தெரிவித்தாா். 

இளம் சமுதாயம் கட்சியில் இணைந்த பின் நீங்களும் நீங்கள் சார்ந்த முதியவர்களும் ஒதுங்க வேண்டும்.  சரிப்பட்டு வருமா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.