Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றினால் புதிய அரசியலமைப்பை ஆதரிப்போம்

தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றினால் புதிய அரசியலமைப்பை ஆதரிப்போம்

தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றினால் மாத்திரமே புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கான பூரண ஆதரவை வழங்க முடியும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் வெளிப்படுத்தியுள்ளார்.

அதிகாரப் பகிர்வு மற்றும் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழித்தல் என்பன புதிய அரசியலமைப்பில் உள்வாங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையிலான தற்போதைய அரசாங்கம் புதிய அரசியலமைப்பை தயாரிப்பதாக உறுதியளித்துள்ள நிலையில் அதற்கான பணிகளை விரைவில் ஆரம்பிப்பதாக அறிவித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

புதிய அரசியலமைப்பு தயாரிப்பதை தற்போதைய அரசாங்கம் உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் எனவும் எம்.ஏ. சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தில் புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கான கலந்துரையாடல் கூட்டங்கள் அதிகளவானவற்றில் அப்போதைய மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்களும் கலந்துக்கொண்ட நிலையில் பொதுத் தேர்தலின் பின்னர் மூன்று சந்தர்ப்பங்களில் தான் ஜனாதிபதியை சந்தித்ததாகவும் அதன்போது புதிய அரசியலமைப்பு தொடர்பில் கலந்துரையாடியதாகவும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும்,புதிய அரசியலமைப்பு தொடர்பான தனது கட்சியின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை அதற்கான பணிகளை ஆரம்பித்ததன் பின்னரே அறிவிக்க முடியும் என அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
 

https://oruvan.com/we-will-support-the-new-constitution-if-it-fulfills-the-political-aspirations-of-the-tamil-people/

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றினால் மாத்திரமே புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கான பூரண ஆதரவை வழங்க முடியும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளர்

மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவர்களிடமே உண்டு ...மேலும் வடக்கு கிழக்கிலிருந்து ஐந்தாறு அரசு ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர் உண்டு ...தமிழர் அபிலாசைகள் இந்த அரசாங்கம் நிறை வேற்றிய நிர்ப்பந்தம் இல்லை ....அதற்கான காலம் நீங்கள் பா.உ வாக இருந்த பொழுது இருந்தது ,ஆனால் நீங்கள் முயற்சி எடுக்கவில்லை ..இப்பொழுது அறிக்கை போர் நடத்துகின்றீர்கள்...உங்கள் இருப்பை தக்க வைத்துக்கொள்ள ....
தமிழருக்கு பிர்ச்சனை உண்டு என சிங்கள ஆட்சியாளர்களும்,தமிழ் பா. உ சொன்ன காலம் இருந்தது ..

இப்ப தமிழ் பா.உ.(ஜெ,வி.பி டமிழ்ஸ்).,சொல்லினம் பொருளாதார பிரச்சனை மட்டுமே உள்ளது எண்டு..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, putthan said:

மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவர்களிடமே உண்டு ...மேலும் வடக்கு கிழக்கிலிருந்து ஐந்தாறு அரசு ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர் உண்டு ...தமிழர் அபிலாசைகள் இந்த அரசாங்கம் நிறை வேற்றிய நிர்ப்பந்தம் இல்லை ....அதற்கான காலம் நீங்கள் பா.உ வாக இருந்த பொழுது இருந்தது ,ஆனால் நீங்கள் முயற்சி எடுக்கவில்லை ..இப்பொழுது அறிக்கை போர் நடத்துகின்றீர்கள்...உங்கள் இருப்பை தக்க வைத்துக்கொள்ள ....
தமிழருக்கு பிர்ச்சனை உண்டு என சிங்கள ஆட்சியாளர்களும்,தமிழ் பா. உ சொன்ன காலம் இருந்தது ..

இப்ப தமிழ் பா.உ.(ஜெ,வி.பி டமிழ்ஸ்).,சொல்லினம் பொருளாதார பிரச்சனை மட்டுமே உள்ளது எண்டு..

எப்பிடி இருந்த நான் இப்பிடி ஆயிட்டன் எண்டது போலத்தான் ஈழத்தமிழர் பிரச்சனையின் நிலைமைகள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றினால் மாத்திரமே புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கான பூரண ஆதரவை வழங்க முடியும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் வெளிப்படுத்தியுள்ளார்.

கடந்தகாலங்களில் முட்டுக்கொடுத்து, கூட இருந்து, தனியாக கதைபேசிய அரசாங்கங்களிடம் இந்த கோரிக்கையை வைத்தா இதெல்லாம் செய்தார்? அவர்களிடமே பெற்றுக்கொள்ள இவரால் முடியவில்லை, இவரிடம் யார் ஆதரவு கேட்டார்கள் என்று முறுகுகிறார் இப்போ?  தமிழ்  மக்களே இவரை நிராகரித்து விட்டனர், இனி யாருக்கு நாடகம் நடித்து காட்டுகிறார்? காற்றுள்ள போதே தூற்றாதவர், இப்போ வாயால் தூற்றுகிறார். நான் சொல்லல, இவருக்கு வாய் கொஞ்சம் நீளம் என்று? இப்படி போலி அறிக்கை, ஊடக சந்திப்பு நடத்தாவிட்டால் தூக்கம் வாராது போலிருக்கு. முதலில் உந்த பேச்சாளர் பதவியை பறிக்க வேண்டும் இவரிடமிருந்து. சும்மா உளறிக்கொண்டு.

4 hours ago, கிருபன் said:

பொதுத் தேர்தலின் பின்னர் மூன்று சந்தர்ப்பங்களில் தான் ஜனாதிபதியை சந்தித்ததாகவும் அதன்போது புதிய அரசியலமைப்பு தொடர்பில் கலந்துரையாடியதாகவும் தெரிவித்தார்.

அட....., அவர்கள் இவ்வளவு சொன்னபோதும் மூன்று தடவை சந்தித்திருக்கிறார். தன்மானமற்ற மனிதர். தனிமையில் சந்திக்க வேண்டும், பேசவேண்டும் அதுவே அவரது பணி. பேச்சாளர் பதவியை காலம் கடந்தும் தன்வசம் வைத்திருப்பதின் உள்நோக்கம் இதுதான். தான் நினைத்த நேரமெல்லாம், நினைத்ததை அறிவிப்பதற்கு. இந்த பதவியை இவ்வளவு துஸ்பிரயோகம் செய்பவர், தலைவர் பதவியை பறித்து தன் வசம் எடுத்தால், எவ்வளவு சாதிப்பார்?       

 

4 hours ago, கிருபன் said:

புதிய அரசியலமைப்பு தொடர்பான தனது கட்சியின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை அதற்கான பணிகளை ஆரம்பித்ததன் பின்னரே அறிவிக்க முடியும் என அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியில் ஆயிரம் பிரச்சனைகளை குழப்பங்களை உருவாக்கி உறுப்பினரை வெறுப்பேற்றி, வெளியேற்றி, அவர்களை பணி செய்ய விடாமல் தடுத்து, கூட்டப்பட்ட கூட்டங்களில் முடிவேதும் எட்டப்படாமலேயே கலைந்து, நேரத்தை விரையம் செய்துகொண்டு, அதற்குள் எங்கே, புதிய அரசியலமைப்பு தொடர்பான நிலைப்பாடு எடுப்பதற்கு நேரம் அவர்களுக்கு? ஒவ்வொருவர் ஒவ்வொரு நிலைப்பாடு, கருத்து, அணி. சுமந்திரனுக்கு இதை விட்டால் வேறு வேலையுமில்லைபோல மினைக்கெடுகிறதற்கு .   

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, satan said:

கடந்தகாலங்களில் முட்டுக்கொடுத்து, கூட இருந்து, தனியாக கதைபேசிய அரசாங்கங்களிடம் இந்த கோரிக்கையை வைத்தா இதெல்லாம் செய்தார்? அவர்களிடமே பெற்றுக்கொள்ள இவரால் முடியவில்லை, இவரிடம் யார் ஆதரவு கேட்டார்கள் என்று முறுகுகிறார் இப்போ?  தமிழ்  மக்களே இவரை நிராகரித்து விட்டனர், இனி யாருக்கு நாடகம் நடித்து காட்டுகிறார்? காற்றுள்ள போதே தூற்றாதவர், இப்போ வாயால் தூற்றுகிறார். நான் சொல்லல, இவருக்கு வாய் கொஞ்சம் நீளம் என்று? இப்படி போலி அறிக்கை, ஊடக சந்திப்பு நடத்தாவிட்டால் தூக்கம் வாராது போலிருக்கு. முதலில் உந்த பேச்சாளர் பதவியை பறிக்க வேண்டும் இவரிடமிருந்து. சும்மா உளறிக்கொண்டு.

அட....., அவர்கள் இவ்வளவு சொன்னபோதும் மூன்று தடவை சந்தித்திருக்கிறார். தன்மானமற்ற மனிதர். தனிமையில் சந்திக்க வேண்டும், பேசவேண்டும் அதுவே அவரது பணி. பேச்சாளர் பதவியை காலம் கடந்தும் தன்வசம் வைத்திருப்பதின் உள்நோக்கம் இதுதான். தான் நினைத்த நேரமெல்லாம், நினைத்ததை அறிவிப்பதற்கு. இந்த பதவியை இவ்வளவு துஸ்பிரயோகம் செய்பவர், தலைவர் பதவியை பறித்து தன் வசம் எடுத்தால், எவ்வளவு சாதிப்பார்?       

 

கட்சியில் ஆயிரம் பிரச்சனைகளை குழப்பங்களை உருவாக்கி உறுப்பினரை வெறுப்பேற்றி, வெளியேற்றி, அவர்களை பணி செய்ய விடாமல் தடுத்து, கூட்டப்பட்ட கூட்டங்களில் முடிவேதும் எட்டப்படாமலேயே கலைந்து, நேரத்தை விரையம் செய்துகொண்டு, அதற்குள் எங்கே, புதிய அரசியலமைப்பு தொடர்பான நிலைப்பாடு எடுப்பதற்கு நேரம் அவர்களுக்கு? ஒவ்வொருவர் ஒவ்வொரு நிலைப்பாடு, கருத்து, அணி. சுமந்திரனுக்கு இதை விட்டால் வேறு வேலையுமில்லைபோல மினைக்கெடுகிறதற்கு .   

""சும் கடுக்காய்"" குடித்த பேதி இன்னும் கட்டுக்குள் வரவில்லையென்றால் தாங்கள்  பருக வேண்டியது அண்ணா கோப்பி ,..😁

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த பல தசாப்தங்களாக  தமிழரின் ஏக பிரதிநிதியாக இருந்த சுமந்திரன்  அப்போது எல்லாம் தமிழரின் அபிலாசைகளை சிங்கள அரசுடன் பேசி தீர்க்கக் கூடிய சந்தர்பங்கள் பல இருந்தும் அப்போதெல்லாம்  பேச்சுவார்ததைகளில் இருந்து வெளியேறி பொறுப்பற்ற தனமாக நடந்து  மக்களின் பாரிய இழப்புகளுக்கு காரணமாக இருந்து விட்டு இப்போது தோல்வியடைந்த பின்னர் இவ்வாறு அறிக்கை இடுவது வடி கட்டிய முட்டாள்த்தனம்.  காற்றுள்ள போதே தூற்றிக்கொண்டிருக்க வேண்டும் என்ற குறைந்த பட்ச அறிவு கூட இல்லாத சுமந்திரன். 

  • கருத்துக்கள உறவுகள்
On 3/1/2025 at 18:47, கிருபன் said:

 

தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றினால் புதிய அரசியலமைப்பை ஆதரிப்போம்

தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றினால் புதிய அரசியலமைப்பை ஆதரிப்போம்

தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றினால் மாத்திரமே புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கான பூரண ஆதரவை வழங்க முடியும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் வெளிப்படுத்தியுள்ளார்.

அதிகாரப் பகிர்வு மற்றும் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழித்தல் என்பன புதிய அரசியலமைப்பில் உள்வாங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையிலான தற்போதைய அரசாங்கம் புதிய அரசியலமைப்பை தயாரிப்பதாக உறுதியளித்துள்ள நிலையில் அதற்கான பணிகளை விரைவில் ஆரம்பிப்பதாக அறிவித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

புதிய அரசியலமைப்பு தயாரிப்பதை தற்போதைய அரசாங்கம் உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் எனவும் எம்.ஏ. சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தில் புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கான கலந்துரையாடல் கூட்டங்கள் அதிகளவானவற்றில் அப்போதைய மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்களும் கலந்துக்கொண்ட நிலையில் பொதுத் தேர்தலின் பின்னர் மூன்று சந்தர்ப்பங்களில் தான் ஜனாதிபதியை சந்தித்ததாகவும் அதன்போது புதிய அரசியலமைப்பு தொடர்பில் கலந்துரையாடியதாகவும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும்,புதிய அரசியலமைப்பு தொடர்பான தனது கட்சியின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை அதற்கான பணிகளை ஆரம்பித்ததன் பின்னரே அறிவிக்க முடியும் என அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
 

https://oruvan.com/we-will-support-the-new-constitution-if-it-fulfills-the-political-aspirations-of-the-tamil-people/

ஐயா, என்ன தபால் மூலமாகவா வாக்களிக்கப் போறியல். 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.