Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிறவா பிறையே..!!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

f_baby6monthsm_661d82c.jpg

அம்மி மிதித்து

அருந்ததி பார்த்து

ஆண்டு இங்கு எட்டாச்சு...!!

எப்போ நீ பிறப்பே

என்று தான்

இங்கு ஒரே பேச்சு...!!

இதயத்து அறைகளிலே

இளம்பிஞ்சே

உன்முகம் தான்...

என் கந்தகக்

கருப்பையில்

ஃபீனிக்ஸாய்

எழுவாயா???

விரதமும் வேண்டுதலும் - உன்

வரவைச் சொல்லலையே...!!

வாடகைத்தாய் வாங்கக்கூட

காசுபணம் எனக்கிலையே...!!

சோதனைக்குழாய் முறைக்கும் - முதல்

சோதனையிங்கு பணத்திலாமே??

சொச்ச ரொக்கமில்லையினா

சோதனைக்குழாயும் கிடைக்காதாமே??!!

உன் பிஞ்சுவிரல் ஸ்பரிசத்துக்காய் என்

உயிரே தவிக்குதிங்கே...!!

நஞ்சுரைக்கும் வல்லூறால் - என்

நெஞ்சு மருகி விம்முதிங்கே...!!

ஆண்டுபல போனாலும் - உன் வரவு

கனவில் தான் நிஜமாச்சு...!!

'ம்மா'-னு நீ சொல்ல தவமிருக்கும்

இந்த தரிசுத்தாய் நானாச்சு..!!

பேதையாகி பிதற்றுறேனே - உன்

பிஞ்சுமுகம் காணாமலே...!!

காலம் வந்து கனிந்துவிட்டால் - நீ

என்கண் முன்னாலே...!!

காத்திருந்து கருகினாலும் - உன்

நினைப்பு மட்டும் நித்தியமாய்...!!

பூத்திருக்கும் புதுப்பூவாய் - நீபிறக்க

இன்னும் எத்தனைநாள் சத்தியமாய்..??

பிரம்மன் வரையா ஓவியமே..!!

சிற்பி செதுக்கா

சீர் சிலையே..!! - என்

வயிற்றில் வளரா

வளர் பிறையே...!!

என்று வந்து

என் வயிற்றில்

உயிர்த்து என்னை

உயிர்ப்பிப்பாய்..???

ஆயிரம் மழலை சுற்றி திரிந்தாலும்..

தன்னில் பூத்த பிள்ளை போல் தாய்க்கு ஏதும் இல்லை

குழந்தையில்லாமல்..காலங்கள் நீள்வது..

விதியின் வழி.. பாவம்..

பெண்ணின் மேல் ஏன் பழி...

இந்தக் கவி குழந்தைக்காக ஏங்கும் எல்லா அன்னையையும் ..தந்தையையும் மட்டுமல்ல..

யாவரையும் கலங்க வைக்கும்

Edited by vikadakavi

எங்கோ படித்த நினைவு

"தாய்மை அடையா

பெண்ணவள்

இறந்த போதிலும்

அவளை எரித்து விடாதீர்கள்

அப்போதாவது அவள் வயிற்றில்

புழு பூச்சியாவது உற்பத்தியாகட்டும்"

மழலைச்செல்வத்துக்கு காத்திருக்கும் ஒரு தாயின் ஏக்கத்தை கவிவடிவில் வடித்திருக்கிறீங்க. இக்கவி கண்டு எத்தனை உள்ளங்கள் கலங்கப்போகின்றதோ................................

என்று வந்து

என் வயிற்றில்

உயிர்த்து என்னை

உயிர்ப்பிப்பாய்..???

ஏக்கத்தில் உதிர்ந்த கவிதை அழகு,,,

வாழ்த்துக்கள் பூகள்

நினைவில் வளரும்

மழலை - உன்

கையில் தவழும் நாள்வரும்....

ஊர் உமிழும்

அமிலத்தில் எரியாதே

இறை பக்தி -நல்

நம்பிக்கையில்

காத்திரு.....!

பிரம்மன் வரைவான்

ஓவியம் - உன்

கருப்பையிலும்....!!!

''கலங்காதே''

என்று சொல்லி

உன் கவிதையால்

கரைந்து நின்றேன் -என்

மனதிலும்....கண்களிலும்..!!!!!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
விதியின் வழி.. பாவம்..பெண்ணின் மேல் ஏன் பழி...இந்தக் கவி குழந்தைக்காக ஏங்கும் எல்லா அன்னையையும் ..தந்தையையும் மட்டுமல்ல..யாவரையும் கலங்க வைக்கும்
நன்றிகள் விகடகவி..!!மழலை இன்றி தவிக்கும் அன்னையருக்கு இந்த கவிக்குழந்தை சமப்பணம்.உங்கள் பின்னூட்டம் கண்டு மட்டற்ற மகிழ்ச்சி.
மழலைச்செல்வத்துக்கு காத்திருக்கும் ஒரு தாயின் ஏக்கத்தை கவிவடிவில் வடித்திருக்கிறீங்க. இக்கவி கண்டு எத்தனை உள்ளங்கள் கலங்கப்போகின்றதோ................................
நன்றிகள் சகோதரி வெண்ணிலா. கலங்கிய உள்ளங்கள் காயப்படுத்தாது என்பது திண்ணம்.கவி படித்தாவது இனி அந்த அன்னையரை வசவுகளால் கருக்காமல் இருக்குமா சமூகம்? அப்படி செய்தால் என் கவிக்கு அது சாதனையே...!!
ஏக்கத்தில் உதிர்ந்த கவிதை அழகு,,,வாழ்த்துக்கள் பூகள்
நன்றிகள் இனியவள்.உங்களின் வாழ்த்து கண்டு மகிழ்ச்சி. :rolleyes:
''கலங்காதே''என்று சொல்லி உன் கவிதையால் கரைந்து நின்றேன் -என்மனதிலும்....கண்களிலும்..!!!!!!!
நல்லதொரு பின்னூட்டக் கவி பாலன் அன்பரே..!!உங்களின் கவிவரியில் கனத்த மனது லேசானது. அந்த வலியுள்ள தாயின் மனதும் நிம்மதி அடைய விரைவில் மழலை பூக்கட்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல கவிதை பூமகள் இந்த தாயவள் துயர் துடைக்க ஒரு குழந்தை விரைவில் கிடைக்க வேண்டுமென வாழ்த்துகிறேன்

என்று வந்து

என் வயிற்றில்

உயிர்த்து என்னை

உயிர்ப்பிப்பாய்..???

குழந்தைகள் இன்றி ஏங்கும் பெற்றோருக்காக வடித்த கவிதை ஏக்கத்தை பிரதிபலித்து நிற்கும் விதம் அருமை வாழ்த்துகள்!! :)

அப்ப நான் வரட்டா!!

பிறவாத பிறைக்காக ஏங்கும் பெண் உணரவுகளை பிரதிபலித்த வரிகள் மிகவும் உணர்வு பூர்வனதாக உள்ளது. அவளின் கனவுகள் மெய்ப்பட வேண்டும் என்பது என் விருப்பமும்

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல கவிதை பூமகள் இந்த தாயவள் துயர் துடைக்க ஒரு குழந்தை விரைவில் கிடைக்க வேண்டுமென வாழ்த்துகிறேன்

உங்களின் வாழ்த்துக்கும் பிராத்தனைக்கும் மிக்க நன்றிகள் இன்னிசை. :)

குழந்தைகள் இன்றி ஏங்கும் பெற்றோருக்காக வடித்த கவிதை ஏக்கத்தை பிரதிபலித்து நிற்கும் விதம் அருமை வாழ்த்துகள்!! :)

மிக்க நன்றிகள் அன்புத் தோழி ஜமுனா. :)

பிறவாத பிறைக்காக ஏங்கும் பெண் உணரவுகளை பிரதிபலித்த வரிகள் மிகவும் உணர்வு பூர்வனதாக உள்ளது. அவளின் கனவுகள் மெய்ப்பட வேண்டும் என்பது என் விருப்பமும்

அன்பு இலக்கியரே..! நலமா??

உங்களின் விருப்பமும் வேண்டுதலும் அந்த தாய்க்கு விரைவில் மகிழ்வைத் தரும் என்று நம்புகிறேன். ஆறுதலளிக்கும் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றிகள் இலக்கியன். :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.