Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
29 JAN, 2025 | 04:06 PM
image

(நமது நிருபர்)

கடந்த காலங்களில் அரசியல் தரப்பினால் வழங்கப்பட்ட தீர்வுகளை நடைமுறைப்படுத்துவதில் முரண்பாடுகள் எழுந்தன, எனினும் அரசியல் தரப்பிடம் எவ்வித மறைமுக நோக்கங்களும் இல்லை என்பதை நாம் தற்போது நிரூபித்துள்ளோம்.

அரச பொறிமுறை எங்களுக்கு ஒத்துழைக்கும் என்று எதிர்பார்க்கிறோம், ஆனால் அரசு பொறிமுறையின் மனப்பாங்கு மாற்றமடைய வேண்டும்.

மக்களின் மனப்பான்மைகளை மாற்றாமல் ஒரு நாடென்ற வகையில் முன்னேற முடியாது என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில்  நேற்று செவ்வாய்க்கிழமை (28) பிற்பகல்  நடைபெற்ற 2025 பொருளாதார உச்சி மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இந்தமாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க,

கடந்த காலங்களில் அரசியல் தரப்பினால் வழங்கப்பட்ட தீர்வுகளை நடைமுறைப்படுத்துவதில் முரண்பாடுகள் எழுந்தன. 

அரசியல் தரப்பு மறைந்துள்ள எதனையோ செயல்படுத்தப் போகிறது என்ற எண்ணமே அரச பொறிமுறைக்குள் எப்போதும் காணப்பட்டது. 

ஆனால் தற்போது அரசியல் தரப்பிடம் எவ்வித மறைமுக நோக்கங்களும் இல்லை என்பதை நிரூபித்துள்ளோம். எனவே அரச பொறிமுறை எங்களுக்கு ஒத்துழைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இதன்போது அரசு பொறிமுறையின் மனப்பாங்கு மாற்றமடைய வேண்டும்.

குறிப்பிட்ட நேரத்தில் முடிவுகள் எடுக்கப்படாவிட்டால் எதிர்பார்க்கும் பலன்கள் கிடைக்காது. டிஜிட்டல் மயமாக்கல் மூலம் வசதி, செயல்திறன் என்பவைகளை மட்டுமல்லாமல் நாட்டை இருக்கும் இடத்திலிருந்து புதிய நிலைக்கு உயர்த்தும் இயலுமையும் காணப்படுகிறது. 

எனவே இந்த சந்தர்ப்பத்தில் அரச பொறிமுறையை டிஜிட்டல்மயமாக்கலை கட்டாயமாக செய்ய வேண்டும். டிஜிட்டல் அடையாள அட்டை பற்றிய போலிக் கதைகளை அறிவியல் ரீதியாக உடைத்து புதிய உலகத்திற்கு ஏற்ற அடையாளத்தை உருவாக்கும் இயலுமை காணப்படுகிறது.  அதற்காக இந்திய அரசாங்கம் 10 பில்லியன் ரூபாய் அன்பளிப்பையும் வழங்குகிறது.

நிர்வாகத்திற்கென ஒரு புதிய வேலைத்திட்டம் அவசியப்படுகிறது. இதுவரையில் காணப்பட்ட அரச நிர்வாகம் தோல்வியடைந்த மற்றும் ஊழல் மிகுந்தது மேலும் அரச சேவையைப்  பெற்றுக்கொள்வதற்கு பெருமளவான செலவு செய்ய வேண்டியுள்ளது. 

எனவே சில அரச நிறுவனங்களை ஒன்றிணைத்து அவற்றின் பங்குகளை சேகரித்து பங்குச் சந்தைக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும். 

சில நிறுவனங்களில் செய்ய வேண்டிய விடயங்கள் எவையும் இல்லை. காலத்தின் தேவைக்கேற்ப இந்த நிறுவனங்கள் நிறுவப்பட்டாலும் தற்காலத்தில் அந்த நிறுவனங்களுக்கான செயற்திட்டங்கள் எவையும் இல்லை. ஒரு துறைக்கு பல அரச நிறுவனங்கள் உள்ளன. இவை அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.

நாட்டை கட்டியெழுப்ப நாம் அனைவரும் ஒன்றுபடுவோம். அரச சேவையை வழங்க அதிக செலவு செய்ய வேண்டியுள்ளது. அரச சேவையில் 1.3 மில்லியன் பேர் உள்ளனர். 

அடிமட்ட அரச ஊழியர்களின் அளவு தன்னிறைவாக காணப்பட்டாலும் இடைநிலை அரச ஊழியர் எண்ணிக்கையில் பற்றாக்குறை உள்ளது. இதற்காக தேர்வு நடத்தினால், தனியார் துறையில் பணிபுரிபவர்களும் வருகின்றனர். 

தனியார் துறையினால் ஈர்க்கப்படாத அரச துறையில் ஈர்க்கப்படும் பொதுச் சேவையே இங்கு உள்ளது. எனவே தனியார் துறையும் சேவைகளை வழங்குவதற்கான இடம் என்ற கருத்தாடலை உருவாக்க வேண்டும்.

1991 அரச தோட்டங்கள் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன. ஆனால் முப்பத்திரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 1700 ரூபாவை வழங்க முடியாமல் உள்ளது. 

அவ்வாறிருக்கையில் அந்த நிறுவனங்கள் வெற்றியளிக்குமா இல்லையா என்பதை சிந்திக்க வேண்டும். நேற்று சுங்கத்தில் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட கொள்கலன்கள் திறக்கப்பட்டன. 

அவற்றை கொண்டு வந்தவர்கள் யாரும் இல்லை. ஆனால், கொள்கலன்கள் திறந்து பார்த்தபோது பிரபல நிறுவனத்தின் லேபிள்கள் ஒட்டப்பட்டிருந்தன. 

எனவே மக்கள் தங்கள் மனப்பாங்கை மாற்றிக் கொள்ள வேண்டும். அரசியல் அதிகார தரப்பிற்குரிய பண்புகளை நாம் கொண்டு வந்துள்ளோம். ஆனால் உங்களுக்குள் மாற்றம் ஏற்படாமல் ஒரு நாடென்ற வகையில் முன்னேற முடியாது என்றார்.

https://www.virakesari.lk/article/205231

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

கடந்த காலங்களில் அரசியல் தரப்பினால் வழங்கப்பட்ட தீர்வுகளை நடைமுறைப்படுத்துவதில் முரண்பாடுகள் எழுந்தன, எனினும் அரசியல் தரப்பிடம் எவ்வித மறைமுக நோக்கங்களும் இல்லை என்பதை நாம் தற்போது நிரூபித்துள்ளோம்.

கடந்த அரசுகளால் வழங்கப்பட்ட தீர்வுகளை நடைமுறைப்படுத்த விடாமல் தடுத்ததில் பெரும் பங்கு வகித்தது ஜேவிபி தானே?

அரசுகள் ஒருபக்கம் தீர்வை எழுதும்.மறுபக்கம் சண்டியர்களான பிக்குகளையும் ஜேவிபியையும் தூண்டிவிடும்.

கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி நீங்களும் சன்னதமாடுவீர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
59 minutes ago, ஈழப்பிரியன் said:

கடந்த அரசுகளால் வழங்கப்பட்ட தீர்வுகளை நடைமுறைப்படுத்த விடாமல் தடுத்ததில் பெரும் பங்கு வகித்தது ஜேவிபி தானே?

அரசுகள் ஒருபக்கம் தீர்வை எழுதும்.மறுபக்கம் சண்டியர்களான பிக்குகளையும் ஜேவிபியையும் தூண்டிவிடும்.

கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி நீங்களும் சன்னதமாடுவீர்கள்.

நல்லது கெட்டதுகளுக்கு அப்பால்.....
இன்றைய உலகில் ஆட்சியை கைப்பற்ற இனவாதமும் மதவாதமும் சிறந்ததொரு வழிகாட்டியாக பல அரசியல்வாதிகளுக்கு தெரிகின்றது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.