Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுழற்சி முறையில் இனி நாடெங்கும் மின்வெட்டு!

51127835.jpeg

நுரைச்சோலை நிலக்கரி மின்னுற்பத்தி நிலையம் செயலிழந்துள்ள நிலையில், அதை மீண்டும் மின்கட்டமைப்பில் இணைக்கும் வரை நாடெங்கும் பகுதியளவில் மின்வெட்டை நடைமுறைப்படுத்த பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

நுரைச்சோலை நிலக்கரி மின்னுற்பத்தி நிலையம் தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்படும் வரை, நாடெங்கும் பகுதியளவில் மின்வெட்டு நடைமுறைப்படுத்துவதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் மின்சாரசபை கோரிக்கை விடுத்திருந்தது. அந்தக் கோரிக்கைக்கே இலங்கைப் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, மாலை 3.30 மணி முதல் இரவு 9.30 மணிக்கிடையில் ஒன்றரை மணித்தியாலங்கள் சுழற்சி முறையில் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அட்டவணையொன்றும் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

மின்வெட்டு அமுல்படுத்தப்படும் பிரதேசங்களில் ஏ, பி, சி, டி என அடையாளப்படுத்தப்பட்டுள்ளவை ஒரு குழுவாகவும், இ, எப், ஜி, எச், யு, வி என அடையாளப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் இன்னொரு குழுவாகவும், ஐ, ஜெ, கே, எல், பி, கியூ என அடையாளப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் மற்றொரு குழுவாகவும், ஆர், எஸ், ரி, டபிள்யு ஆகிய பிரதேசங்கள் வேறொரு குழுவாகவும்  வகைப்படுத்தப்பட்டுள்ளன.

முதலாவது குழுவில் உள்ளடங்கும்  பிரதேசங்களில் மாலை 3.30க்கும் 4 மணிக்கும் இடையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு 5 மணிக்கும் 5.30க்கும் இடையில் மீள வழங்கப்படும். இரண்டாவது குழுவில் உள்ளடங்கும் பிரதேசங்களில் மாலை 5 மணிக்கும்  5.30க்கும் இடையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு 6.30க்கும் 7 மணிக்கும் இடையில் மீள வழங்கப்படும்.

மூன்றாவது குழுவில் உள்ளடங்கும் பிரதேசங்களில் 6.30க்கும் 7 மணிக்குமிடையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, 8 - 8.30க்கும் இடையில் மீள வழங்கப்படும். நான்காவது குழுவில் உள்ளடங்கும் பிரதேசங்களில் 8 - 8.30க்கு இடையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, 9.30க்கும் 10 மணிக்குமிடையில் மீள வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

https://newuthayan.com/article/சுழற்சி_முறையில்_இனி_நாடெங்கும்_மின்வெட்டு!

 

  • கருத்துக்கள உறவுகள்

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலைய செயற்பாடுகள் வெள்ளிக்கிழமைக்குள் வழமைக்கு!

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலைய செயற்பாடுகள் வெள்ளிக்கிழமைக்குள் வழமைக்கு!

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் பெப்ரவரி 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்குள் மீண்டும் தேசிய மின்னோட்டத்தில் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மின்சார சபை (CEB) அறிவித்துள்ளது.

புனரமைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக CEB இன் பொறியியலாளர் தம்மிக்க விமலரத்ன தெரிவித்தார்.

மறுசீரமைப்புப் பணிகள் முன்னேற்றமடைவதால், வரும் நாட்களில் தற்போது நிலவும் ஒன்றரை மணி நேர மின்வெட்டு குறைக்கப்படலாம் என்றும் அவர் கூறினார்.

முன்னதாக, திங்கட்கிழமை (10) மற்றும் செவ்வாய் (11) ஆகிய நாட்களில் நாடளாவிய ரீதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்றும், பிற்பகல் 03.30 தொடக்கம் இரவு 09.30 மணிவரையான நேரத்தில் ஒன்றரை மணிநேர மின்வெட்டினை சுழற்சியில் முறையில் நிர்வகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

பெப்ரவரி 09 அன்று, இலங்கை முழுவதும் பரவலான மின்சாரத் தடையை எதிர்கொண்டது, இது முற்பகல் 11.15 மணியளவில் முழு நாட்டினையும் பாதித்தது.

பாணந்துறை உப மின்நிலையத்தில் உள்ள மின் கட்டமைப்பில் காலை 11:30 (06.00 GMT) மணியளவில் குரங்கு ஒன்று மோதியதன் காரணமாக நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்தது.

இதனால், ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமாக இருந்த குறைந்த மின்சாரத் தேவையின் காரணமாக மின் மறுசீரமைப்பு செயல்முறை சிரமங்களை எதிர்கொண்டது.

எவ்வாறாயினும், மாலை 6.00 மணியளவில் மின்சாரம் முழுமையாக மீட்டெடுக்கப்பட்ட நிலையில், நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தில் ஒரு பிரச்சினை எழுந்தது.

அங்கு மூன்று மின் உற்பத்தி இயந்திரங்கள் செயலிழந்தமையினால், தேசிய மின்கட்டமைப்பிற்கு 900 மெகாவாட் இழப்பு ஏற்பட்டதுடன் மின் பற்றாக்குறையை அதிகப்படுத்தியது.

இதனால் பல்வேறு பகுதிகளில் மேலும் மின் தடை ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1420724

  • கருத்துக்கள உறவுகள்

நாளை மின்வெட்டு அமுல்படுத்தப்படாது - இலங்கை மின்சார சபை

11 FEB, 2025 | 03:52 PM
image
 

நாடளாவிய ரீதியில் நாளை புதன்கிழமை (12) மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

பெப்ரவரி பெளர்ணமியை முன்னிட்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (08) ஏற்பட்ட திடீர் மின்வெட்டு காரணமாக  நுரைச்சோலை நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்தில் செயலிழந்த மூன்று மின்னுற்பத்தி இயந்திரங்களையும் மீண்டும் மின்னுற்பத்தி கட்டமைப்பில் இணைப்பதற்கு பல பகுதிகளில் மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை மின்சாரசபை  தீர்மானித்திருந்தது. 

அதன்படி, நாட்டில் பல பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை (10) மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டதுடன் இன்றைய தினமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/206417

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஏராளன் said:

பெப்ரவரி பெளர்ணமியை முன்னிட்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

பௌர்ணமிக்கு மட்டும்… தாராளமாக மின்சாரம் கொடுக்க முடிகின்றது.
இந்த நாடு நாசமாய் போவதற்கு, இப்படியான குறுகிய சிந்தனைகளும் முக்கிய காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

பௌர்ணமிக்கு மட்டும்… தாராளமாக மின்சாரம் கொடுக்க முடிகின்றது.
இந்த நாடு நாசமாய் போவதற்கு, இப்படியான குறுகிய சிந்தனைகளும் முக்கிய காரணம்.

புத்தர் உலக மக்களுக்கு ஒளி கொடுக்க உழைத்தார்....நம்ம சிறிலங்கன்ஸ் புத்தருக்கே ஒளி கொடுக்கிறாங்கள் ...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.