Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய அதிசயம்

------------------------------
large.397937094_.png.824bb756030ab1e1b6b0cf599bcb0019.png
 
பிள்ளையார்
இயேசு பெருமான்
புத்த பெருமான்
இப்படி பல தெய்வங்களில் இருந்து
நீர்
பால்
இரத்தம் கூட 
உலகில் அங்கங்கே 
வடிந்து கொண்டிருக்கின்றது
 
இது அதிசயம்
 
ஒரு துளி ஈரமும் 
வருடங்களாக காணாமல்
வறண்டு வெடித்து ஒரு இடம்
அங்கே ஒரு வெள்ளைக் கொக்கு
ஓடின ஓணாணை
பிடித்து அப்படியே முழுங்கியது
 
இதுவும் அதிசயம்
 
கடுங்குளிர் காலத்திலும்
நெருப்பாக வெயில் எரிய
அனல் காற்றும் சேர
அந்த இடமே பற்றி எரிந்தது
 
இது அவலமான அதிசயம்
 
இன்று மொட்டை மரம் ஒன்றில்
கண்களை மூடியிருந்த குருவிகள்
'இது என்ன அதிசயம்
தண்ணீர் மேலே இருந்தும் விழுமா............' என்று
என்ன செய்வதென்று தெரியாமல்
அப்படியே உறைந்து நிற்கின்றன
வானம் பிளந்து கொட்டும் மழையில்
 
இங்கு இன்றைய அதிசயம் இதுதான்.
 

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கவிதையில் தற்காலத்தில் மழை பெய்வது அதிசயம் என ஏன் கூறுகிறீர்கள்? (இந்த கவிதையின் கரு மழைதானே?)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, vasee said:

உங்கள் கவிதையில் தற்காலத்தில் மழை பெய்வது அதிசயம் என ஏன் கூறுகிறீர்கள்? (இந்த கவிதையின் கரு மழைதானே?)

மீண்டும் பதிந்த போது 'இங்கு' என்ற சொல் கடைசியில் விடுபட்டுப் போய்விட்டது.

கடைசி வரியை திருத்தியுள்ளேன் - 'இங்கு இன்றைய அதிசயம் இதுதான்.'

இது லாஸ் ஏஞ்சலீஸ் நகரை மனதில் வைத்து நான் எழுதியது. மழையே இல்லாமல், வரலாறு காணாத ஒரு வறட்சியில் இந்த ஊர் இருந்தது. ஒரு வருடத்திற்கும் மேலாக ஒரு துளி கூட, கறுப்பு மேகங்கள் கூட இங்கு வரவில்லை. போன வாரம் சிறிதளவு பெய்தது. இன்று விடாமல் பெய்து கொண்டிருக்கின்றது. இங்கு தெருவில் இருக்கும் மரங்களில் பறவைகள் கொட்டும் மழையில் அப்படியே கூட்டம் கூட்டமாக அசையாமல் இருக்கின்றன. என் யன்னல்களூடாக நான் அவற்றைப் பார்த்து கொண்டிருக்கின்றேன். 

இந்த மழை மனதில் கொண்டு வரும் சந்தோசம் அளவு கடந்து ஓடுகின்றது............   

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரசோதரன் said:

மீண்டும் பதிந்த போது 'இங்கு' என்ற சொல் கடைசியில் விடுபட்டுப் போய்விட்டது.

கடைசி வரியை திருத்தியுள்ளேன் - 'இங்கு இன்றைய அதிசயம் இதுதான்.'

இது லாஸ் ஏஞ்சலீஸ் நகரை மனதில் வைத்து நான் எழுதியது. மழையே இல்லாமல், வரலாறு காணாத ஒரு வறட்சியில் இந்த ஊர் இருந்தது. ஒரு வருடத்திற்கும் மேலாக ஒரு துளி கூட, கறுப்பு மேகங்கள் கூட இங்கு வரவில்லை. போன வாரம் சிறிதளவு பெய்தது. இன்று விடாமல் பெய்து கொண்டிருக்கின்றது. இங்கு தெருவில் இருக்கும் மரங்களில் பறவைகள் கொட்டும் மழையில் அப்படியே கூட்டம் கூட்டமாக அசையாமல் இருக்கின்றன. என் யன்னல்களூடாக நான் அவற்றைப் பார்த்து கொண்டிருக்கின்றேன். 

இந்த மழை மனதில் கொண்டு வரும் சந்தோசம் அளவு கடந்து ஓடுகின்றது............   

யசோதரன்..!

இந்த இடத்தில் தான் ஊரை மிஸ் பண்ணுறது..!

கன நாளைக்குப் பிறகு மழை பெய்யும் போது மண்ணிலிருந்து ஒரு வாசனை வருமே..!

அந்த வாசம் வேறு எந்த நாட்டிலுமே …ஊர் வாசம் வராது..!

கவிதையின் கரு அழகு..!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, புங்கையூரன் said:

கன நாளைக்குப் பிறகு மழை பெய்யும் போது மண்ணிலிருந்து ஒரு வாசனை வருமே..!

அந்த வாசம் வேறு எந்த நாட்டிலுமே …ஊர் வாசம் வராது..!

உண்மையே புங்கையூரான். 

தண்ணீரே இல்லாத இந்தப் பாலைநிலமான லாஸ் ஏஞ்சலீஸ்ஸில் கூட மண்ணை மூடி புல்லை வளர்த்து வைத்திருக்கின்றோம். முதல் மழையில் கூட இங்கு மண் சிலிர்ப்பதில்லை. அது புல்லின் கீழே எப்போதும் அடங்கியே இருக்கின்றது............... 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரசோதரன் said:

மீண்டும் பதிந்த போது 'இங்கு' என்ற சொல் கடைசியில் விடுபட்டுப் போய்விட்டது.

கடைசி வரியை திருத்தியுள்ளேன் - 'இங்கு இன்றைய அதிசயம் இதுதான்.'

இது லாஸ் ஏஞ்சலீஸ் நகரை மனதில் வைத்து நான் எழுதியது. மழையே இல்லாமல், வரலாறு காணாத ஒரு வறட்சியில் இந்த ஊர் இருந்தது. ஒரு வருடத்திற்கும் மேலாக ஒரு துளி கூட, கறுப்பு மேகங்கள் கூட இங்கு வரவில்லை. போன வாரம் சிறிதளவு பெய்தது. இன்று விடாமல் பெய்து கொண்டிருக்கின்றது. இங்கு தெருவில் இருக்கும் மரங்களில் பறவைகள் கொட்டும் மழையில் அப்படியே கூட்டம் கூட்டமாக அசையாமல் இருக்கின்றன. என் யன்னல்களூடாக நான் அவற்றைப் பார்த்து கொண்டிருக்கின்றேன். 

இந்த மழை மனதில் கொண்டு வரும் சந்தோசம் அளவு கடந்து ஓடுகின்றது............   

நான் அவுஸ்ரேலியா வந்த போது  மழை பெய்து கொண்டேயிருந்தது, அப்போது கூறினார்கள் மழை இல்லாமல் தண்ணீருக்கு கட்டுப்பாடுகள் விதித்திருந்தார்களாம் என, நான் அவர்களிடம் கூறுவதுண்டு நான் வந்ததனால் அவுசில் மழை பெய்ததது என இன்றுவரை தண்ணீருக்கு கட்டுப்பாடில்லாமல் மழை பெய்து கொண்டே இருக்கிறது,  ட்ரம்ப் அழைத்தால் அமெரிக்கா வருவது பற்றி சிந்திக்கலாம்.😁

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரசோதரன் said:

இன்றைய அதிசயம்

------------------------------
large.397937094_.png.824bb756030ab1e1b6b0cf599bcb0019.png
 
பிள்ளையார்
இயேசு பெருமான்
புத்த பெருமான்
இப்படி பல தெய்வங்களில் இருந்து
நீர்
பால்
இரத்தம் கூட 
உலகில் அங்கங்கே 
வடிந்து கொண்டிருக்கின்றது
 
இது அதிசயம்
 
ஒரு துளி ஈரமும் 
வருடங்களாக காணாமல்
வறண்டு வெடித்து ஒரு இடம்
அங்கே ஒரு வெள்ளைக் கொக்கு
ஓடின ஓணாணை
பிடித்து அப்படியே முழுங்கியது
 
இதுவும் அதிசயம்
 
கடுங்குளிர் காலத்திலும்
நெருப்பாக வெயில் எரிய
அனல் காற்றும் சேர
அந்த இடமே பற்றி எரிந்தது
 
இது அவலமான அதிசயம்
 
இன்று மொட்டை மரம் ஒன்றில்
கண்களை மூடியிருந்த குருவிகள்
'இது என்ன அதிசயம்
தண்ணீர் மேலே இருந்தும் விழுமா............' என்று
என்ன செய்வதென்று தெரியாமல்
அப்படியே உறைந்து நிற்கின்றன
வானம் பிளந்து கொட்டும் மழையில்
 
இங்கு இன்றைய அதிசயம் இதுதான்.
 

மழை விளையாட்டை குழப்பியதால் எழுதிய கவிதை போல.

  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுது யாழ்ப்பாண நகரத்தில் மண்வாசனையை நுகர முடியாது அவ்வளவுக்கு எல்லா வீடுகளிலும் சீமெந்து போட்டு மண்தரையை மூடி விட்டார்கள். உண்மையை சொல்லணும் என்றால் மழை பெய்து முடிய நல்ல பனங்காட்டுக்குள் ஒற்றையடிப் பாதையில் நடந்து செல்லவேண்டும், அப்போது தெரியும் நிஜமான மண்வாசனை .........!   😇

Edited by suvy
எ . பிழை திருத்தம் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, vasee said:

நான் அவுஸ்ரேலியா வந்த போது  மழை பெய்து கொண்டேயிருந்தது, அப்போது கூறினார்கள் மழை இல்லாமல் தண்ணீருக்கு கட்டுப்பாடுகள் விதித்திருந்தார்களாம் என, நான் அவர்களிடம் கூறுவதுண்டு நான் வந்ததனால் அவுசில் மழை பெய்ததது என இன்றுவரை தண்ணீருக்கு கட்டுப்பாடில்லாமல் மழை பெய்து கொண்டே இருக்கிறது,  ட்ரம்ப் அழைத்தால் அமெரிக்கா வருவது பற்றி சிந்திக்கலாம்.😁

🤣...............

இப்படியான ஒரு 'மழைச் சாமியார்' இங்கேயும் வேண்டும் தான்............ ஆனால் ட்ரம்ப் உள்ளே விடுவார் என்று நான் நினைக்கவில்லை. வேலி பாயமுடியுமா............. நான் வந்து வேலிக்கு இந்தப் பக்கமாக நிற்பேன்............🤣.

ஒரு வேளை நான் இங்கிருந்து கிளம்பினால், அதன்பின் இங்கு ஒழுங்காக மழை பெய்யுமோ...............😜.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஈழப்பிரியன் said:

மழை விளையாட்டை குழப்பியதால் எழுதிய கவிதை போல.

ஒரு வீரன் இன்னொரு வீரனை அறிவான்................🤣.

இங்கு நெருப்பு எரிந்தால் கூட, விளையாட்டுத் திடல்களுக்குள் இறங்கி விளையாட விடுவார்கள். ஆனால் மழை பெய்தால், எல்லாவற்றையும் பூட்டி வைத்துக் கொள்வார்கள். நாங்களே விளையாடி, நாங்களே சறுக்கி விழுந்து விட்டு, நகர நிர்வாகத்தின் மீது வழக்கு போட்டு விடுவமோ என்ற பயம்தான்...............

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ரசோதரன் said:

மீண்டும் பதிந்த போது 'இங்கு' என்ற சொல் கடைசியில் விடுபட்டுப் போய்விட்டது.

கடைசி வரியை திருத்தியுள்ளேன் - 'இங்கு இன்றைய அதிசயம் இதுதான்.'

இது லாஸ் ஏஞ்சலீஸ் நகரை மனதில் வைத்து நான் எழுதியது. மழையே இல்லாமல், வரலாறு காணாத ஒரு வறட்சியில் இந்த ஊர் இருந்தது. ஒரு வருடத்திற்கும் மேலாக ஒரு துளி கூட, கறுப்பு மேகங்கள் கூட இங்கு வரவில்லை. போன வாரம் சிறிதளவு பெய்தது. இன்று விடாமல் பெய்து கொண்டிருக்கின்றது. இங்கு தெருவில் இருக்கும் மரங்களில் பறவைகள் கொட்டும் மழையில் அப்படியே கூட்டம் கூட்டமாக அசையாமல் இருக்கின்றன. என் யன்னல்களூடாக நான் அவற்றைப் பார்த்து கொண்டிருக்கின்றேன். 

இந்த மழை மனதில் கொண்டு வரும் சந்தோசம் அளவு கடந்து ஓடுகின்றது............   

கவிதையின் ஆரம்பத்தில் மூட நம்பிக்கையினயும் பின்னர், உலக வெப்பமயமாதலையும் குறிப்பிட்டமை கவிதையின் கரு தொடர்பில் குழப்பம் ஏற்பட்டது, நான் நினைத்தேன் நீங்கள் முட்டாள் மனிதர்களை கவிதையின் கருவாக கொண்டீர்களோ அல்லது மழையினை கவிதையின் கருவாக கொண்டீர்களோ என ஒரு குழப்பம் இருந்தமையாலேயே தெளிவிற்காக கேட்டேன்.

 

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
On 14/2/2025 at 14:28, suvy said:

இப்பொழுது யாழ்ப்பாண நகரத்தில் மண்வாசனையை நுகர முடியாது அவ்வளவுக்கு எல்லா வீடுகளிலும் சீமெந்து போட்டு மண்தரையை மூடி விட்டார்கள். உண்மையை சொல்லணும் என்றால் மழை பெய்து முடிய நல்ல பனங்காட்டுக்குள் ஒற்றையடிப் பாதையில் நடந்து செல்லவேண்டும், அப்போது தெரியும் நிஜமான மண்வாசனை .........!   😇

நேற்று மழை பெய்தபோது மண்வாசம் வீசியது அண்ணை.

  • 2 weeks later...

கவிதையில் அதிசயத்தை ரசிக்க முடிகிறது.

மற்றும்படி அதிசயம் என்று உலகில் எதுவுமில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, இணையவன் said:

கவிதையில் அதிசயத்தை ரசிக்க முடிகிறது.

மற்றும்படி அதிசயம் என்று உலகில் எதுவுமில்லை.

உலகத்தில் இன்று நடப்பவைகள் எல்லாமே ஏற்கனவே நடந்த பழைய விடயங்களே என்று சொல்லப்படுவதும் உண்டு. இங்கு எதுவும் புதுமையில்லை, எதுவும் அதிசயமே இல்லை என்றும் அதற்கு ஒரு பொருள் வரும் போல.......

இந்த வார விடுமுறையில் ஒரு நண்பர் வீட்டுக்கு போயிருந்தேன். அங்கிருந்து கிளம்பும் போது செக்கலாகிவிட்டது. இங்கு ஏற்கனவே கோடை காலம் வந்துவிட்டது. எங்கும் குருவிகளின் ஆட்சி தான். நண்பரின் வீட்டின் முன் ஒரு அடர்த்தியான, பெரிய மரம். அதன் உள்ளிருந்து கீச், கீச் என்று ஒரே அணுங்கல் சத்தங்கள். சிறு குருவிகள் நித்திரையாகும் முன் சில ஏற்பாடுகளை செய்துகொள்ளும். அப்போது இந்த அணுங்கல்கள் வரும்.

'ஒரே குருவிகள் போல............' என்று நான் அண்ணாந்து பார்த்தபடியே நின்றேன்.

'ம்............ இந்த மரத்தை வெட்டவேண்டும். இது பெரிசா வளர்ந்திட்டுது................' என்றார் நண்பர்.

அப்பொழுது தான் அந்த மரத்தை வடிவாகப் பார்த்தேன். குருவிகளின் அணுங்கல்கள் மட்டும் இல்லை, இருளும் வெளிச்சமும் கலந்த அந்தப் பொழுதில் அந்த மரமும் மிக அழகாக இருந்தது.

அந்த மரத்தை ஏன் வெட்ட வேண்டும்................. அதிசயமாகவே இருந்தது. ஆனால் நான் ஏன் என்று கேட்கவில்லை....................🤣.

17 minutes ago, ரசோதரன் said:

அந்த மரத்தை ஏன் வெட்ட வேண்டும்................. அதிசயமாகவே இருந்தது. ஆனால் நான் ஏன் என்று கேட்கவில்லை....................🤣.

ஆஹா, இன்னொரு அதிசயம் 😀. இதற்கும் காரணம் இருக்கும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.