Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

jaffna-hospital.webp?resize=750%2C375&ss

யாழ். போதனா நிர்வாகத்திற்கு எதிராகப் போராட்டம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்திற்கு எதிராக நாளைய தினம்முதல் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தொழிற்சங்க நடவடிக்கையை  மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இது தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் வெளியிட்ட அறிக்கையில் ”நோயாளிகளது பாதுகாப்பை உறுதி செய்யத் தவறியமை மற்றும் யாழ் போதனா வைத்தியசாலையினது நிர்வாகத்தினைத் தக்க வைப்பதற்காக மருத்துவமனை ஊழியர்களிடையே தொடர்ந்தும் சர்ச்சைகளை உருவாக்கும் முயற்சிகளைத் தொடர்ச்சியாக மருத்துவமனைப் பணிப்பாளர் மேற்கொண்டு வருவதை எதிர்த்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தாம் தீர்மானித்துள்ளதாகவும்,    யாழ் போதனா வைத்தியசாலை நிர்வாகத்தோடு இரண்டு மாதங்களாக கலந்துரையாடல்களை மேற்கொண்டு வந்த நிலையிலும் நோயாளர்களின் பாதுகாப்பை யாழ் போதனா வைத்தியசாலையினது நிர்வாகம் உறுதி செய்யத் தவறியமையால், குறித்த தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தாம்  தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ளத் தீர்மானித்தமைக்கான காரணத்தையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர். அவையாவன…

1.நோயாளர் அவசர சேவைகளுக்கான பிரிவுகளுக்கு ஆளணி பற்றாக்குறையாகவும் அதே நேரம், சாதாரணபிரிவுகளுக்கு அதிகமான ஆளணியும் பொருத்தப்பாடற்ற விதத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதனால் நோயாளரின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் உள்ளது.

2. யாழ் போதனா வைத்தியசாலை நிர்வாகத்தின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காக விபத்துஇ அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் ஒரு ஆபத்தான பணியாளரைப் பொறுப்பிலிருத்தி இ அர்ப்பணிப்பான பணியாளரை இடம் மாற்றியுள்ளமை நோயாளிகளின் உயிராபத்திற்கேதுவான பாதகமான நிலைமை நிலையை உருவாக்கியுள்ளது.

3. சில ஊழியர்களின் பொறுப்புணர்ச்சி அற்ற நடவடிக்கைகள் தொடர்பாக மருத்துவ நிபுணர்கள் சுட்டிக் காட்டியபோதும் அவர்களைத் திருத்துவதற்கு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

4.தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் மருத்துவ நிபுணர்களால் தகவல்கள் கோரப்படும் போது தவறான தகவல்களை வழங்குவதுடன் தகவல்களை வழங்குவதில் தாமதம் செலுத்துதல்.

5) மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உள்ள அனைத்து நோயாளிகளினதும் பாதுகாப்பை உறுதி செய்யும் வரை தொழிற்சங்க நடவடிக்கையாக, அதிதீவிர சிகிச்சை தவிர்ந்த சாதாரண பணிகளையும் இடை நிறுத்த முடிவு செய்துள்ளோம்.

இது நோயாளரின் நலன் கருதி எடுக்கப்பட்டுள்ள முடிவு என்பதனால் நீண்டகால நோக்கிலான சரியான முடிவுகள் எட்டப்படும் வரை தொழிற்சங்க நடவடிக்கையைத் தொடர வாய்ப்புள்ளது. இதனால் யாழ் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைகள் தவிர்ந்த ஏனைய சிகிச்சைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் என்பதனை மன வருத்தத்துடன் நாம் தெரிவித்துக் கொள்கின்றோம்.

https://athavannews.com/2025/1423111

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இது நோயாளரின் நலன் கருதி எடுக்கப்பட்டுள்ள முடிவு என்பதனால் நீண்டகால நோக்கிலான சரியான முடிவுகள் எட்டப்படும் வரை தொழிற்சங்க நடவடிக்கையைத் தொடர வாய்ப்புள்ளது. இதனால் யாழ் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைகள் தவிர்ந்த ஏனைய சிகிச்சைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் என்பதனை மன வருத்தத்துடன் நாம் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நோயாளிகள் நலன் கருதி எனில் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதே நன்மை அளிக்கும், மாறாக தொழிற்சங்க நடவடிக்கைக்காக சிகிச்சை அளிக்காது விடுவதல்ல. வேறு முறைகளில் எதிர்ப்பைக் காட்டலாமே?!

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.போதனா வைத்தியசாலையில் நோயாளார்கள் பெரும் அவதி

யாழ்.போதனா வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையினால் வைத்தியசாலையில் நோயாளர்கள் பெரும் அவதிவை எதிர்நோக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

வைத்தியசாலை நிர்வாகத்திடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று (27) முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.

தொழிற்சங்க நடவடிக்கை

இந்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக அவசர சிகிச்சைகள் தவிர்ந்த ஏனைய சிகிச்சைகளை வைத்திய அதிகாரிகள் இடைநிறுத்தி உள்ளதால் வைத்தியசாலைக்கு சென்ற நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்நோக்கியிருந்தாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் நோயாளார்கள் பெரும் அவதி | Jaffna Hospital Patients Suffering Today Strike

வைத்தியர்கள் சங்கத்தின் குறித்த போராட்டத்தினால் வைத்தியசாலையின் வழமையான செயற்பாடுகள் பலவும் இயங்காத நிலைமை ஏற்பட்டுள்ளது.

கோரிக்கை 

இதனால் பல்வேறு சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைக்கு சென்ற நோயாளர்கள் சிகிச்சையை பெற்றுக் கொள்ள முடியாமல் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் நோயாளார்கள் பெரும் அவதி | Jaffna Hospital Patients Suffering Today Strike

இதேவேளை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் இந்த தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெற்று வருவதால் நோயாளர்கள் பெரும் ஆபத்தை எதிர்நோக்கி உள்ளதாகவும் நோயாளர்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை விரைந்து எடுக்கப்பட வேண்டுமெனவும் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

https://ibctamil.com/article/jaffna-hospital-patients-suffering-today-strike-1740663619#google_vignette

  • கருத்துக்கள உறவுகள்

பணிப்பாளரிடம் சாதரணமாக கேள்வி கேட்டாலே இடத்தை விட்டு காணாமல் போய் விடுவாரே.முகப் புத்தகத்தில் பல மாதங்களாக இது தானே நடக்கிறது.நேரில் நின்று பணிப் புறக்கபணிப்பு செய்பவர்களுக்கு என்ன நடக்கிறதோ யாருக்கு தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, யாயினி said:

பணிப்பாளரிடம் சாதரணமாக கேள்வி கேட்டாலே இடத்தை விட்டு காணாமல் போய் விடுவாரே.முகப் புத்தகத்தில் பல மாதங்களாக இது தானே நடக்கிறது.நேரில் நின்று பணிப் புறக்கபணிப்பு செய்பவர்களுக்கு என்ன நடக்கிறதோ யாருக்கு தெரியும்.

சங்கமாக பணிப்புறக்கணிப்புச் செய்வதால் தனிநபர்களை தண்டிக்க முடியாதே அக்கா.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

சங்கமாக பணிப்புறக்கணிப்புச் செய்வதால் தனிநபர்களை தண்டிக்க முடியாதே அக்கா.

பணிப்பாளரை பதவி நீக்கம் செய்ய முயற்சி நடக்கின்றது ...நல்ல சேவைகள் செய்தால் சிலருக்கு பிடிக்காது ...அனுரா யாழ் வைத்தியசாலைக்கு வந்த பொழுது அவரை சுற்றி நின்ற பலர் சார்,சார் என ஒவ்வொரு கருத்து சொல்ல முதலும் ,முடியும் பொழுதும் ஒரே சார் புராணமாகவே இருந்தது ...ஆனால் பணிப்பாளர் மட்டுமே அங்கு "சார்" புராணம் பாடவில்லை ...

அனுராவுக்கு பணிப்பாளரின் சில செயல்கள் கவர்ந்திருக்க வாய்ப்பு உண்டு ...அறிந்தும் இருப்பார் ...பார்ப்போம் காலம் பதில் சொல்லட்டும்...ஜனாதிபதி ,மற்றும் ஆளுனரின் தீர்ப்புக்கள் எப்படி வருகின்றது என...

  • கருத்துக்கள உறவுகள்

1211174140.jpeg

யாழ்ப்பாணம்

போதனாவில் இடம்பெறும் தொழிற்சங்கப் போராட்டம் விரைவில் முடிவுக்கு வரும்; பணிப்பாளர் நம்பிக்கை 

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில், மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கைகள் விரைவில் முடிவுக்குவரும் என்று யாழ்ப்பாணம் போதனா பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

போராட்டத்தை மேற்கொண்டுவரும் தரப்புகளுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் மேலும் கூறியுள்ளார்.  

https://newuthayan.com/article/போதனாவில்_இடம்பெறும்_தொழிற்சங்கப்_போராட்டம்_விரைவில்_முடிவுக்கு_வரும்;_பணிப்பாளர்_நம்பிக்கை%C2%A0

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு தற்காலிகமாக நிறுத்தம்

Published By: Digital Desk 3

05 Mar, 2025 | 11:26 AM

image

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மட்டுப்படுத்தப்பட்டளவில் மேற்கொள்ளப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பை நேற்று செவ்வாய்க்கிழமை மாலை முதல் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இடைநிறுத்தியுள்ளது.

வைத்தியசாலை நிர்வாகத்திற்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டு தீர்வு எட்டப்படாவிடில் மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பை நடத்தவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் திட்டமிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்திடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவசர சிகிச்சை தவிர்ந்த ஏனைய சிகிச்சைகளை இடைநிறுத்தி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் கடந்த வியாழக்கிழமை முதல் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

இந்நிலையில் அரச வைத்திய அதிகாரிகளின் தாய்ச் சங்கத்துடன் யாழ். போதனா வைத்தியசாலைக் கிளைச் சங்கம் கலந்துரையாடிய பின்னர், மட்டுப்படுத்தப்பட்ட அளவில் போராட்டத்தை தொடர்ந்தது.

இதன்போது அவசரமற்ற சத்திர சிகிச்சைகள் வைத்தியர்களால் மேற்கொள்ளப்படவில்லை.

தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து நேற்றைய தினம் மாலை முதல் ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டு பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது.

விபத்து அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்தியர் மற்றும் தாதி உத்தியோகத்தர் இடையே ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டி வைத்தியர்களால் பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்பட்டது.

பணிப்பகிஷ்கரிப்பு காலத்தில் ரத்து செய்யப்பட்டவர்களுக்கான சத்திர சிகிச்சைகள் விரைவாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

https://www.virakesari.lk/article/208326

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.