Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யுக்ரேன் போர், ஐரோப்பிய தலைவர்கள் உச்சி மாநாடு, கியர் ஸ்டாமர், விளாதிமிர் ஸெலன்ஸ்கி

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,ஐரோப்பிய தலைவர்களின் உச்சி மாநாடு லண்டனில் நடைபெற்று வருகிறது

44 நிமிடங்களுக்கு முன்னர்

யுக்ரேன் விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக ஐரோப்பிய தலைவர்களின் உச்சி மாநாடு லண்டனில் நடைபெற்று வருகிறது.

பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமரால் நடத்தப்படும் இந்த உச்சி மாநாடு உலகின் கவனத்தை ஈர்த்துள்ளதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை என்றாலும், இதற்கு முன்னதாக யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்திப்பு இதற்கான முக்கியத்துவத்தை கூட்டியிருக்கிறது.

யுக்ரேன் போரை முடிவுக்கு கொண்டு வருவதில், ஐரோப்பிய நாடுகளின் வாய்ப்புள்ள பங்களிப்பு என்ன? மற்றும் அமெரிக்காவுடன் இந்த நாடுகளின் உறவு என்னவாக இருக்கும் என்பவை விவாதிக்கப்பட வாய்ப்புள்ள அம்சங்களாக கருதப்படுகின்றன.

இந்த மாநாட்டை நடத்தும் பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமர், ஐரோப்பிய தலைவர்களை வரவேற்றார்.

கூட்டத்தில் பேசிய அவர் , "ஐரோப்பாவின் பாதுகாப்புக்காக தலைமுறையில் ஒரு முறை கிடைக்கும் வாய்ப்பு" என குறிப்பிட்டார்.

யுக்ரேனில் அமைதி நிலவச் செய்யும் முடிவுகள் ஐரோப்பிய கண்டம் முழுவதும் உள்ள நாடுகளின் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது எனவும் ஸ்டாமர் கூறினார்.

யுக்ரேன் போர், ஐரோப்பிய தலைவர்கள் உச்சி மாநாடு, கியர் ஸ்டாமர், விளாதிமிர் ஸெலன்ஸ்கி

பட மூலாதாரம்,EPA

படக்குறிப்பு,உச்சி மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களில் சிலர்

"போரை நிறுத்துவதற்கான ஒரு திட்டத்தை யுக்ரேனுடன் இணைந்து உருவாக்கிய பின், தங்களில் சிலர் அமெரிக்காவுடன் அதை விவாதித்து, முன்னோக்கி எடுத்துச் செல்வதாக ஒப்புக் கொண்டுள்ளோம்." எனவும் கியர் ஸ்டாமர் கூட்டத்தில் பேசினார்.

ரஷ்யா அமைதியைப் பற்றி பேசினாலும் கூட, அவர்கள் தங்களின் இடைவிடாத ஆக்கிரமிப்பை தொடர்கின்றனர் என குற்றம் சாட்டிய ஸ்டாமர், அனைவரின் நலன் என்ற நோக்கத்தால் கிடைக்கும் வலிமையின் மூலம் அமைதியை வழங்க வேண்டும் என்பதுதான் இந்த மாநாட்டின் நோக்கம் என கூறினார்.

யுக்ரேன் போர், ஐரோப்பிய தலைவர்கள் உச்சி மாநாடு

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,ரஷ்யா அமைதியை பேசினாலும் கூட, அவர்கள் தங்களின் இடைவிடாத ஆக்கிரமிப்பை தொடர்கின்றனர் - கியர் ஸ்டாமர்

"பாதுகாப்பு செலவுகளை அதிகரிக்க வேண்டும்"

மாநாட்டுக்கு முன்னதாக தமது எக்ஸ் சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள நேட்டோ தலைவர் மார்க் ரூட், உச்சி மாநாட்டில் மூன்று விஷயங்களை எதிர் நோக்கியுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

யுக்ரேனை ஆதரிப்பதற்காக "ஐரோப்பாவில் உள்ள அனைவரும் அதிகமாகக் கொடுக்க வேண்டும்"

"நாம் அனைவரும் ஒரு சமாதான ஒப்பந்தத்தை விரும்புகிறோம், அது நீடித்திருக்க வேண்டும்"

நேட்டோவை வலிமையாக வைத்திருக்க, ஐரோப்பா பாதுகாப்பு செலவுகளை அதிகரிக்கும் எனவும் ரூட் உறுதியளித்துள்ளார்.

யுக்ரேன் போர், ஐரோப்பிய தலைவர்கள் உச்சி மாநாடு, கியர் ஸ்டாமர், விளாதிமிர் ஸெலன்ஸ்கி

பட மூலாதாரம்,EPA

படக்குறிப்பு,உச்சி மாநாட்டில் பங்கேற்ற நேட்டோ தலைவர் மார்க் ரூட்

அமெரிக்காவில் நடந்தது என்ன?

முன்னதாக வெள்ளிக்கிழமையன்று அமெரிக்கா ஸெலன்ஸ்கி, அமெரிக்க அதிபர் டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின் போது , ஸெலன்ஸ்கி மற்றும் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இடையே நடந்த ஒரு வார்த்தைச் சண்டையில், அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் இணைந்து கொள்ளும் நிலை ஏற்பட்டது.

ரஷ்யாவுடன் ராஜ்ஜீய ரீதியான பேச்சுவார்தை குறித்து ஜே.டி.வான்ஸ் குறிப்பிட்ட நிலையில் இது தொடர்பாக கேள்விகளை முன்வைத்தார் ஸெலன்ஸ்கி.

"ஜே.டி., நீங்கள் எந்த வகையான ராஜ்ஜீய நடவடிக்கையைப் பற்றி பேசுகிறீர்கள்?" என வினவியதோடு, "நீங்கள் கூறுவதன் பொருள் என்ன?" என கேள்வி எழுப்பினார் ஸெலன்ஸ்கி

"உங்கள் நாட்டில் அழிவை முடிவுக்கு கொண்டு வரும் விதமான ராஜ்ஜீய நடவடிக்கையைப் பற்றி நான் பேசுகிறேன் " என வான்ஸ் பதிலளித்தார்.

ஆனால் அமெரிக்க ஊடகங்கள் முன்பாக ஒரு தேவையற்ற விவாதத்தை ஸெலன்ஸ்கி தொடங்கி வைத்ததாகக் கருதிய வான்ஸ், இதனை தான் அவமரியாதையாகக் கருதுவதாகக் கூறினார்.

"மரியாதைக்குரிய அதிபர் அவர்களே, நீங்கள் ஓவல் அலுவலகத்திற்கு வந்து அமெரிக்க ஊடகங்கள் முன்னதாக பிரச்னையை எழுப்ப முயலுவதை நான் அவமரியாதையாகக் கருதுகிறேன்" என வான்ஸ் பேசினார்.

யுக்ரேன் போர், ஐரோப்பிய தலைவர்கள் உச்சி மாநாடு, கியர் ஸ்டாமர், விளாதிமிர் ஸெலன்ஸ்கி

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,உச்சி மாநாட்டுக்கு முன்னதாக ஸெலன்ஸ்கி மற்றும் ட்ரூடோ உரையாடல்

யுக்ரேன் ராணுவத்தில் உள்ள பிரச்னைகள் குறித்து ஸெலன்ஸ்கியிடம் வான்ஸ் கூறியபோது, ''போர்க் காலத்தில் அனைவருக்கும் பிரச்னை இருக்கும். உங்களுக்கும் கூட. ஆனால் உங்களிடம் பெருங்கடல் உள்ளதால் நீங்கள் அதை தற்போது உணரவில்லை. ஆனால் வருங்காலத்தில் நீங்களும் அதை உணர்வீர்கள்," என்று தெரிவித்தார் ஸெலன்ஸ்கி.

அது நேரம் வரை ஸெலன்ஸ்கியும் ஜே.டி.வான்ஸுமே பேசிக் கொண்டிருந்த நிலையில் ஸெலன்ஸ்கியின் இந்த பேச்சு டிரம்பை அதிருப்தி அடையச்செய்தது. அந்த வார்த்தைப் போரில் தன்னையும் இணைத்துக் கொண்டார் டிரம்ப்.

ஓவல் அலுவலகத்தில் அமர்ந்து டிரம்பை பார்த்து ஸெலன்ஸ்கி, "ரஷ்யாவை நீங்கள் திருப்திப்படுத்துங்கள். பிறகு போர் ஒன்று உங்களை நோக்கிவரும்," என்று கூறினார்.

இந்த கருத்து டிரம்பை மிகவும் கோபப்படுத்தியது. "நாங்கள் எப்படி உணர வேண்டும் என்று கூறும் இடத்தில் நீங்கள் இல்லை," என்று கூறும் போது டிரம்ப் மிகவும் சத்தமாக பேசினார்.

"உங்களுக்கு வெற்றிக்கான வாய்ப்புகள் ஏதும் இல்லை. நீங்கள் பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையோடு விளையாடுகிறீர்கள்," என்று கூறினார் டிரம்ப்.

இத்தனை ஆண்டுகளாக அமெரிக்கா, யுக்ரேனுக்கு அளித்த ஆதரவிற்காக ஸெலன்ஸ்கி நன்றி விசுவாசத்துடன் இருக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், துணை அதிபர் ஜே.டி.வான்ஸும் அறிவித்த பிறகு ஸெலன்ஸ்கி உலக ஊடகங்கள் முன்பு குறைமதிப்பிற்கு உள்ளாக்கப்பட்டதைப் போல் உணர்ந்தார்.

இதனைத் தொடர்ந்து திட்டமிடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொள்வதற்கு முன்னதாகவே ஸெலன்ஸ்கி வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார்.

இருதரப்பாலும் முன்னெடுக்கப்பட்டிருந்த கனிமவளம் தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/cm2nk9zd8yjo

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, ஏராளன் said:

யுக்ரேனில் அமைதி நிலவச் செய்யும் முடிவுகள் ஐரோப்பிய கண்டம் முழுவதும் உள்ள நாடுகளின் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது எனவும் ஸ்டாமர் கூறினார்.

அமெரிக்காவில் ஆட்சி மாறும் வரைக்கும் உக்ரேனுக்கு ஆயுதங்கள்,இராணுவ உதவிகள் வழங்கிக்கொண்டிருந்தவர்கள் டொனால்ட் ரம்ப் ஆட்சிக்கு வந்ததும் அமைதி விரும்பிகளாக மாறிவிட்டார்கள். 🤣

இதில் கொடுமை என்னவென்றால் உக்ரேனுக்கு ஆதரவளித்த அரசுகளும்,அரசியல் தலைவர்களும் மண்ணைக்கவ்வுவதுதான் நடைமுறை சம்பவங்களாக உள்ளன. அதிலும் நடந்து முடிந்த ஜேர்மனிய தேர்தலில் உக்ரேன் போரை முன்னெடுத்த இரு கட்சிகளும் பாரிய பின்னடைவை சந்தித்தது நல்லதொரு படிப்பினையாகும்.

நிற்க...

பெரிய பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகினாலும் உக்ரேன் விடயத்தில் ஐரோப்பாவை பாதுகாக்க வேண்டும் என முனைப்பாக இருக்கின்றது.😂

ரஷ்யாவும் பெரிய பிரித்தானியவும் நிரந்தர பகையாளிகள் என்பது உலகறிந்த விடயம்.அதிலும் செலென்ஸ்கியும் பிரித்தானிய மன்னர் சார்ள்ஸ் சந்திப்பு கவனிக்கப்பட வேண்டிய விசயம் கண்டியளோ😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைனில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக பிரான்சுடன் இணைந்து விருப்பமுள்ளவர்களின் கூட்டணி - பிரிட்டிஸ் பிரதமர்

03 MAR, 2025 | 05:32 PM

image

உக்ரைனிற்கான சமாதான உடன்படிக்கையை உருவாக்குவதற்காக பிரான்சுடன் இணைந்து விருப்பமுள்ளவர்களின் கூட்டணியை உருவாக்கவுள்ளதாக பிரிட்டிஸ் பிரதமர் சேர் கெய்ர் ஸ்டார்மெர் தெரிவித்துள்ளார்.

லண்டனில் இடம்பெற்ற 19 நாடுகளின் தலைவர்களின் உச்சிமாநாட்டில் பிரிட்டிஸ் பிரதமர் இதனை அறிவித்துள்ளார்.

உக்ரைனுடன் இணைந்து ஐரோப்பிய கூட்டணி டிரம்ப் முன்வைத்துள்ள சமாதான திட்டத்திற்கு மாற்றீடான ஒன்றை உருவாக்கும் என தெரிவித்துள்ள பிரிட்டிஸ் பிரதமர் இந்த தீர்வை நடைமுறைப்படுத்துவதற்காக கூட்டு படையணியொன்றை பயன்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பிரிட்டிஸ் பிரதமரும் பிரான்ஸ் ஜனாதிபதியும் இணைந்து இந்த திட்டத்தினை உருவாக்குவார்கள் பின்னர்  அதனை அமெரிக்க ஜனாதிபதியிடம் கையளிப்பார்கள்.

பிரான்ஸ் பிரிட்டிஸ் தலைவர்கள் ரஸ்யா உக்ரைன் இடையிலான ஒருமாத யுத்த நிறுத்தம் குறித்த யோசனையை முன்வைத்துள்ளனர்.

இந்த காலப்பகுதியில் வான்வெளி கடல் மற்றும் உட்கட்டமைப்புகளை இலக்குவைத்கும் தாக்குதல்கள் நிறுத்தப்படும்.

இந்த திட்டத்தின் இரண்டாவது கட்டத்தில் உக்ரைனிற்கு ஐரோப்பிய படையினர் அனுப்பப்படுவர்.

யுத்த நிறுத்தம் சாத்தியமானதும் உக்ரைனின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கும் ரஸ்யா ஆக்கிரமித்துள்ள பகுதிகளிற்கும் இடையில் உள்ள 800மைல் யுத்த சூன்ய பிரதேசத்தின் பொறுப்பு உக்ரைன் படையினருக்கு வழங்கப்படும்.

உக்ரைனிய படையினருக்கு பின்னால் ஐரோப்பிய நாடுகள் மற்றும் கனடாவை சேர்ந்த 30,000 உறுதியளிக்கும் படை நிலைகொண்டிருக்கும்.

அவர்கள் உக்ரைனின் நகரங்கள் மற்றும்  முக்கிய உட்கட்டமைப்பு வசதிகளை பாதுகாக்கும் பொறுப்பை ஏற்கவுள்ளனர்.

https://www.virakesari.lk/article/208187

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யுக்ரேனுக்கு ஆதரவாக திரளும் ஐரோப்பிய நாடுகள் - லண்டன் மாநாட்டில் முடிவான 4 அம்ச செயல் திட்டம் என்ன?

யுக்ரேன் - ரஷ்யா, அமெரிக்கா - ஐரோப்பா

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர்,விக்கி வாங்க்

  • பதவி,பிபிசி நியூஸ்

  • 3 மார்ச் 2025, 06:12 GMT

    புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர்

போரை முடிவுக்கு கொண்டு வரவும், ரஷ்யாவிடம் இருந்து யுக்ரேனை பாதுகாக்கவும் யுக்ரேனுடன் இணைந்து செயல்பட பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர் நான்கு அம்ச திட்டத்தை அறிவித்துள்ளார்.

பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் பிற நாடுகளை உள்ளடக்கிய கூட்டணியை அமைத்து முயற்சிகளை முன்னெடுப்போம் என்றும், யுக்ரேனுக்கு சார்பாக அமெரிக்காவையும் இருக்கச் செய்ய முயல்வோம் என்றும் அவர் கூறினார்.

"நாம் இன்று வரலாற்றில் ஒரு முக்கிய கட்டத்தில் இருக்கிறோம்" என்று 18 தலைவர்கள் பங்கேற்ற மாநாட்டின் முடிவில் ஸ்டார்மர் கூறினார். அந்த மாநாட்டில் யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி உள்ளிட்ட பெரும்பாலும் ஐரோப்பாவைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.

யுக்ரேன் ஒரு "வலுவான ஆதரவை" உணர்ந்ததாகவும், இந்த மாநாடு " பல காலமாக பார்த்திராத வகையில், ஐரோப்பிய ஒற்றுமையை மிக உயர்ந்த மட்டத்தில் காட்டியது" என்றும் ஸெலன்ஸ்கி கூறினார்.

வெள்ளை மாளிகையில் யுக்ரேன் அதிபருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கும் இடையே வாக்குவாதம் நடந்த 2 நாட்களுக்குப் பிறகு லண்டனில் இந்த மாநாடு நடைபெற்றுள்ளது.

"உண்மையான அமைதி மற்றும் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த அமெரிக்காவுடன் ஒத்துழைப்பதற்கான அடிப்படையைக் கண்டறிய நாங்கள் அனைவரும் ஐரோப்பாவில் ஒன்றிணைந்து செயல்படுகிறோம்" என்று மாநாட்டுக்குப் பிறகு ஸெலன்ஸ்கி கூறினார்.

ஐரோப்பிய நாடுகள் ஒப்புக் கொண்ட 4 அம்ச செயல் திட்டம் என்ன?

யுக்ரேன் - ரஷ்யா, அமெரிக்கா - ஐரோப்பா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,யுக்ரேனை ரஷ்யாவிடமிருந்து பாதுகாக்க ஐரோப்பிய நாடுகள் நான்கு அம்ச திட்டத்திற்கு ஒப்புக் கொண்டதாக பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர் கூறினார்.

தலைவர்களின் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ஸ்டார்மர், கூட்டத்தில் 4 அம்சங்கள் ஒப்புக் கொள்ளப்பட்டதாகக் கூறினார்:

  • யுக்ரேனுக்கு ராணுவ உதவிகள் தொடர்ந்து கிடைக்க வேண்டும், ரஷ்யா மீது பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும்

  • எந்தவொரு நீடித்த சமாதானமும் யுக்ரேனின் இறையாண்மையையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும். எந்தவொரு அமைதிப் பேச்சுவார்த்தையிலும் யுக்ரேன் இருக்க வேண்டும்

  • சமாதான உடன்பாடு ஏற்பட்டால், எதிர்கால படையெடுப்பைத் தடுக்க யுக்ரேனின் தற்காப்பு திறன்களை அதிகரிப்பது

  • யுக்ரேனில் ஒரு உடன்பாட்டை கோரவும், அதற்குப் பின்னர் சமாதானத்தை உத்தரவாதப்படுத்தவும் ஒரு கூட்டணியை கட்டமைப்பது.

5,000 க்கும் மேற்பட்ட வான் பாதுகாப்பு ஏவுகணைகளை வாங்க பிரிட்டன் ஏற்றுமதி நிதியில் கூடுதலாக 2 பில்லியன் டாலர் வழங்குவதாகவும் ஸ்டார்மர் அறிவித்தார். முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துகளில் இருந்து கிடைக்கும் லாபத்தின் மூலம் யுக்ரேனுக்கு கூடுதல் ராணுவ உதவி வழங்க 2.77 பில்லியன் டாலர்கள் கடன் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது.

"கடந்த கால தவறுகளிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். ரஷ்யா எளிதாக மீறக்கூடிய ஒரு பலவீனமான ஒப்பந்தத்தை நாம் ஏற்க முடியாது. அதற்கு பதிலாக எந்தவொரு ஒப்பந்தமும் மீறப்பட முடியாத அளவுக்கு வலிமையானதாக இருக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.

யுக்ரேன் - ரஷ்யா, அமெரிக்கா - ஐரோப்பா

பட மூலாதாரம்,GETTY IMAGES

பிரிட்டன், "தரையில் துருப்புகள், வான்வெளியில் விமானங்கள்" கொண்டு யுக்ரேனுக்கான தனது ஆதரவை உறுதிப்படுத்தும் என்று அவர் கூறினார்.

"ஐரோப்பா அதிக சுமையை ஏற்க வேண்டும்," என்று கூறிய அவர், இந்த உடன்படிக்கைக்கு அமெரிக்க ஆதரவு தேவைப்படும் என்பதுடன், ரஷ்யாவையும் உள்ளடக்க வேண்டியிருக்கும் என்றும் குறிப்பிட்டார். ஆனால் விதிகளை வகுக்க ரஷ்யாவை அனுமதிக்க முடியாது என்றும் கூறினார்.

"நான் தெளிவாக கூறுகிறேன், நீடித்த அமைதிக்கான அவசர தேவை குறித்து நாங்கள் டிரம்புடன் உடன்படுகிறோம். இப்போது நாம் ஒன்றாக அதனை வழங்க வேண்டும்" என்று ஸ்டார்மர் கூறினார்.

டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா ஒரு நம்பமுடியாத கூட்டாளியாக உள்ளதா என்று கேட்கப்பட்ட போது, "கடந்த வெள்ளிக்கிழமை நடந்ததை யாரும் பார்க்க விரும்பவில்லை, ஆனால் அமெரிக்கா ஒரு நம்பமுடியாத கூட்டாளி என்பதை நான் ஏற்கவில்லை" என்றார் ஸ்டார்மர்.

யுக்ரேன் - ரஷ்யா, அமெரிக்கா - ஐரோப்பா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லெயன்

இந்த மாநாட்டில் பிரான்ஸ், போலந்து, ஸ்வீடன், துருக்கி, நார்வே, செக் குடியரசு, டென்மார்க், ஜெர்மனி, நெதர்லாந்து, ருமேனியா, பின்லாந்து, இத்தாலி, ஸ்பெயின் கனடா உள்ளிட்ட நாடுகள் பங்கேற்றன.

ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லெயன் கூறுகையில், "ஐரோப்பா மீண்டும் ஆயுதமேந்த" வேண்டிய அவசர தேவை இருப்பதாக தெரிவித்தார்.

இதே உணர்வுகளை நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ருட்டேவும் வெளிப்படுத்தினார். யுக்ரேன் "போரை தொடர வேண்டியிருக்கும் வரை" அதற்கு தேவையானவற்றை உறுதி செய்ய ஐரோப்பிய நாடுகள் முன் வருவதை இந்த மாநாட்டின் போது காண முடிந்தது என்று கூறினார்.

கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட யுக்ரேன் தயார்

யுக்ரேன் - ரஷ்யா, அமெரிக்கா - ஐரோப்பா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கடந்த வெள்ளிக்கிழமை டிரம்ப் மற்றும் ஸெலன்ஸ்கி இடையில் சூடான விவாதம் நடைபெற்றது.

இந்த மாநாட்டுக்குப் பிறகு, ஸெலன்ஸ்கி சாண்ட்ரிங்ஹாமுக்குச் சென்றார். அங்கு அவர் மூன்றாம் சார்லஸ் மன்னரை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமெரிக்காவுடன் கனிம வளங்கள் தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயாராக இருப்பதாக கூறினார்.

ஸெலன்ஸ்கியின் வாஷிங்டன் பயணத்தின் போதே இந்த ஒப்பந்தத்தில் யுக்ரேன் கையெழுத்திடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஓவல் அலுவலகத்தில் டிரம்புடன் ஏற்பட்ட ஒரு சூடான விவாதத்துக்குப் பிறகு யுக்ரேனிய தூதுக்குழு உடனே புறப்பட்டுவிட்டது.

யுக்ரேனின் அரிய கனிம வளங்களை அமெரிக்கா அணுகுவதற்கு வழிவழி செய்யும் வகையில் அது இருந்தது.

லண்டன் மாநாட்டைத் தொடர்ந்து, கனிம ஒப்பந்தத்தின் எதிர்காலம் குறித்து பிபிசி கேட்டபோது, அது கையெழுத்திட தயாராக இருப்பதாக ஸெலன்ஸ்கி கூறினார்.

"சம்பந்தப்பட்ட தரப்புகள் தயாராக இருந்தால் ஒப்பந்தம் கையெழுத்திடப்படும்," என்று அவர் கூறினார்.

யுக்ரேன் - ரஷ்யா, அமெரிக்கா - ஐரோப்பா

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,மூன்றாம் சார்லஸ் மன்னரை ஸெலன்ஸ்கி சந்தித்த போது அவருக்கு நல்ல வரவேற்பு வழங்கப்பட்டது.

பிரான்ஸ் அதிபர் இமானுவல் மக்ரோன், பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர் மற்றும் ஸெலன்ஸ்கி ஆகியோரின் வாஷிங்டன் பயணங்களுடன் ஒரு வாரம் முழுக்க நிலவிய பரபரப்பை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக இந்த மாநாடு நடைபெற்றது.

ஸெலன்ஸ்கியின் வாஷிங்டன் பயணம் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் துணை அதிபர் ஜே.டி.வான்ஸுடன் ஒரு சூடான கருத்து பரிமாற்றத்தில் உச்சக்கட்டத்தை அடைந்தது. டிரம்ப் ஸெலன்ஸ்கியை மூன்றாம் உலகப் போர் என்ற பேராபத்துடன் விளையாடுவதாக குற்றம் சாட்டினார்.

யுக்ரேன் போரை முடிவுக்கு கொண்டு வர விரும்புவதாகவும், ரஷ்ய அதிபர் புதின் மீது நம்பிக்கை வைத்திருப்பதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

யுக்ரேனை தவிர்த்து விட்டு ரஷ்யாவுடன் அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.

அண்டை நாடான யுக்ரேன் மீது முழு அளவிலான படையெடுப்பை 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி தொடங்கியவர் புதின் என்றாலும், யுக்ரேன் போரைத் தொடங்கியதாக ஒரு கட்டத்தில் ஸெலன்ஸ்கியை டிரம்ப் குற்றம் சாட்டியிருந்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c8x4g1yerrpo

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, ஏராளன் said:

யுக்ரேனுக்கு ஆதரவாக திரளும் ஐரோப்பிய நாடுகள் - லண்டன் மாநாட்டில் முடிவான 4 அம்ச செயல் திட்டம் என்ன?

இரண்டாம் உலகப்போரில் அமெரிக்காவும் ரஷ்யாவும் இல்லா விட்டால் ஐரோப்பாவின் நிலைமை கவலைக்கிடமாக இருந்திருக்கும்.

இருந்தாலும் உந்த கூட்டணி ஏதோ ஒரு நாடகம் போல் தெரிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

இரண்டாம் உலகப்போரில் அமெரிக்காவும் ரஷ்யாவும் இல்லா விட்டால் ஐரோப்பாவின் நிலைமை கவலைக்கிடமாக இருந்திருக்கும்.

இருந்தாலும் உந்த கூட்டணி ஏதோ ஒரு நாடகம் போல் தெரிகின்றது.

எல்லாம் தனி தனியே ட்ரம்பை சந்திக்கும்வரைதான்

இதை உண்மை என்று நம்பினால் உக்ரைன் மக்கள்தான் பாவம்

ட்ரம்பின் வரி கட்டுப்பாடுகளை இதன்மூலம் கொஞ்சம் தளர்த்த முடியும் என்ற எதிர்பார்ப்பில்தான் இவர்கள் கூடி இருக்கிறார்கள் அந்த ஐரோப்பா கூட்டுக்குள் கனடா காரரும் புகுந்து நிற்கிறார். எல்லோருக்கும் தனி தனி கூப்பிட்டு குழை அடித்தால் சகஜ நிலைக்கு திரும்பிடுவார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இது முன்னமே யாழில் கூறப்பட்ட விடயம்,

அமெரிக்க புதிய அதிபர் ஐரோப்பிய ஒன்றியத்தினை பலவீனப்படுத்தி தனியே ஐரோப்பிய நாடுகளுடன் தனது உறவை வளர்க்க முற்படுகிறார், அது அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அவசியமான ஒன்று.

பிரசெல்ஸின் நீண்ட நாளைய திட்டமான United States of Europe திட்டத்தின் மூலம் அதிகரித்த அதிகாரத்தினை கைப்பற்றும் முயற்சிக்கு உக்கிரேன் போரை ஒரு துருப்பு சீட்டாக பயன்படுத்தி வந்திருந்தது, இதில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே தன்னிச்சையாக தமது பாதுகாப்பு செலவின அதிகரிப்பு என விலகி நிற்கும் நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு நீண்ட நாள் தலையிடியாக இருந்து வந்துள்ள நிலையில் தற்போதய பூகோள அரசியல் சூழ்நிலை அவர்களுக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தினை கொடுத்திருக்கின்றது.

இதனை முன்னரே எதிர்பார்த்து காத்திருந்த பிரித்தானியாவும் பிரான்ஸும் ஐரோப்பிய ஒன்றியத்தினை புறந்தள்ளி இதனை தமது பொருளாதார நலனுக்கு பாவிக்கும் முயற்சியில் பிரித்தானியா வெற்றி பெற்றுள்ளது என கருதுகிறேன்.

பிரசெல்ஸினை பின் தள்ளி பிரித்தானியா ஒரு அமைதி உடன்பாட்டினை உருவாக்கி அதில் அமெரிக்காவினை இணைத்தால் Marshal plan 2.0 இனை உருவாக்கி அதன் மூலம் பிரித்தானியாவினை மீண்டும் பொருளாதார ரீதியாக கட்டியெழுப்புவதனூடாக அதிகாரமிக்க நாடாக முடியும் என கருதுகிறது.

பிரான்ஸ் எப்படியேனும் இதில் குறிப்பிட்ட நலனை பெற முயற்சிக்கிறது, பிரான்ஸ் தனியாக உக்கிரேனை கட்டியெழுப்ப ஐரோப்பிய நாடுகளில் உள்ள இரஸ்சிய பணத்தினை கையாள்வது பற்றி அண்மைய ட்ரம்ப் சந்திப்பில் நடத்தப்பட்ட பத்கிரிகையாளர் மானாட்டில் கோடி காட்டியிருந்தார், ஆனால் இவ்வாறான நிலைகளை அமெரிக்காவின் உதவியில்லாமல் செய்ய முடியாது என்பதால் பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் இரு நாடுகளும் அமெரிக்காவின் அனுசரணையினை கோருகின்றனர், இதில் யார் வெல்வார்கள் என பார்க்கலாம், அமெரிக்காவிற்கு தேவை பிரசெல்ஸின் அதிகாரத்தினை இல்லாதொழிப்பது.

அமெரிக்கா எள் என்பதற்கு எண்ணெயாக யார் இருக்கிறார்களோ அவர்களே இதன் மூலம் பலன் பெறப்போகிறார்கள், ஆனால் பிரித்தானியா ஏற்கனவே பிரான்ஸினை விட பல படிகள் மேலே சென்று விட்டது.

உருசுலாவின் இந்த நிகழ்வில் ஐரோப்பிய நாடுகளை கடிவாளம் போடும் முயற்சி பலிக்கவில்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.