Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராடர் மூலம் வழிப்படுத்தப்படுகின்ற ஏவுகணைகளை சுவீகரிக்க முயற்சி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராடர் மூலம் வழிப்படுத்தப்படுகின்ற ஏவுகணைகளை சுவீகரிக்க முயற்சி?

தமிழர் தாயகத்தின் வடபகுதி மீது தான் மேற்கொள்ளும் பெரும் தாக்குதல் நடவடிக்கைகளுக்கு அநுராதபுரம் விமானத் தளத்தையே தனது முக்கிய விநியோக மையமாக அரசுப் படைகள் பயன்படுத்தி வருகின்றன. முழு சிங்களப் பிரதேசத்தில் அமைந்துள்ள இத்தளத்தின் மீது ஊடுருவி இரு முனைத் தாக்குதல்களை நடத்தியிருக்கின்றார்கள் விடுதலைப் புலிகள்.

இந்த "எல்லாளன் நடவடிக்கை' மூலம் விடுதலைப் புலிகள் வெளிப்படுத்தியிருக்கும் செய்தியை தகவலை இலங்கை அரசுத் தரப்பு புரிந்து கொள்ளுமா என்பதே கேள்வி.

"விமான எதிர்ப்புப் பொறிமுறையை வசமாக விரித்துவிட்டோம். இனிப் புலிகள் வான் தாக்குதல் நடத்தவே முடியாது ' என அரச உயர்மட்டம் வரை மார்தட்டிக் கூறப்பட்டது.

ஆனால் அரசின் விமானத்தளம் ஒன்றுவரை வெற்றிகரமாக வந்து, வான் தாக்குதல் நடத்திவிட்டுப் பாதுகாப்பாகத் திரும்பியிருக்கின்றன புலிகளின் விமானங்கள்.

பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.கவின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவே, இவ்விடயத்தில் அரசு கோட்டைவிட்டுவிட்டது என்பதைக் கேலியுடன் சுட்டிக்காட்டியிருக்கின்றா

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாமிய உலகு மீது ஏதோ அமெரிக்காவும் இஸ்ரேலும் பயன்படுத்தாததையே பயன்படுத்தப் போகினம்.

உதயன் எந்த வகை ஏவுகணைப் பற்றிப் பேசுகிறது. வான் கலங்களை அழிக்கும் ஏவுகணைகளையா.. அல்லது தரை ஏவுகணைகளையா...??!

ஏவுகணைகளின் செயற்பாட்டு வகைகள் மற்றும் தொழில்நுட்ப அறிவை சரி வர விளங்கிக் கொள்வதன் மூலம் அவற்றில் இருந்து பாதுகாப்புப் பெறுவது என்பது இலகு. இந்த ஏவுகணைகள் எந்தளவுக்கு சிறீலங்காவுக்குப் பயன்படும் என்பதிலும் கேள்விக் குறியே மிகுந்திருக்கிறது. தமிழ் மக்களை அழிப்பது என்ற விடயத்தில் அவை சிங்களப் பேரினவாத அரச பயங்கரவாதிகளுக்கு உதவலாம். ஆனால் புலிகளை அழிப்பது என்பது இதனால் சாத்தியமாக உள்ள வாய்ப்புக்கள் குறைவே.

ஒவ்வொரு புதிய தொழில்நுட்ப வரவோடும் புலிகள் உத்வேகம் கண்டுள்ளனரே தவிர.. சோர்ந்தோ அழிந்தோ போகவில்லை. தற்காலிகமாக இழப்புகள் தான் கொஞ்சம் அதிகமாகும் அவ்வளவே.

சிறீலங்கா அரசால் ஈழப்போராட்டத்தில் யுத்த விமானங்கள் நுழைந்த போது புலிகளின் கதை முடிந்தது என்றார்கள். ஈழப்போராட்டத்தில் செல் வீச்சுக்கள் நுழைந்த போது புலிகள் தலையெடுக்கவே முடியாது என்றார்கள். ஈழப்போராட்டத்தில் தாங்கிகள் வந்த போது புலிகள் அழிந்தனர் என்றார்கள். அப்புறம் ஆட்லறிகள், மல்ரிபரல்கள் என்று எல்லாம் வந்தாச்சு. எனி ஏவுகணை...

தரை இலக்குகளை தாக்கவல்ல ஏவுகணைகள் கொண்டு கெரில்லா போர் செய்யும் குழுவினரோடு சண்டை செய்வது என்பது அமெரிக்காவால் கூட முடியாத காரியம். ஒவ்வொரு ஏவுகணையும் மாதனமுத்தாக்களின் சட்டி பானை விலையல்ல. அவற்றின் பெறுமதி பல ஆயிரம் டொலர்கள். ஏலவே தள்ளாடிக் கிடக்கும் நாட்டின் பொருளாதாரத்தோடு இதை சாத்தியப்படுத்துவது இலகுவான விடயமே அல்ல.

ஏலவே விடுதலைப்புலிகளின் இலக்குகளைத் தாக்க லேசர் வகை வழிநடத்தப்படும் விமானம் மூலம் ஏவப்படும் ஏவுகணைகள் பாவிக்கப்பட்டே உள்ளன. அவற்றின் பெறுமதி மிகப் பெரியது. அவை அமெரிக்காவால் அன்பளிப்பாக வழங்கப்பட்டவை. ரத்வத்தை இவற்றை வைத்து ஒரு பெரிய அரசியலே நடத்தினவர் என்பதை மக்கள் மறந்திருக்கமாட்டார்கள். தேசிய தலைவரை பல முறை கொன்றவர் வாயால்.

விமானங்கள் போன்றவையல்ல ஏவுகணைகள். உயர் தொழில்நுட்ப ஏவுகணைகளை சிறீலங்கா பெறுவது என்பது சாத்தியமில்லை. இடைநிலைத் தொழில்நுட்ப ஏவுகணைகளை அது சீனா அல்லது ரஷ்சியா போன்ற நாடுகளிடமிருந்தோ அல்லது அமெரிக்கா இஸ்ரேல் போன்ற நாடுகளிடமிருந்தோ வாங்க முனையலாம்.

விமான எதிர்ப்பு ஏவுகணைகளில் இருந்து கூட பாதுகாப்புப் பெறுவது என்பது சாத்தியம். சிறிலங்கா கூட விடுதலைப்புலிகளின் விமான எதிர்ப்பு ஏவுகணைகளில் இருந்து பாதுகாப்பும் பெறும் வழிமுறைகளைக் கொண்டிருக்கிறது. அப்படி இருக்க புலிகளால் இப்படியான தொழில்நுட்பங்களைச் சமாளிக்கக் கூடிய திறனைப் பெற முடியாது என்று கூறிட முடியாது.

ஏவுகணைத் தொழில்நுட்பத்தை சிறீலங்கா கொண்டு வரும் போது புலிகளும் கொண்டு வர முனையலாம். அது ஒன்றும் கடினமல்ல. ஏலவே பலஸ்தீனப் போராளிகள் தாங்களாகவே கட்டுஸா ஏவுகணைகளைச் செய்து இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதல்களுக்கு சவால் விடுகின்றனர்.

சிறீலங்கா என்னதான் பேரழிவுகளை தமிழ் மக்கள் மத்தியில் விளைவிக்க எண்ணினாலும் தமிழர்களின் போராடும் தலைமை தேசிய தலைவரிடம் இருக்கும் வரையும் அவருக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தமிழ் மக்களின் பேராதரவு என்றும் இருக்கும் என்றால் அதுதான் தமிழ் மக்கள் சிங்கள அரசுக்கு எதிராக செய்து வைத்துள்ள ஏவுகணைகளாக இருக்கும். சிங்கள அரசு.. தமிழர் தரப்பின் பக்கம் பேரழிவுகளை ஏற்படுத்த நினைத்து தானே அதற்குள் மூழ்கி அழியப் போகிறது என்பதைத்தான் இச்செய்தி கட்டியம் கூறி நிற்கிறது. :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கா என்னதான் பேரழிவுகளை தமிழ் மக்கள் மத்தியில் விளைவிக்க எண்ணினாலும் தமிழர்களின் போராடும் தலைமை தேசிய தலைவரிடம் இருக்கும் வரையும் அவருக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தமிழ் மக்களின் பேராதரவு என்றும் இருக்கும் என்றால் அதுதான் தமிழ் மக்கள் சிங்கள அரசுக்கு எதிராக செய்து வைத்துள்ள ஏவுகணைகளாக இருக்கும். சிங்கள அரசு.. தமிழர் தரப்பின் பக்கம் பேரழிவுகளை ஏற்படுத்த நினைத்து தானே அதற்குள் மூழ்கி அழியப் போகிறது என்பதைத்தான் இச்செய்தி கட்டியம் கூறி நிற்கிறது.

-நன்றி

எனது கருத்தும் அதுவே

அதேநேரம்

இவர்கள் வாங்குகின்றார்களோ இல்லையோ

தலைவர் கேட்டால்

???????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த இணைப்பை பாருங்கள்

http://www.mikalac.com/mis/missile.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.